Friday, June 17, 2016

பெட்டிக்குள் வானவில்

[------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"ரே  ஜேன்"  எழுதிய  " APPLE  PIP PRINCESS"  என்ற  புத்தகத்திலிருந்து  .
RETOLD / TRANSLATED  WITH MINOR CHANGES  BY SEMMAL G.
--------------------------------------------------------------------------------------------------------------------

பெட்டிக்குள்  வானவில் :

தூர  தேசத்தில் ஒரு  ராணி ...அவங்களுக்கு  மூன்று  ராஜகுமாரிகள் ...

சுசன்னே  , மிரண்டா  மற்றும்  பெலிசிட்டி.......ரொம்ப  செழிப்பான  நாடு .....
அந்த  ராணியின்  ஆட்சியின்  கீழ்  , எங்கும்  சந்தோசம்  பரவி  இருந்தது ...

மலைகளும்  , ஆறுகளும்  , பசுமையும்  நிறைந்து  வழிந்த  ஊர்  அது.
மக்கள்  அனைவரும்  கடுமையாக  உழைத்தும்  , அதன்  பலனை 
அனுபவித்தும்  வாழ்ந்தனர் .இதை  விட  சொர்க்க பூமி  எங்கு  இருக்கமுடியும் 
இந்த  உலகத்தில்  என்ற  நினைப்போட  இருந்தனர்  அந்த  மக்கள் .

வாழக்கை  ஒரே  போல   இருப்பதில்லையே ...
ஒரு  நாள்  , உடல்  நலம்  சரியின்றி  , அந்த ராணி  இறந்து  விடுகின்றார்கள் .

அவர்களுடன்  சேர்ந்து  அந்த  நாட்டின்  வளமும்  , சந்தோஷமும்  , கூடவே 
போய்விடுகிறது . மக்கள்  பசியாலும் , பஞ்சத்தாலும்  வாடுகின்றனர் .

போவதற்கு  முன்  , மகள்களிடம்  , என்னிடமிருந்து  ஒரு  சொத்து  நீங்கள்  எடுத்துக்கொள்ளலாம் என  சொல்கிறார்  ராணி .

மூத்தவளான  சுசன்னே  ராணியின் அழகிய  வேலைப்பாடுடன்  கூடிய  
ஹீல்ஸ்  காலணியினை  வாங்கிக் கொள்கிறாள் .

இரண்டாமவளான  மிரண்டா , ராணியின்  , அழிகிய விலையுயர்ந்த  , முத்துக்களால் சூழப்பட்ட வேலைப்பாடுகளுடன்  கூடிய  ஒரு  அழகிய  முகம் பார்க்கும்  கண்ணாடி  ஒன்றினைப்  பெற்றுக்கொள்கிறாள் .

இளையவள் கொஞ்சம்  தயக்கமுடன்  ,  அம்மாவின்  நியாபகம்  எப்போதும்  வரவேண்டுமென்பதை மனதிற்கொண்டு  அவர்களின்  இளைய  வயதில் உபயோகித்த  ஒரு  மரப்பெட்டியினை வாங்கிக் கொள்கிறாள் .

பின்னொரு  நாள்  அவளுக்கு  அம்மாவின்  நியாபகம்  ரொம்ப  வருகிறது .
அந்தப்பெட்டியினை எடுத்து  தடவிப் பார்க்கிறாள் .அம்மாவின்  நியாபகமும்  வாசமும்  வருகிறது அதில்  அவளுக்கு   , அதில்  தலை  வைத்து  தூங்கிபோகிறாள் . அதில்  என்ன  இருக்கிறதென்றுகூட பார்க்கத்  தோன்றவில்லை அவளுக்கு .

காலம்  சுழல்கிறது . ராஜாவிற்கு  தன்னுடைய  நாட்டை  இனிமேல்  தன்னுடைய  ஒரு ` மகளிடம்  ஒப்படைத்து  விட்டு  போக  நினைக்கிறார் .


" உங்கள்  மூவருக்கும்  உங்கள்  திறமைகளை  வெளிக்காட்ட  ஒரு  சந்தர்ப்பம்  தருகிறேன்  ," என்கிறார் .

மூத்தவள் , நிலவைத் தொடும்  ஒரு  பெரிய  கட்டிடம்  கட்டி  அதன் மேல்  நின்று 
நிலவைத்  தொட்டு   , கம்பீரமாக  , அங்கு  நின்றுக்  காண்பித்தாள் .

ஊர்  மக்களைத்  துன்புறுத்தி  , அவர்களின்  வீட்டினில் , இருந்த மர   சாமான்களை  எல்லாம்  , கொண்டு வரச்செய்து  , அதை வைத்து அந்த  மரத்தாலான கட்டிடத்தைக்கட்டுகிறாள் .

இரண்டாமவளும்  இதே போல  , உலோகத்தினாலான  ஒரு  வானுயர்ந்த 
கோபுரத்தைக்கட்டி , அதன்  மூலம்  நட்சத்திரத்தை பிடித்து  அவள்  தலையில்  சூட்டி  
தன்னை  அம்மா  கொடுத்த  கண்ணாடியில்  அழகு  பார்க்கிறாள் .இதனால்  ஆனால்   மக்களுக்கு நன்மையொன்றும்  இல்லை.
  
பெலிசிட்டி  , கொஞ்சம்  சாதுவான  பயந்த பிள்ளை .

அக்காக்கள்  , இருவரும் , அழகும்  , கம்பீரமும்  , நிறைந்தவர்கள் , தன்னால்  என்ன செய்து  விட  முடியுமென  பெரிய  நம்பிக்கையின்றி   சோர்ந்து போய்  இருக்கிறாள் .

எப்பொழுதும்  போல  , சோர்வாகி  இருக்கும்  பொழுது  , அம்மாவிடம்  பேசுவாதாக  நினைத்து  , அந்த  சிறிய  மரப்பெட்டியுடம்  பேசுகிறாள் .

" அம்மா  நான்  என்ன  செய்வேன் ....எனக்கு  எந்தத்  திறமையும்  இல்லையே "

அதிலிருந்து  பதில்  எதுவம்  வரவில்லை .

ஆனால் , அந்தப்  பெட்டியினை  திறந்துப் பார்க்க  ஏதோவொன்று உந்தியது  அவளை .

பெட்டியினைத்  திறக்கிறாள் .

ஒரு  பக்கம்  கண்கள்  கூசியது  அவளுக்கு .
சூரிய  ஒளியின்  சில  கீற்றுக்களை  ஒரு கம்பி  போல  சேகரித்து வைக்கப்பட்டு  இருக்கிறது அதில் .

சில்லென்ற  மழையின்  தூறல்கள்  சில, ஒரு  பிடி  உருண்டை போல 
கோர்த்து  வைக்கப் பட்டுள்ளது இன்னொரு  பக்கம் .

முக்கியமாக  ஒரு  அழகிய  குட்டி  வானவில்  அந்தப்  பெட்டியினுள்  
கமுக்கமாக ஒளித்து வைக்கப்பட்டு  இருந்ததைப் பார்க்கிறாள் .

ஒரு  குயிலின்   இறக்கையும்  , ஒரு  அழகிய  சுருக்குப்பையில்  சில  ஆப்பிள் 
பழ  விதைகளும் , கருஞ்சிவப்பில்  ஒரு  சிலந்தியின்  வலையும்  கூட  இருக்கிறது  அங்கே .

அந்த  ராணி  அவர்களுடைய  இளவயதில்  , அங்கொன்றும்  இங்கொன்றுமாக 
சேர்த்த  மாயப்பொருட்கள்  அவை .

இவற்றை வைத்து  என்ன  செய்ய  என்று  யோசித்து  ஒரு முடிவுக்கு  வருகிறாள் 
இளையவள் . இப்படியே  ரொம்ப  யோசித்துக்கொண்டு   இருந்தால் 
காலம்தான்  கடக்கும்  , செயலில்  இறங்குவோமென முதலில் 
காய்ந்து போய்   இருந்த  ஒரு  நிலத்தைச்  சுத்தப்படுத்தி , நன்றாகத்   தோண்டி ,
இறுகிய  மண்ணைத்  தளர்த்துகிறாள் .

தன்னிடமிருந்த  மாய  ஆப்பிள்  விதைகளை  மண்ணில்  விதைக்கிறாள் .
மழை காணா  பூமியென்பதால்  , பெட்டியினுள்  இருந்து  சில 
மழைத்  துளிகளை  எடுத்துத் அந்த  விதையின்  மீது  தெளிக்கிறாள் .

அதே  போல  , சூரிய  ஒளியினையும்  படரச்  செய்கிறாள் .

இரண்டாம்  நாள்  , இவள் செய்கைகளைப்  பார்த்த  ஜான்  என்ற  ஒரு இளைஞன்  , அவளுக்கு  உதவ  வருகிறான் .

தன்னிடமிருந்த சில  மற்ற  விதைகளைத்  தந்து  கூடமாட  இருந்தும் உதவுகிறான் .இருவரும்  அந்த  மாலைக்குள்  , நல்ல  நண்பர்களாகின்றனர் .
ரொம்ப  நாட்களுக்கு  பிறகு  பெலிசிட்டி  அன்று  மிகவும்  சந்தோஷமாக உணர்ந்தாள் .

மூன்றாம்  நாள்  காலையில் , பூமியினைத்  துளைத்துக்கொண்டு 
சிறிய  பச்சைத்  துளிர்கள்  வந்து  இருப்பதை   அவர்கள்  இருவரும்  பார்த்தனர் .
அவர்கள்  அம்மாவின்  ஆப்பிள்  விதைகளிலிருந்து  வந்த 
துளிர்கள்தான்  அவை . நிறைய  நம்பிக்கை  கொடுத்தன  
அவைகள் இருவருக்கும் .

இதனைப்  பார்த்துக்கொண்டு  கொண்டிருந்த  ஊர்  மக்கள் , 
இவர்கள்  இருவருக்கும்  உதவ  வருகின்றனர் .
அடுத்த  சில  நாட்களில் , பெரிய கூட்டம்  கூடி   ,அகண்ட  நிலப்பரப்பு  முழுவதும் இது  போல  , பலவகைப்  பழங்களும் , பூச்செடிகளும்  பயிரிடப்பட்டன .
தன்னுடைய  மாய  சிலந்தி  வலை  வைத்து  , ஒரு  பெரிய  கூடாரம் 
அமைக்கிறாள் , அந்தச்  செடிகளை  இரவின்  பனியிலிருந்து  காப்பாற்ற ..

போட்டி  முடிய  இன்னும்  கடைசி  இரு  நாட்களே  இருந்தன
பெலிசிட்டி  நினைத்தாள்  , இன்று  முழுவதும்  உழைத்தாலும் , பெரிய 
மாயம்  ஒன்றையும்  நிகழ்த்திவிட  முடியாதுதான் . ஆனால்  , இங்கு  நிகழ்ந்து  இருப்பது  , போட்டியினைத்தாண்டி  ஒரு நிகழ்வு .
அந்த  நாடு முழுவதும்  பயிரிடப்பட்ட இடங்களில்  எல்லாம் , துளிர்த்து  இருப்பது  சிறிய  துளிர்கள்  மட்டுமின்றி  , மக்களின்  நம்பிக்கையும் , சந்தோஷமும்தான் .தனக்கு  இதுவே  போதுமென  நினைக்கிறாள் .

போட்டியின்  நாளிற்கு  முந்தய  சாயங்காலம்  , எல்லோரும்  களைத்துப்போய்  இருக்கின்றனர் .மக்களின்  குழந்தைகளும்  , என்ன  நடக்கிறதென்று  பெரிதாகப்  புரியாமல்  பார்த்துக்கொண்டு  இருக்கின்றன .

"எல்லோரும்  இங்கே  வாருங்கள் ...கண்களை  மூடுங்கள் .....
நாள்  சொல்வது  வரை  கண்ணை  மூடுங்கள்  பிள்ளைகளே .....

சூ  மந்திரக்காளி ....இப்போ  கண்ணைத்திரங்கள்  ....." என்கிறாள் .

குழந்தைகள்  , கண்திறந்த  பொழுது  , தூரத்தில்  ஒரு மலை  தெரிய  , அதன்  முன்  மங்கலாக  ஏதோ  தெரிகிறது .சூரிய  ஒளியினை   கொஞ்சம்  மங்கச்  செய்கிறாள்  பெலிசிட்டி .
அங்கே  ஒரு  அழகிய  வானவில்  , வளைந்து  கம்பீரமாகச்  சிரித்துக்  கொண்டு  இருக்கிறது .
அவள்  பெட்டியிலிருந்து  வெளியே  எடுத்து  விட்ட  அம்மாவின்  வானவில் . 

அந்தக்  குழந்தைகள்  ஆரவாரமாக  சிரித்துக்  கொண்டாடின .தன்  அம்மா  சிரித்தார்ப் போல  தோன்றியது  அவளுக்கு .

" என்னமா  , எங்களுக்கு  எதுவும்  இல்லையா " என்றுக்  கேட்கின்றனர்  ஊர் மக்கள் .

மாய  விதைகளால்  , ஒரே  ஒரு  ஆப்பிள்  மரம்  அங்கே  பெரிதாக  வளர்ந்து  இருந்தது .
அது  ஒரு  மிகப்  பெரிய  ஆல  மரம்  போன்று  வித்தியாசமாக  இருந்தது .

"வாருங்கள்  எல்லோரும்  சென்று  , அந்த  ஆப்பிள்  பழங்களைத்தின்போம்  " என்கிறாள்.

மக்களும்  , சந்தோஷமாக  உண்கின்றனர் .
இரவு  கவ்வத்தொடங்குகிறது ...

தன்   பெட்டியிலிருந்து , அந்த  குயிலின்  இறகை  எடுத்து  அந்த  ஆப்பிள் 
மரக்கிளையில்  வருடுகிறாள்  பெலிசிட்டி .

அந்த  ஆப்பிள்  மரத்தின்  , இலைகள்  அசைகிறது .
சுகமான  காற்று  வந்து  வீசுகிறது .

மக்களுக்கு  , கண்ணயர  வேண்டுமெனத்  தோன்றுகையில்  , 
ஒரு  குயிலின்  இசை  கேட்கிறது . அந்த  இறகு செய்த  ஜாலமென  , அம்மாவிற்கு  நன்றி  சொல்கிறாள்  அவள் .
மீண்டும்  சொர்கம்  வந்ததென  நினைத்துக்கொண்டு  அனைவரும்  அவளை  வாழ்த்தி  தூங்கிப்போய்   விடுகின்றனர் .

மறுநாள்  , தீர்ப்பு  வழங்கும்  நாள் .
ராஜா  , சுசன்னா  மற்றும்  மிரண்டாவின்  மர  , மற்றும்  உலோக  கோபுரங்களை  முன்பே  பார்த்துவிட்டார் . எங்கே தன்  இளைய  மகளைக்  காணவில்லையே என்று  ஊருக்குள்  தேடி  வருகிறார் .

தன்   ஊராவென  வியந்துப்போகிறார் .
எங்கும்  பச்சை  பசேலென மரங்கள்  , பூத்துக்  குலுங்கும்  செடிகள் , 
அங்குமிங்கும்  குழந்தைகள்  ஓடி  விளையாடியும்  இருந்தன .
மக்களும்  மிகவும்  சந்தோஷமாக  காணப்பட்டனர் .

" மகளே  பெலிசிட்டி " ....

" அப்பா  மன்னிக்கவும்  , தூங்கிப்  போய்விட்டேன் ....உங்களை  நானே  வந்து  பார்த்து  இருக்கணும் .இந்த  ஒரு  வாரத்தில்  , என்னால் இவ்வளவுதான்  முடிந்தது . ஆப்பிள்  மரம் ஒன்றுதான்  வேகமாக  வளர்ந்தது .இன்னும்  கொஞ்சம்  நாட்கள்  இருந்தால்  , என்னால்  ,இன்னும்  சிறப்பாக  காண்பித்திருக்க  முடியும்" 

என  தூக்கக்கலக்கத்தில்  சொல்கிறாள் .

" கண்ணே  , என் கண்ணே  , உங்க  அம்மாவைப்  பார்த்தது  போல  இருக்கிறது  ...."
என்று  மகளைத்தழுவி ஆனந்தமயமாக  அழுகிறார்   ராஜா .

" என்ன  சொல்கிறாய்  நீ ...திரும்பிப்பார்  ....எவ்வளவு  மரங்கள்  காய்த்துத்  தொங்குகிறது ...
பறவைகளின்  சப்தம்  உனக்கு  கேக்கவில்லையா.....பூக்களின்  மணம்  உன்னை  எழுப்ப  வில்லையா ?!!"

ஒரு  இரவிற்குள்  நடந்த  மாயத்திற்கு  அம்மாவிற்கு  நன்றி  சொல்கிறாள்  பெலிசிட்டி.

அப்புறமென்ன  அந்த  நாடு  அவளுடயதாயிற்று .
மக்களை  சந்தோஷமாக  பார்த்துக்கொண்டாள் ......

ஜானும்  அவளும்  சந்தோஷமாக  வாழ்ந்தனர் .

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 இந்தக் கதையில்  வருவது  போல   மாயப்  பெட்டியினை  நம்மால் , குழந்தைகளுக்கு  விட்டுச்  செல்ல முடியாது .. ஆனால்  , வாழ்க்கைக்கு   வாழத்தேவையான  பலவற்றை  அவர்கள்  அறிவிற்கு  ஊட்டி  விட  முடியும்  நம்மால் .  

வானவில்லையும்,   மழையினையும்  , நல்ல  இசையினையும்  
அவர்கள்  ரசிக்க  ,நல்ல ரசனையினை   அவர்கள்  வளர்த்துக்கொள்ள உதவ  முடியும் . குறிப்பாக  இயற்கையோடு  ஒன்றி  வாழவும்  , இருக்கும்  இயற்கையினை  இன்னும்  கெடாமல்  பார்த்துக்கொள்ளும் கடைமையும்  நமக்கு  உள்ளது .

பிளாஸ்டிக்  பைகளைத்  தவிர்த்து  , மரங்களை நட்டு ,  நம்மால்  முடிந்தவரை  இயற்கைக்கு 
நன்மை  செய்வோம் . பிள்ளைகள்  நம்மைப்  பார்த்து  இதனைத்  தொடருவர் .

நம்முடைய  கனவைத்  திணிக்காமல்  , அவர்கள்  வித  விதமான   கனவினைக்காணவும் ,
அதனைநினைவாக்கவும் , அவர்களே  முயற்சி  செய்து  முன்னேற  முடிந்த  வரை துணையிருப்போம் .

அந்த  வானவில்  , பெட்டியிலிருந்து  வரவேண்டியது  இல்லை.
அவர்கள்  வாழ்க்கையே  வானவில்லாகட்டும் ...


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Friday, June 3, 2016

ராசாளியே பாடல்

ராசாளியே பாடல் :
ரொம்ப நாட்களுக்கு பிறகு திரும்பத் திரும்ப கேட்கத்தூண்டிய  ரகுமான் அவர்களின் பாடல் ...இன்னும்  சொல்லப்போனால் ஜீவன்  நிரம்பி வழியும்  பாடல் .
 முழு வீச்சில் இறங்கி இசையமைத்து இருக்கிறார் போல ..
அல்லது கெளதம் மேனன் கூட்டமைப்பு செய்த மாயமாக கூட இருக்கலாம் .
பறக்கும் ராசாளியே .....என்னடா இது காதல் பாட்டிற்கு , அதுவும் பெண்ணை நோக்கி ராசாளி என்று இருக்கிறது என்று யோசிக்கையில் , கொஞ்சம் அடுத்து வந்த வரிகளும் , இசை வடிவமும் அப்படியே இழுத்துப்  போட்டு விட்டது .
"
முதலில் யார் சொல்வதன்பை ....
முதலில் யார்யெவதம்பை ...
"
இந்த இரண்டு வரிகள் பாடலில் சாராம்சத்தை சொல்லி விடுகிறது.
காதலில் அகப்படாமல் உயரப் பறந்து செல்லும் ராசாளிப் பறவையாக அவள் இருக்கிறாள் என அவ்வாறு அழைக்கிறான் தலைவன் எனக்கொள்ளலாம் .
உச்சம் தொட்டு விட்டது பாடல் என்று நினைக்கையில் ,
அங்கிருந்து அப்படியே வேறு சில பாடல்களின் சரணங்கள் தொடர்கிறது .
நின்னுக்கோரி , வடிவேலன் போன்ற பாடல்கள் வயலின் இசையோடு இழைந்து பிண்ணப்பட்டிருக்கிறது . இந்தச் சரணங்கள் அப்படியே பல்லவியில் போய் சேரும் இடம் மிக அருமை.
பாடலின் முடிவு , அப்படியே தாலாட்டி தூங்கவைத்து விடும் ...
"என் தோழில் குளிர் காய்கின்ற தீ ,,,,
குளிர் காய்கின்ற தீ ...."
தமிழோடு  அழகாக விளையாடிய தாமரைக்கு நன்றி கலந்த வணக்கம் ..

---------------------------------------------------------------------------------------------------------------------------------