காவியத்தலைவன் ....
காலத்திற்கு ஏற்ப போடப்பட்ட இசைப்புயலின் இசையில் இரண்டு[ யாருமில்லா மற்றும் ஹே மிஸ்டர் ]பாட்டுக்கள் காலம் தாண்டி நிற்கும் என்று நினைக்கிறேன் .
முதலில் வசந்த பாலனுக்கு ஒரு வணக்கம் வைத்து விடுவோம்.
வெயில் , அங்காடித்தெரு தெரு , அரவாண் போன்ற வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்தமைக்கு . அரவாண் படம் சரியாக போகவில்லையென்றாலும் மறுபடியும் , இது போன்ற ஒரு வித்தியாசமான கதைக்களத்தை எடுத்தமைக்கு .
இவரின் படங்கள் நுண்ணனுபவம் கொடுப்பமையாக இருக்கும் எனக்கு எப்பொழுதும் . வெயிலில் ஒரு குடும்பத்தில் புறக்கணிக்கப்பட்ட மகனின் கதை , பைபிளில் வரும் prodigal son போன்ற ஒரு சாயல் உள்ள கதை என்று கூடப் படித்தேன் எங்கேயோ.உண்மைதான் . வெயில் சார்ந்த காட்சி அமைப்பும் , அண்ணன் தம்பி பாசமும் , ஓடிப்போன அண்ணனின் காதல் அத்தியாயம் என படம் நிறைய சம்பவங்களால் கோர்க்கப்பட்டது .விறுவிறுப்பான கதையும் உண்டு. action block கூட உண்டு .
சரி காவியத்தலைவனுக்கு வருவோம் .
ஊடகத்தில் பெரும்பாலும் நல்ல விமர்சனகள் வந்துக்கொண்டு தான் இருக்கின்றன . ஆனால் முழு திருப்தியாக படம் இல்லை என்று கூடவே ஒரு வரியும் எழுதி வைத்து இருக்கின்றனர் .
" அவன் ரொம்ப நல்ல பையன் " என்று காதலை ஒதுக்கும் பெண்களின் மன நிலைமை போலத்தான் பட்டது அந்த விமர்சனம் எனக்கு.
சுதந்திரத்திற்கு முன்பு நடக்கும் கதை , நாடகக் கம்பெனி பற்றியும் , அவர்கள் வாழ்கை சார்ந்த கதைக்களம் .
சுதந்திரத்திற்கு முன்பு நடக்கும் கதை , நாடகக் கம்பெனி பற்றியும் , அவர்கள் வாழ்கை சார்ந்த கதைக்களம் .
வித்சியாமான கதைகளம் மட்டும் இல்ல , படத்தின் நிறைய சம்பவங்கள் இருந்தன .
அனால் , என்ன செய்ய , கயிற்றில் தொங்கி , பறந்து பறந்து அடிக்கும் action இல்லை படத்தில் . வெளிநாட்டில் சென்று குத்து பாட்டு பாடும் பாக்கியமும் இல்லை . ஒரு வேளை , எழுபது வருடம் முன்பு வெளி நாடு சென்று அன்றைய காலச்சூழலில் ஒரு பாட்டு வைத்து இருந்தால் வித்தியாசமாக இருந்து இருக்குமோ! யோசித்துப்பாருங்கள் ஆங்கிலேய குரூப் dancers அந்தாக்கால உடை மாட்டிக்கொண்டு பின்னாடி ஆடிக்கொண்டு இருக்க ,ஹீரோ , ஹீரோயின் நாதா சுவாமி என்று ஆடிக்கொண்டு இருக்கும் காட்சியினை . அப்படி இல்லை இந்தப்படம் !
இயல்பான காட்சி அமைப்பு தான் கதைக்கு பலம் . அது சரிவர
செய்யப்பட்டு இருக்கிறது .
இயல்பான காட்சி அமைப்பு தான் கதைக்கு பலம் . அது சரிவர
செய்யப்பட்டு இருக்கிறது .
கொடுக்கப்பட்ட பட்ஜெட்டில் , கதைக்கு ஏற்ப பாட்டுக்கள் அமைந்து இருந்தது .குறிப்பாக , சித்தார்த்தும் , ஜமீன் மகளாக வரும் அனைக்கா சோனியும் களவு வாழ்க்கையில் இரவில் பாடும் " ஹே மிஸ்டர் மைனர் " பாட்டு வசீகரித்தது . அவர்களின் காதலும்தான் .அந்தப்பாடலில் வரும் ஒரு வரி உண்டு , " காற்றின் காலில் கொலுசு கட்டி இழுக்குற " , அதே அனுபவம் தான் கொடுக்கிறது அந்தப்பாட்டும் .
காலத்திற்கு ஏற்ப போடப்பட்ட இசைப்புயலின் இசையில் இரண்டு[ யாருமில்லா மற்றும் ஹே மிஸ்டர் ]பாட்டுக்கள் காலம் தாண்டி நிற்கும் என்று நினைக்கிறேன் .
ப்ரித்விராஜின் நடிப்பை பல முறை பல படங்களில் இதற்கு முன்பு பலர் பாராட்டி இருந்தாலும் , திரும்பச் சொல்லிதான் ஆகவேண்டி உள்ளது .
ஒழுக்கமாகவும் இருந்து , காரியசித்தியும் , முனைப்புடனும் பயிற்சி செய்து , நல்ல பெயரும் , பாராட்டும் கேட்கத்துடிக்கும் இயல்பான பாத்திரமாகத்தான் உள்ளார் முதலில் . இள வயதில் , சித்தார்த்தை மற்ற சிறுவர்களின் கேலியில் இருந்து காக்கும் மனமும் அவருடைய நல்ல மனதிற்கு சான்று .
தன்னை விட ஆசானிடம் சித்தார்த் நல்ல பெயரும் , ராஜபார்ட் வேடமும்
எடுத்துக்கொண்டு செல்லும் பொது பொறாமையும் , தோற்கடிக்க வேண்டும் என்ற வன்மமும் வளர்ந்து , அது விஸ்வரூபம் எடுத்து என்ன விளைவுகளைக்கொடுக்கிறது என்று போகிறது அவரது பாத்திரமும் ,
கதையும் . கண்களில் ஏக்கமும் , ஏமாற்றமும் , இயலாமையும் ,
பொறாமையும் பூந்து விளையாடுகிறது . பரிதாபமாக ஆசானிடம் சென்று ,
அவன் என்னை விட என்ன சிறப்பாக நடித்தான் என்று கேட்கும் போதும் ,
காதலி ,காதலை ஏற்க மறுக்கும் பொழுதும் , ஐந்து வருடம் காத்தபின் ,
என்னிடம் இல்லாத ஒன்றை , சித்தார்த்திடம் என்ன கண்டாய் என்று உண்மையாகவே புரியாமல் கேட்ககும் நேரத்தில் , அவர் கேட்பது நியாயம் தான் என்று நம்மை நம்ப வைக்கிறது அவரின் நடிப்பு.
சித்தார்த்தை எங்கு தட்டினால் அவன் விழுவான் என்று அவனது உளவியலைப்புரிந்து , இந்தியக்கொடி பதித்த ஒரு கப்பலை அவருக்கு ஒரு ஆள் மூலமாக பரிசளித்து , அவரை திசை திருப்ப நினைத்த அவரது யுக்தி , அந்த பாத்திரத்தின் நரித்தனத்தின் உச்சம் . இதை சித்தார்த் எப்படி எடுத்துக்கொண்டார் என்பதை படம் பார்த்துதான் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
சித்தார்த் , இந்தப்படத்தில் சிக்ஸர் அடித்துள்ளார் என்று சொல்லித்தான் ஆக வேண்டும் . அவர் குழந்தை முகம் , அவரின் நடிப்பை மறைக்கிறது போலும் . ஆனால் , " அண்ணே " என்று கோமதி நாயகத்தை { ப்ரித்விராஜை } அவர் கூப்பிடும் அழகே தனிதான் , அந்த பாத்திரத்தின் மீது நமக்கு ஒரு அன்னியோன்யத்தை ஏற்படுத்திவிடுகிறது .
வேதிகா தன்னை விரும்புகிறாள் என்பதை அவருக்கு தெரிந்து இருந்தாலும் , பழைய காதல் கொடுத்த வலியினை மனதில் சுமந்துக் கொண்டு அவரிடம் தள்ளி இருக்கும் பொழுது அந்த பாத்திரத்தின் கண்ணியம் தெரிகிறது .
காதலில் இருக்கும் பொது அவரிடம் இருக்கும் குதூகலமும் , கதையில் வரும் ஒரு சூழ்நிலையில் , ஆசான் நாசரை தூற்றும் போதும் தெரியும்
அவரது வழியும் கோபமும், அழுகையும் நிற்கிறது மனதில் . சிறப்பான நடிப்பை வெளிக்கொண்டு வந்த வசந்த பாலனிற்கு மறுபடியும் பாரட்டுக்கள் .ஜிகர்தண்டா , காவியத்தலைவன் போன்று கதைகளை தேர்ந்து எடுத்து நடித்தமைக்கே இன்னொரு பாராட்டு சித்தார்த்திற்கு .
வணிகரீதியான சினிமாவில் இருந்து ரொம்ப தூரம் என்று சொல்ல முடியாது படத்தை . காட்சி` அமைப்புகள் சில இடங்களில் தோய்வு உண்டுதான் . ஆனால் கதைக்களமும் , கோமதி நாயகத்தின் வன்மமும் வளரக் காரணம் வலுப்பட நேரம் எடுக்கத்தான் செய்யும் . எங்கே கத்திரி போட வேண்டும் என்று நானும் யோசிக்கத்தான் செய்தேன் . முடிவுக்கு வர முடியவில்லை .
வேதிகா தன் வேலையினை சரியாக செய்து உள்ளார் . நல்ல ஓர் பாத்திரம் அவருக்கும் ..
சுதந்திர போராட்டத்தில் , நாடகத்தின் பங்களிப்பு பகுதி சிறப்பாக இருந்தது .
இந்தியனின் சுகன்யா பாத்திரம் , பொம்மலாட்டம்` மூலமாக இதனைச் செய்யும் . இது எந்த அளவு சரித்திர உண்மை இருக்கிறது என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. இருந்து இருக்கலாம் . அந்த சமயத்தில் அதுதானே எல்லோரையும் அடையும் ஊடகம் .இதை பற்றி ஆவலைக்கிளப்பியது படம் .
கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற சிறப்பான படத்தினை புறக்கணித்த நம்ம தமிழ் பார்வையாளர்களிடம் என்ன எதிர்பார்ப்பது என்று சரியாகத்தெரியவில்லை .இதையும் மீறி படம் எடுத்த குழுவிற்கு
ஒரு சலாம் .
No comments:
Post a Comment