Tuesday, July 19, 2016

மூன்று பேரின் உலகம்.

செந்திலும்  அவன் மனைவி  அம்முவும்   அப்பொழதுதான்  திருமணமாகி ,
புது மணத்தம்பதிகளாக  பெங்களூரில்  அவுட்டர்  ரிங்ரோட்டில்  இருந்த
  வெள்ளையும்  நீலமும்  கலந்து  அடிக்கப்பட்ட  அந்த அடுக்குமாடி
கட்டிடத்தில் குடிபுகும்  முதல் நாள் . அபார்ட்மென்ட்டின்   செக்கூரிட்டி  வளைவைத்தாண்டி  அந்த  மேடான பகுதியிலிருந்து  கீழே  இறங்கி   "பி"  ப்ளாக்  நோக்கி  அந்த  சாமான்  சுமக்கும்  வண்டியினை  முன்னாடியிருந்து  வழிகாட்டி  உள்ளே  செல்கையில்  இடது  புறத்தில்  ஒரு  தள்ளுவண்டியில்
இஸ்திரி  போட்டுக்கொண்டு  இருந்தார்  முப்பதுகளில்  இருந்த  அந்த  மனிதர் . பரவாயில்லையே  ,உள்ளுக்குளேயே  ஐயன்[iron ]  செய்ய ஆள்  இருக்கிறார் ,  வெளியே  அலைய  வேண்டியதில்லை  என்று  நினைத்தவாறே  உள்ளே  செல்கிறான்  செந்தில்.

அந்த   ஞாயிற்றுக்கிழமை  வீட்டின்  காலிங்பெல்  அடிக்கவும்  ,
லுங்கியணிந்து  சற்று  குள்ளமாக  அன்று  பார்த்த  அந்த  இஸ்திரி  போடும்  நபர்  வெளியே  நிற்கிறார் .

"புதுசா  குடிவந்து  இருக்கிறதாக  சொன்னாங்க .  நான் கீழதான் இஸ்திரி  போடுறேன் . துணி  இருந்தா  கொடுங்க"  என்கிறார் .
துணியைக்  கொடுத்தவாறே  செந்தில்  பேச்சுக்கொடுக்கிறான் .

" நல்லா  தமிழில் பேசறீங்க .எந்த  ஊர்  நீங்க "

" தர்மபுரி  பக்கத்துல  தேன்கனிக்கோட்டை .கேள்விப்பட்டு  இருக்கீங்களா ..?"

" கேள்விப்பட்டு  இருக்கேன்  , என்  காலேஜ்ல  ஒரு  நண்பர்  அந்த  ஊர்தான் .."

"அப்டியா  சார் ...பத்தொன்பது  துணி  இருக்கு  . சாயங்காலமா  கொடுத்துடுறேன் ..." என்கிறார்  இஸ்திரி  போடும் விஜயன்  .
விஜயன்  மட்டும்  அல்ல  . இன்னும் சில  புதிய  மனிதர்களை  அந்த  ஒரு  வாரத்திற்குள்  சந்தித்தான்  செந்தில்.

செந்திலின்  வீட்டு  வேலை  செய்ய  வந்த அம்மாவின்  பெயர்  ஷீலா .
சுறுசுறுப்புக்கு  இன்னொரு  பெயர்தான்  ஷீலா . ஒரு  வேளை  அவர் 
வந்த  நாடான  நேபாளத்தில்  , "ஷீலா"  என்றால்  சுறுசுறுப்போ  என்று  நினைத்துக்கொண்டான் . அப்படி  ஒரு  வேகம்  அவர்களிடம்.
"ஷீலா " என்றால்  நன்னடத்தை  என்ற  பொருள்  கொள்ளும்  என  அறிகிறான்  பிறகு  , அவர்களின்  பெயர்போலவே  அவர்கள்  நடத்தையும்தான் என
உணரவும்  செய்கிறான் .ஏழு  மணிக்கு  அவன்  மனைவி  , வேலைக்கு  கிளம்பிப்போன  பிறகு  , இவன்  நயிட்  டூட்டி  முடித்துவந்து  காலையில்  படுத்துத்தூங்கினாலும்  , வந்ததும்  போனதும்  தெரியாமல்  , நேர்த்தியாக  வேலை  முடிந்து  இருக்கும்  அவன் எழுவதற்குள் .  ஒரு  பொருள்  கூட  காணாமல்  போனது  கிடையாது .

இன்னொரு  ஞாயிற்றுக்கிழமை  , ஒரு  இளைஞன்  வந்து  கதவைத்தட்டுகிறான் . "ஒரு  பழைய  பல்சார் வண்டி   நிக்குதே  சார்  , உங்களோடதா  , விக்கற  பிளான்  இருக்கா ?"

"இல்லை  , நான் ஆபிசுக்கு  நடந்து  போறேன்  , பக்கத்துல  இருக்குறதால .
வண்டி  ஆக்சிடென்ட்  ஆனதால  , சர்வீஸ்  பண்ணாம  இருக்கு .
ஆனா  நான்  விக்கற  பிளான்ல  இல்லை ."

"சரி  சார் . பரவா  இல்லை . சும்மா  கேட்டுப்பாத்தேன் .நான்  இங்க  வண்டிங்க  வாஷ்  பன்றேன்  .  சண்டே  காலைல  பைவ்  டு  டென்  . வண்டி  நல்ல  புதுசு  மாதிரி  இருக்கும் .உங்களுக்கு  வேணும்னா  சொல்லுங்க .
 "
"கட்டாயமா ...வண்டி  சரி  பண்ணினதும் "

" இதுதான்  என்  நம்பர் . விக்னேஷ்ன்னு  சேவ்  பண்ணிவச்சுக்கோங்க "

நகர்புற வேகமான  வாழக்கை  அந்தத் தம்பதியினருக்கு ஒரு பக்கம்  ஓடிக்கொண்டுதான்  இருக்கிறது. ஓட்டமற்ற  சற்று  நிதானமானவாழ்க்கை ,தரும்   தருணங்களை  பெரும்பாலும்  நாம்  பேசுவோம் .

அவன்  தங்கியிருந்த  பெலந்தூர்  இன்னும்  "ஹல்லி"யாகவே  இருந்தது  ஒரு  புறம் . "ஹல்லி"  என்றால்  கிராமம்  என்று  அர்த்தம்  கன்னடத்தில் , அவனுக்கு  தெரிந்த  சொற்ப  கன்னட  வார்த்தைகளில்  அதுவும்  ஒன்று .

முடி` வெட்டவும்  , பழம்  காய்கறிகள்  வாங்கவும்  அபார்ட்மென்டின்   பின்பறம்  வளைந்து  செல்லும்  அந்தப்  பாதையைப்  பிடித்துப்  போனால்
வந்துவிடும்  அந்த  அழகிய  கடைத்தெரு .பழக்கடைகளும் , காய்கறிக்கடைகளும்  , தின்பண்டக்கடைகளும்  , துணிக்கடைகளும் நிறைந்த  தெரு  அது .முக்கியமாக  ஒரு  அழகிய  பெரிய  அரசமரம்  , எந்தக்கடவுளும்  இல்லாமலேயே  ,அந்த  மரத்தை  இன்னும்  வெட்டாமல்
விட்டுவைக்கப்பட்டிருந்தது   அங்கு  சில  நல்ல  உள்ளங்கள்  இருப்பதை  சொல்லாமல்  சொல்லியது .

அன்றைக்கு  ஒரு நாள்  இளநீர்  பருகிவிட்டு  சில்லறை  இல்லையென்று  சொல்லவும்  ," பரவா  இல்லை  , நீங்க  இங்கதான  இருக்கீங்க  , அப்புறமா  கொடுங்க " என்று  சகஜமாக  சொல்லிப்போனார்  அந்த  தர்மபுரி  இளநீர்க்காரர் .  "தர்மபுரியில்  பொழைப்புக்கு  வேலையே  இல்லையா ,
எத்தனை  பேர்  இதுபோல  , பெங்களூரு  பூரா  இருப்பாங்கன்னு " நினைத்துக்கொண்டே  வீடு  வந்தான்  செந்தில் .

அந்த  நினைப்பின்  நீட்சியாக  ,  தர்மபுரிக்காரரான விஜயனைக்  கொஞ்சம்  நாட்களாக  காணவில்லையே  என்று  விசாரித்தபோது  , அவர்   மொட்டை  மாடியில்   பம்ப்செட்  அறைபோல  ஒரு  அறை  இருப்பதாகவும்  , அதிலிருந்து வேலை  பார்க்கிறார்  என்று  கேள்விப்பட்டு  அங்கே  அவரைப்பார்க்க  போகிறான்  அவன் . இனி  "அவன்"  என்றால்  செந்தில்  எனக்கொள்ளவும் .

கணவனும்  மனைவியும்  , கனத்த இரும்புப்பெட்டியை  லாவகமாக   தேய்த்துக்கொண்டிருப்பதைச்   சற்று  தள்ளி  நின்றுப்பார்த்துக்கொண்டிருந்தான் . இருவரின்  ஒல்லியான  கைகள்  , சூடான  கரிகள் நிரம்பிய  அந்த கனத்த இஸ்திரிப்பொட்டியினை   எப்படி சுமந்து   அத்தனை  வேகமாக  வேலை  பார்க்கிறது  என்று  வியந்து  நிற்கிறான்.
"அந்த நொடியில்   என்ன  நினைத்துக்கொண்டிருக்கும்  அந்த  மனசு .
சட்டை  கசங்காமல்  வரவேண்டுமென்ற மும்முரமா  ,  இல்லை  பிள்ளைகள்  இந்நேரம்  ஊரில்  என்ன  பண்ணிக்கொண்டு  இருப்பார்கள்  என்ற  தவிப்பா , அல்லது  இந்தக்கைவலியோட  இன்னும்  ரெண்டே  ரெண்டு  சட்டை எப்படியாவது  பண்ணிடனும்கிற  முனைப்பா ?"   என   அவன்  யோசிக்கிறான்.

ரொம்ப  சோகமாக  இருந்தார்கள்  விஜயனும்  , அவர்  மனைவியும் .
பிள்ளைகளை  நினைத்து  என்றுமட்டும்  சொல்கிறார்  விஜயன் .

"வாழக்கை எப்படி  புரட்டி போடுகிறது  ஒவ்வொருத்தரையும் .
பிள்ளைகளை கூட  வைத்துக்கொள்ள முடியாத  சூழ்நிலை  இவர்களுக்கு " என்று   நினைத்தவாறே  வீடு  வந்து சேர்கிறான்.

மறுபடி  இயந்திர  வாழ்க்கை  வார  நாட்களில் ...எத்தனை  மாதங்கள்   கழிந்ததுன்னு  தெரியலை . இன்னொரு ஞாயிற்றுக்கிழமை ...

விக்னேஷ்  வண்டிதுடைத்துக்கொண்டிருக்கிறான் .

அவன்  அருகில்  மண்டியிட்டவாறே ,
"உன்னைப்  பாத்தா  படிக்கற  பையனைப் போல  இருக்கியே ?"
" ஆமா  சார் . இங்க  பக்கத்துல  இருக்க  காலேஜ்ல  BBA  படுக்கறேன் .
இது  பார்ட்டைம்தான்.  "
"சரி  நான்  வெளியே  போய்ட்டுருக்கேன்  ..கொஞ்சம்  அப்படியே  நடந்து வரியா என்கூட "
" சரி  சார் , போவோம் "
 "உன்னைப்  பார்த்தா ஆச்சரியமா   இருக்கு .வீட்டுக்கு  கஷ்டம்  தராம  நீயே  உன் பொழப்பைப்  பாத்துக்கற ...."
"சிட்டுவேஷன்  அப்படி சார்  ...ஆனா  , இது  என்ன  சார் பெரிய  விஷயம்  . நான்  சின்னப் பையன்  உடம்புல நிறையத்தெம்பு  இருக்கு . உங்க  வீட்ல  வேலை  பாக்கற  ஷீலா  பத்தி  உங்களுக்கு  எவ்ளோ  தெரியும் . அவங்களுக்கு  45 வயசு  இருக்கும் . ரெண்டு  பொண்ணுக்கு  கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டாங்களாம் .   வேற  ஊரு  கூட  இல்லை  , வேற  நாட்டுல  இருந்து   பொழைப்பைத்  தேடிவந்து   , பக்கத்து  ஊரு  சர்ஜாபூர்ல  வந்து  எப்படியோ  செட்டில்  ஆகி  ,மூணு  பசங்க  , புருஷன்  சரியான  வேலை  இல்லை , அந்த  அம்மா  காலைல  அஞ்சு  மணிக்கு அங்க  இருந்து  கிளம்பினா    , மதியத்துக்கு  மேலதான்  திரும்புறாங்க .நாலைஞ்சு  வீட்டுல , வீட்டு  வேலை  பார்த்துட்டு  ,  அப்புறமா  அந்த  " d " ப்ளாக்ல  ஒரு  வீட்ல  , குழந்தைங்களை பார்த்துட்டு  , சமைச்சு  கொடுத்துட்டுவேற  போறாங்க .
அவங்க  பையனுக்கு  இங்க  எதாவது வேலை  உண்டான்னு கேட்டு  வந்தப்போ , இந்தக்கதை  எல்லாம் கேள்விப்பட்டேன் ."

பேசிக்கொண்டே  , அந்த  அபார்ட்மெண்ட்டின்  சின்னப்பூங்காவிற்கு  வந்துசேர்கிறார்கள் . மஜந்தா நிறத்தில் பெயர்  தெரியாத  சிலப்பூக்கள் அங்கே உதிர்ந்து கிடைக்கிறது .  அதைக்கையில்  எடுத்தவாறே  , அவன்  சொல்வதைக்கேட்கிறான்  செந்தில் .

"இதுல  பாருங்க  , இப்படியே  வேலை  பார்த்து  , சர்ஜாப்பூர்ல   ஒரு  பிளாட்  வாங்கிப்போட்டு  இருக்காங்க . வேற  லெவல்  சார்  அவங்க .  அவங்களைப்  பாக்க  பாக்க   வாழ்க்கைல  பெரியதா   ஜெயிக்கணும்னு தோணும் .
நானும்  அவங்களைப்போல  ஒரு  நாள்  பிளாட்  வாங்கி  , என்  பாமிலியோட  வீடுகட்டி  செட்டில்  ஆகணும்  சார் .  இங்க  ஊஞ்சல்ல  விளையடுதுங்க   பாருங்க   சின்னப்பசங்க , அது  போல  ரெண்டு வேணும்!"

"  கேக்கவே  நல்லா  இருக்கு .உன்னால  முடியும் . கீப்  ஒர்கிங் "

" சந்தோஷம்  சார்  என்கூட  டைம்  ஸ்பென்ட்  பண்ணினத்துக்கு .
நீங்க  கைல  வச்சு  ரசிச்சிட்டு  இருக்கீங்களே  அந்தப்பூ ரொம்ப  அழகா  இருக்குல்ல ..! நானும்  பல  நாள் பார்த்து  ரசிச்சு  இருக்கேன் . இதை  எல்லாம்  யாரு  சார்  ரசிக்கறாங்க .எல்லாரும்  ,ஏதோ  தொலைச்சபோல  ஓடிட்டே  இருக்காங்க  இங்க .நீங்க  பரவாயில்லை . உங்ககிட்ட  இதையெல்லாம் சொல்லணும்னு  தோணுச்சு .இந்த  வருஷம்  பைனல்   இயர் .  நான்  கொஞ்சம்  இங்கிலீஷில்  வீக்  . உங்ககிட்ட  இங்கிலிஷ்  பேசட்டுமா ?"

" SURE  . தட்ஸ்   தி  ஸ்பிரிட் .  வாட்ச்  இங்கிலிஷ்  நியூஸ்  டெய்லி .
இட்  வில்  ஹெல்ப் யூர்  கம்யூனிகேஷன்  ஸ்கில்ஸ் "

" Thankyou  Sir  "...

 அந்த  வருடமும்  அப்படியே  ஓடிவிடுகிறது .
அடுத்த  வருடம்  செந்திலுக்கு அந்த  ஆண்டின்  ஆபிஸ்  டார்கெட்  நிர்ணயிக்கப்படுகிறது .அது  சம்பந்தமாக  ஏதோ  நினைத்தவாறே   லிப்ட்  ஏறி  வீட்டுக்கு  வருகையில்  , விஜயனை  மீண்டும் லிப்ட்டினுள்  பார்க்கிறான் .

" என்ன  ட்ரெஸ்  எல்லாம்  பலமா  இருக்கு . எங்க  போய்ட்டு  வரீங்க ..."

" அதுவா  சார்  .ஒரு  கல்யாணத்துல  இருந்து  வரேன் . இங்கயே  இருங்க . அந்த  ஆந்திராக்காரங்க  வீட்டுக்குபோய்  இந்தத்துணியக்   கொடுத்துட்டு வந்துடறேன் "

அந்த  லிப்டுக்கு  வெளியே  , க்ரில்  கம்பிகளை  எண்ணிக்கொண்டே  காத்துருக்கிறான்   செந்தில் .

"அந்த  பைக்  துடைக்கற  பையன் விக்னேஷ்   பத்தி  முதல்ல  தப்பா  நினைச்சுட்டேன் .அவன்  நிறைய  தண்ணி  செலவு  பண்ரான்னு  அஸோஸியேஷன்  ஆளுங்க  கம்பிளைன்ட்  செஞ்சுட்டு  இருந்தாங்க . அப்புறமா  ஒரு  பொண்ணோட  சுத்திட்டு  இருந்ததை  பார்த்தேன் . அவன்  ட்ரெஸ்ஸும்  நடை  உடையும் அவனைத்தப்பா   நினைக்க  வச்சுருச்சு . ஆனா  பாருங்க  , போன  வாரம்  என்  பொண்டாட்டி  இஸ்திரி   போட்டுட்டு   இருக்கும்போது கொஞ்சம்  தள்ளி  நிண்ணு அவளைப் பாத்துட்டு  இருந்தான் . நான்  கொஞ்சம்  கடுப்பாகி போய் என்னன்னு  விசாரிச்சா  , தனக்கு  கல்யாணம்னு  எங்களைக்கூப்பிட  வந்திருக்கான் . நான்  அன்னைக்கு  அவனோட  பார்த்த  பொண்ணோடத்தான்  கல்யாணம் . போட்டோ  காமிச்சான் .அவனுக்கு  அம்மா  இல்லை  , அப்பா  வேற  ஒருத்தியோட  போய்ட்டானாம் ,கல்யாணத்துக்கு  பிரெண்ட்ஸ்  மட்டும்தான்  போல  , எங்களைக்கூட  ஒரே இடத்துல  வேலை  பாக்கறவங்கன்னு  கூப்பிட  வந்து  இருக்கான்  பாவம் .
அங்க  இருந்துதான்  வரேன்  இப்போ ..பெருசா  சாதிச்சுட்டான்  சார்  அவன் . உங்களுக்குத்  தெரியுமா ? " என்கிறார்  விஜயன் .

"தெரியும்  , அன்னைக்கு  , பாஸ்ப்போர்ட்  ஆபீஸ்க்கு  போனேன் . இப்போ  நம்ம  ஏரியா  பாஸ்ப்போர்ட்  அப்ளிகேஷன்  வாங்கி  , டாக்குமெண்ட்ஸ்  சரி  செய்யும்  வேலை  ஒரு  தனியார்  கம்பெனி  செய்யுது .
இவனை  ஒரு  வெள்ளை  சட்டை  , கருப்பு  பாண்ட்  போட்டு  , டிப்  டாப்பா  , அந்த  இடத்த்தில்  பாத்தேன்  , BBA   படிச்சு  முடிச்சுட்டு  அங்க  வேலைக்கு  சேர்ந்து  இருக்கறதா  சொன்னான் .
தற்காலிகமா  ஒரு  10000 வரை  கிடைப்பதாக  சொன்னான் . ஆனா  மேல  , MBA  படிப்பதற்கு  ஆசையாம் . அதுவரை  இந்த  வேலை  செஞ்சு  கொஞ்சம்  பைசா  சேதுக்கப்போறதா  சொன்னான் . இவன்  கல்யாணம்  பண்ணிகிட்ட பொண்ணும் , ஒரு  நல்ல  வேலைக்கு  போய்க்கிட்டு  இருக்கு  போல .
பையன்  சாதிச்சுட்டான் . ரொம்ப  சந்தோஷம் ."

"ஆமாம்  சார் ..... கண்முன்னாடி  ஜெயிச்சு  காமிச்சு  இருக்கான் . என்  பசங்களை  நாளைக்கு  ஒரு  நல்ல  இடத்துக்கு  கொண்டு வந்துட முடியும்கற  நம்பிக்கை  வந்திருக்கு   எங்களுக்கு அவனைப்பாத்து "

சில  மாதங்கள்   கழித்து  அலுவலகம்  போய்க்கொண்டிருக்கிறான்  செந்தில் .
எதிரில்   கருப்பு  நிற  புது  பல்சார்  பைக்கில்  விக்னேஷ்  கம்பீரமாக   வருவதைப்பார்த்தான் .

" என்ன  புது  மாப்பிள்ளை  ..எப்படி  இருக்கீங்க ?"

" VERY  GOOD  Sir . Have a  wonderful  day "

"You  too "... என்றவாறே  நகர்கிறான் .

மனசு  கொஞ்சம்  லேசானது . முந்தின  நாளின்  அலுவலக  அழுத்தம்  பெரிதாக  இருந்தாலும்  , சமாளிச்சுடலாம்னு மனசு  சொல்லியது .அப்புறம்  அதற்கு  மேலே  சிலதையும்  யோசிக்கத்தொடங்கியது .

"எதிலும்  வகையறைப்படுத்த முடியாத  ஒரு  மாயவிசை  இவர்கள்  எல்லோரையும்  இயக்கிக்கொண்டிருக்கு  . அது  வயிற்றுப்பசி  மட்டுமே  அல்ல . சோர்ந்து  இருக்கும்போது  , தன்னைச்சுற்றி  தன்னால் சம்பந்தப் படுத்திக்கொள்ள  முடிந்த  சிலருடைய  வாழ்க்கையே  ,  அவர்களை  உத்வேகப்படுத்தி  ,  தட்டிக்கொடுத்து  ,
தூக்கிவிட்டுக்கொண்டிருக்கு  . நாளை மீது  நம்பிக்கை  கொடுத்து  , ஜெயிக்கும்  வேட்கையினையும்  கொடுத்து  இருக்கிறது "

அலுவலகம்  வந்து  சேர்கிறான் . கொஞ்சம்  அன்றைய  காலை  வேலைகளை
சுறுசுறுப்பாக  முடிக்கிறான் . காபி  சாப்பிடவேண்டுமென  தோன்றுகிறது .
மேல்தளத்தில்  இருக்கும்  கேன்டீனுக்கு  வருகிறான் . காபி  கப்பை  எடுத்துக்கொண்டு , அந்தப்  பெரிய  பால்கனிக்கு  வந்து  தனியாக  நிற்கிறான் . அங்கிருந்துப்  பார்த்தால்  , தூரத்தில்  மெயின்  ரோட்டில்  வண்டிகள் எறும்பு  போல  ஊர்வது  தெரிகிறது . மெதுவாக  காப்பியைக்
குடிக்கையில்  , அன்றைக்கு   விஜயன்  சொன்னது  நினைவிற்கு  வருகிறது .

"  பசங்க  தனியா  நாங்க  இல்லாம  சரியா  படிக்கமாட்டேங்கிறாங்க .நாங்களும்  ஏதோ  இருக்கோம்  இங்க . வாழ்ந்துட்டு  இருக்கோமான்னு  கேட்டா  இல்லை  , வெறுமென  இருக்கோம் . ஆனா  எதுக்கு  இந்தக்  கஷ்டம்  எல்லாம் . எங்க  பசங்க  படிச்சு  நல்ல  மேலே  வரணும்னுதான் .
ஆனா  பெயில்  ஆகறாங்கனு  ஸ்கூலுல கூப்பிட்டு  விட்டதைப்
பாக்கறபோது  , நம்பிக்கை இல்லாம  போச்சு . ரெண்டு  வாரம்  எல்லாத்தையும்  விட்டுட்டு  ஊருக்கு  போய்ட்டோம் . போயிட்டு  வந்தப்பறமாதான்  இந்த
விக்னேஷின்  கல்யாணமும்  , அவன்  எப்படி சாதிச்சிருக்கான்னும் தெரியவருது . எதுனாலும்  பாத்துக்கலாம்னு  நம்பிக்கை  பொறந்தது .
பசங்களை  இங்க கொஞ்சம்  நாள்  கூட்டிட்டு  வந்தோம் . அவனையும்  காமிச்சோம் , அவனைப் பத்தியும்  சொன்னோம்."

 பேசிக்கொண்டே  இருக்காமல்  தலையைச்  சாய்த்தவாறே  கரித்துண்டை  எடுத்துப்போட்டு  , இஸ்திரிப்பொட்டிய  தேய்த்து  வேலையும் செய்வதைப்  பார்க்கிறான்  செந்தில் . மேலும்  பேசுகிறார்  விஜயன் .

"சில  வருஷம்   முன்னாடி  நாங்களும்  கீழ ரோட்டுல  ஐயன்  பண்ணிட்டு  இருந்தோம்  , அப்புறம்  அபார்ட்மென்ட்  உள்ள  வந்தோம்  , இப்போ  மேலே  இங்க  இந்த  ரூம்ல  , நிழல்ல ,...

அங்க  பாருங்க  சார் .அதுபோல  ஒரு  கண்ணாடியாலயே  கட்டின  ஒரு  ஆபிஸ்ல  என்  பசங்களும்  ஒரு  நாள்  ஜம்ன்னு வேலை  பார்க்கணும் .....
பாப்பாங்க ...... உங்களுக்கு  நான்  சொல்றது  தெரியுதா  ....? சாரி  புரியுதா ?"

நினைப்பிலிருந்து  செந்தில்  வெளியே  வருகிறான் . வானம்   பெரிய  நீலப்  போர்வை போல  தெளிவாக இருக்கிறது .

----------------------------------------------------------------------------------------------------------------------


Monday, July 11, 2016

டாக்டர் ஜேக்கப்ஸின் ஹாப்பி டான்ஸ்

அலுவலகத்தில்  ஒரு சக  ஊழியருக்கு  குழந்தை  பிறந்து  இருப்பது  கேள்விப்பட்டு அவருக்கு வாழ்த்து  தெரிவிக்கும்பொழுதே  அந்த  ஆஸ்பத்திரி  பற்றி அறிகிறேன் .

அப்பொழுது எங்களுக்கு  பிள்ளை  இல்லை .அல்லது வரப்போகின்ற  செய்தியும்   இல்லை. எல்லாவற்றையும்  தெரிந்துக்கொள்ளும்  ஆர்வம்  போலத்தான்  இதையும்  கேட்டு  வைத்தேன் .

"மெடிக்கல்  சென்டர்  ஆப்  இர்விங்  "  தான்  நாங்கள்  டெலிவரி  பார்த்தோம் . அங்கே  பெண்கள்  டாக்டர்  குழு  ஒன்று  இருக்கிறது .
ரொம்ப நன்றாக  பார்த்துக்கொண்டார்கள் .

என்ன  " வீட்ல  விசேஷமா " என்று சிரித்தார் .
இல்லை  என்று  சொன்னாலும் , "நம்பிட்டேன்"  என்று  மீண்டும் சிரித்தார்.
அடுத்த  இரண்டு மாதங்களில்  , எங்க வீட்டில் விஷேஷம் .
உங்கள்  வாய் முஹூர்த்தம்  பலித்தது என்று  சொல்லி வந்தேன் .

வீட்டில்  இருந்து இருபது  கிலோமீட்டருக்கு  அப்பால்  இருந்தாலும்  ,  சக  ஊழியர்  சொன்ன  வார்த்தையாலும்  , தெரியாத  ஊரில்  தெரியாத  இடத்திற்கு போவதை விட  , இங்கு சிரமம் பார்க்காமல்  போவதே  மேல் என  முடிவு  செய்தோம்.

அதற்குள்  , என் மனைவி , அங்குள்ள  டாக்டர்ஸ்  பற்றி  " review " [விமர்சனம் ] பார்த்தாள் .டாக்டர்  ஜேக்கப்ஸ்  அவர்களின்  பெயர்  தனித்து  நின்றது .
அவரிடம் அப்பாயிண்ட்மென்ட்   கிடைப்பது  கஷ்டம்  எனத்தெரிந்தாலும்  , முயற்சி  செய்துப்பார்ப்போமே  எனப்பார்க்கையில்  , ஒரு  மாதம் கழித்து   இருக்குமென  தெரிய வருகிறது .

பொறுத்து  இருந்து  அவரைப்  பார்க்கும்  நாளும் வந்தது .
ஒரு  50 வயது  மதிக்கத்தக்க  இளம் பெண் என்றுப்பட்டது எனக்கு அவர்களைப் பார்க்கையில்  , தோற்றத்தில்  40 சொல்லலாம் . , ஆனால்  , பேச்சிலும்  , நடை  உடையிலும்  25 கூட சொல்ல  முடியாது .ஒரு  துருதுருப்பு   இருந்துக்கொண்டே  இருக்கும்  அவர்கள்  பேச்சிலும்  உடல் மொழியிலும் .

முதல் சந்திப்பிலேயே  , ரொம்ப  பழக்கப்பட்டவர்களாக  உணர்ந்தாள்  என்  மனைவி .குறிப்பாக   "sweety"  என்று  அவளை  அழைத்ததால்  வந்த  நெருக்கம்  எனச்சிரித்துக்கொண்டேன் .

மனைவிக்கு   என்று  மட்டும்தான்  சொல்கிறேன் .
என்னுடைய  அபிப்பிராயம்  இந்த  ஊர்க்காரர்களைப்பற்றி  [ அமெரிக்கர்கள் ]அவ்வளவு  நல்லதாக  இருந்தது  இல்லை.  ethics  [நெறிமுறைகள்] நிறைந்தவர்கள்  என்ற  மதிப்பு உண்டு.  வெளியில்
எல்லாம்  சிரித்தார்ப்போல   பேசி  இருந்தாலும் , அவர்களுடைய
உள்ளுலகம்    சற்று  சுருங்கியது  என்பது  என்  கணிப்பு . எல்லாவற்றையும்  வணிகக்கண்ணோட்டத்துடன்  பார்ப்பவர்கள்  என்ற  பிம்பம் மனதில்  உண்டு .

 அமெரிக்காவில்  சில  வருடங்கள்  இருந்தபின்னர்   இவர்களின்  சில  கோட்பாடுகள்  தெரிய  வந்தன ...
"THERE ARE NO FREE LUNCHES " .....

" YOU DONT HAVE TO DO THIS"..... இதைவிட  கடுப்பேற்றும்  ஒரு  தொடர்  எனக்கு  இல்லவே இல்லை ...ஏதாவது  நட்பாக  செய்தால்  கூட  , சந்தேகத்துடன்  இவன்  எதையோ  எதிர்பார்கிறானோ  என்ற  தோரணையில்  கேட்கப்படும்  கேள்வியாகப்பட்டது  எனக்கு .

 தோழமையோ  , பரிவோ  கணக்குப்  பார்த்துதான்  வரவேண்டுமா  என்ன .
??எனக்கு  எந்த  கண்ணோட்டம்  , ஒரு  அலுப்பைத் தந்தது .

இது   போன்ற  சில நிகழ்வுகள்  , இவர்கள்  மீது  வேறு  மாதிரியான மேற்சொன்ன   ஒரு  பிம்பத்தை  ஏற்படுத்தியிருந்தது .

இதைப்  போன்ற  சுபாவம்  அவர்களின்  நெருங்கிய  நண்பரிகளிடம்  செய்வார்களா  என்பதைப்பற்றி  எனக்குத் தெரியாது .
ஆனால்  , ஒரு  வித  தாமரை  இலை மேலே  தண்ணீர்  போன்ற  மனப்பாங்கு  உண்டு  என்பதை  நான்  பல  முறை உணர்ந்து  இருக்கிறேன் .
கணவன்  மனைவி  கூட  வீட்டில்  வீட்டில்  அவர்களுடைய  செலவினை
ரூம் மேட்   போன்று  பகிர்ந்துக்கொள்வர்  எனகேள்விப் பட்டு   இருக்கிறேன் .
நாளைக்கு  பிரிய  வந்தால்  கணக்கு  வழக்கு  சரியாக  இருக்கணும்  போல!
விளக்கம்  கேக்கதீர்கள்! ...எல்லோரையும்  சொல்லவில்லை  , பொதுவாக  நடப்பதைச்   சொல்கிறேன்.அமெரிக்க  டாக்டர்  என்பதால்  , இந்த   என்  கண்ணோட்டம் , DR  ஜேக்கப்ஸ்  மீதும் படர்ந்தது .

ஒரு  நாள்  அலுவலகத்தில்   மிகுந்த  வேலை .
அன்றைக்கு  டாக்டரைப்  பார்க்க  அப்பாயின்ட்மென்ட்  இருந்தது .
அவ்வளவு தூரம்  இருந்ததால்  அரைநாள்  விடுப்பெடுத்து  அலைவது  , அதிகமாகவே  தெரிந்தது .

"வீட்டின்  பக்கமே  ஒரு  டாக்டரைப்  பார்த்து  இருக்கலாம் , எல்லாம்  இது போல தேன்போல பேசி  நடிக்கத்தான்  போறாங்க  , உனக்கு  எங்கே  போனால்  என்ன ?".

"உங்களுக்கென  தெரியும்  , அவங்க  எவ்ளோ  நல்லவங்க ....
அம்மாவுக்கு  அந்தக்  காலத்துல  தம்பி  பொறந்தபோது   , கோடம்பாக்கத்துல  ஒரு  பெரிய  டாக்டரைப்பாத்தங்களாம் .
கொஞ்சம் நேரம் லேட்டா  போனா  கூட  காய்ச்சி  எடுத்துடுவாங்களாம் .
டாக்டரைப்  பாக்கப் போகணும்னாலே  அம்மா  பயத்தோடயேதான்  போவாங்களாம் ..

அப்பாவை ஒரு  தடவ  எதுக்கோ  திட்டி  , அவங்க  ரொம்ப  நாளைக்கு
டாக்டரைப்  பாக்கவே  வரமாட்டேன்னு  சொல்லிட்டாங்களாம் .உங்களை  எவ்ளோ மரியாதையா  நடத்தறாங்க . உங்களுக்கு  அவங்க  அருமை  தெரியலை .

நீங்க  சொல்ற  போல  ஜேக்கப்ஸ்  நடிச்சாங்கனே  வச்சுக்குவோம் ..ஆன  எனக்கு  பயம்  இல்லை  அவங்களை  பாக்க  ...
சந்தோஷமா  வரேன்  " என்றாள் .

"சரி  என்னைக்குடையாம  இருந்தா  சரி "..

அன்றைக்கு  குழந்தையின்  "heart  beat"  மற்றும்  இதர  உறுப்புகள்  இதுவரை  சரிவர  இயங்குகிறதா  என்று ultrasound [அல்ட்ராசவுண்ட் ] இல்  பார்க்கும்  நாள் .
நானும்  கூடவே  இருந்தேன்   ...

 ஜேக்கப்ஸ்  வந்தார்கள் .
ஒரு  ஆனந்த  நடனம்  ஆடினார்கள் ..என் மனைவி  அதுக்கு
" ஜேக்கப்ஸ்  ஹாப்பி  டான்ஸ் "  என்று பெயர்  வைத்தாள் அதன்பிறகு .
எதற்கென்று  சொல்லவில்லையே  நான் .
குழந்தையின்  , அசைவுகளைப்  பார்த்துவிட்டுத்தான் .

" அவள் சரியா  பாக்கவிடமாட்டேங்குறா ...ஒரு பக்கமா  எசகு  பிசகா  படுத்துருக்கா ...பாரு  பாரு  இப்போவே  எவ்ளோ  முடி .......
இங்க  பாரு  அவ  கை  விரல்  எவ்ளோ  நீளம் , அவ  அப்பா  போல "
இப்படி  என்னவெல்லாமோ  பேசிக்கொண்டு  , கூடவே  அந்தக்  ஹாப்பி  டான்ஸையும்  போட்டார்கள் .

அதை  எப்படிச்  சொல்ல ...ஸ்டெதஸ்கோப் மாட்டிக்கொண்டு  , டாக்டர்  கோட்டுடன்    இடுப்பையும்  , காலையும்  ஆட்டி  ஒரு
மெல்லிய  ஆட்டம்  ... சில  சமயங்களில்  கைகளை  காரின்  வைப்பர்  போல  ஆட்டியும் ,ஒருவிதத்தில்  நம்மையும்  தொற்றிக்கொள்ளும்
வகையறா  அது. எனக்கு  ரொம்பப்  பிடித்தது ,கையில்  வெண்ணிற  ஆப்பிள்  லாப்டாப் ஒன்றைக்  வைத்துக்கொண்டே அவர்கள்  போடும்  அந்த ஆட்டம் .

மேலே  நான் அந்த  ஹாப்பி  டான்ஸை  விவரிக்கும்  போது  ஒன்றை கவனித்திருப்பீர்களே !ஆமாம்  எங்கள்  வீட்டிற்கு  வரப்போவது  ராஜகுமாரி ! இதை  அவர்  அன்றைக்கு  முதலில்  சொல்லிவிட்டுதான்  அந்த  ஹாப்பி  டான்ஸை  ஆரம்பித்தார் .

" எனக்கு  மூணு  குழந்தைங்க ...ரெண்டு பசங்க ... அவங்க  உலகத்தில்  இருப்பாங்க  பசங்க ..குறை  சொல்லலை  , ஸ்வீட்  பாய்ஸ் ....பேஸ்  பால்  , மீன்  பிடிக்கறதுன்னு  அவங்க   உலகம்  வேற . வேலை  விட்டு  வீட்டுக்கு  லேட்டா  போனா  , சாப்டியான்னு  கேக்கறது  பொண்ணுதான் ....என்கூட  கொஞ்சம்  பேசறதும் அவதான் .."

பிறகு  என்னைப்பார்த்து ,

" மூணு  வயசு  வரத்தான்  அம்மா  அம்மான்னு  அப்பிக்கிட்டு  இருப்பா  பொண்ணு . என்னதான்  என்கிட்ட  பிரியமா  இருந்தாலும் , அவங்க  அப்பாவுக்கும்  என்  மகளுக்கும்  ஒரு  தனி  bonding  [ ஓட்டுதல் ] உண்டு .
நீ  இன்னும்  சில  வருஷங்களில்  நான்  சொல்வதை  உணர்வாய் ..."

அன்று   வீடு  திரும்புகையில்  , நான்  அமைதியாக  வந்தேன் .

" என்ன  இதையும்  நடிப்புன்னு  சொல்லப்போறீங்களா .!" என்றாள்  மனைவி .

" அதைத்தான்  யோசிச்சுட்டு இருந்தேன் .
பொண்ணைப்  பத்தி  அவங்க  பேசினது  , மனசுக்கு  இதமா  இருந்துச்சு " என்றேன் .

" அப்பவும்  பொண்ணும்  இப்போவே  பார்ட்னர்ஷிப்  போட்டாச்சு  போல ..
என்ன  டீலில்   விட்டுடாதீங்க ..."

வீட்டிற்கு  வந்தபின்  , அந்த  டாக்டரைப்  பற்றி  இந்தியாவிற்கு  போன்  போட்டு  ,  அவர்  இப்படி  அப்படியென  புகழ்ந்து  தள்ளிக்கொண்டு  இருந்தாள்  மனைவி .

"அவங்க  தன்  குடும்பத்தைப் பற்றித்தானே  பேசினாங்க .
ஒத்துக்கறேன்  அவங்க  மத்தவங்களை  விட  கொஞ்சம்  பரவாயில்லை, ஆனா   நீ  சொல்ற  அளவுக்கு இல்ல ....."

" என்ன  இல்ல ...?"

" என்னன்னு  சொல்லத்தெரியலை ..ஆனா  எனக்குள்ள  இன்னும்  முழு  நம்பிக்கை பொறக்கல ..இவங்களோட  உண்மை  முகம்  ஒண்ணு   இருக்கும். அது  ஒரு  நாள்  தெரியும் ...."

நாட்கள்  நகர்ந்தன ...அடுத்த  முறை  நாங்கள்  அவர்களை பார்த்த  பொழுது  நடந்த  ஒரு  உரையாடல்  என்  மனைவியினை  வாய்  மூடச்செய்தது ...

" நெருங்கிடுச்சு  இன்னும்  ஒரு  மாசம் தான் " இது  ஜேக்கப்ஸ் சொன்னது ..

" டாக்டர்  நீங்க  அன்னைக்கு  இருப்பீங்கதானே .."  இது  என் மனைவி ..

" ஹ்ம்ம் ..சொல்ல  முடியாது ..வாரத்தில்  சில  நாட்கள்  நான்  நயிட்  டூட்டியில்  இருப்பேன் ..உன்னோட  பிரசவம்  நாம  பிளான்  செய்த போல  வந்துட்டா  நான்  இருப்பேன் ...வேற  நாள்  தள்ளியோ  முன்னையோ  வந்தா  சொல்ல  முடியாது ...அன்னைக்கு  டூட்டியில்  இருக்கும்  டாக்டர்  பார்த்துப்பாங்க ...
நான்  பேஜர்  [ {PAGER ] வச்சிருப்பேன் ....அவசரம்னா  எனக்கு  மெஸேஜ்   செய்வாங்க ...."

" நீங்க  இருக்கணும்  டாக்டர் ..எனக்குத்  தைரியமா  இருக்கும் ..."

" ஒர்ரி  பண்ணாத  சுவீட்டி .....எல்லாம்  சரியா
  போகும் .."

படி  இறங்கி  கீழே` வரும்  வரை  அமைதியாக  இருந்தேன் ..

" டோன்ட்  ஒர்ரி  சுவீட்டி ..டூட்டி  டாக்டர்  பார்த்துப்பாங்க ...!"
என் நமுட்டுச்  சிரிப்பை  எதிர்கொள்ள  முடியாமல்  , அவள்  அமைதியாக  வந்தாள் .....கொஞ்சம்  தேவை  இல்லாம  சீண்டிட்டோமோ  என  நினைக்கிறேன் அப்பொழுது  .......பிரத்யேக  அக்கறை  ஒன்றும்  இல்லை என்பதை  உணரட்டும்  இவள் .....

அன்றய  இரவின்  முழு  நிலவை  என்  மனைவி  ரசிக்க  முடியவில்லை ..
வெளியே  உட்கார்ந்து  பேசுகையில்  ஏதோ  யோசித்துக்கொண்டு  இருந்தாள் .
" நீ  பயப்படாத  , இந்த ஊருல  , எல்லாம்  நல்ல  வசதி  இருக்கு .
வேற  டாக்டர்  வந்தாலும்  நல்லபடியா  பாத்துப்பாங்க ...."

முழு  நிலவு  தேய்ந்து  , வளர்  பிறையில்  ஒரு நாள்  அதிகாலையில்  ,..
ரொம்ப  வலிக்குது  என்று சொல்லவும்   , மருத்துவமனை  விரைகிறோம் ...வலியினை  அளக்க  ஒரு  கருவியினை  மாட்டி விடுகிறார்கள் ...நேரம்  போகப்  போக அந்த  மெஷின்  வலி  அதிகமாவதைக்  காண்பிக்கிறது ...
ஆனால்  இன்னும்  குடம்  உடைந்து  பிள்ளை  பிறக்கும்  சூழல்  முழுவதும்
உருவாகவில்லை ...இப்படியே  ஒரு  நாள்  கழிகிறது ..
டாக்டர்  ஒரு  வேலையாக  வெளியூர்  போய்விட்டதாகவும் , அவர்  இன்னொரு டாக்டருக்கு  எல்லா  கேஸ்  ஹிஸ்டரியினையும் சொல்லிவிட்டதாக  நர்ஸ்  சொல்கிறார்கள் ..

" ரொம்ப  வலிக்குது ..பயமா  இருக்கு ....டாக்டர்  வேற  இல்லை .."

" அவங்க  இருக்கிறது  கஷ்டம்னு  எதிர்பார்த்ததுதான ...நீ  தைரியமா  இரு ..."

 அன்றைய  இரவு  ஒரு பத்து  மணி  இருக்கும் . இரவு  நேரத்து  டூட்டி  டாக்டர்  வருகிறார் ...."நாளை  காலைல  டெலிவரி  ஆகிடும்னு  எதிர்பாக்கறேன் ..குழந்தை  நல்லா   இருக்கு ...கொஞ்சம்  தூங்கப்  பாருங்க ..."

காலை  நான்கு  மணிக்கு  ரொம்ப  அசவுகரியமாக  இருக்கவும் .....
நர்ஸைக்  கூப்பிடுகிறோம் ... அவர்கள் டாக்டரை  வரச்சொல்கிறார்கள் .....

அவர்களும்  பரிசோதனை   செஞ்சுட்டு  ,

" கொஞ்சம்  காம்ப்ளிகேஷன்  இருக்குமா ....குடம்  உடைஞ்சுடுச்சு , தண்ணி  கம்மியாயிட்டு  வருது . ஆனா  குழந்தை  தொப்புள்  கொடியை  பிடிச்சுட்டு இருக்கு ....தைரியமா  இரு  ..கொஞ்சம்  பார்ப்போம் ..."

மனைவி  பதட்டத்தில்  ஒரு  மாதிரி  ஆகிவிடுகிறாள் ...
பயமா  இருக்கு  , பயமா  இருக்கு  , என்  பிள்ளைன்னு அழத்தொடங்குகிறாள் ..

அப்போது  கதவு  தட்டப்படுகிறது ...
" ஹேய்  சுவீட்டி ...."என்று  சொல்லிக்கொண்டே   உள்ள வராங்க
டாக்டர்  ஜேக்கப்ஸ் ...

" என்   மாமனார் இறந்துட்டாங்க ..அதனாலதான்  ஊரை  விட்டு அவசரமா  கிளம்ப  வேண்டியதயாடிச்சு .......முடிஞ்ச  வரை சீக்கிரமா  வந்து  சேர்ந்தேன் ...."

என்  மனைவிக்கு  அப்போதான்  உயிரே வந்தது  போல  உணர்கிறாள் ..
முகத்தில்  தெளிவு  வருகிறது ...

"நாம  இன்னும் அஞ்சு  நிமிஷத்துல  , சர்ஜெரி  செஞ்சாகணும் ...குழந்தையின்  ஹார்ட்  ரேட்  குறையுது ..." என்கிறார்கள்

"நர்ஸ்  , உடனே  சர்ஜரி ரூமுக்கு  கூட்டிட்டு  போங்க ..."

என்னைப்  பார்த்து  ,
" நீ  எங்க  போற ...அஞ்சு  நிமிஷத்துல  பிள்ளை  கைல  வந்துரும் ....பிறகு  சர்ஜெரி  முடிய   நேரம்  ஆகும் ......சர்ஜெரி  ரூம்  ட்ரெஸ்  இந்தா ,  இதைபோட்டுட்டு  சீக்கிரம்  வந்துடு ...மறக்காம  காமரா  எடுத்துட்டுவா  ..."


கண்  இமைப்பது   இருந்தது ....எங்கள்  குட்டி  தேவதையினை  எடுத்து  எங்கள்  கையில்  கொடுக்கிறார்கள்  ஜேக்கப்ஸ் ......திரை  சீலை  வைத்து  மனைவியின்  கழுத்திற்கு  கீழே  மறைத்திருக்கிறார்கள் ......பிள்ளையை  வாங்கி  கண்களில்  கண்ணீர்  முட்ட  முட்ட  மனைவியின்  தலைமாட்டிடம்  பிடித்துக்கொள்கிறேன் ....
டக்  டக்கென்று  பல  கோணங்களில்  போட்டோக்கள்  எடுக்கப்படும்  சத்தம்  கேக்கிறது ....ஒரு  நர்ஸ்  மட்டும்  ஒரு  அசிஸ்டன்ட்  டாக்டர்  போட்டோ  எடுத்துக்கொண்டு  இருக்கிறார்கள் ....

மறுபடி  அறைக்கு  வந்து  சேர்கிறோம் ...
" என்ன  'டாடி' உன்  கண்ல  கண்ணீர்  வந்துச்சே ....க்ளோசப்ல   எடுக்கச்சொன்னேன் ....இதையெல்லாம்  பாக்கத்தானே டாக்டர்கள்  மட்டும் கொடுத்துவச்சவங்க !

இது  யார்  , குழந்தையோட  பாட்டியா ?....
சாரிமா  .... சி செக்க்ஷன்  [ caesarian ] செய்ய  வேண்டியதயாடிச்சு....
வேற   வழி  இல்லை ..உங்க  பொண்ணை  கஷ்டப்படவச்சதுக்கு  மறுபடியும்  சாரி ..." என்று  சொல்லியவாறே என்   அத்தையினை  அணைத்துக்கொள்கிறார்கள் .... அவர்களும்  கூச்சத்துடன்  , என்னமோ  முணுமுணுத்தார்கள்  ...அது  அவர்கள்  இருவருக்கும்தான்  தெரியும்...

நான்காவது  நாள்  டிஸ்சார்ஜ்  ஆகி  வீட்டுக்கு  வருகிறோம் ...
லிப்ட்டில்  இறங்கி  கீழே  வந்து  , இடது  பக்கம்  திரும்பி  லாபியினை  நோக்கி
நடக்கையில் , turtle  [ ஆமை ] நெக்  ஸ்வட்டர் போட்டுக்கொண்டு  , அதன்  மேலே  , லெதர்  ஜாக்கெட்  போட்டவாறே  , ஸ்டைலாக  ஒற்றைக்காலைத் தூக்கி , முன்னாடி  இருந்த  ஒரு  நாற்காலி  மீது  வைத்துக்கொண்டு  சிரித்தவாறே  இருந்த  டாக்டர்  ஜேக்கப்ஸின் ஒரு  புகைப்படம்  என்னைப்பார்த்து  மட்டும்  , நான்  என்  மனைவியிடம்  , முன்பு  விட்ட  அதே  நக்கல்  சிரிப்பை   உதிர்ப்பது போல  இருந்தது .

நான்  பார்ப்பதைப்  பார்த்த  நர்ஸ்  ,
" DR  ஜேக்கப்ஸ்  எங்கள்  pride  [ பெருமை ]. நாங்கள்  அவர்களுக்கு  கொடுக்கும்  ஒரு  சின்ன  மரியாதை  இந்த  போட்டோ " என்கிறார்கள் .....

பிள்ளையோடு  வீடு  வந்தாயிற்று .....
ஒரு  மாதம்  கழிந்து  மறுபடியும்  , டாக்டரைப்  பார்க்கப் போகிறோம் ...

" டாக்டர்  , நாங்க  ஊர்  மாறப்போகிறோம் ...என்  ஹஸ்பண்டுக்கு  புது  வேலை , வேற    ஊருக்கு  மாற  வேண்டியிருக்கு ...ரொம்ப  தாங்க்ஸ் எல்லாத்துக்கும் .."
"

"எனக்கு  இன்னும்  வருத்தம்  இருக்கு ...சி  செக்க்ஷன்  இல்லாம  இருந்து  இருந்தா  நல்ல  இருந்து  இருக்கும் ...."

விடைபெற்று  வந்தோம் ...ஊரும்  மாறியாச்சு ...

அடுத்த  வருட கிறிஸ்துமஸ்  வருகிறது .......
அந்த  ஞாயிற்றுக்கிழமை  பிள்ளையுடன்  உட்கார்ந்தவாறு  இருக்கையில்  ,
என்  மனைவி  , அவள்  தோழியிடம்  பேசுவது  காதில்  விழுகிறது ..

" நீ  டாக்டர்  ஜேக்கப்ஸ்ட  போ ...SHE  IS  THE  BEST ....." ...

அவளிடம்  நான்  ..." நீ  ஒரு  கிரீட்டிங்  கார்டு  வாங்கி  அதுல  பாப்பா  போட்டோ  வச்சு  அனுப்பு  அவங்களுக்கு ...."

" எதுக்குங்க  அவ்ளோ  சிரமம் ...அவங்க   கடமையத்தானே  செஞ்சு  இருக்காங்க !" என்று  சிரிக்கிறாள் .

" ச்ச   இல்லை  ..அவங்க  எவ்ளோ  நல்லவங்க ....நீ  ஏன்   இப்படி  சொல்ற ..." என்று சொல்லியவாறே  , என்  பிள்ளைக்கு  ஹாப்பி  டான்ஸ்  சொல்லித்தந்துக்கொண்டு  இருந்தேன் .


=====================================================================



















Monday, July 4, 2016

ஆட்டோவில் வந்த கிருஷ்ணர்

 மனதில் நிறைய கசப்பான  அனுபவங்கள்  படிந்து இருந்தது....
ஆட்டோக்காரர்களைப் பற்றித்தான் சொல்கிறேன் .

பைக்கில்  அடிபட்டு  கிடந்த  பொழுது என்னை  நடு ரோட்டில்  கண்டுகொள்ளாமல்  அப்படியே  விட்டுச்சென்ற  ஆட்டோகாரர்  முதல்  ,
இங்கே  வரமாட்டேன்  அங்கேதான்  வருவேன்  எனச்சொல்லி சவாரி  வேண்டாம்  என்று சொல்லும்  ஆட்டோக்காரர்  ஒரு பக்கம்  என,
வீடு  அருகில்  வந்ததும்  , ரோடு  சரி  இல்லை , அது சரி இல்லை  , இது  சரி இல்லையென  நொட்டம்  சொல்லி  இன்னும்  அதிமாகப் பேரம்  பேசும்  ஆட்டோக்காரர்  வரை  பலரைப் பார்த்ததினால்  ஏற்பட்ட மனப்படிமம் தான் .

அன்றைய  காலை  எவ்வளவு  சீக்கிரமா  கிளம்பியிருந்தாலும்  ,
பதற்றத்துடனே  போயிற்று . கால்  டாக்ஸிக்காரன்  , வழி  தெரியாமல்  , ஒன்  வேயின்  மாற்றுப்பாதையில்  நுழையத் தெரியாமல் ஊர்  எல்லாம் சுற்றி  ,
கடைசி  நிமிடத்தில் கொண்டு  வந்து  சேர்த்தான்  விசா  இன்டர்வியூக்கு .

அங்கே  வந்த  பிறகுதான்  பார்க்கிறேன்  ஒரு  முக்கியமான  "payslip "மறந்து   இருப்பதை . அது  இல்லையென்றால்  , விசா கிடைப்பது  கஷ்டம் .
கிளம்பின  அவசரத்தில்  , கடைசி  மாச "payslip"ஐ  வேறு  பைலில்  வைத்து  விட்டேன்.

அமெரிக்கன்  எம்பஸியில் போன்  எடுத்து  வரக்கூடாது என்பதால்   வீட்டிலேயே விட்டுச் சென்றிருந்தேன் . ஆட்டோக்காரரிடம்தான் போன்  வாங்கி வீட்டிற்க்கு  விஷயம் சொன்னேன்.அனைவரும் பதறிப்போய்  இருந்தனர். அடுத்து என்ன என்று கேட்டதற்கு ,"இப்போதைக்கு ஒன்னும் பண்ண முடியாது, திரும்பவும்  பணம் கட்டி appointment  book  panni   வேறு ஒரு நாள் மறுபடி வர வேண்டும் ". அனைவரும் பதட்டம் அடைந்தனர்.
குறுகிய விடுமுறையில் நிறைய வேலைகளுடன் வந்தமையால்.

இதைகேட்டு கொண்டு இருந்த ஆட்டோ  ஓட்டுனர் , "என்ன சார்  , வீட்ல எதன்னா  மறந்து  உட்டுட்டு வந்துட்டீங்களா ? டென்ஷன் உடுங்க  சார் , நமக்கு உள்ற ஆள்  தெரியும் , எத்தனை மணிக்கு interview , வீட்டுக்கு போயிட்டு  எடுத்தாந்துரலாம் " என்றார்.

எனக்கு நம்பிக்கை இல்லை." அமெரிக்கன் embassy " இன் "document  review " department . இவருக்கு இங்கே ஆள்  எப்படி தெரியும்.சும்மா  சவாரிக்கென்று  சொல்கிறார்  என நான் பெரிதாக  எடுத்துக்கொள்ளவில்லை .

"என்னா  சார் , நம்பிக்கை இல்லையா  , போன வாரம் கூட  ஒரு கேரளா போலீஸ் காரர்  இது போல தான் எதையோ மறந்து வச்சுட்டேன்னு சொன்னார்.
அரை மணிநேரத்துல பார்க் ஓட்டல்க்கு போய்   , எடுத்தாந்து  , உள்ள அனுப்பி வச்சேன். கடைசில அந்த ஆளு , என்கிட்ட்ட ஒரு இருவது ரூவாய்க்கு  பேரம் பேசிக்கினார் சார் . எனக்கு அங்க உள்ளே விடும்  செக்யூரிட்டி  பசங்களை தெரியும் சார்.டீ  தம்  அடிக்க வெளியதான வருவாங்க.பார்த்து அனுப்பி விடறேன் சார். நம்பி வாங்க " என்றார்.

சரி போய்தான்  பார்ப்போமே என்று நானும் சரி என்றேன். வீடு வந்தோம்   விட்டுப்போன document  உடன். வேகாம ஒரு uturn  போட்டு  , அப்படியே டாப் கியரில்  விட்டார்  ஆட்டோவை . 25 நிமிடத்தில் வந்தோம் இந்த முறை.கலையில் டிராபிக் சேர்த்து ஊரை சுற்றியதில்  ஒரு மணி நேரம் ஆகியது இந்த தூரத்திற்கு.

" நீங்க உள்ள போங்க சார் , செக்யூரிட்டி எதன்னா  பிரெச்சனை செஞ்சா  நான் வரேன்  " என்றார்.   அவர் கொடுத்த தைரியத்தில் உள்ளே சென்றேன்  .
காவலாளியும்  அரை மணி நேரம் லேட்  என்று கோவித்துக்கொண்டே  உள்ளே  விட்டார்.,
" இன்றைக்கு டாகுமென்ட் செக்கிங் மட்டும் தான். அதானால்  விடறோம்.நாளை சரியான நேரத்திற்கு consulatekku  போய்டுங்க " என்று  உள்ளே விட்டனர். நல்லபடியா முடிந்தது அன்றைய  தினத்திற்கான வேலைகள் .முயற்சியே செய்யமால் விட்டுவிட நினைத்த  எனக்கு இது பெரிய`பாடமாக  இருந்தது .

பெரிய நிம்மதியுடன்  வெளியே வந்த என்னை , "அதான் சொன்னேனே சார் , எல்லாம்  பார்த்துக்கலாம்னு  வாங்கன்னு ".
ஆட்டோ ஸ்டாண்டில்  , சிலருக்கு  இது தெரிந்து  , "என்ன சார் , நம்ம தோஸ்து  முடிச்சு கொடுத்து இருக்கார் , டீ  சாப்ட எதன்னா  செஞ்சுட்டு  போ  சார்"என்றார்! .

அப்பொழுதான் கவனித்தேன் அவரை . சுறுசுறுப்பான எறும்பு போல பரபரப்பா இருந்தார் .சரியான உயரம் , சற்றே மெலிந்த தேகம். "என் பேரன் ஸ்கூல் போறான் சார் " ன்னு அவர் சொன்ன போது தான் அவருக்கு  ஐம்பது வயதிற்கு மேல் ஆகிறதென்று எனக்குத்தெரியும் .

"நீங்க எப்போ  வெளிய வருவீங்கன்னு  தெரியலை.அதான் மத்தியானம் இன்னும் சாப்டலை .காலைல டீ  தான் அடிச்சேன்.உங்களை உட்டுட்டு  இன்னைக்கு ஊட்டுக்கு போய்  படுத்திடலாம்னு  இருக்கேன் " என்றார்.

" டீ  மட்டும் சாப்பிட்டு இருந்ததால் , வயிறு கெட்டுப்போய் அல்சர்  வரும்.
அப்புறமா  நீங்க  ஹாஸ்பிடல்  செலவு  அதிகமா  கொடுக்க வேண்டி  இருக்கும் ".
" பார்ப்போம் சார்  அங்க இங்க ஒட்டிட்டு  இருப்பேன் .டீ குடிச்சு  பழகிடுச்சு "

ஆட்டோவில் பல மதங்கள்  சார்ந்த சாமி  படங்கள் இருந்தன .நான் பார்ப்பதை கவனித்தவர் ,"நான் எல்லா சாமியும்  கும்பிடுவேன்".

"உங்களைப்  போலவே  எல்லோரும் இருந்தால் நாட்டில் பிரச்சனையே  இருக்காதே  " என்றேன் .

 போன் போட்டு தகவல் சொன்னேன்.நம்ப முடியாமல் திகைத்தனர் . அம்மா , மனைவி , அக்கா என  ஆளாளுக்கு  பல  கோயில்களுக்கு நேந்து  இருந்தனர்  இந்த இடைப்பட்ட  நேரத்தில் .
  • வீட்டிற்குள்  வரச்சொல்லி காபி கொடுக்க வேண்டும் என்று அக்கா சொன்னாள் . திருநெல்வேலியில் இருந்து  வாங்க வந்த அல்வா  பொட்டலத்தை கொடுத்த அக்கா 
  • " பேர பிள்ளைக்கு  கொடுங்கள் . காலத்தினால்  செய்த உதவி   மறக்க முடியாது சார் !".அவருக்கு மிகுந்த சந்தோசம்.
உண்மை தான் . வந்த மூன்று வாரத்தில்  , அன்று தப்பிப் போய் இருந்தால் , என்னுடைய அடுத்த  மூன்று  வாரமும் எனக்கும் குடும்பத்திற்கும்  தொடர் இயக்கமாக நிறைய குழப்பங்களை கொடுத்து  இருக்கும  , பண  விரயமும் கூட .

ஆட்டோவைப்  பார்த்த என் மகள்   ரொம்ப சந்தோஷம்   கொண்டாள் . அவளை  வைத்து. ஒரு சிறிய ரவுண்டு அடித்து  விட்டுச்சென்றார்  
பட்  பட்    என்ற  சத்தமும்  , குலுக்கலும் அவளுக்கு என்னமோ செய்து இருக்கும் போல,குதூகலத்துடன்  திரும்பி  வந்தாள்  . ஆட்டோவை விட்டு இறங்க மனம் இல்லாமால் இருந்த அவளை  இழுத்து வந்தோம் .

இரண்டு வருடம் கழித்துப்  பார்த்ததால்  ,அம்மாவிடம் போகமால் இருந்த என் மகளை ஆட்டோ காமித்தே  அவளுடன்  மீண்டும் நெருக்கம் ஆனார்கள் அம்மா .அவளுடைய  அம்மா தாத்தாவும்  ஒரு ஆட்டோ பொம்மையுடன் வந்தார் அவளைப்பார்க்க. ஆட்டோவினால்தான் எத்தனை  மாயங்கள் . 
  • மறுநாளும்  அடுத்த கட்ட  நேர்காணல்   இருந்ததால்  , "சார் நானே  வந்து கூட்டிட்டு  போறேன்  ,  டைமுக்கு   கொண்டு போய் விட்டுடறேன் சார்  " என்றார்.தொலை  பேசி எண்ணையும்  விட்டுச்சென்றார் . பெரிய உதவி செய்ததை  மனதில் வைத்துக்கொண்டு  , சும்மாவே இன்னும்  கொடுங்கள்  என்று கேட்காமல் , உழைத்துச்  சம்பாதிக்க  வேண்டும்  என்ற எண்ணம்  எனக்கு அவர் மேல இருந்த மரியாதையை  இன்னும் கூட்டியது . ஆட்டோக்காரர்கள் மேலும்  .
மறு நாள் காலை சொன்ன படியே நேரத்திற்கு வந்தார் .
அக்கவைப்பார்த்து  "மேடம்  , அல்வா  சூப்பர்  , நாங்க சாப்டு  பக்கத்து  வீட்டுக்கும்  கொடுத்தோம் " என்றார் . சின்ன  பொட்டலத்தையும் பகிர்ந்து  உண்ணும்  எண்ணம்  எத்தனை பேருக்கு வரும்.

  "எல்லாம் சரியா எடுத்துக் கிட்டீங்களா  சார் , போலாமா " என்று விருட்டென  விட்டார்  ஆட்டோவை .
  • "ஜெமினி மேம்பாலம்  வந்திருச்சு சார்,.காசு எதுவும் இப்போதைக்கு  வேண்டாம் ,  என்னுடைய  செல்போனுக்கு   கால் பண்ணுங்க  . நானே வீட்ல விட்டுடறேன் "  .  கால் டாக்ஸி போல கால் ஆட்டோ  சர்வீஸ் ஆனது  இந்த முறை. இதுவும் ஒரு வித்தியாசனமான  அனுபவம்தான்.
  • "your visa is  approved   ,please  read  your  rights " என்று சொன்னார் எம்பஸி ஆபிசர் .விசா நேர்காணல்   முடிந்தது .
  • "கொஞ்சம் தள்ளி  டீ  கடை பக்கத்தில்  நிக்கறேன் , வந்துடுங்க "என போன் செய்தேன்  . சிறுது  நேரத்தில் ஆட்டோ வந்தது.சிரித்த முகத்துடன்  வந்தார். . 
"நம்ம  ஆட்டோவிற்கு   ராசி உண்டு சார். நீங்க " pass " ஆவீங்கன்னு தெரியும் எனக்கு.வேற எங்கேயும்  போகல இன்னைக்கு .

அப்றமா  சார்  , இன்னைக்கு  காலைல  நாஸ்தா  சாப்டேன் .....டீ  யோட  நிறுத்தலை !நீங்க சொன்னது தான் பொண்டாட்டியும் சொல்லிட்டு இருந்தா  , ஹாஸ்பிடல்   செலவுன்னு நீங்க  சொன்னது பயத்தை  கொடுத்திருச்சு .காசு செலவுன்னு நினைச்சாத்தான் ". சிரித்தேன்.
  • "ராயப்பேட்டை ஏரியாலதான் ரொம்ப காலமா இருந்தோம்.குடிசை  மாற்று  வாரியத்துல  இந்த ஏரியா விட்டு போகச்சொல்லிடாங்க சார் 
  • O .M .R  பக்கமா இருக்கோம்  இப்போ " என்று சொல்லிக்கொண்டே தான் முன்னாடி இருந்த ஏரியா  பக்கமா சென்றார் .
  • தன்னுடைய  தெருவிற்கு கொண்டு சென்றதும்  , அதின் நினைவுகளும் அவர் முகத்தில் தெரிந்த  வருத்தம் எனக்கும் அப்பிக்கொண்டது  ஆனாலும்  சிறிது நேரத்தில்  குஷியாகி  விட்டு." இதுதான்  சார் எங்க தெரு " என்று காண்பித்தார் .
  • அந்த வழியாக வந்து இருக்க வேண்டியது இல்லை என்றாலும்  , கொஞ்சம் சுற்றி வளைத்து  வந்தாலும் அவர்கள் இருந்த தெருவிற்கு என்னைக்கூட்டி வந்து காண்பித்தது  எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
* " என்ன  குமாரு , என்ன இந்த பக்கம் .ரொம்ப  நாள் ஆச்சு பார்த்து " போன்ற நல விசாரிப்புகளும் , கை அசைப்புகளும் நடந்துக்கொண்டே இருந்தது அவர் ஓட்டுகையில் . 

" எல்லாரையும் தெரியும் போல !"

" எத்தனை வருஷமா ஓட்டிட்டு இருக்கேன் ......"
  • அவர்கள் குடும்பம் பற்றி கேட்கத்   தோன்றியது  ."மகனுக்கு இன்னொரு ஆட்டோ வாங்கித்தர காசு இல்லை.அவனுக்கும் அதில் அந்த அளவு இண்டரெஸ்ட்   இல்லை.வேற எதன்னா  ஒரு நல்ல தொழில் பார்த்து செட்டில் செஞ்சுடணும்னு இருக்கேன் சார் .அப்போ அப்போ  எதன்னா வேலைக்கு போறான். பெரிய கட்டிடத்துல  பெயின்டிங்க்  அடிக்கற  வேலையும்  பார்ப்பான்  .அது ரிஸ்க் சார் , வேலை இல்லைனாலும் பரவா இல்லை , வேணாம்னு சொல்லிட்டேன், இப்போ ரெண்டு வாரமா  வீட்ல தான் இருக்கான். அவன் பொண்டாட்டி  ஊருக்கு  போய்  இருக்கான். "
  • அணைகள்  கட்டப்படும்  பொழுது  , ஒரு  கிராமத்தையே  இடம்  பெயர்க்கும்  சூழல்  ஏற்படும்  என்று  படித்திருக்கிறேன் .வேகமாக   மாறிக்கொண்டு இருக்கும் வணிகமயமாக்கப்பட்ட உலகத்தில் இப்படி  வேறு  காரணங்களுக்காகவம்  இடம் பெயர்தல் நிகழ்கிறது. சொல்லபோனால் நிறையவே   , ஆனால்   வெளியில்  பெரிதாக  தெரியாமல்    அல்லது  கமுக்கமாக.
  • "30 வருஷத்திற்கு  மேல ஓட்டிட்டு  இருக்கேன் சார். வாடகை  ஆட்டோதான்  வச்சு இருந்தேன். இப்போ ஓட்டிட்டு  இருக்க ஆட்டோ சொந்தமா  வாங்கி "due " கட்டிட்டு  இருக்கேன்.  இந்த ஆட்டோ "due"  மட்டும் கட்டிமுடிச்சுட்டேன்னா , ஆட்டோவை வித்துட்டோ அல்லது , வாடகைக்கு விட்டுட்டோ அப்பாடான்னு இருந்துடுவேன். நம்ம வட்டத்துல  நல்ல பேரு சார் எனக்கு.முழுசா அரசியலுல  இறங்கி  நம்ம ஏரியா   மக்களுக்கு எதன்னா   செய்யனும்னு தோணிட்டே  இருக்கும் .போன எலக்க்ஷன்ல   கூட , ரெண்டு வாரம் பூரா  வேலைக்கு போகாமல்  , கட்சி வேலை செய்தேன் சார். பைசாலாம் கிடையாது. இதுக்கு எல்லாம்  அந்த மாசம்  dues  கட்ட கஷ்டப்பட்டேன்".
  • இப்படியாக  இன்னும்  பல  சம்பாஷணைகளுடன்  நாங்கள்  விடைபெற்றுக்கொண்டோம்  .  உங்களுக்கு  என்ன  வேண்டும்  , என்று  கேட்ட  பொழுது  , எனக்கு  " M  G  R " போட்ட  மாதிரி  கோல்டு கலர்ல  , ஒரு  வாட்ச்  வாங்கித்தாங்க  சார்  அடுத்த  முறை  வரும்  போது  என்றார் .... சிரித்துக்கொண்டே  வழியனுப்பி  வைத்தேன் .
    * அடுத்த  நாள்  ,  திருநெல்வேலி  பயணம்.  ரயில் பயணங்கள் எப்பொழுதும் .சுகமானதுதான் ...பாலிய காலத்தில் வருடா வருடம் அம்மாச்சி தாத்தா  வீட்டிற்கு வத்தலகுண்டு செல்கையில் , கொடை ரோட்டில் இறங்கும்  பயணமும் , கல்லூரி விடுப்பில் கோவையில்  இருந்து  சென்னை  வரும் பயணமும் ஏற்படுத்திய தாக்கம் மட்டும் அல்ல அது.ஒரு சின்ன  திடுக்குடன்   கிளம்பும் வேகம் ஆகட்டும் , சீரிய வேகத்தின் பின் தண்டவாளத்துடன்  இணைந்து கொடுக்கும் ரீங்காரம்  ஆகட்டும் , கண்கள் மூடிகேட்டால் சந்கீதமாகவோ  , அமைதி கொடுக்கும் தியானமாகவோ மன நிலைக்கேற்றவாறு தோன்றும் . நல்ல இசையும் தியானம்தானே  .அப்போ இரண்டும் ஒன்று தான்.

அந்த  தியானத்தில்  இருந்து மகள்  மடியில்  வந்து  அப்பிக்கொண்டதும்  வெளியே  வந்தேன் .ஜன்னல் வழி மகளுக்கு காட்சிகளை விவரித்து வந்தேன்."ஆட்டோ ஆட்டோ " என்றாள் சிக்னலில் நிற்கும் ஒரு ஆட்டோவினை பார்த்து. "

தேவாவின்  [ அதுதான்  அவருடைய  பெயர் ] வார்த்தைகள் மனதில்  வந்து  போனது .

*   "ஆட்டோகாரர்கள் பற்றி நிறைய தவறான பேச்சு  இருக்கு  சார்  வெளியே.சில பேர் இருக்காங்க .ஆனா பொதுப்படையா வெறுப்பு வேணாமே  சார்.மழைலயும் வெயிலயும் விடி காலையிலும் நடு ராத்திரிலயும் நாங்க தான இருக்கோம் .எல்லா  நேரத்துலயும் பஸ்  ஓடாது"
  • அவர்கள் உலகத்தில் இருந்து பார்க்கும் பொழுது.....அவர்கள் சிரமங்கள் தெரிய வந்தது. மனதில் இருந்த  வெறுப்பும்  அகன்றது .

என்  கன்னத்தை  ஒரு  பிஞ்சுக்கை அழுத்தியதில்  , அந்த  நினைப்பிலிருந்து விடுபடுகிறேன் .

"அப்பா  கதை  சொல்லு "என்றாள்  மகள்.

சரி  நாம  மஹாபாரதத்தை தொடருவோம் கண்ணா ..

" அர்ஜுனனை  பார்த்து  கர்ணன்  அம்பை  விடுறார் .
அது  ரொம்ப  பயங்கரமான  அம்பு .தலையை  நோக்கி  வருது ...
"

" அப்புறம்  என்ன  ஆச்சு  அப்பா "

" கிருஷ்ணர்  தன்  காலால  ஒரு  அடி  பலமா  பூமியை  நோக்கி  அழுத்தறார் .
தேர்  ஒரு  அடி  கீழே  போயிடுது . அர்ஜுனன்  தலை  தப்பித்தது ..."


என்  மனதில்  வேறு  ஒரு  காட்சி  ஓடிக்கொண்டு  இருந்தது .
அன்றைக்கு  வீட்டின்  முன்  , காக்கி  உடை  அணிந்து , குனிந்து  ஆட்டோவின்  கியாரைப்  போட்டு  , ஒரு  வளை  வளைத்து  , ஆட்டோவினை  விருட்டென விட்ட அந்தக்காட்சி ..

கிருஷ்ணர்  அர்ஜுனன் தேர் மட்டுமா  ஓட்டுகிறார் . சில  நேரங்களில்  ஆட்டோவின்  சாரதியாகவும்தான் வருகிறார் !

========================================================================






Friday, July 1, 2016

சிலந்தி மனிதனின் கை :

சிலந்தி  மனிதனின் கை :

அந்த  "spiderman " விரல்களைப் பார் .எவ்ளோ  தத்ரூபமா  நிஜமான  கை  போலவே  இருக்கு . அந்த  விரல்  மடக்கி  அவன்  சிலந்தி  தெளிக்கும்  விதம்
படம்  பார்க்கிற  போலவே  இருக்கு .

அக்கா  சொன்னது  மேலே . அவன்  கல்யாண அட்டையின்  பின்புறத்தில்  வரைந்த  ஒரு  சிலந்தி  மனிதனின்  ஆக்சன்   படம் . ஒற்றைக்  காலை  கொஞ்சம்  மடக்கி  , தலையினை  மேல  பார்த்தவாறே அவன்  கட்டை  விரலைத்தவிர  மற்ற  நடு  இரு  விரல்களையும்
மடக்கி  , சிலந்தி  வலையினை  எரியும்  நிலையில்  தயாராக  இருந்தான் .

பக்கத்து  வீட்டு  வெனிடா சொன்ன  பொழுது  அவன்   முதலில்  நம்பவில்லை  தான் . இப்போ  அவனுக்கே  சந்தேகம்  வந்தது , சிலந்தி  மனிதன்  அப்படி  தத்ரூபமா  இருக்கிறானோ ??

அன்று நண்பர்களுக்கு  காண்பிக்க  பள்ளிக்கு  தன்  புத்தங்களுக்கு இடையில்
அந்த சிலந்தி  மனிதனின்  படத்தை  எடுத்துச்  செல்கிறான் .

பள்ளியில்....

" நீங்கள்  எந்த  காரியம்  செய்தாலும்  , அதில்  முழுவதுமாக மனத்தைச்   செலுத்த  வேண்டும் .  உங்களுக்கு  இது  எவ்வளவு  புரியும்னு  தெரியலை .
ஆனா  ஒரு  காலத்துல  புரியும் .
நீங்க  என்ன  செய்யறீங்களோ  அதாகவே  ஆகிடனும்
பாடினால்  , அந்த  பாட்டாவே  , வரைஞ்சால்  அந்த  ஓவியவாகவே ...."  என்கிறார்  ஆசிரியை .

வகுப்பு  அமைதியாக  இருந்தது ....


அன்று  வீட்டுக்கு  வந்து  விடுகிறான் .

" டேய்  அந்த  "spiderman"  படம்  எங்க .
அதைக்   குப்பை  மாதிரி  போட்டுடாதே .
ஜெம்  கிளிப்` இல்லை  , stapler  போட்டு  வை .
" என்றாள் அவனுடைய   அக்கா .

" ஸ்டேப்ளர்  வேண்டாம் .
அவனுக்கு  வலிக்கப் போகுது ."

அக்கா  விநோதமாகப்  பார்க்கிறாள் . .

"சரி !"

" சரி  , இதை  எப்படி  வரைஞ்ச . கண்ணுல  இருந்து  ஆரம்பிச்சியா "

"இல்ல . கைல  இருந்து` ஆரம்பிச்சு  அப்படியே  மேல  போனேன் "

"அதான்  கை  , அவ்ளோ  நல்ல  வந்து  இருக்கு "

" ஏன்  அப்படி ?"

" தெரியலை  அப்படித்தான்  தோணுச்சு "

அடுத்த  நாள்  காலையில்  ,
பக்கத்து  வீட்டு  வெனிட்டா  வைத்துக்  கேட்கையில் ,
அந்த  அட்டையில்  சிலந்தி  மனிதன்  இருந்த  இடத்தில்  வெற்றிடம்  தான்  உள்ளது . சரியாக  அவனுடைய  தலை  முதல்  கால்  வரை  இருந்த  இடம் .

 அவனுடைய  அம்மா அம்மா  பேசுவது  , காதில்  விழுகிறது .

" என்ன  லலிதா   , நேத்துதானே  ஒட்டடை  அடிச்சோம்  , அதுக்குள்ள  எப்படி  வீட்டில்  , இவ்வளவு  தூசு  , சிலந்தி  வலை  , அதுவும்  , இந்த கடைசி  ரூம்ல  ஏதோ  குகைக்குள்ளே  வந்தது  போல "

அம்மா  , சிலந்தி  மனிதன்  டீச்சர்  சொன்ன  போது  , பையில்தான்  தான்  இருந்தானென  சொல்லத்தோன்றியதை  அடக்கிக்கொண்டான் .........

---------------------------------------------------------------------------------------------------------------------------


Friday, June 17, 2016

பெட்டிக்குள் வானவில்

[------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"ரே  ஜேன்"  எழுதிய  " APPLE  PIP PRINCESS"  என்ற  புத்தகத்திலிருந்து  .
RETOLD / TRANSLATED  WITH MINOR CHANGES  BY SEMMAL G.
--------------------------------------------------------------------------------------------------------------------

பெட்டிக்குள்  வானவில் :

தூர  தேசத்தில் ஒரு  ராணி ...அவங்களுக்கு  மூன்று  ராஜகுமாரிகள் ...

சுசன்னே  , மிரண்டா  மற்றும்  பெலிசிட்டி.......ரொம்ப  செழிப்பான  நாடு .....
அந்த  ராணியின்  ஆட்சியின்  கீழ்  , எங்கும்  சந்தோசம்  பரவி  இருந்தது ...

மலைகளும்  , ஆறுகளும்  , பசுமையும்  நிறைந்து  வழிந்த  ஊர்  அது.
மக்கள்  அனைவரும்  கடுமையாக  உழைத்தும்  , அதன்  பலனை 
அனுபவித்தும்  வாழ்ந்தனர் .இதை  விட  சொர்க்க பூமி  எங்கு  இருக்கமுடியும் 
இந்த  உலகத்தில்  என்ற  நினைப்போட  இருந்தனர்  அந்த  மக்கள் .

வாழக்கை  ஒரே  போல   இருப்பதில்லையே ...
ஒரு  நாள்  , உடல்  நலம்  சரியின்றி  , அந்த ராணி  இறந்து  விடுகின்றார்கள் .

அவர்களுடன்  சேர்ந்து  அந்த  நாட்டின்  வளமும்  , சந்தோஷமும்  , கூடவே 
போய்விடுகிறது . மக்கள்  பசியாலும் , பஞ்சத்தாலும்  வாடுகின்றனர் .

போவதற்கு  முன்  , மகள்களிடம்  , என்னிடமிருந்து  ஒரு  சொத்து  நீங்கள்  எடுத்துக்கொள்ளலாம் என  சொல்கிறார்  ராணி .

மூத்தவளான  சுசன்னே  ராணியின் அழகிய  வேலைப்பாடுடன்  கூடிய  
ஹீல்ஸ்  காலணியினை  வாங்கிக் கொள்கிறாள் .

இரண்டாமவளான  மிரண்டா , ராணியின்  , அழிகிய விலையுயர்ந்த  , முத்துக்களால் சூழப்பட்ட வேலைப்பாடுகளுடன்  கூடிய  ஒரு  அழகிய  முகம் பார்க்கும்  கண்ணாடி  ஒன்றினைப்  பெற்றுக்கொள்கிறாள் .

இளையவள் கொஞ்சம்  தயக்கமுடன்  ,  அம்மாவின்  நியாபகம்  எப்போதும்  வரவேண்டுமென்பதை மனதிற்கொண்டு  அவர்களின்  இளைய  வயதில் உபயோகித்த  ஒரு  மரப்பெட்டியினை வாங்கிக் கொள்கிறாள் .

பின்னொரு  நாள்  அவளுக்கு  அம்மாவின்  நியாபகம்  ரொம்ப  வருகிறது .
அந்தப்பெட்டியினை எடுத்து  தடவிப் பார்க்கிறாள் .அம்மாவின்  நியாபகமும்  வாசமும்  வருகிறது அதில்  அவளுக்கு   , அதில்  தலை  வைத்து  தூங்கிபோகிறாள் . அதில்  என்ன  இருக்கிறதென்றுகூட பார்க்கத்  தோன்றவில்லை அவளுக்கு .

காலம்  சுழல்கிறது . ராஜாவிற்கு  தன்னுடைய  நாட்டை  இனிமேல்  தன்னுடைய  ஒரு ` மகளிடம்  ஒப்படைத்து  விட்டு  போக  நினைக்கிறார் .


" உங்கள்  மூவருக்கும்  உங்கள்  திறமைகளை  வெளிக்காட்ட  ஒரு  சந்தர்ப்பம்  தருகிறேன்  ," என்கிறார் .

மூத்தவள் , நிலவைத் தொடும்  ஒரு  பெரிய  கட்டிடம்  கட்டி  அதன் மேல்  நின்று 
நிலவைத்  தொட்டு   , கம்பீரமாக  , அங்கு  நின்றுக்  காண்பித்தாள் .

ஊர்  மக்களைத்  துன்புறுத்தி  , அவர்களின்  வீட்டினில் , இருந்த மர   சாமான்களை  எல்லாம்  , கொண்டு வரச்செய்து  , அதை வைத்து அந்த  மரத்தாலான கட்டிடத்தைக்கட்டுகிறாள் .

இரண்டாமவளும்  இதே போல  , உலோகத்தினாலான  ஒரு  வானுயர்ந்த 
கோபுரத்தைக்கட்டி , அதன்  மூலம்  நட்சத்திரத்தை பிடித்து  அவள்  தலையில்  சூட்டி  
தன்னை  அம்மா  கொடுத்த  கண்ணாடியில்  அழகு  பார்க்கிறாள் .இதனால்  ஆனால்   மக்களுக்கு நன்மையொன்றும்  இல்லை.
  
பெலிசிட்டி  , கொஞ்சம்  சாதுவான  பயந்த பிள்ளை .

அக்காக்கள்  , இருவரும் , அழகும்  , கம்பீரமும்  , நிறைந்தவர்கள் , தன்னால்  என்ன செய்து  விட  முடியுமென  பெரிய  நம்பிக்கையின்றி   சோர்ந்து போய்  இருக்கிறாள் .

எப்பொழுதும்  போல  , சோர்வாகி  இருக்கும்  பொழுது  , அம்மாவிடம்  பேசுவாதாக  நினைத்து  , அந்த  சிறிய  மரப்பெட்டியுடம்  பேசுகிறாள் .

" அம்மா  நான்  என்ன  செய்வேன் ....எனக்கு  எந்தத்  திறமையும்  இல்லையே "

அதிலிருந்து  பதில்  எதுவம்  வரவில்லை .

ஆனால் , அந்தப்  பெட்டியினை  திறந்துப் பார்க்க  ஏதோவொன்று உந்தியது  அவளை .

பெட்டியினைத்  திறக்கிறாள் .

ஒரு  பக்கம்  கண்கள்  கூசியது  அவளுக்கு .
சூரிய  ஒளியின்  சில  கீற்றுக்களை  ஒரு கம்பி  போல  சேகரித்து வைக்கப்பட்டு  இருக்கிறது அதில் .

சில்லென்ற  மழையின்  தூறல்கள்  சில, ஒரு  பிடி  உருண்டை போல 
கோர்த்து  வைக்கப் பட்டுள்ளது இன்னொரு  பக்கம் .

முக்கியமாக  ஒரு  அழகிய  குட்டி  வானவில்  அந்தப்  பெட்டியினுள்  
கமுக்கமாக ஒளித்து வைக்கப்பட்டு  இருந்ததைப் பார்க்கிறாள் .

ஒரு  குயிலின்   இறக்கையும்  , ஒரு  அழகிய  சுருக்குப்பையில்  சில  ஆப்பிள் 
பழ  விதைகளும் , கருஞ்சிவப்பில்  ஒரு  சிலந்தியின்  வலையும்  கூட  இருக்கிறது  அங்கே .

அந்த  ராணி  அவர்களுடைய  இளவயதில்  , அங்கொன்றும்  இங்கொன்றுமாக 
சேர்த்த  மாயப்பொருட்கள்  அவை .

இவற்றை வைத்து  என்ன  செய்ய  என்று  யோசித்து  ஒரு முடிவுக்கு  வருகிறாள் 
இளையவள் . இப்படியே  ரொம்ப  யோசித்துக்கொண்டு   இருந்தால் 
காலம்தான்  கடக்கும்  , செயலில்  இறங்குவோமென முதலில் 
காய்ந்து போய்   இருந்த  ஒரு  நிலத்தைச்  சுத்தப்படுத்தி , நன்றாகத்   தோண்டி ,
இறுகிய  மண்ணைத்  தளர்த்துகிறாள் .

தன்னிடமிருந்த  மாய  ஆப்பிள்  விதைகளை  மண்ணில்  விதைக்கிறாள் .
மழை காணா  பூமியென்பதால்  , பெட்டியினுள்  இருந்து  சில 
மழைத்  துளிகளை  எடுத்துத் அந்த  விதையின்  மீது  தெளிக்கிறாள் .

அதே  போல  , சூரிய  ஒளியினையும்  படரச்  செய்கிறாள் .

இரண்டாம்  நாள்  , இவள் செய்கைகளைப்  பார்த்த  ஜான்  என்ற  ஒரு இளைஞன்  , அவளுக்கு  உதவ  வருகிறான் .

தன்னிடமிருந்த சில  மற்ற  விதைகளைத்  தந்து  கூடமாட  இருந்தும் உதவுகிறான் .இருவரும்  அந்த  மாலைக்குள்  , நல்ல  நண்பர்களாகின்றனர் .
ரொம்ப  நாட்களுக்கு  பிறகு  பெலிசிட்டி  அன்று  மிகவும்  சந்தோஷமாக உணர்ந்தாள் .

மூன்றாம்  நாள்  காலையில் , பூமியினைத்  துளைத்துக்கொண்டு 
சிறிய  பச்சைத்  துளிர்கள்  வந்து  இருப்பதை   அவர்கள்  இருவரும்  பார்த்தனர் .
அவர்கள்  அம்மாவின்  ஆப்பிள்  விதைகளிலிருந்து  வந்த 
துளிர்கள்தான்  அவை . நிறைய  நம்பிக்கை  கொடுத்தன  
அவைகள் இருவருக்கும் .

இதனைப்  பார்த்துக்கொண்டு  கொண்டிருந்த  ஊர்  மக்கள் , 
இவர்கள்  இருவருக்கும்  உதவ  வருகின்றனர் .
அடுத்த  சில  நாட்களில் , பெரிய கூட்டம்  கூடி   ,அகண்ட  நிலப்பரப்பு  முழுவதும் இது  போல  , பலவகைப்  பழங்களும் , பூச்செடிகளும்  பயிரிடப்பட்டன .
தன்னுடைய  மாய  சிலந்தி  வலை  வைத்து  , ஒரு  பெரிய  கூடாரம் 
அமைக்கிறாள் , அந்தச்  செடிகளை  இரவின்  பனியிலிருந்து  காப்பாற்ற ..

போட்டி  முடிய  இன்னும்  கடைசி  இரு  நாட்களே  இருந்தன
பெலிசிட்டி  நினைத்தாள்  , இன்று  முழுவதும்  உழைத்தாலும் , பெரிய 
மாயம்  ஒன்றையும்  நிகழ்த்திவிட  முடியாதுதான் . ஆனால்  , இங்கு  நிகழ்ந்து  இருப்பது  , போட்டியினைத்தாண்டி  ஒரு நிகழ்வு .
அந்த  நாடு முழுவதும்  பயிரிடப்பட்ட இடங்களில்  எல்லாம் , துளிர்த்து  இருப்பது  சிறிய  துளிர்கள்  மட்டுமின்றி  , மக்களின்  நம்பிக்கையும் , சந்தோஷமும்தான் .தனக்கு  இதுவே  போதுமென  நினைக்கிறாள் .

போட்டியின்  நாளிற்கு  முந்தய  சாயங்காலம்  , எல்லோரும்  களைத்துப்போய்  இருக்கின்றனர் .மக்களின்  குழந்தைகளும்  , என்ன  நடக்கிறதென்று  பெரிதாகப்  புரியாமல்  பார்த்துக்கொண்டு  இருக்கின்றன .

"எல்லோரும்  இங்கே  வாருங்கள் ...கண்களை  மூடுங்கள் .....
நாள்  சொல்வது  வரை  கண்ணை  மூடுங்கள்  பிள்ளைகளே .....

சூ  மந்திரக்காளி ....இப்போ  கண்ணைத்திரங்கள்  ....." என்கிறாள் .

குழந்தைகள்  , கண்திறந்த  பொழுது  , தூரத்தில்  ஒரு மலை  தெரிய  , அதன்  முன்  மங்கலாக  ஏதோ  தெரிகிறது .சூரிய  ஒளியினை   கொஞ்சம்  மங்கச்  செய்கிறாள்  பெலிசிட்டி .
அங்கே  ஒரு  அழகிய  வானவில்  , வளைந்து  கம்பீரமாகச்  சிரித்துக்  கொண்டு  இருக்கிறது .
அவள்  பெட்டியிலிருந்து  வெளியே  எடுத்து  விட்ட  அம்மாவின்  வானவில் . 

அந்தக்  குழந்தைகள்  ஆரவாரமாக  சிரித்துக்  கொண்டாடின .தன்  அம்மா  சிரித்தார்ப் போல  தோன்றியது  அவளுக்கு .

" என்னமா  , எங்களுக்கு  எதுவும்  இல்லையா " என்றுக்  கேட்கின்றனர்  ஊர் மக்கள் .

மாய  விதைகளால்  , ஒரே  ஒரு  ஆப்பிள்  மரம்  அங்கே  பெரிதாக  வளர்ந்து  இருந்தது .
அது  ஒரு  மிகப்  பெரிய  ஆல  மரம்  போன்று  வித்தியாசமாக  இருந்தது .

"வாருங்கள்  எல்லோரும்  சென்று  , அந்த  ஆப்பிள்  பழங்களைத்தின்போம்  " என்கிறாள்.

மக்களும்  , சந்தோஷமாக  உண்கின்றனர் .
இரவு  கவ்வத்தொடங்குகிறது ...

தன்   பெட்டியிலிருந்து , அந்த  குயிலின்  இறகை  எடுத்து  அந்த  ஆப்பிள் 
மரக்கிளையில்  வருடுகிறாள்  பெலிசிட்டி .

அந்த  ஆப்பிள்  மரத்தின்  , இலைகள்  அசைகிறது .
சுகமான  காற்று  வந்து  வீசுகிறது .

மக்களுக்கு  , கண்ணயர  வேண்டுமெனத்  தோன்றுகையில்  , 
ஒரு  குயிலின்  இசை  கேட்கிறது . அந்த  இறகு செய்த  ஜாலமென  , அம்மாவிற்கு  நன்றி  சொல்கிறாள்  அவள் .
மீண்டும்  சொர்கம்  வந்ததென  நினைத்துக்கொண்டு  அனைவரும்  அவளை  வாழ்த்தி  தூங்கிப்போய்   விடுகின்றனர் .

மறுநாள்  , தீர்ப்பு  வழங்கும்  நாள் .
ராஜா  , சுசன்னா  மற்றும்  மிரண்டாவின்  மர  , மற்றும்  உலோக  கோபுரங்களை  முன்பே  பார்த்துவிட்டார் . எங்கே தன்  இளைய  மகளைக்  காணவில்லையே என்று  ஊருக்குள்  தேடி  வருகிறார் .

தன்   ஊராவென  வியந்துப்போகிறார் .
எங்கும்  பச்சை  பசேலென மரங்கள்  , பூத்துக்  குலுங்கும்  செடிகள் , 
அங்குமிங்கும்  குழந்தைகள்  ஓடி  விளையாடியும்  இருந்தன .
மக்களும்  மிகவும்  சந்தோஷமாக  காணப்பட்டனர் .

" மகளே  பெலிசிட்டி " ....

" அப்பா  மன்னிக்கவும்  , தூங்கிப்  போய்விட்டேன் ....உங்களை  நானே  வந்து  பார்த்து  இருக்கணும் .இந்த  ஒரு  வாரத்தில்  , என்னால் இவ்வளவுதான்  முடிந்தது . ஆப்பிள்  மரம் ஒன்றுதான்  வேகமாக  வளர்ந்தது .இன்னும்  கொஞ்சம்  நாட்கள்  இருந்தால்  , என்னால்  ,இன்னும்  சிறப்பாக  காண்பித்திருக்க  முடியும்" 

என  தூக்கக்கலக்கத்தில்  சொல்கிறாள் .

" கண்ணே  , என் கண்ணே  , உங்க  அம்மாவைப்  பார்த்தது  போல  இருக்கிறது  ...."
என்று  மகளைத்தழுவி ஆனந்தமயமாக  அழுகிறார்   ராஜா .

" என்ன  சொல்கிறாய்  நீ ...திரும்பிப்பார்  ....எவ்வளவு  மரங்கள்  காய்த்துத்  தொங்குகிறது ...
பறவைகளின்  சப்தம்  உனக்கு  கேக்கவில்லையா.....பூக்களின்  மணம்  உன்னை  எழுப்ப  வில்லையா ?!!"

ஒரு  இரவிற்குள்  நடந்த  மாயத்திற்கு  அம்மாவிற்கு  நன்றி  சொல்கிறாள்  பெலிசிட்டி.

அப்புறமென்ன  அந்த  நாடு  அவளுடயதாயிற்று .
மக்களை  சந்தோஷமாக  பார்த்துக்கொண்டாள் ......

ஜானும்  அவளும்  சந்தோஷமாக  வாழ்ந்தனர் .

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 இந்தக் கதையில்  வருவது  போல   மாயப்  பெட்டியினை  நம்மால் , குழந்தைகளுக்கு  விட்டுச்  செல்ல முடியாது .. ஆனால்  , வாழ்க்கைக்கு   வாழத்தேவையான  பலவற்றை  அவர்கள்  அறிவிற்கு  ஊட்டி  விட  முடியும்  நம்மால் .  

வானவில்லையும்,   மழையினையும்  , நல்ல  இசையினையும்  
அவர்கள்  ரசிக்க  ,நல்ல ரசனையினை   அவர்கள்  வளர்த்துக்கொள்ள உதவ  முடியும் . குறிப்பாக  இயற்கையோடு  ஒன்றி  வாழவும்  , இருக்கும்  இயற்கையினை  இன்னும்  கெடாமல்  பார்த்துக்கொள்ளும் கடைமையும்  நமக்கு  உள்ளது .

பிளாஸ்டிக்  பைகளைத்  தவிர்த்து  , மரங்களை நட்டு ,  நம்மால்  முடிந்தவரை  இயற்கைக்கு 
நன்மை  செய்வோம் . பிள்ளைகள்  நம்மைப்  பார்த்து  இதனைத்  தொடருவர் .

நம்முடைய  கனவைத்  திணிக்காமல்  , அவர்கள்  வித  விதமான   கனவினைக்காணவும் ,
அதனைநினைவாக்கவும் , அவர்களே  முயற்சி  செய்து  முன்னேற  முடிந்த  வரை துணையிருப்போம் .

அந்த  வானவில்  , பெட்டியிலிருந்து  வரவேண்டியது  இல்லை.
அவர்கள்  வாழ்க்கையே  வானவில்லாகட்டும் ...


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Friday, June 3, 2016

ராசாளியே பாடல்

ராசாளியே பாடல் :
ரொம்ப நாட்களுக்கு பிறகு திரும்பத் திரும்ப கேட்கத்தூண்டிய  ரகுமான் அவர்களின் பாடல் ...இன்னும்  சொல்லப்போனால் ஜீவன்  நிரம்பி வழியும்  பாடல் .
 முழு வீச்சில் இறங்கி இசையமைத்து இருக்கிறார் போல ..
அல்லது கெளதம் மேனன் கூட்டமைப்பு செய்த மாயமாக கூட இருக்கலாம் .
பறக்கும் ராசாளியே .....என்னடா இது காதல் பாட்டிற்கு , அதுவும் பெண்ணை நோக்கி ராசாளி என்று இருக்கிறது என்று யோசிக்கையில் , கொஞ்சம் அடுத்து வந்த வரிகளும் , இசை வடிவமும் அப்படியே இழுத்துப்  போட்டு விட்டது .
"
முதலில் யார் சொல்வதன்பை ....
முதலில் யார்யெவதம்பை ...
"
இந்த இரண்டு வரிகள் பாடலில் சாராம்சத்தை சொல்லி விடுகிறது.
காதலில் அகப்படாமல் உயரப் பறந்து செல்லும் ராசாளிப் பறவையாக அவள் இருக்கிறாள் என அவ்வாறு அழைக்கிறான் தலைவன் எனக்கொள்ளலாம் .
உச்சம் தொட்டு விட்டது பாடல் என்று நினைக்கையில் ,
அங்கிருந்து அப்படியே வேறு சில பாடல்களின் சரணங்கள் தொடர்கிறது .
நின்னுக்கோரி , வடிவேலன் போன்ற பாடல்கள் வயலின் இசையோடு இழைந்து பிண்ணப்பட்டிருக்கிறது . இந்தச் சரணங்கள் அப்படியே பல்லவியில் போய் சேரும் இடம் மிக அருமை.
பாடலின் முடிவு , அப்படியே தாலாட்டி தூங்கவைத்து விடும் ...
"என் தோழில் குளிர் காய்கின்ற தீ ,,,,
குளிர் காய்கின்ற தீ ...."
தமிழோடு  அழகாக விளையாடிய தாமரைக்கு நன்றி கலந்த வணக்கம் ..

---------------------------------------------------------------------------------------------------------------------------------