[------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"ரே ஜேன்" எழுதிய " APPLE PIP PRINCESS" என்ற புத்தகத்திலிருந்து .
RETOLD / TRANSLATED WITH MINOR CHANGES BY SEMMAL G.
--------------------------------------------------------------------------------------------------------------------
பெட்டிக்குள் வானவில் :
தூர தேசத்தில் ஒரு ராணி ...அவங்களுக்கு மூன்று ராஜகுமாரிகள் ...
சுசன்னே , மிரண்டா மற்றும் பெலிசிட்டி.......ரொம்ப செழிப்பான நாடு .....அந்த ராணியின் ஆட்சியின் கீழ் , எங்கும் சந்தோசம் பரவி இருந்தது ...மலைகளும் , ஆறுகளும் , பசுமையும் நிறைந்து வழிந்த ஊர் அது.மக்கள் அனைவரும் கடுமையாக உழைத்தும் , அதன் பலனைஅனுபவித்தும் வாழ்ந்தனர் .இதை விட சொர்க்க பூமி எங்கு இருக்கமுடியும்இந்த உலகத்தில் என்ற நினைப்போட இருந்தனர் அந்த மக்கள் .வாழக்கை ஒரே போல இருப்பதில்லையே ...ஒரு நாள் , உடல் நலம் சரியின்றி , அந்த ராணி இறந்து விடுகின்றார்கள் .அவர்களுடன் சேர்ந்து அந்த நாட்டின் வளமும் , சந்தோஷமும் , கூடவேபோய்விடுகிறது . மக்கள் பசியாலும் , பஞ்சத்தாலும் வாடுகின்றனர் .போவதற்கு முன் , மகள்களிடம் , என்னிடமிருந்து ஒரு சொத்து நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் என சொல்கிறார் ராணி .மூத்தவளான சுசன்னே ராணியின் அழகிய வேலைப்பாடுடன் கூடியஹீல்ஸ் காலணியினை வாங்கிக் கொள்கிறாள் .இரண்டாமவளான மிரண்டா , ராணியின் , அழிகிய விலையுயர்ந்த , முத்துக்களால் சூழப்பட்ட வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு அழகிய முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றினைப் பெற்றுக்கொள்கிறாள் .இளையவள் கொஞ்சம் தயக்கமுடன் , அம்மாவின் நியாபகம் எப்போதும் வரவேண்டுமென்பதை மனதிற்கொண்டு அவர்களின் இளைய வயதில் உபயோகித்த ஒரு மரப்பெட்டியினை வாங்கிக் கொள்கிறாள் .பின்னொரு நாள் அவளுக்கு அம்மாவின் நியாபகம் ரொம்ப வருகிறது .அந்தப்பெட்டியினை எடுத்து தடவிப் பார்க்கிறாள் .அம்மாவின் நியாபகமும் வாசமும் வருகிறது அதில் அவளுக்கு , அதில் தலை வைத்து தூங்கிபோகிறாள் . அதில் என்ன இருக்கிறதென்றுகூட பார்க்கத் தோன்றவில்லை அவளுக்கு .காலம் சுழல்கிறது . ராஜாவிற்கு தன்னுடைய நாட்டை இனிமேல் தன்னுடைய ஒரு ` மகளிடம் ஒப்படைத்து விட்டு போக நினைக்கிறார் .
" உங்கள் மூவருக்கும் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பம் தருகிறேன் ," என்கிறார் .மூத்தவள் , நிலவைத் தொடும் ஒரு பெரிய கட்டிடம் கட்டி அதன் மேல் நின்றுநிலவைத் தொட்டு , கம்பீரமாக , அங்கு நின்றுக் காண்பித்தாள் .ஊர் மக்களைத் துன்புறுத்தி , அவர்களின் வீட்டினில் , இருந்த மர சாமான்களை எல்லாம் , கொண்டு வரச்செய்து , அதை வைத்து அந்த மரத்தாலான கட்டிடத்தைக்கட்டுகிறாள் .இரண்டாமவளும் இதே போல , உலோகத்தினாலான ஒரு வானுயர்ந்தகோபுரத்தைக்கட்டி , அதன் மூலம் நட்சத்திரத்தை பிடித்து அவள் தலையில் சூட்டி
தன்னை அம்மா கொடுத்த கண்ணாடியில் அழகு பார்க்கிறாள் .இதனால் ஆனால் மக்களுக்கு நன்மையொன்றும் இல்லை.
பெலிசிட்டி , கொஞ்சம் சாதுவான பயந்த பிள்ளை .
அக்காக்கள் , இருவரும் , அழகும் , கம்பீரமும் , நிறைந்தவர்கள் , தன்னால் என்ன செய்து விட முடியுமென பெரிய நம்பிக்கையின்றி சோர்ந்து போய் இருக்கிறாள் .எப்பொழுதும் போல , சோர்வாகி இருக்கும் பொழுது , அம்மாவிடம் பேசுவாதாக நினைத்து , அந்த சிறிய மரப்பெட்டியுடம் பேசுகிறாள் ." அம்மா நான் என்ன செய்வேன் ....எனக்கு எந்தத் திறமையும் இல்லையே "அதிலிருந்து பதில் எதுவம் வரவில்லை .ஆனால் , அந்தப் பெட்டியினை திறந்துப் பார்க்க ஏதோவொன்று உந்தியது அவளை .பெட்டியினைத் திறக்கிறாள் .ஒரு பக்கம் கண்கள் கூசியது அவளுக்கு .சூரிய ஒளியின் சில கீற்றுக்களை ஒரு கம்பி போல சேகரித்து வைக்கப்பட்டு இருக்கிறது அதில் .சில்லென்ற மழையின் தூறல்கள் சில, ஒரு பிடி உருண்டை போலகோர்த்து வைக்கப் பட்டுள்ளது இன்னொரு பக்கம் .முக்கியமாக ஒரு அழகிய குட்டி வானவில் அந்தப் பெட்டியினுள்கமுக்கமாக ஒளித்து வைக்கப்பட்டு இருந்ததைப் பார்க்கிறாள் .ஒரு குயிலின் இறக்கையும் , ஒரு அழகிய சுருக்குப்பையில் சில ஆப்பிள்பழ விதைகளும் , கருஞ்சிவப்பில் ஒரு சிலந்தியின் வலையும் கூட இருக்கிறது அங்கே .அந்த ராணி அவர்களுடைய இளவயதில் , அங்கொன்றும் இங்கொன்றுமாகசேர்த்த மாயப்பொருட்கள் அவை .இவற்றை வைத்து என்ன செய்ய என்று யோசித்து ஒரு முடிவுக்கு வருகிறாள்இளையவள் . இப்படியே ரொம்ப யோசித்துக்கொண்டு இருந்தால்காலம்தான் கடக்கும் , செயலில் இறங்குவோமென முதலில்காய்ந்து போய் இருந்த ஒரு நிலத்தைச் சுத்தப்படுத்தி , நன்றாகத் தோண்டி ,இறுகிய மண்ணைத் தளர்த்துகிறாள் .தன்னிடமிருந்த மாய ஆப்பிள் விதைகளை மண்ணில் விதைக்கிறாள் .மழை காணா பூமியென்பதால் , பெட்டியினுள் இருந்து சிலமழைத் துளிகளை எடுத்துத் அந்த விதையின் மீது தெளிக்கிறாள் .அதே போல , சூரிய ஒளியினையும் படரச் செய்கிறாள் .இரண்டாம் நாள் , இவள் செய்கைகளைப் பார்த்த ஜான் என்ற ஒரு இளைஞன் , அவளுக்கு உதவ வருகிறான் .தன்னிடமிருந்த சில மற்ற விதைகளைத் தந்து கூடமாட இருந்தும் உதவுகிறான் .இருவரும் அந்த மாலைக்குள் , நல்ல நண்பர்களாகின்றனர் .ரொம்ப நாட்களுக்கு பிறகு பெலிசிட்டி அன்று மிகவும் சந்தோஷமாக உணர்ந்தாள் .மூன்றாம் நாள் காலையில் , பூமியினைத் துளைத்துக்கொண்டுசிறிய பச்சைத் துளிர்கள் வந்து இருப்பதை அவர்கள் இருவரும் பார்த்தனர் .அவர்கள் அம்மாவின் ஆப்பிள் விதைகளிலிருந்து வந்ததுளிர்கள்தான் அவை . நிறைய நம்பிக்கை கொடுத்தனஅவைகள் இருவருக்கும் .இதனைப் பார்த்துக்கொண்டு கொண்டிருந்த ஊர் மக்கள் ,இவர்கள் இருவருக்கும் உதவ வருகின்றனர் .அடுத்த சில நாட்களில் , பெரிய கூட்டம் கூடி ,அகண்ட நிலப்பரப்பு முழுவதும் இது போல , பலவகைப் பழங்களும் , பூச்செடிகளும் பயிரிடப்பட்டன .தன்னுடைய மாய சிலந்தி வலை வைத்து , ஒரு பெரிய கூடாரம்அமைக்கிறாள் , அந்தச் செடிகளை இரவின் பனியிலிருந்து காப்பாற்ற ..
போட்டி முடிய இன்னும் கடைசி இரு நாட்களே இருந்தனபெலிசிட்டி நினைத்தாள் , இன்று முழுவதும் உழைத்தாலும் , பெரியமாயம் ஒன்றையும் நிகழ்த்திவிட முடியாதுதான் . ஆனால் , இங்கு நிகழ்ந்து இருப்பது , போட்டியினைத்தாண்டி ஒரு நிகழ்வு .அந்த நாடு முழுவதும் பயிரிடப்பட்ட இடங்களில் எல்லாம் , துளிர்த்து இருப்பது சிறிய துளிர்கள் மட்டுமின்றி , மக்களின் நம்பிக்கையும் , சந்தோஷமும்தான் .தனக்கு இதுவே போதுமென நினைக்கிறாள் .போட்டியின் நாளிற்கு முந்தய சாயங்காலம் , எல்லோரும் களைத்துப்போய் இருக்கின்றனர் .மக்களின் குழந்தைகளும் , என்ன நடக்கிறதென்று பெரிதாகப் புரியாமல் பார்த்துக்கொண்டு இருக்கின்றன .
"எல்லோரும் இங்கே வாருங்கள் ...கண்களை மூடுங்கள் .....
நாள் சொல்வது வரை கண்ணை மூடுங்கள் பிள்ளைகளே .....
சூ மந்திரக்காளி ....இப்போ கண்ணைத்திரங்கள் ....." என்கிறாள் .
குழந்தைகள் , கண்திறந்த பொழுது , தூரத்தில் ஒரு மலை தெரிய , அதன் முன் மங்கலாக ஏதோ தெரிகிறது .சூரிய ஒளியினை கொஞ்சம் மங்கச் செய்கிறாள் பெலிசிட்டி .
அங்கே ஒரு அழகிய வானவில் , வளைந்து கம்பீரமாகச் சிரித்துக் கொண்டு இருக்கிறது .
அவள் பெட்டியிலிருந்து வெளியே எடுத்து விட்ட அம்மாவின் வானவில் .
அந்தக் குழந்தைகள் ஆரவாரமாக சிரித்துக் கொண்டாடின .தன் அம்மா சிரித்தார்ப் போல தோன்றியது அவளுக்கு .
" என்னமா , எங்களுக்கு எதுவும் இல்லையா " என்றுக் கேட்கின்றனர் ஊர் மக்கள் .
மாய விதைகளால் , ஒரே ஒரு ஆப்பிள் மரம் அங்கே பெரிதாக வளர்ந்து இருந்தது .
அது ஒரு மிகப் பெரிய ஆல மரம் போன்று வித்தியாசமாக இருந்தது .
"வாருங்கள் எல்லோரும் சென்று , அந்த ஆப்பிள் பழங்களைத்தின்போம் " என்கிறாள்.
மக்களும் , சந்தோஷமாக உண்கின்றனர் .
இரவு கவ்வத்தொடங்குகிறது ...
தன் பெட்டியிலிருந்து , அந்த குயிலின் இறகை எடுத்து அந்த ஆப்பிள்
மரக்கிளையில் வருடுகிறாள் பெலிசிட்டி .
அந்த ஆப்பிள் மரத்தின் , இலைகள் அசைகிறது .
சுகமான காற்று வந்து வீசுகிறது .
மக்களுக்கு , கண்ணயர வேண்டுமெனத் தோன்றுகையில் ,
ஒரு குயிலின் இசை கேட்கிறது . அந்த இறகு செய்த ஜாலமென , அம்மாவிற்கு நன்றி சொல்கிறாள் அவள் .
மீண்டும் சொர்கம் வந்ததென நினைத்துக்கொண்டு அனைவரும் அவளை வாழ்த்தி தூங்கிப்போய் விடுகின்றனர் .
மறுநாள் , தீர்ப்பு வழங்கும் நாள் .
ராஜா , சுசன்னா மற்றும் மிரண்டாவின் மர , மற்றும் உலோக கோபுரங்களை முன்பே பார்த்துவிட்டார் . எங்கே தன் இளைய மகளைக் காணவில்லையே என்று ஊருக்குள் தேடி வருகிறார் .
தன் ஊராவென வியந்துப்போகிறார் .
எங்கும் பச்சை பசேலென மரங்கள் , பூத்துக் குலுங்கும் செடிகள் ,
அங்குமிங்கும் குழந்தைகள் ஓடி விளையாடியும் இருந்தன .
மக்களும் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டனர் .
" மகளே பெலிசிட்டி " ....
" அப்பா மன்னிக்கவும் , தூங்கிப் போய்விட்டேன் ....உங்களை நானே வந்து பார்த்து இருக்கணும் .இந்த ஒரு வாரத்தில் , என்னால் இவ்வளவுதான் முடிந்தது . ஆப்பிள் மரம் ஒன்றுதான் வேகமாக வளர்ந்தது .இன்னும் கொஞ்சம் நாட்கள் இருந்தால் , என்னால் ,இன்னும் சிறப்பாக காண்பித்திருக்க முடியும்"
என தூக்கக்கலக்கத்தில் சொல்கிறாள் .
" கண்ணே , என் கண்ணே , உங்க அம்மாவைப் பார்த்தது போல இருக்கிறது ...."
என்று மகளைத்தழுவி ஆனந்தமயமாக அழுகிறார் ராஜா .
" என்ன சொல்கிறாய் நீ ...திரும்பிப்பார் ....எவ்வளவு மரங்கள் காய்த்துத் தொங்குகிறது ...
பறவைகளின் சப்தம் உனக்கு கேக்கவில்லையா.....பூக்களின் மணம் உன்னை எழுப்ப வில்லையா ?!!"
ஒரு இரவிற்குள் நடந்த மாயத்திற்கு அம்மாவிற்கு நன்றி சொல்கிறாள் பெலிசிட்டி.
அப்புறமென்ன அந்த நாடு அவளுடயதாயிற்று .
மக்களை சந்தோஷமாக பார்த்துக்கொண்டாள் ......
ஜானும் அவளும் சந்தோஷமாக வாழ்ந்தனர் .
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கதையில் வருவது போல மாயப் பெட்டியினை நம்மால் , குழந்தைகளுக்கு விட்டுச் செல்ல முடியாது .. ஆனால் , வாழ்க்கைக்கு வாழத்தேவையான பலவற்றை அவர்கள் அறிவிற்கு ஊட்டி விட முடியும் நம்மால் .
வானவில்லையும், மழையினையும் , நல்ல இசையினையும்
அவர்கள் ரசிக்க ,நல்ல ரசனையினை அவர்கள் வளர்த்துக்கொள்ள உதவ முடியும் . குறிப்பாக இயற்கையோடு ஒன்றி வாழவும் , இருக்கும் இயற்கையினை இன்னும் கெடாமல் பார்த்துக்கொள்ளும் கடைமையும் நமக்கு உள்ளது .
பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து , மரங்களை நட்டு , நம்மால் முடிந்தவரை இயற்கைக்கு
நன்மை செய்வோம் . பிள்ளைகள் நம்மைப் பார்த்து இதனைத் தொடருவர் .
நம்முடைய கனவைத் திணிக்காமல் , அவர்கள் வித விதமான கனவினைக்காணவும் ,
அதனைநினைவாக்கவும் , அவர்களே முயற்சி செய்து முன்னேற முடிந்த வரை துணையிருப்போம் .
அந்த வானவில் , பெட்டியிலிருந்து வரவேண்டியது இல்லை.
அவர்கள் வாழ்க்கையே வானவில்லாகட்டும் ...
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------