Sunday, December 21, 2014

காவியத்தலைவன் ....

காவியத்தலைவன் ....

முதலில் வசந்த  பாலனுக்கு  ஒரு  வணக்கம்  வைத்து  விடுவோம்.
வெயில் , அங்காடித்தெரு  தெரு  , அரவாண்   போன்ற வித்தியாசமான  கதைகளைத்   தேர்வு  செய்தமைக்கு . அரவாண்  படம் சரியாக போகவில்லையென்றாலும் மறுபடியும்  , இது  போன்ற  ஒரு  வித்தியாசமான  கதைக்களத்தை  எடுத்தமைக்கு .

இவரின்  படங்கள்  நுண்ணனுபவம்   கொடுப்பமையாக  இருக்கும்  எனக்கு எப்பொழுதும் . வெயிலில்  ஒரு  குடும்பத்தில்  புறக்கணிக்கப்பட்ட மகனின்  கதை ,  பைபிளில்  வரும் prodigal  son  போன்ற  ஒரு  சாயல்  உள்ள  கதை என்று  கூடப்   படித்தேன்  எங்கேயோ.உண்மைதான் . வெயில்  சார்ந்த காட்சி அமைப்பும்  , அண்ணன்  தம்பி  பாசமும்  , ஓடிப்போன  அண்ணனின்  காதல்  அத்தியாயம்  என  படம்  நிறைய  சம்பவங்களால்  கோர்க்கப்பட்டது .விறுவிறுப்பான  கதையும்  உண்டு.  action  block  கூட  உண்டு .

சரி  காவியத்தலைவனுக்கு வருவோம் .
ஊடகத்தில்  பெரும்பாலும் நல்ல விமர்சனகள்  வந்துக்கொண்டு  தான்  இருக்கின்றன . ஆனால்  முழு திருப்தியாக  படம்  இல்லை  என்று  கூடவே  ஒரு  வரியும் எழுதி  வைத்து  இருக்கின்றனர் . 

" அவன்  ரொம்ப  நல்ல  பையன்  " என்று  காதலை  ஒதுக்கும்  பெண்களின்  மன  நிலைமை  போலத்தான்  பட்டது  அந்த  விமர்சனம்  எனக்கு.

சுதந்திரத்திற்கு  முன்பு  நடக்கும் கதை  , நாடகக் கம்பெனி பற்றியும் , அவர்கள் வாழ்கை சார்ந்த  கதைக்களம் . 

வித்சியாமான  கதைகளம்  மட்டும்  இல்ல  , படத்தின்  நிறைய  சம்பவங்கள்  இருந்தன . 

அனால் , என்ன செய்ய  , கயிற்றில் தொங்கி  , பறந்து  பறந்து  அடிக்கும்  action  இல்லை  படத்தில் . வெளிநாட்டில்  சென்று  குத்து பாட்டு  பாடும்  பாக்கியமும்  இல்லை  . ஒரு வேளை   , எழுபது   வருடம்  முன்பு  வெளி  நாடு  சென்று  அன்றைய  காலச்சூழலில் ஒரு  பாட்டு  வைத்து  இருந்தால்  வித்தியாசமாக  இருந்து இருக்குமோ!  யோசித்துப்பாருங்கள்  ஆங்கிலேய  குரூப்  dancers  அந்தாக்கால  உடை  மாட்டிக்கொண்டு  பின்னாடி ஆடிக்கொண்டு  இருக்க  ,ஹீரோ  , ஹீரோயின்  நாதா  சுவாமி  என்று  ஆடிக்கொண்டு  இருக்கும்  காட்சியினை . அப்படி  இல்லை  இந்தப்படம் !
இயல்பான  காட்சி அமைப்பு தான் கதைக்கு பலம் . அது சரிவர
செய்யப்பட்டு  இருக்கிறது .

கொடுக்கப்பட்ட  பட்ஜெட்டில்  , கதைக்கு  ஏற்ப  பாட்டுக்கள்   அமைந்து இருந்தது .குறிப்பாக  , சித்தார்த்தும்  , ஜமீன்  மகளாக  வரும்  அனைக்கா  சோனியும்  களவு  வாழ்க்கையில்  இரவில்  பாடும் " ஹே  மிஸ்டர்  மைனர் " பாட்டு  வசீகரித்தது . அவர்களின்   காதலும்தான் .அந்தப்பாடலில்  வரும்  ஒரு வரி உண்டு  , " காற்றின் காலில் கொலுசு  கட்டி இழுக்குற " , அதே  அனுபவம்  தான்  கொடுக்கிறது  அந்தப்பாட்டும் .

காலத்திற்கு ஏற்ப  போடப்பட்ட இசைப்புயலின்   இசையில்  இரண்டு[ யாருமில்லா மற்றும்  ஹே  மிஸ்டர் ]பாட்டுக்கள் காலம்  தாண்டி  நிற்கும்  என்று நினைக்கிறேன் .

ப்ரித்விராஜின்  நடிப்பை  பல  முறை பல  படங்களில்  இதற்கு  முன்பு பலர்  பாராட்டி  இருந்தாலும் , திரும்பச் சொல்லிதான்  ஆகவேண்டி  உள்ளது .
ஒழுக்கமாகவும் இருந்து   , காரியசித்தியும்  , முனைப்புடனும்  பயிற்சி  செய்து , நல்ல  பெயரும் , பாராட்டும்  கேட்கத்துடிக்கும்  இயல்பான  பாத்திரமாகத்தான்  உள்ளார்  முதலில் . இள  வயதில்   , சித்தார்த்தை  மற்ற  சிறுவர்களின்  கேலியில்  இருந்து  காக்கும்  மனமும்  அவருடைய  நல்ல மனதிற்கு  சான்று .
தன்னை விட  ஆசானிடம்  சித்தார்த்  நல்ல பெயரும்  , ராஜபார்ட்  வேடமும்  
எடுத்துக்கொண்டு  செல்லும் பொது  பொறாமையும்  , தோற்கடிக்க  வேண்டும்  என்ற  வன்மமும்  வளர்ந்து  , அது  விஸ்வரூபம்  எடுத்து என்ன  விளைவுகளைக்கொடுக்கிறது  என்று  போகிறது  அவரது  பாத்திரமும்  , 
கதையும் .  கண்களில் ஏக்கமும்  , ஏமாற்றமும்  , இயலாமையும்  , 
பொறாமையும்  பூந்து  விளையாடுகிறது . பரிதாபமாக  ஆசானிடம்  சென்று  , 
அவன்  என்னை  விட  என்ன சிறப்பாக  நடித்தான்  என்று  கேட்கும்  போதும்  , 
காதலி  ,காதலை  ஏற்க  மறுக்கும் பொழுதும்  , ஐந்து  வருடம்  காத்தபின்  , 
என்னிடம்  இல்லாத  ஒன்றை  , சித்தார்த்திடம்  என்ன  கண்டாய்  என்று  உண்மையாகவே  புரியாமல்  கேட்ககும்  நேரத்தில்  , அவர்  கேட்பது  நியாயம்  தான்  என்று  நம்மை நம்ப  வைக்கிறது  அவரின்  நடிப்பு.

சித்தார்த்தை  எங்கு  தட்டினால்  அவன்  விழுவான்  என்று  அவனது  உளவியலைப்புரிந்து   , இந்தியக்கொடி  பதித்த  ஒரு  கப்பலை  அவருக்கு  ஒரு  ஆள்  மூலமாக  பரிசளித்து  , அவரை  திசை  திருப்ப  நினைத்த  அவரது  யுக்தி  , அந்த  பாத்திரத்தின்  நரித்தனத்தின்  உச்சம் . இதை  சித்தார்த்  எப்படி  எடுத்துக்கொண்டார்  என்பதை  படம்  பார்த்துதான்  தெரிந்துக்கொள்ள  வேண்டும்.

சித்தார்த்   , இந்தப்படத்தில்  சிக்ஸர்  அடித்துள்ளார்  என்று  சொல்லித்தான்  ஆக  வேண்டும் . அவர்  குழந்தை  முகம்  , அவரின்  நடிப்பை   மறைக்கிறது  போலும்  . ஆனால்   , " அண்ணே " என்று  கோமதி  நாயகத்தை { ப்ரித்விராஜை  } அவர்  கூப்பிடும்  அழகே  தனிதான் , அந்த  பாத்திரத்தின்  மீது  நமக்கு  ஒரு  அன்னியோன்யத்தை  ஏற்படுத்திவிடுகிறது .

வேதிகா  தன்னை  விரும்புகிறாள்   என்பதை  அவருக்கு  தெரிந்து  இருந்தாலும்  , பழைய  காதல்  கொடுத்த  வலியினை  மனதில்  சுமந்துக்  கொண்டு   அவரிடம்  தள்ளி  இருக்கும்  பொழுது  அந்த  பாத்திரத்தின்  கண்ணியம்  தெரிகிறது .
காதலில்  இருக்கும்  பொது  அவரிடம்  இருக்கும்  குதூகலமும்  , கதையில்  வரும்  ஒரு  சூழ்நிலையில்  , ஆசான்  நாசரை  தூற்றும்  போதும்   தெரியும்
அவரது  வழியும்  கோபமும், அழுகையும்   நிற்கிறது  மனதில் . சிறப்பான  நடிப்பை   வெளிக்கொண்டு  வந்த  வசந்த  பாலனிற்கு   மறுபடியும்  பாரட்டுக்கள் .ஜிகர்தண்டா  , காவியத்தலைவன்  போன்று  கதைகளை  தேர்ந்து  எடுத்து  நடித்தமைக்கே  இன்னொரு  பாராட்டு சித்தார்த்திற்கு .

வணிகரீதியான   சினிமாவில்  இருந்து  ரொம்ப  தூரம்  என்று  சொல்ல முடியாது  படத்தை .  காட்சி` அமைப்புகள்  சில இடங்களில் தோய்வு  உண்டுதான் . ஆனால்  கதைக்களமும்  , கோமதி  நாயகத்தின்  வன்மமும் வளரக் காரணம்   வலுப்பட  நேரம்  எடுக்கத்தான்  செய்யும் . எங்கே  கத்திரி  போட  வேண்டும்  என்று  நானும் யோசிக்கத்தான்  செய்தேன் . முடிவுக்கு  வர முடியவில்லை .

வேதிகா  தன்   வேலையினை  சரியாக செய்து உள்ளார் . நல்ல  ஓர்  பாத்திரம்  அவருக்கும் ..

சுதந்திர போராட்டத்தில் , நாடகத்தின்  பங்களிப்பு பகுதி  சிறப்பாக  இருந்தது .
இந்தியனின்  சுகன்யா  பாத்திரம்  , பொம்மலாட்டம்` மூலமாக  இதனைச்  செய்யும் . இது  எந்த அளவு  சரித்திர  உண்மை  இருக்கிறது  என்ற  கேள்விக்கு  என்னிடம்  பதில்  இல்லை. இருந்து  இருக்கலாம் . அந்த  சமயத்தில்  அதுதானே  எல்லோரையும் அடையும் ஊடகம் .இதை  பற்றி  ஆவலைக்கிளப்பியது  படம் .

கட்டாயம்  பார்க்க  வேண்டிய படம்.
ஓநாயும்  ஆட்டுக்குட்டியும்  போன்ற  சிறப்பான  படத்தினை  புறக்கணித்த  நம்ம  தமிழ் பார்வையாளர்களிடம்  என்ன எதிர்பார்ப்பது  என்று  சரியாகத்தெரியவில்லை .இதையும்  மீறி  படம்  எடுத்த  குழுவிற்கு 
ஒரு சலாம்  .





No comments:

Post a Comment