Friday, December 12, 2014

கொஞ்சம் உள்ளிருக்கும் ஈரத்தை வெளியே சொட்ட விடுவோம் :


நகர  வாழ்கையின் அவசரம்  நம்மை எதையும் சட்டை செய்யாதவர்களாக மாற்றி உள்ளது .எல்லோரையும் சொல்ல  முடியாது .ஆனால் பெரும்பாலும் .

ஒரு பைக்கில் பெங்களூர் பன்னேர்கட்டா பாலம்  அருகில் ஒரு  வழிப்பாதையில்  சரியாக  சென்று கொண்டு இருந்த எனக்கு முன்பு நடந்த விபத்து மேற்சொன்ன  எண்ணத்தை  இன்னும்  அதிகமாக என்னையே  நம்ப  வைத்தது.இமைக்கும் பொழுதில் சின்ன சந்தில் இருந்து சட்டுன்னு ஒருவன்  ஒன் வேயில் தவறான திசையில் உள்ளே  நுழைந்து , எதிர்பாராமல் நான்   பல்சரில் திடீர்  பிரேக்  அடித்து  , பைக்  நிலை குலைந்து விழுந்து ,
தரையில் நங்கு  என்று  அடித்து  , rebound  ஆகி  கொஞ்சம்  தூரம்  இழுத்து சென்று, வண்டியின் பெட்ரோல் டான்க்  என் காலில் மாட்டி , காலில் லிகமென்ட்  முழுவதும் அறுந்து போய்  , surgery  செய்து  , கம்பு  இன்றி  நடக்க  மாதங்கள்  ஆனது .

இந்த சம்பவத்தில் பல விஷயங்கள் புலப்பட்டது  எனக்கு , நகர  வாழ்கையின் அவலம் . கீழே  விழுந்து கிடந்த  என்னை  தூக்கி  விட  சிலர் வந்தனர் .அது  வரைக்கும் சந்தோசம்.லேப்டாப் , cell  phone  இங்கும் அங்கும்  சிதறி  கிடந்தது .
அடிபட்ட அதிர்ச்சியில் அரை மயக்கத்தில் இருந்த  என்னை  ஓரமாக  , சாலை ஓர நடைபாதையில் படுக்க  வைத்து  விட்டு , வந்து  கொண்டு  இருந்த  ஆட்டோவை நிறுத்தி  ஏற்றி விட்டனர் .எதிரே வந்தவனை  பிடித்து அவனை  என்னுடன் போகச்சொல்லி  அனுப்பியும்  வைத்தனர் . நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர் . தவறாக  வண்டி  ஒட்டியவன்   கூட்டம்  கலைந்ததும் வண்டியில்  பறந்து  விட்டான் . எவ்ளோ  நல்ல மனசு !

ஆட்டோ  காரருக்கு  அதை  விட நல்ல மனசு.
எழுந்து  நிக்க  முயன்ற  பொழுது  , வலது காலில்  ஏதோ மொழுக்கு  என்று  இருந்தது .வலி பெரிதாக இல்லை , ஆனால்  என்னவென்று தெரியவில்லை , நிக்க முடியவில்லை சரியாக . நொண்டி நொண்டி தான் ஆட்டோவில்  ஏறினேன் . ஆட்டோக்காரனும்  பார்த்தான் .ஒரு பத்து அடி  நகர்ந்ததும்  , " நீங்க
நல்லாதானே  இருக்கீங்க , இறங்குங்க  , எனக்கு  இந்த சவாரிய   பாக்கணும் "என்று  சொல்லி  , என் பதிலை  கூட  எதிர்பார்க்காமல்  நடு ரோட்டில் இறக்கி  விட்டு சென்றான்.

ஒரு அரை  மயக்கத்தில் வண்டி அடியில்  மழை நீர்  அருகில்  படுத்துக்கொண்டு  , என் அலுவலக  நண்பர்களுக்கு போன் செய்தேன் . மயக்கம் போட்டு விழுந்தால் செல் போன்  , லேப்டாப்  அம்பேல்  ஆகி விடும் என்று  தெரியும் .

சட்டை  , பாண்ட்  கிழிந்து  ஒருவன் தெருவோரம்  கிடக்கிறானே  என்று  பார்த்தவண்ணம்  சென்றனர் , ஒருவர்  கூட என்னவென்று  உதவிட  வர வில்லை. இந்த  ஏரியாவில்  கிடக்கிறேன் , ஒரு வேலை  என் போன்  வேலை செய்யவில்லை என்றால்  ,தேடி  கண்டு  பிடியுங்கள் என்று  சொல்லிவிட்டு வைத்தேன் . படையாக  நண்பர்கள்  வந்தனர் . நல்ல வேலை  முழுவதும்  மயங்க  வில்லை.

2 நிமிடத்தில் hospital  இருந்தது . இதை அந்த ஆட்டோ டிரைவர்  கொண்டு  சென்று  விட்டு இருக்கலாம்தான். தெருவில் கிடந்த  இருபது நிமிடம்  , என்னால் என்றும்  மறக்க முடியாது .

வீடு வந்து  சேர்ந்த  பின்தான் , நண்பர்  ஒருவர்  என்  ஹெல்மெட்டை  காண்பித்தார் . ஒரு இடத்தில  கல்லோ  எதுவோ குத்தி  பெரிய  குழி  விழுந்து  இருந்தது . அது  மண்டையில் ஆகி  இருக்கவேண்டியது.

எல்லோரும்  ஹெல்மெட்  அணியுங்கள்  தவறாமல் . வீட்டில்  நமக்கு  
எதிர்பார்த்து   உள்ளனர். 

கொஞ்சம்  திரும்பி நம்மை  சுற்றி என்ன நடக்கிறது  என்று  அந்த  தெருவில் சென்றவர்  பார்த்து  இருக்கலாம் .அப்படி அடிபட்டு  தெருவில்  கிடக்கும்  ஒருவனுக்கு சரியாக உதவிட  கூட  இல்லாமல்  , அந்த ஆட்டோ காரனுக்கும்  , தெருவில்  கடந்து செல்பவருக்கும்  என்ன  அவசரம்.???????

அடுத்த  சம்பவம்  ஒன்று இருக்கிறது .
இது சென்னையில் நடந்தது .

ஈக்காட்டுதாங்கல்  அருகில்  ஒரு ஆட்டோ  கவுந்து  கிடந்தது இருக்கிறது  . ஆட்டோ டிரைவர்  தலையில் அடிபட்டு  ரத்தம் , பெரிய கூட்டம் . அவரை  தூக்கி விட்டு  , முதல் உதவி  செய்யாமால்  வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்  ஒரு  பெரிய  கூட்டம் .
தற்செயலாக  என்  நண்பர்  ஒருவர்  அந்தப்பக்கம்  சென்றுக்கொண்டு  இருந்து  இருக்கிறார் .சிலர் உதவிட வந்தனர் ஒரு  வழியாக   , ஆட்டோ  நிறுத்தி  ஏற்றியும்  விட்டனர் . அனால்  அடிபட்ட  அவருடன் செல்ல  யாரும் தயாராக இல்லை.

" ஏதற்கு  வம்பு  " என்றுதான் .
கூடயே  நண்பரும்   இன்னொருவன்  மட்டும்  சென்று  உள்ளனர். அருகில்  உள்ள பாலாஜி  ஹொச்பிடல்க்கு . "accident  case  எடுக்க மாட்டோம்  ,தலையில்  அடிபட்டு  உள்ளது  "என்று  சொல்லியுள்ளனர் . கொஞ்சம்  பேசி   , முதல்  உதவி  மட்டும்  செய்ய  ஒப்புக்கொண்டு  உள்ளனர் .

" ஹாஸ்பிடல்   rule  சார் , நான்  இங்கே  மேனேஜர்  , இது  போன்ற  கேஸ்  நாங்க  எடுக்க  முடியாது . போலீஸ்  பிரெச்சனை " என்று  தீவிர  சிகிச்சை  செய்ய மறுத்து , அப்போதைக்கு முதல் உதவி  மட்டும் செய்து  விட்டு உள்ளனர் .

உறவினர்  வந்து  G  H  எடுத்து செல்லுங்கள் என்று  சொல்லி  இருக்கின்றனர் .
அவர்  போதையில்  இருந்து  உள்ளார் .வீட்டு  முகவரி  கூட  தெரியவில்லை  அந்த நிலைமையில்.ஒரு  வழியாக  எப்படியோ  அவர் உறவினருக்கு  தகவல்  சொல்லி  , பிறகு  அவர்கள் வருவதற்குள்  , போலீஸ்  வந்து  விட்டது .
இங்குதான் கவனிக்க  வேண்டும் , "நீங்கள் யார்  , என்ன நடந்தது"  என்று  கேட்டு  விட்டு  , அடி பட்ட   இடத்திற்கு  FIR  poda  ஆட்களை  அனுப்பி வைத்தனர் .

இதற்கு  முன்பே கூட  வந்தவனும்  காணமல்  போய்  விட்டான்  , எதற்கு வம்பு  என்றுதான் .


நண்பரின்  Phone  no  , அட்ரஸ்  எதுவும் வாங்க கூட இல்லை அவர்கள் .
அடிபட்டவரின்  மனைவி  வந்ததும் " நீங்கள்  போங்க  , அவங்க  பாமிலி  வந்துருச்சு  , நாங்க பாத்துக்கறோம் " என்று  நண்பரை  அனுப்பி  வைத்து  விட்டது .

அவர் வந்து  எனக்கு  இந்த சம்பவத்தை  சொன்னார்.
போலீஸ்  எந்த  ப்ரச்சனையும்  செய்ய  வில்லை என்றும் .

தேவை  இல்லாத  பயத்திலும்  , ஓட்டத்திலும்  ஒருத்தர்  உயிர்  போனாலும் பரவாயில்லை  , ஆனா  நாம எதுக்கு  இதில்  தலையிட  வேண்டும்  என்று  100
பேருக்கு  மேல்  சுற்றி  நின்று வேடிக்கை  பார்த்த  கும்பலை  என்ன சொல்ல.
நகர  வாழ்கையின் அவலம்.

ஒரு வேளை  , கேஸ்  பிரெச்சனை  ஆகி இருந்தாலும்  சென்று  கோர்ட்டில்  சாட்சி  சொல்லி வர  வேண்டும் தான். செய்து  தான்  ஆக வேண்டும் .
போன  உயிர் திரும்ப  வருமா??

வருத்தமும்  கோபமும்  தான்  எனக்கு  மிஞ்சியது .
ஹாஸ்பிடல்  ஏன்  இப்படி  இருக்கிறது  , மக்கள்  ஏன்  இப்படி  இருக்கின்றனர் .??
திருநெல்வேலி  போல  சின்ன டவுனில்  இது  கட்டாயம்  நடக்காது .
உதவிட  பாய்ந்து  வருவர். சக மனிதனை இப்படி விட்டு செல்ல மாட்டார்கள் .
இது  நகர மனிதர்களின்  எருமை  மாட்டு  மனம். ரத்த  மழை  கொட்டினாலும்  , துடைத்து  விட்டு  போகும் மனம்.

ஆட்டோ காரர்  குடும்பம்  அவரை  G .H  எடுத்து  சென்றார்கள் என்று  சொன்னார் . . நல்ல  படியாக  ஆகி  இருப்பார் என்று  நம்புகிறேன்.

இதே  போன்ற  ஒரு  ஆட்டோக்காரர்  தான் என்னையும் கண்டுகொள்ளாமல்  நடு ரோட்டில்  விட்டுதான்  சென்றார் .! என்ன  கொடுமை  சார்.
அதற்காக  உதவிடாமல்  இருந்திட  முடியுமா????? இதைக்கூட  செய்ய வில்லை  என்றால்  எதற்கு  இருக்கிறோம்.










No comments:

Post a Comment