Sunday, December 7, 2014

உங்களுக்கு ஊருக்கு போக பஸ் கிடைக்கா விட்டால் என்ன செய்வீர்கள் ???

உங்களுக்கு தீபாவளிக்கு ஊருக்கு  போக வேண்டும் என உள்ளது .
வேலை காரணமாக கடைசி  நாள் வரை  சரியாக  முடிவு  எடுக்க   முடியாமல் போகிறது .பின்பு  முன்தினம் முடிவு  செய்து ஊருக்கு போக  ஆசைப்படுகிறீர்கள் .ஆனால் எதிர்பார்த்தது போலவே டிக்கெட் சிரமம் ஆகிறது .சிரமத்தையும் தாண்டி கிடைக்காமலே  போகிறது .


நண்பர்களும்  இருவர் உங்களுடனே இதே  நிலைமையில் .
மிஞ்சி  மிஞ்சி  போனால் என்ன  செய்து  இருப்போம்
ஒரு புது  படம் பார்த்துட்டு  நல்லா  சாப்டு   தூங்கி இருப்போம்.

ஆனால் ,இந்த  நிகழ்வு சிலரின் வாழ்க்கையினை புரட்டிப்போட்டது .
எத்தனையோ சின்ன  சின்ன பஸ்  கம்பனிகள் இருக்குமே ,இந்த brokers தானே எல்லாத்தையும் பூந்து ரேட் ஏற்றி பிரெச்சனை செய்கிறார்கள் .

KPN போன்ற [போன்று  தான் !]  பெரிய  கம்பனிகள் தான் தனக்கென்ற website வைத்து  நடதுக்கின்றன .அப்போ  சின்ன  சின்ன  பஸ்  கம்பெனியில் ஒன்றோ  இரண்டோ  பஸ்  வைத்து  இருப்பவர்கள் என்ன  செய்கின்றனர் என்ற  கேள்வி
அவர்களுக்கு எழுந்தது .

இந்த  கேள்விக்கு விடைதான்  RED  BUS .இன்று  ஆன்லைனில் பஸ்  புக்கிங் வசதி  சின்ன  சின்ன  கம்பெனிகளுக்கும் உண்டு  என்பதும்  மட்டும்  அல்லாமல் , நம்மை போன்ற  பயணிகளுக்கு உக்கார்ந்த  இடத்தில்  ப்ரோகர்கள் இன்றி சரியான  நிர்ணயித்த  விலையில் பஸ்  டிக்கெட்கள்  கிடைக்கச்செய்த பெருமை  , ஆந்திராவைச் [ தெலுங்கானவோ!] சேர்ந்த
பனிந்திர  சாமா  , சுதாகர் , சரண்  என்ற மூன்று  நண்பர்களைச்  சேரும் .

மேற்சொன்ன  சம்பவம்  அவர்கள் வாழ்வில் நடந்தது .
இந்த  redbus ஐ  ஒரு  பெரிய  நிறுவனம் 600-700 கோடிகளுக்கு  acquire செய்துள்ளது  !  இப்படி  தீபாவளி டிக்கெட் கிடைக்காமல் போனது அவர்களுக்கு முன் வந்த  பிரெச்சனை .அதை படியாக மாற்றி  வாழ்வில் மேலே சென்று  விட்டனர் .

நமக்கும் வாழ்வில் இது  போன்று  சந்தர்ப்பங்கள்  வந்து  இருக்கும் .
யோசித்துப்பாருங்கள் .

எனக்கும் இப்படி ஒரு  சூழ்நிலை வந்தது .நான்  அதே  போன்ற ஒரு  தீபாவளிக்கு  சென்னை வந்தேன் .இரவு  முழுவதும் unreserved compartment இல் toilet வெளியே  நின்று  கொண்டே  வந்தேன்.முதுகு  வலியும்  தூக்கமின்மையும்  சேர்ந்து  படுத்தி  எடுத்தும் கூட எனக்கு  அது தோன்ற  வில்லை! சின்ன idea  தான்  , இறங்கி  செய்ய  மனமும்  தைரியமும் வேண்டும் .

இவர்கள்  நல்ல  சம்பளத்திற்கு  Texas  instruments  கம்பெனியில்    வேலை பார்த்தவர்கள் .முதலில்  பகுதி  நேரமாக  தொடங்கி  பின்பு  , என்னதான்  ஆகுதுன்னு  பார்த்துடுவோம் என்று  இறங்கி  ஜெயிச்சு  இருக்காங்க .


 உண்மையான ஒரு  chance  உம்   என்னை  தேடி வந்தது ஒரு முறை.
ஒரு  contact  என்னை  நம்பி  consulting  project கொடுப்பதாக  சொன்னார்கள் . நல்ல  கம்பெனிதான் .என நண்பன்  ஒருவனும்  இறங்கலாம்னு  என்றுதான்  சொன்னான் .கைமேல காசு , ஆனா  ஒரு வருடம்  கழித்து  guarantee  இல்லை  ,சூழ்நிலை  பொருத்து  அடுத்தது என்றார்கள் .
அந்த  நேரம் பார்த்து  என்னுடைய  கம்பெனி  வெளி  நாடு  ப்ராஜெக்ட் அனுப்புகிறேன்  என்று  சொல்லியது  .  entrepreneurship  ஆ  இல்லை, "safe  bet " ஆ  என்று பார்த்த  பொழுது  , நான்  இரண்டாவதை  எடுத்து  விட்டேன் .


இந்த guarantee  எதிர்பார்த்து  தான்  நாம் முன்னேரத்தயங்குகிறோம் பெரும்பாலும் .

முதலாவதை எடுத்து  இருந்தால் எப்படி இருக்கும் என்று  நிறைய  நாள்  எண்ணியதுண்டு .

வாழ்கை இப்படி சிக்ஸர் அடிக்க சான்ஸ் கொடுத்து பந்துகளை வீசிக்கொண்டு கொண்டு  தான் இருக்கிறது  .நாம் எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் .
பீல்டர்களையும் நிறுத்தத்தான் செய்யும் ,ஈசியாக கொடுத்து  விடுமா என்ன.
மட்டய  சுழற்றி சிக்ஸர் அடிக்க நாம  தான் இறங்கி  அடிக்க வேண்டும்  தோனி  போல .

எப்படி முடிவு  எடுக்க என்ற குழப்பம்தான் நமக்கு எதிரி .சிக்ஸர்  அடிக்க முயற்சித்து  out  ஆவோமா  இல்லை பிரெச்சனை இல்லாமல் தரையோட  ஒரு four  அல்லது doubles  தட்டிட்டு இருந்துடுவோம்னு தான் பெரும்பாலும்  இருந்து  விடுகிறோம் .

சொல்ல வந்த காதல் எப்படி   டப்ப்புன்னு  சொல்லிடணும்ரதைப்  போல,இது போன்ற  முடிவுகளும் எடுக்கப்படனும் போல!


இன்னும் பேசுவோம் .










No comments:

Post a Comment