Showing posts with label anubavam. Show all posts
Showing posts with label anubavam. Show all posts

Tuesday, January 13, 2015

ஒட்டகச்சிவிங்கியும் கிட்டப்பார்வையும் .....

 ஒட்டகச்சிவிங்கியும் கிட்டப்பார்வையும் .....

வேலை இல்லாத வாரக்கடைசிகள் அபூர்வமாகிப்போன துறையில் நானும் இருப்பதால் , சமீபத்திய இரண்டு மாதங்கள்  மிகவும் இனிமையாகக் கழிந்தது , வேலை இல்லாததால். பிடித்த விஷயங்களை செய்வதும் , தூங்குவதும் குழந்தையுடன் இன்னும் அதிக நேரம் செலவிடுவதற்கும் நல்ல வாய்ப்பாக இருந்தது.

நாளையில் இருந்து திரும்பவும் ஓட்டம் தொடங்கப்  போகிறது என நினைத்துக்கொண்டே படுத்து இருக்கையில், மகள் எப்பொழுதும்  போல ,
"bookchi bookchi " என்று ஒரு கதை புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து படம் பார்த்து கதை சொல்லச் சொன்னாள் .

மேல சொன்ன தலைப்புடன்[ ஆங்கிலத்தில்;தான் , " THE  near  sighted  giraffe "] இருந்த அழகான படங்களுடன் கூடிய அந்த புத்தகத்தை நான் பல நாட்கள் பார்த்து உள்ளேன் , ஆனால் இந்த கதையினை படித்துச்  சொன்னது கிடையாது.

ஒரு காட்டில் ஒரு ஒட்டகச்சிவிங்கிக்கு கிட்டப்பார்வை  .

 காட்சிகள் சரிவர தெரியாமல் நிறைய  சங்கடங்கள். கண் தெரியாமல் ஒரு மரத்தின் கிளையில் தலை முட்டுகிறது , ஒரு குரங்கு அதனை கண்ணாடி  அணியச்  சொல்லுகிறது . மற்ற விலங்குகள் கண்ணாடி அணிந்த தன்னை பார்த்து என்ன நினைக்குமோ என்று யோசித்து  , அது கண்ணாடி அணிய மறுக்கிறது .  பிரச்சனைய சமாளிக்க , "helmet"  ஒன்றை போட்டுக்கொள்கிறது .
பிறகு ஒரு சிறுத்தையின்  மீது கால் இடறி விழுகிறது. இதன் பிறகும்  கண்ணாடி போடாமல் , வாலுக்கு மணி கட்டிக்கொள்கிறது , மற்ற மிருகங்கள் இதன் வருகை தெரிந்துகொள்ள . இப்படி போகிறது அதன் நாட்கள் .
சில வாரங்கள் கழித்துப்பார்த்தால் அதன் பின் புறத்தில் ஒரு தலைகாணி [முள்ளில் விழுந்ததில் இருந்து ], முதுகில் ஒரு ஏணி [ பள்ளத்தில் விழுந்ததில் இருந்து]  என பல சுமைகளை கூடவே தூக்கிக் கொண்டு சென்றது.

[ முழுக்கதையினை   சொல்லவில்லை இங்கே   , கொஞ்சம்  சுருக்கியுள்ளேன் , புத்தகத்தில்  ஒட்டகச்சிவிங்கி  இன்னும்  நிறைய  இடங்களில்  தடுமாறுகிறது !, சுமையும்  கூடுகிறது  ஒவ்வொரு  முறையும் ]

ஆனால்  கண்ணாடி மட்டும் அணிய மறுத்தது . இந்த வினோத தோற்றத்தினால் மற்ற மிருகங்கள்  அதனை அதிமாகவே  கேலி செய்தன, சில பாவமாக பார்த்தன .

இந்த கதை இப்படி போய்க்கொண்டு இருக்க, என் மகள் என் மடி விட்டு இறங்கி ஓடி விட்டாள் . குழந்தைகளின்  கவனம்  சிறிது நேரத்திற்கு மேல் ஒரு இடத்தில இருக்க மாட்டேன் என்கிறது."Attention  span " எனச்சொல்வர்  இதனை.

தொலைக்காட்சி  மற்றும் இன்டர்நெட் மூலமாக இவர்கள் கார்டூன்ஸ்  பார்த்து ,நொடிக்கு பல முறை காட்சிகள் மாரிப்பழகி , கதை கேட்கவோ , சற்று ஆழமாக ஒரே இடத்தில உட்கார்ந்து மனதை செலுத்தும் காரியத்தில் மனம் சேர மாட்டேன் என்கிறது. இதற்க்கு நாமும் காரணம். வேலை அல்லது சோம்பேறித்தனத்தால்  , தொலைக்காட்சி போட்டால் அழாமல்  இருக்கிறார்கள் என்று பழக்கி விட்டு , இப்படி ஆகிறது. இனி இதை மாற்ற முடிவு செய்து உள்ளேன். இதற்கு என்னுடைய அலுவலக நண்பர் முன்னோடி . வாரத்திற்கு சில மணி நேரங்கள் தான் தொலைக்காட்சி பார்க்க   விடுகிறார். முடிந்த வரை இயற்கையுடன் கூடிய சம்பாஷணைகளை பழக்கி விட்டு இருக்கிறார். சைக்கிள் எடுத்துக்கொண்டு அவர்களுடன் ஏரியினை   சுற்றி வருவதும் , படம் வரைதலும் , நிறைய புத்தகங்கள் வாசிப்பதும் , ஓடி ஆடி விளையாடவும்  பழக்கி இருக்கிறார். அடிப்படையில் அவர்களின்  படைப்பாற்றலை ["creative  intelligence  "]  பெருக்குதல் ஆகும்  .

அனைவரும் இதனைச்  செய்ய வேண்டும்.

கதையைத்தொடுருவோம் . கடைசியில் ஒரு சிறுத்தை ஒரு மரம் ஏறி அந்த ஒட்டகச்சிவிங்கியின் மீது ஒரு கண்ணாடி மாட்டி  விடுகிறது.
இப்பொழுது தன்னுடைய கோலத்தை  ஒரு நீர் நிலையில்  அது பார்க்கிறது .
இவ்வளவு  கோமாளியாகவா காட்சியளித்தோம் என்று மற்ற அனைத்தையும் கழற்றி எறிந்து , கண்ணாடி மட்டும் அணிந்த பின , தான் அழகாகவே  இருக்கிறோம் என உணர்கிறது. இப்படி அந்த கதை முடிந்தி விட்டது.

கண்ணாடி அணிந்து இருந்தால் தாழ்வு  மனப்பான்மை வரக்கூடாது  என குழந்தைகளுக்குச்  சொல்லவும் , மற்றவர்கள் அப்படி அணிந்து இருந்தால் அதை பற்றி குழந்தைகள்  என்ன நினைக்கிறார்கள்  என தெரிந்து கொள்ளவும்  பெற்றோர்களுக்கு சொல்லி முடிக்கிறார்கள் கதையின் ஆசிரியர்கள்
பெஞ்சமின்  மற்றும்  பில்  மக்லீன் .

[ NEW  BURLINGTON  , LONDON  வெளியீடு ].

எனக்கு இந்தக்கதை இன்னும் நிறைய ஆழமானவற்றைச் சொல்லியது.  இந்தக்கதையின் மூலமே அந்த ஒட்டகச்சிவிங்கி , கண்ணாடி அணிந்தால்  தன்னைப்பற்றி " மற்றவர் என்ன நினைப்பர்" அல்லது " WHAT  OTHERS    THINK " என்பதே .

நாமும் பல  சூழ்நிலைகளில்  ஒரு விஷயத்தை அணுகும் பொழுது , சரியான  கோணத்தை விட்டு ,  " மற்றவர் என்ன நினைப்பர்" என்கிற நினைப்பில் வேறு முடிவு எடுக்கிறோம் , அல்லது நமது சந்தோஷங்களை  குறைத்துக்கொள்கிறோம் . இதனால்  பாரம் தான் கூடுகிறது .
உண்மையில்  ,பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நம்மை பற்றி சிந்திக்க எவர்க்கும் நேரம் இருப்பதில்லை அல்லது சரியானதைச் செய்தால் [ கண்ணாடி அணிந்துகொண்டால் !] பலர் நமக்காக
மகிழ்ச்சியே அடைவர் . மற்றவரை பாதிக்காத வகையில் எடுக்கும் எந்த முடிவும் சரியானதே என்பது என் கண்ணோட்டம் .

இன்னொரு  வகையில் பார்த்தால் , கண்  தெரியாதது என்பது  அந்த ஒட்டகச்சிவிங்கியின் குறைபாடு. அதற்க்குண்டான தீர்வை அது புறத்தில்  தேடுகிறது.நமது கண்ணோட்டம் சரியாக இருந்தால் மற்றது தானாகவே விளங்கும்.

பிள்ளைக்கு கதை சொல்லப்போய்  எனக்கும் சிலவற்றை  வலியுரித்திச்சென்றது இந்தக்கதை .

 சரியான கண்ணாடி அணிந்து வாழ்கையினை  தொடருவோம்



Saturday, January 10, 2015

கடன்சுமையும் தொழில்முனைவும்

 கடன்சுமையும்  தொழில்முனைவும் :

சென்னையில்  ஏற்பட்ட சில நிகழ்வுகளை பதிவு செய்யத்தோன்றியது .

தோள்பட்டையில் சின்ன அடி ஏற்பட்டதாலும்  ரொம்ப நாட்களுக்கு பிறகு சென்னை வந்ததாலும் , சிறிது  நாட்கள் " call  driver "  சேவையினை  உபயோகப்படுத்திக்கொண்டேன்   .  இது நல்லதொரு சேவை.

அம்மாவிற்கு அடிக்கடி  வெளியே செல்லும் வேலை இல்லை.வாரத்திற்கு அல்லது  இரண்டு  வாரத்திற்கு ஒரு முறை தான் கோவிலுக்கு போக காரை எடுககும்  சூழ்நிலை  வரும். மாசத்திற்கு டிரைவர் வைத்துக்கொள்ளும்  தேவையும் இல்லை , செலவும் அதிகம். நான்கு மணி நேரத்திற்கு 250-300 ரூபாய் பெற்றுக்கொண்டு "call  driver " வசதி மிகவும்  சவுகரியம். தற்போது உள்ள ஆட்டோ செலவிற்கு ரொம்பவே  தேவலாம்.

இப்படி சில டிரைவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அனுப்பின  ஒருவரையே திருப்பி  பெரும்பாலும்  அனுப்ப மாட்டார்கள் [ நாம் அவரை நிரந்தரமாக  நம்ம வீட்டிற்க்கு சேர்த்துக்கொள்வோம் என்று!]. 
தினேஷ்   மட்டும்  இரண்டு முறை வந்தார்.சிரித்த  முகத்துடன்  எப்பொழும் கனிவான   தோரணையும்  உள்ள அவருடன் பழகுவதற்கு  ரொம்ப நேரம்  ஆகவில்லை .

"என்னிடமும்  வண்டி இருக்கிறது சார் ."tavera " வச்சு இருக்கேன். ஆனா சவாரி இல்லாத போது  இப்படியும்  ஓட்டறேன்  " என்றார்.

எப்பொழுதும் அலை பேசியினை  நோண்டிக்கொண்டே  இருந்தார் , வண்டி ஒட்டாத சமயத்தில்  தான். வெளியே சிரித்த முகத்துடன்  இருந்தாலும்  , ஏதோ உள்ளே ஓடிக்கொண்டு  இருப்பதை  உணர முடிந்தது , சிறிய படபடப்பை  அவரை  அறியாமல் வெளிக்காட்டிக்கொண்டு  இருந்தது அவரது உடல் மொழி. 

"வண்டி வச்சுட்டு  இந்த மாதிரி , இன்னொருத்தருக்கு வண்டி ஓட்ட கஷ்டமா  இருக்கா? ஏன்  டென்சனா  இருக்கீங்க ?" 

" இல்லை சார் , இதுதான் சார் வசதி  , நினைச்சா  ஓட்டுவேன்  , இல்லேன்னா  வீட்டுக்கு பொய் ரெஸ்ட்  எடுத்துப்பேன். புல் டைம் ஓட்டினா  , நேரம் காலம்  இல்லாம வேலை செய்ய வேண்டி இருக்கும். ராத்திரி பத்து  ஆய்டும் பெரும்பாலும் . நான்  இப்போ அதுவும் செய்யறது  இல்லை , வண்டி இருக்கிறதால  லாங் ட்ரிப் மட்டும் தான் போறது , இல்லை ஏர்போர்ட்  pickup  அண்ட் drop  மட்டும்  சிட்டிக்குள்"

அது இல்லை  சார் பிரெச்சனை ." tavera " வண்டி ஒன்னு லோன்  போட்டு  வாங்கினேன் . மாசா  மாசம் 15000 " due " கட்ட வேண்டி இருக்கு. அவ்ளோவா ஓட்டம்  இல்லை. எங்க " travels"  நம்பித்தான்  வாங்கினேன்.ஆனா அவர் செகண்ட் ஹண்ட்  வண்டிய  டிராவல்சில் ஓட்ட விட  முடியாதுன்னு  சொல்லிடாரு . 
அவர் மேலயும  தப்பு சொல்ல முடியாது. "செகண்ட் ஹாண்ட் "  வண்டி  எப்போ மக்கர்  பண்ணும்னு தெரியாது. வெளியூருக்குத்தான்  இந்த வண்டிய  புக்  செய்வாங்க . அவசர பட்டு வாங்கிட்டேன். எனக்கு அவர் அளவுக்கு  காண்டாக்ட்ஸ்  இல்லை. அதான்  வண்டிய  விக்கப்பார்த்துட்டு  இருக்கேன்.சரியாய் பார்ட்டி  எதுவும் அமையலை. ஆறுக்கு  வாங்கினேன்.
1.5 லட்சம்  நஷ்டத்துல்ல  தான் கேக்கறாங்க . விக்கவும்  மனசு இல்லை , ஆசையா  வாங்கினது, ஆனா "due " கட்டவும்   கஷ்டமாவும்  இருக்கு"

" டீ  சாப்பிடலாம்  வாங்க"..தயங்கிய  வாறே  வந்தார்.


"நீங்க சொல்றதை  நானும்  யோசிச்சு  பார்த்தேன்.  இன்னும்  நஷ்டம் அடைய  வேண்டாம்னா நீங்க சரியான ஆளைப் பார்த்து  வித்துடறதுதான் சரி. கஷ்டமாத்தான்  இருக்கும் . ஆனா நாள் ஆகா ஆக  ரீசேல் விலை  கம்மி ஆகத்தான்  செய்யும் . காருக்கு  எதன்னா  ரிப்பைர் வந்துச்சுன்னா  ரொம்ப  கஷ்டம்  ஆகிடும்."

" நீங்க சொல்றது சரி தான.நானும் அதை நினைச்சுதான்  குழப்பத்துல  இருந்தேன்."

" ப்ரோகர்ஸ் இல்லாம  விக்கறதுக்கு வழி இருக்கு. "சுலேகா " , " கார்வாலே " போன்ற "websites"  இருக்கு. வீட்டுக்கு  வாங்க , நாம விளம்பரம்  கொடுப்போம்.
வண்டிய கழுவி எடுத்துட்டு வாங்க.போட்டோவும்  போடுவோம். அப்புறமா  பார்ப்போம் ரெஸ்பான்ஸ்  எப்படி வருதுன்னு "

"சரிங்க சார் ".

பிறகு ஒரு வாரமா  எந்த தகவலும் இல்லை.
அடுத்த முறை பார்த்த பொழுது  ,

" காரை வித்துட்டேன்  சார். நஷ்டம்  தான் . கும்பகோணத்துல  இருந்து ஒரு பார்ட்டி  புரோக்கர்  மூலமா  வந்து  வாங்கிட்டு போனான் ".

ஒரு முறை  நாமே பார்த்து  இருக்கலாமேன்னு   கேக்கத்தோன்றியதை   அடக்கிகொண்டேன் .

" சரி , இனி மேல  புதுசா  தொடங்குங்க . புடிச்சுடலாம் .நானும்  காலேஜ்  முடிச்சு ரெண்டு வருஷம் வேலை பார்த்துட்டு திரும்ப படிக்கப்போனேன். அப்பாவும் "retire " ஆகி இருந்தார். பெரிய முடிவுதான் . நான்கு வருடம்  கழிச்சு அதே பழைய BE  சம்பளதுக்குதான் வேலை சேர்ந்தேன் . அப்பாவுக்கு தான் வருத்தம் , இவ்ளோ கஷ்ட  பட்டு படிச்சு  சரியான சம்பளம்  இல்லைன்னு.
சில வருஷம் ஆச்சு பிடிக்க . கடன்  வேறு  படிப்பிற்கு  வாங்கியது
அப்பா ஏற்கனவே நிறைய செலவு செய்து  விட்டார் ,கடன் தவிர  , அதனால
அவர் சொன்னதையும்  கேட்காமல் நான் தான்  படிப்புக்கடனை அடைப்பேன்னு  சொல்லிட்டேன். கடன் அடையும் வரை  அந்த 5 வருடங்கள் ,பெரிதாக  அதை விட்டு  நம்மால் வெளியே எதுவும் யோசிக்க  முடியாது.
உங்க நிலைமை புரிஞ்சுதான் பேசறேன் .ஆனா இப்போ  ஒரு அளவுக்கு நல்ல இருக்கேன் . உங்க வீட்டுல என்ன சொன்னாங்க ?"

" அவ ஒன்னும்  சொல்ல மாட்டா  சார் . எனக்குதான்  கார் மேல  ஒரு அட்டாச்மெண்ட்  வந்துடுச்சு ".

"கஷ்டம்தான். சரி ஆகிடும். பெரிய சுமை ஒன்னை இறக்கி வச்சு இருக்கீங்க .
கடன் இல்லாமல் குடும்பத்தை  நடத்துங்க" .

" சரி சார்" என்று பொய் விட்டார்.

என்னை இந்த நிகழ்ச்சி  சிந்திக்க வைத்தது.
"contacts " என்பது  எவ்வளவு  முக்கியம். திறமையும்  , உழைப்பும்  இருப்பினும்
சரியான ஆட்கள்  தெரிய வில்லை என்றால்  கடினம் தான்.இது பெரிய கண்டுபிடிப்பு இல்லை என்றாலும்  , கண் முன்னே  பார்த்ததும் , தாக்கம் அதிகமாக  இருந்தது.

குமார் மேலயும் தவறு  இருந்ததை அவரே ஒப்புக்கொண்டார் .சரியாக  தகவல் பரிமாற்றம்  [ " communicate "  ]செய்ய  வில்லை  அவருடைய "travel  agency " யுடன். புதிய கார்  ஒன்றை [ swift  அல்லது 6 லட்சம்  விலைக்கு  கம்மியான கார் ] வாங்கி இருந்தால், "travel  agency " மூலமாகவே ஓட்டம்  இருந்து இருக்கும் .

entrepreneur " ஆவதற்கு  முன்பு  துறை  சார்ந்த வணிகம்  பற்றி  ஆய்வும் [ "market  analysis " ],தொலை  நோக்கு  பார்வையும்   எவ்வளவு  அவசியம்  என்பதை நினைவுப்படுத்தியது  .இது எல்லா  துறைக்கும்  பொருந்தும் .
லாப நஷ்டங்களையும், போட்டியாளர்களையும் , தற்போதைய தேவைகள் ,
வங்கியில் சேமிப்பு  இப்படி  பல  காரணிகளை பார்க்க வேண்டி உள்ளது .
தீவிரமாக  ஆராய்ந்த பின்னே தான் இறங்க வேண்டும்.. திட்டமிடும்  கட்டம்தான்  ரொம்ப முக்கியமாகிறது .

 " இன்டர்நெட் " மார்க்கெட்டிங்கின்  உதவி இருந்தால்  அவர் தன்னுடைய  காரை  இடைத்தரகர்  இன்றி  நல்ல விலைக்கும்  வித்தும்  இருக்க முடியும் .படிப்பறிவு சரியாக  இல்லை என்பதையும்  , சூழ்நிலை  மற்றும் பயத்தையும்  பயன்படுத்தி  இது போன்ற இடைத்தரகர்கள்  லாபம்  பார்க்கின்றனர் .

கடின  உழைப்பும்  அனுபவ  அறிவும் காலம்  கடந்தாலும் வெற்றி தந்தே  ஆக வேண்டும்.அவர் கற்ற பாடம் , இனி கவனமாக  இருக்கச்செய்யும் .
  ஒரு நாள்  " innova " காரில்  அவரைப்பார்க்க மனம் ஏங்கியது .

பின் சீட்டில்!


IT துறையில் 40 வயதிற்கு மேல வேலை இல்லையா ....பகுதி 3 ,[ நேர்முகத் தேர்விற்கு தயாராகுவது எப்படி ?]

இந்தத் தலைப்பினை  கொஞ்சம்  மீண்டும்  ஞாபகப்படுத்திக் கொள்வோம் [recap ]  செய்வோம் .

பகுதி  ஒன்றில்  பணிமுடக்கத்திர்க்கான காரணங்களைப் பார்த்தோம் .
[
 http://moongilkoodu.blogspot.com/2015/01/it-40-1.html
  ]

பகுதி  இரண்டில்  நீண்ட  காலத்  திட்டமாக  பணியில்  இருக்கும்  பொழுது
நம்மை  எப்படித்  தயார்  செய்துக்  கொள்ளலாம்  என்று  எழுதி  இருந்தேன் .
இன்னும் சிலவற்றை  அதே  தலைப்பில்  பேசுவோம்  என்று  சொல்லி  இருந்தேன் .
[
http://moongilkoodu.blogspot.com/2015/01/it-40-2.html
]

நேற்று  யோசித்தப்  பொழுது  , அதை  விட  அவசரமாக  , உடனுக்குடன்  வேலை தேடும்  சூழல்  வந்தால்  எப்படி  அதனை  அணுகலாம்  என்று  முதலில்  எழுதிட  நினைத்தேன் .

அதனால்   பகுதி  இரண்டில்  பேசுவோம்  என்றுக் கூறிய  சில தலைப்புகள்  அடுத்தப்  பகுதிகளில்  பார்ப்போம் .

சரி    அவசர  காலச்சூழலுக்கு   வருவோம் .
பணிமுடக்கும் ஏதோ  காரணத்தில்  ஒருவருக்கு  வந்து  விட்டது  என்று  வைத்துக்  கொள்வோம் [ touchwood  , வரக்கூடாது ].

அப்பொழுது  நம்மை  எப்படி  தயார்  செய்துக்கொள்வது .
எனக்கு 2002 இல்  ஒரு முறை வந்தது.அப்பொழுது  நான் மேற்படிப்பிற்கு  தயாராகிக்கொண்டு இருந்தேன் .அதனால்  வெளியில்  வேலை  தேடும்  பணியில்  ஈடுபடவில்லை . ஒருவேளை  மேற்படிப்பு  சரியாக  அமையாமல்  போய்விட்டு  இருந்தால்  கொஞ்சம்  சிக்கலில்  மாட்டி  இருந்து  இருந்ப்பேன் .
ஏனென்றால்  6 மாதங்கள்  நான்  வேலை  தேடாமல்  இருந்துவிட்டேன் .
வெளியே  வராமல்  முடியாமல்  போய்  இருக்காது .ஒரு  வழி  பிறந்தே  தீரும் ,உழைத்தால் .இருப்பினும் ,இப்பொழுது  யோசித்துப்பார்த்தால் , ஒரு  காப்புத்திட்டம் [ backup plan ]   வைத்து  இருந்து  இருக்கவேண்டும்  என்றுதான்  நினைக்கிறேன் .


சரி  சமீபத்தில்  2012 ஒரு  பணிமுடக்கும்  வந்த  பொழுது  எப்படி  சமாளித்தேன்  என்பதனைப் பார்ப்போம் .இதனைப்  பற்றி  நான்  வேறு  ஒரு  ப்ளாகில்  கூட  எழுதி  இருந்தேன் .
[[[
http://moongilkoodu.blogspot.com/2014/12/blog-post_30.html
அந்த  சூழலைத்  தெரிந்தக் கொள்ள  வேண்டும்  என்றால்  படிக்கலாம்!
அவசியம்  இல்லை . எப்படி  அணுகலாம்  என்று  மட்டும் பார்பதற்கு கீழே படிக்கலாம் .
]]]

சரி  நிலைமை  இப்படி  இருக்கு .சில மாதங்கள் அல்லது  ஒரு  மாதம்தான்  கொடுத்து  இருக்கிறார்கள் . என்ன  செய்ய  வேண்டும் ?

பதட்டமும்  மன  அழுத்தமும் :

பதட்டம்  வரத்தான்  செய்யும் . அதனைக்  கடந்து  போவோம் .
காரியத்தில்  தீவிரமாக  இறங்க வேண்டும் .  ஒரு அதிர்ச்சி மனநிலை   [shock  state]  முதலில்  வரும்/வரலாம்   , அதுவும்   கடந்து  போகும் . முதலில்  செய்யவேண்டியது  நம்  வட்டத்தில்  இருப்பர்வகளுக்கு [network ] தகவல்  கொடுப்பது .இதுதான்  நிலைமை  என்று  ஒரு  ஈமெயில்   தட்டி  விடவேண்டும்.முடிந்தவரை  கால்  செய்து பேசவேண்டும் .

[இதனைப்  பார்த்துச்   செய்ய  வேண்டும் . யாரிடம்  உண்மையான  காரணம்  சொல்ல  வேண்டும்  என்று  உங்களுக்கேத்   தெரியும் .]

மன  அழுத்தம்  இருக்கத்தான்  செய்யும் . ஆனால்  இதுதான்  ரொம்ப  நிதானமாக   இருக்க  வேண்டிய  நேரம். பதட்டம்  சொதப்பும் . சொல்லுவது  எளிது  என்று  நீங்கள்  சொல்வது  புரிகிறது . அதனைக்  கடந்து வந்தவன்  என்கின்றதால்  அனுபவத்தில்தான் சொல்கிறேன் .

நாம்  பதட்டப்பட்டால்  வீட்டில்  உள்ளவர்கள்  ரொம்ப  பயந்து  விடுவார்கள் .
ஒன்றும்  ஆகிவிடவில்லை  , இதை விட  நல்ல  இடத்துக்கு  போகவேண்டும்  என்று மனதினுள்  ஒரு  சூளுரை  எடுத்துக்கொள்ள  வேண்டும் .
நெருங்கிய  நண்பரிடம் மனதில்  இருப்பதை  கொட்டிவிட்டு , காரியத்தில்  இறங்க  வேண்டும்.இனி  சுய  அனுதாபம்  கைகொடுக்காது .போரில்  உள்ளோம்  நாம் .

"linkedin " போன்ற ஒரு  சோசியல்  நெட்வொர்கிங்  சைட்  [ social  networking  site ] எல்லோரையும்  தொடர்பு  கொள்ள  சிறந்த  வழி  .[ இது  என்னுடைய  கருத்து  மட்டுமே  , நான்  விளம்பரப்  படுத்தவில்லை  , தெரிந்ததைச்   சொல்கிறேன் , வேறு  இணையதளங்களும் இருக்கலாம்  ] நண்பர்[ கல்லூரியோ   அலுவலகமோ , பள்ளியோ உங்களால்  முடிந்தவரை ] ,எல்லோருடனும்  தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள  வேண்டும்,பழைய  அலுவலகங்களையும் சேர்த்து  தான் .
நண்பர்  அவர்நண்பர்  அவரின்  நண்பர்  இப்படி  பல  தளத்தில்  "linkedin" மூலமாக  தொடர்பு  கொள்ள  முடியும்  என்பதை  நாம்  அறிந்ததே .
பெரும்பாலும்  அவ்வப்பொழுது "linedkin  profile" தனை  மேம்படுத்தி  செய்து  வருதல்  முக்கியம் . குறிப்பாக  ஒரு  அலுவலகம்  விட்டு வேறு  இடத்திற்கு  மாறும்  பொழுது பழைய அலுவலக  நண்பர்களை  தொடர்பில்  கொண்டுவந்து  வைத்திருக்க  வேண்டும் .

ரெசுமே  [Resume] மற்றும் "Linkedin  Profile "  இரண்டும்  சரிப்பட அப்டேட்  செய்து  இருக்க வேண்டும்.இதைத்  தவிர  நிறைய  "job  portals " இருக்கிறது .  பார்த்துச்  செய்து  கொள்ளுங்கள் .நாம்  முக்கியமான  விஷயத்திற்கு  வருவோம்.

"Resume  updation " அவசர  காலத்தில்  செய்வதை  விட , மாதா  மாதம்  செய்வது  நல்லது.அதாவது  அவ்வப்பொழுது  ஏதேனும் புதிதாக  செய்தாலோ  , அல்லது  தகுதியுடைய  வேலை  செய்து  இருந்தாலோ , புது  ப்ராஜெக்ட் செய்து  இருந்தாலோ அதனை  ரெசுமேவில்  போட்டுக்  கொள்ள வேண்டும்.நினைவில்  மங்காமல்  இருக்கும்  பொழுதே  அதனை ரெசுமேவில் ஏற்றிவிட்டால்  நன்றாகவும்  வரும்.

அப்படி  இல்லையென்றால்  கூட  , ரெசுமே   தயார்  செய்வதற்கு  நேரம்  எடுத்துக்  கொள்ளுங்கள் . இது  ரொம்ப  ரொம்ப  முக்கியம் .
உங்களை நேர்முகத்  தேர்விற்கு  அழைக்கப்  போகும்  முதல்  அஸ்திரம்  இதுத்தான் . அப்பொழுது  அதனை எவ்வளவு  வீரியமாக  அதனை  எய்திட  வேண்டும்  என்று  சொல்லித்  தெரியவேண்டியதில்லை .

ஒரு  பட்டியல்  போட வேண்டும்  ,முன்பு  செய்த  ப்ராஜக்ட்ஸ் என்னவெல்லாம்  இருக்கிறது  , அதில்  எந்தக்  குறிப்பிட்ட  பகுதி  சிறப்பானதாகப் பார்க்கப்படும்   என்று . அதாவது  தற்போதைய  மார்கெட்டிற்கு  என்ன  தேவை  என்று  ஒரு  அலசு  அலசிவிட்டு  , அந்த  தேவைக்கு  ஏற்ப  நீங்கள்  செய்துள்ள  வேலைகளை  சிறப்பம்சப்படுத்தி  [highlight ]   எழுதுங்கள் .

ரொம்ப  நீளமான  ரெசுமே   வேண்டாம் என்றுதான்  சொல்லுவேன் .
கச்சிதமாக  இருக்க வேண்டும்  , ஆனால்  உங்கள்   திறன்கள்         [ skill  sets]  அனைத்தும் நன்றாக   பார்வைக்கு  வைக்கப்பட்டு [  showcase ]  இருக்க  வேண்டும்.நண்பர்கள்  உதவி கேட்டு  ஒரு  முறைக்கு  பல  முறை  சரிபார்த்து விட்டு பின்பு  ரெசுமே  அனுப்பி   வையுங்கள் .

சுருங்கச்  சொல்வதென்றால் , உங்கள்  ரெசுமே  பார்க்க நிறுவன  மேலாளருக்கு  ரொம்ப  நேரம்  இருக்காது .
அந்தக்  குறுகிய   காலத்தினுள் அவர் கவனம்  உங்கள்  பக்கம்  திரும்ப  வேண்டும் . அதற்கு  ஏற்றவாறு  நச்சுன்னு  எழுதுங்கள் !

நெட்வொர்க் :

மேற்கூறிய   தொடர்பு  வட்டம்   [நெட்வொர்க் ] மூலமாக  ரெசுமே அனுப்பி  வைப்போம்  முதலில் .இதில்  நிறைய  லாபங்கள்  இருக்கிறது .
வேலைக்கு  கூப்பிடும்  நிறுவனத்திற்கு  இது  போல  , நூற்றுக்கணக்கான  , அல்லது  ஆயிரக்கணக்கான  ரெசுமேக்கள்    கூட  வரலாம் .

அவர்களிடம்  அவர்கள்  வேலைக்கு  மத்தியில்  யாரைக்  கூப்பிட  என்ற  குழப்பம்   வரும் . அவர்கள்  குழுவினில்   இருப்பவர்  ஒருவர்  மூலமாக  அனுப்பப் பட்டால் , அவர்கள்  அனுப்பியரை  நாடி  , நம்மைப்  பற்றி  தெரிந்துக்  கொண்டு  [ reference ] சீக்கிரம்  கூப்பிட  பன்மடங்கு  வாய்ப்பு   உண்டு .
நிறுவங்களின்   ஆட்கள்  எடுக்கப்பட்ட  சதவிகிதம் [ hiring  ratio] பார்த்தீர்களானால்  , 30% மேல்  இப்படி " reference " மூலமாக  வந்த   நபர்களாகத்தான் இருப்பர் பெரும்பாலும் .
தயக்கம்  விட்டு  , நம்  வட்டத்தில்  இருக்கும்  நபர்கள்  மூலமாக  ரெசுமே  அனுப்பி  வையுங்கள் [ இது  முதல்  கட்டம் மட்டுமே  , அதன்  பிறகு
மற்ற  வழிகளில்  தொடருங்கள் ]

நேர்முகத்  தேர்வு  மட்டும்  அன்றி  , ஒரு  நிறுவனத்தைப்  பற்றி  குறிப்பாக
அந்த  குழுவின்   செயல்பாடு  பற்றி  அங்கே  வேலை பார்ப்பவர்தான்  நன்றாக  அறிந்து  இருப்பார்கள் . என்ன  மாதிரி  வேலை  , என்னக்   கற்றுக்கொள்ளலாம்  , எப்படிப்  பட்ட  வேலை  அழுத்தம்  இருக்கும்  , பதவி உயர்வு  எப்படி  இருக்கும்  ,   ஆட்குறைப்பு  அடிக்கடி  நடக்குமா  போன்ற  முக்கியமான காரணிகள்  தெரிந்துக்  கொள்ள  உதவும் .

"REFERENCE IS THE BEST MEANS TO APPROACH A COMPANY"

" recruiters " இன்  துணையும்  ரொம்ப  முக்கியம் .
நல்ல " recruiters"  உடன்  தொடர்பு  வைத்துக் கொள்ளுங்கள் , தேவையென்றால்  மட்டும்  தொடர்பு  கொள்ளமால்  ,  அவர்களுடன்  அவ்வப்பொழுது  தொடர்பில்  இருங்கள் . மார்க்கெட்  நிலைமைதனை  அவர்கள்  நன்று  அறிவர் .
நம்முடைய  திறமைக்கு   வெளியே  நல்ல  ஒரு  பொருத்தம்   இருந்தால்  அவர்கள்  தகவல்  சொல்லுவார்கள் .

ரெசுமே  அனுப்பும்  வேலை  ஒரு  பக்கம்  நடந்துக்  கொண்டு  இருக்கட்டும் .
தொலை பேசி  அழைப்புகள்  மெதுவாக  வரத்தொடங்கும் .
இந்த  இடைப்பட்ட  காலம்   ரொம்ப  முக்கியம் .அறிவைக்  கூர்மையாகவும்  மனதை திடமாகவும் வைத்து  இருக்க  வேண்டிய  நேரம்  இதுதான் .

நேர்முகத்  தேர்வு :

நிறையப்  படிக்க  வேண்டும் .
குறிப்பாக  கீழ்வருவனவற்றை சொல்வேன்  ,

1)   முதல்  கட்டத்  தேர்வில்   , என்ன  வகையான  திறமை  உள்ளது [profile ] , அவர்களுக்கு  அது  பொருந்துமா  என்று  பார்ப்பார்கள்  பெரும்பாலும் .தொலைபேசி  அல்லது  நேர்காணல்  நடக்கும்  முன்  அவர்கள்  தேவையினை  நன்றாக  ஆராய்ந்துக்  கொள்ளுங்கள் . அவர்களுடன்  பேசும்பொழுது
அவர்கள்  தேவை  அறிந்து  பதில்  அளிக்கவும் . அவர்கள்  தேவை  சார்ந்த  வேலை  என்ன  செய்துள்ளீர்களோ அதனைக்   கோர்வையாகச்   சொல்லவும்.

இதற்குத்  முன்  கூட்டியே  தயாராகுவது  முக்கியம்  . அவர்கள்  கேட்ட  பிறகு இதனை  யோசிக்கக்  கூடாது. ஒரு  நோட்டுப்  புத்தகம்  எடுத்துக்கொண்டு  , அந்த  ப்ராஜக்ட்டின்  சிறப்பம்சங்கள்  , உங்கள்  பங்கு   என்ன  , என்ன  மாதிரியான பிரெச்சனைகள்  வந்தன  , அதனை  எப்படி  அணுகினீர்கள் என்று  குறித்து  வைத்துக்  கொள்ளுங்கள்   ,இது  மிகவும்   முக்கியம் .
நேர்முகத்  தேர்வு  செய்பவர்களின் மனதில்  இவன்  நமக்கு  சரிப்பட்டு  வருவான்  என்ற  ஆழ்ந்த  தீர்மானத்தை  ஏற்படுத்த  வேண்டும் .
குறிப்பாக  அவர்கள் ஆர்வம்  குறையாமல் ,   இன்னும் சொல்லப்  போனால்  , அவர்கள்  நம்மிடமிருந்து  அந்த  நேர்முகத்  தேர்வில்  ஏதேனும்  கற்றுக்கொண்டு  போகும்  அளவில்  ஆழமான  பதிலாக  இருக்க  வேண்டும் .
எப்படிப் பட்ட  கேள்விகள்  வரும்  என்ற  ஒரு  பட்டியல்  தயார்  செய்ய  வேண்டும்  , எப்படி  அணுகலாம்  என்று  முன்கூட்டி  மனதில்  பல  முறை   ஓட்டிப்  பார்க்க  வேண்டும் . இந்த  பயிற்சிதான்   உங்கள்  நேர்முகத்  தேர்வில்  பதட்டத்தைக் குறைக்கும் . இவ்வளவுதானே  நாம்  இதனை  ஏற்கனவே  பார்த்தாகி விட்டோமே   என்று  தானாகவே பதட்டம்  அடங்கும்  , தைரியம்  கூடும் , கம்பீரமாக  பதில்  அளிப்போம் .

2) அனுபவம்  சார்ந்தக்  கேள்விகள்  ஒரு  பக்கம்  கேட்கப்  பட்டாலும்  ,
உங்கள்  கல்லூரியில்  படித்த  கேள்விகளோ  , அல்லது  வெகு  அடிப்படைக்  கேள்விகளும்  கேட்கப்படும்  ஏன்  அப்படி  கேட்கிறார்கள்  என்று  எல்லாம்  சொல்லிக்கொண்டு  இருக்க  முடியாது . அடிப்படையில்   ரொம்ப  திடமாக  இருக்க  வேண்டும்  என்று  நம்புவார்கள்  , உண்மைதான் .
சில கேள்விகள்  அங்கே  தொடங்கி  ஆழமாகப்   போகும் .
முக்கியமான  கோணம்  ஒன்று  உள்ளது . நாம்  செய்யும்  வேலைதனை  சும்மா  மெனக்கெட்டு  செய்கிறோமா  அல்லது  , அதன்  பின்னணி  அறிந்து
ஆழமாக  யோசித்துச்  செய்கிறோமா என்று  தெரிந்துக்  கொள்ளும்  ஒரு  கேள்வியாகத்தான் அதனை  நான்  பார்ப்பேன் . வேறு  வகையான  பிரச்சனை  வரும்  பொழுது  இந்த  அடிப்படை அறிவிலிருந்து   வேறு கோணத்தில்  சிந்திக்கும்  அறிவு  [ lateral  thinking ]   தொடங்கிறது  என்று  நான்  நம்புகிறேன் .ஆதலால்  அடிப்படைக்  கோட்பாடுகளில் பலமாக  இருங்கள் .
இதனை  புதுப்பித்துப் [refresh]   போவதற்கு  ரொம்ப  நாட்கள்  ஆகாது , ஆனால்  ரொம்ப  முக்கியம் .

3)  ஒரு  பாய்வுப்படம் [flowchart ] வரைந்துக்  கொள்ளுங்கள் .
உங்கள்  துறை  சார்ந்து  உங்களுக்கு  என்ன  என்ன கிளைத்துறைகள்  இருக்கிறதென்று , அதில்  என்னவெல்லாம்   கேள்வி வரும்  என்றும்.
அதற்கு நீங்கள் பதில்  சொன்னால்  , எப்படி எல்லாம்   அதிலிருந்து   இன்னும் ஆழமாக  கேட்கப்படலாம்  என்று  யோசியுங்கள்  , உங்களுக்குத்  நன்றாகத்  தெரிந்த  தொழில் நுட்ப  வார்த்தைகளை    பிரயோகப்படுத்துங்கள் .
மேம்போக்காக ஒன்றைச்  சொல்லி அதிலிருந்து  கிளைக்  கேள்விகள்  கேட்கப்பட்டு  மாட்டிக் கொள்ள  வேண்டாம் .
இதனை  தவிர்க்க  நிறைய  படிக்க  வேண்டும் .
முன்பே  சொன்ன  புத்தியளவில்   தயாராக  இருக்கவேண்டும் .[  mental  preparation]

4) ஒரு  கருத்துப்படிவம்  கேட்கப்பட்டால்  முடிந்த  வரை  ஒரு  படம்  வரைந்து  அதனை    விளக்க  வேண்டும்  , அல்லது  நாம்  செய்த  திட்டத்தில்  [ப்ராஜக்ட்டில்] உள்ள  ஒரு  உதாரணத்தை  சொல்லி  விளக்க  வேண்டும் . இன்னும்  சொல்லப்போனால்  , ஒருவருக்கு  அதனைச்  சொல்லிக்கொடுப்பதென்றால்   எப்படி  சொல்வோமோ  அந்த  மனநிலை  வைத்துக்  கொண்டால்  , பதட்டம்  குறையும் .
நேர்முகத்தேர்வாளரின்  மனதைப்  படிக்க  வேண்டும்  , விடை  சொல்லும்  பொழுது  அவர்கது   எதிர்வினை மற்றும்  உடல்  மொழி [ reaction  and  body language ] பார்த்து அதற்கேற்றார்  போல  பதில்  சொல்ல  வேண்டும்  . அழகாக  கோர்வையாக  ரொம்ப  நீட்டிக்கவும்  அல்லாமல்  சொன்னால்  நல்லது . அதற்கு  மேல்  தேவைப்  பட்டால்  அவரே  கேட்ப்பார் . ரொம்ப  சுருங்கவும்  கூற  வேண்டாம் .

ADAPT  yourselves  to  the  situation and  improvise .

நேர்முகத்  தேர்விற்குபின்

பதில்  வர  நேரம்  எடுக்கலாம் , நல்ல  செய்தியும்  வரும்  , வரமாலும்  போகலாம் . எனக்கும்  நடந்து  இருக்கிறது .
மனம்  தளராமல்  செய்த  தவறுகளை  அலசி , அதற்கு  விடை  தெரிந்துக்  கொண்டு  இன்னும்  தீவிரமாக  படிக்க  வேண்டும்  .
என்னுடைய   அனுபவத்தில்  , அடுத்த  அடுத்த  நேர்முகத்  தேர்வில்  நான்  இன்னும்  சிறப்பாக  செய்தேன்  என்றுதான்  சொல்லுவேன் .
ஒவ்வொரு   நேர்முகத்  தேர்வும்  நமக்கு கொடுக்கப்படும்   ஒரு  வாய்ப்பு மட்டும்  இல்லை  , நம்மை  மெருகேற்ற  கற்றுக்கொள்ளும்  ஒரு  சந்தர்பம்தான் , முழு  மனதுடன்  அணுகுவோம் , ஆனால்  பதட்டம்  குறைக்க  வேண்டும் .கேள்விகள்  கேட்கப் படும்  பொழுது  , மனதை  லயித்து உண்மையான  ஆர்வத்துடன்  அந்தக்  கேள்வியினை  அணுக  வேண்டும் .
ஒரு  குறிப்பிட்ட  நிறுவனத்தின்  பதிலுக்கு  மட்டும்  காத்துக் கொண்டு  இருக்காமல்  , தொடர்ந்து  தேர்வுகளில்  கலந்துக் கொண்டே  இருத்தல்  வேண்டும் . எந்த  வேலை  சரியாக  வருகிறதோ  அதனைப்  பின்னர்  முடிவு  செய்யலாம் .

பகுதி  நான்கில் நீண்ட  காலத்  திட்டத்தில்  நான்  பகுதி   இரண்டில்  விட்டதைத் தொடருவேன் .

பார்ப்போம் .
.









Sunday, December 14, 2014

படம் பார்த்த அனுபவம் :

லிங்கா  லிங்கா  லிங்கா ..எங்கு பார்த்தாலும் லிங்கா மயம்  ....இல்லை  மாயையா ??வீட்டில் , மாலில் இன்னும் எங்கே  எங்கேயோ  எல்லாம் ....லிங்கா  பார்த்த  பேச்சுக்கள் , புகைப்படங்கள் ,விமர்சனங்கள் ..

கொஞ்சம் வித்தியாசத்திற்கு படத்தின்  கதை   பற்றிய  பேசமால் , படம்  பார்த்த  அனுபவம் குறித்து  பேசலாம்  என்று  தோன்றியது..

நம்மில்  பலருக்கு வித்தியாசனமான  படம்  பார்த்த  அனுபவங்கள்  இருந்து  இருக்கும் ....

தியேட்டருக்கு  போகும்  அனுபவமாக  இருக்கலாம்  , சென்ற பின்  படம்  ஆரம்பிக்கும்  முன்  இருக்கலாம்  , அந்த  தியேட்டர்  சார்ந்து  இருக்கலாம்  , பக்கத்துக்கு  சீட்டில்  உக்காந்து  இருப்பவரால்  இருக்கலாம் ..இப்படி  பல...

எனக்குச்   சில  உண்டு ....

சில வருடங்களுக்கு முன்பு  பெங்களூருவில்  தமிழ்  படங்கள் ரிலீஸ்  ஆகாது  சில மாதங்களுக்கு ....நானும் என் நண்பன் விஜயனும்  , ஹோசூர்  செல்வோம்  படம்  பார்க்க . நம்ம  ஊரு  சாப்பாடு  ஒரு  பிடி  பிடிச்சுட்டு படமும் பார்த்துட்டு வருவோம்  விடுமுறை  நாட்களில் . படு  சிக்கனம்  வேற .
ஒரு முறை  நான்  தனியாக  சென்றேன் ....எல்லாம்  என்  நேரம் , கூடே  அவன்  இருந்தால்  காப்பாத்தி  இருப்பான் போலும் .

என்ன படம்  , எந்த  நடிகர்  என்று  வேண்டாமே.....
கூட்டம்னா  அப்படி  ஒரு  கூட்டம் .......தியேட்டர்  வெளியே  பிதிங்குக்கொண்டு  இருந்தது....திரும்பி  போகலாம்னா  அவ்ளோதூரம்  வந்தாயிற்று ....
நிறைய  பேர்  நின்றுக்கொண்டு  இருக்கையில் , படம்  ஆரம்பிக்கும்  நேரம்  ஆகிவிட்டது....ஆனால்  கவுன்டடர்  அருகில்  சிலர்தான்  நின்றனர் ...என்னடா  இது  என்று  போய்  நின்று  பார்ப்போமே  என்று போய்  நின்றேன் ..ஒரு வேளை  A  C  டிக்கெட்  வாங்க  அவ்ளோ  கூட்டம்  இல்லைன்னு நினைப்பு வேற ....உள்குத்து  வேறன்னு  அப்புறம்  தான்  தெரிந்தது ......டிக்கெட்  கவுன்டரில்  டிக்கெட்  கொடுக்கும்  போது  என்னத்தையோ  சொல்லிக்கொடுத்தார் ...சத்தத்தில்  சரியாக  கேட்கவில்லை ...சரியென்று  உள்ளே  போனால்  , படம்  ஆரம்பித்து......பாட்டு  வேற  ஓடிக்கொண்டு  இருந்தது ......நானும்  சுத்தி  முதி  இருட்டில்  தேடுகிறேன்  , முன்  ரோவில்  கூட  சீட்  காலி  இல்லை..
எதுக்கு இவன்  டிக்கெட்டை  கொடுத்தான்  என்று  முழிக்கையில்  , சற்று  இருட்டு  விலகி  , நிலைமை  புலப்பட்டது...

அங்கே ஒரு  100 பேருக்கு மேல எல்லா இடத்திலும்  unreseved  compartment போல  நின்றிக்கொண்டு  படம்  பார்த்தனர் ....இதைத்தான்  டிக்கெட்  கொடுப்பவர்  சொல்லி இருப்பார்  போல ...
தலைக்கு  மேல  வெள்ளம்  போன கதையா அந்தக்கொடுமைய  செவரோடு சாய்ந்து நின்று  பார்த்து  தொலைத்தேன் ......ஏன்  அப்படி  செய்தேன்  என்று  இப்போ யோசித்து  பாத்தாலும்  பதில்  கிடைக்கவில்லை .....சும்மா வீடு  திரும்பினால் , அவ்வளவு  தூரம் வந்து போன  அர்த்தம் இல்லையென்று  ஆகிவிடும்  என்றா? தெரியவில்லை...

சரி  படம் என்னன்னு  கேப்பது தெரியுது ....இன்டர்வெல்லில்  முட்டுக்கு   kerchief  கட்டிய  கும்பல்  அலைந்து க்கொண்டு இருந்தது ..எனக்கு  அவ்வளுவுதான்  நியாபகம்!

அடுத்த  ஒன்று  வித்தியாசமான  அனுபவம் ....இனி அது  போல  கிடைக்குமா  என்று  தெரியவில்லை.சின்ன  வயதில்  வத்தலகுண்டில் ஆச்சி  வீட்டுக்கு  கோடை  விடுமுறை  நாட்களில்  செல்லும்பொழுது  , கோவில்  திருவிழாவும்  இருக்கும் ..

தெருவை  கொஞ்சம்  வழிமறித்து   , பெரிய  மூங்கில் கம்பு  நட்டு  , வெள்ளை  திரையில்  இரவு  எல்லாம்  மெல்லிய  குளிரில்  படம்  பார்த்த  காட்சிகள் ....
ஊர்  மக்கள்  கூடி  தொடர்ந்து படம்  ஓடிக்கொண்டு  இருக்கும் ...
இன்றைக்கும் தூத்துக்குடி  SPIC  nagar  போன்ற  கூட்டு குடியமைப்புகளில்   இது  போன்ற  காட்சிகள்  உண்டு  எனக்கேள்வி .

இது போல  வேறு சில  அனுபவங்களும்  உண்டு ....
இன்னொரு  முறை  வத்தலகுண்டு  செல்லுகையில் , நடு  இரவு பஸ்  கிடைக்கும்  வரை  , பழனியில்  "மேட்டுக்குடி " எதிர்பாராமல் இரவுக்   காட்சி பார்த்தது, ..

பின்பு எர்ணாகுளத்தில்  சித்தி  வீட்டு  அருகில்   " அழகன் " பார்த்து  முடித்து  , அடுத்து  வீட்டுக்கு  போய்  என்ன  செய்யப்போகிறோம்  என்று  நினைத்து  , அங்கேயே   pop  corn  சாப்பிட்டு  , அடுத்த  காட்சியில்  ஓடிய  "உள்ளடக்கம் " என்ற  மலையாள  படத்தையும்  பார்த்த  அனுபவம் ......

இப்படி  இன்னும்  ...
கடைசியாக  ஒன்று .

G  C  T இல்  படிக்கும்  பொழுது  எங்கள்  ஆடிடோரியத்தில்  இது போன்ற கல்லூரி  நண்பர்கள்  உட்கார்ந்து  படம்  பார்த்த  அனுபவமும்  உண்டு .
" கோபாலா  கோபாலா " என்ற  பாண்டியராஜனின் எசகு  பிசகான   வசனம்  உடைய  படம்  ஒன்று  போடப்பட்டு  , பெண்கள்  பெரும்பாலோர்   இடைவேளைக்குள்  காலி  செய்தது  நியாபகம்  இருக்கிறது .
நிஜமாகவே  போக  வேண்டும்  என்று  தோன்றியதா  இல்லை  , படம்  போடுகின்றனரா  என்ற  கேள்வி  எழுந்தது  அப்பொழுது .இன்று  வரை  யாரிடம்  கேட்டதில்லை!. ஏன்னா , கொஞ்சம்  கொஞ்சமாக  கூட்டம்  கலைந்தது . சிலர் கிளம்பி  விட்டனர் முதலில்  , அப்பறம்  மற்றவர்கள் கிளம்புவதற்காக  சிலர்  கிளம்பினார்கள்  போல ...

இந்த  காலத்தில்  எங்கே   இரட்டை அர்த்த  வசனங்கள் ...நேரடியாக  ஒரே  அர்த்தத்தில்  தானே  பேசுகின்றனர்!

டூரிங்  டாக்கீஸில்  பார்க்கும்  ஆசை மட்டும் இன்னும்  நிறைவேற  இல்லை....
மண்  குமித்து  கொட்டகையில்  உட்கார்ந்து  பார்க்கும்  அனுபவம் ...அப்படி  தியேட்டர்கள்  எத்தனை  உள்ளது  என்று  தெரியவில்லை இன்றைக்கு .
தியேட்டர்கள்  எல்லாம்  வணிக வளாகங்களாகவும்  , கல்யாண  மண்டபங்களாகவும்  மாறி  வருகின்றன . என்  நண்பன்  ஒருவன்  குடும்பமும்  ரொம்ப  வருடங்களாக  விருது நகரில்  வைத்து  இருந்த  தியேட்டரை  விற்று  விட்டதாக  சொன்னான்   சில வருடங்கள்  முன் . மகன்கள்  இருவர்  படிப்பிற்கும்  , அவர்களை செட்டில்  செய்வதற்கும்  அப்பா  செய்த  தியாகம் .
மகன்கள்  இருவரும்  நன்றாக  இருக்கின்றனர்  இப்பொழுது .

ஆனால் , ஒவ்வொரு  முறை  பார்க்கும்  போதும்  , "என்ன படம்  இப்பொழுது ?" என்று  கேட்கும்  சந்தர்ப்பம்  இல்லை  இப்பொழுது  எனக்கு...அந்த  ஊரின்  ஒரு அடையாளம்தானே  அந்த  தியேட்டரும் ...






.

Sunday, December 7, 2014

உங்களுக்கு ஊருக்கு போக பஸ் கிடைக்கா விட்டால் என்ன செய்வீர்கள் ???

உங்களுக்கு தீபாவளிக்கு ஊருக்கு  போக வேண்டும் என உள்ளது .
வேலை காரணமாக கடைசி  நாள் வரை  சரியாக  முடிவு  எடுக்க   முடியாமல் போகிறது .பின்பு  முன்தினம் முடிவு  செய்து ஊருக்கு போக  ஆசைப்படுகிறீர்கள் .ஆனால் எதிர்பார்த்தது போலவே டிக்கெட் சிரமம் ஆகிறது .சிரமத்தையும் தாண்டி கிடைக்காமலே  போகிறது .


நண்பர்களும்  இருவர் உங்களுடனே இதே  நிலைமையில் .
மிஞ்சி  மிஞ்சி  போனால் என்ன  செய்து  இருப்போம்
ஒரு புது  படம் பார்த்துட்டு  நல்லா  சாப்டு   தூங்கி இருப்போம்.

ஆனால் ,இந்த  நிகழ்வு சிலரின் வாழ்க்கையினை புரட்டிப்போட்டது .
எத்தனையோ சின்ன  சின்ன பஸ்  கம்பனிகள் இருக்குமே ,இந்த brokers தானே எல்லாத்தையும் பூந்து ரேட் ஏற்றி பிரெச்சனை செய்கிறார்கள் .

KPN போன்ற [போன்று  தான் !]  பெரிய  கம்பனிகள் தான் தனக்கென்ற website வைத்து  நடதுக்கின்றன .அப்போ  சின்ன  சின்ன  பஸ்  கம்பெனியில் ஒன்றோ  இரண்டோ  பஸ்  வைத்து  இருப்பவர்கள் என்ன  செய்கின்றனர் என்ற  கேள்வி
அவர்களுக்கு எழுந்தது .

இந்த  கேள்விக்கு விடைதான்  RED  BUS .இன்று  ஆன்லைனில் பஸ்  புக்கிங் வசதி  சின்ன  சின்ன  கம்பெனிகளுக்கும் உண்டு  என்பதும்  மட்டும்  அல்லாமல் , நம்மை போன்ற  பயணிகளுக்கு உக்கார்ந்த  இடத்தில்  ப்ரோகர்கள் இன்றி சரியான  நிர்ணயித்த  விலையில் பஸ்  டிக்கெட்கள்  கிடைக்கச்செய்த பெருமை  , ஆந்திராவைச் [ தெலுங்கானவோ!] சேர்ந்த
பனிந்திர  சாமா  , சுதாகர் , சரண்  என்ற மூன்று  நண்பர்களைச்  சேரும் .

மேற்சொன்ன  சம்பவம்  அவர்கள் வாழ்வில் நடந்தது .
இந்த  redbus ஐ  ஒரு  பெரிய  நிறுவனம் 600-700 கோடிகளுக்கு  acquire செய்துள்ளது  !  இப்படி  தீபாவளி டிக்கெட் கிடைக்காமல் போனது அவர்களுக்கு முன் வந்த  பிரெச்சனை .அதை படியாக மாற்றி  வாழ்வில் மேலே சென்று  விட்டனர் .

நமக்கும் வாழ்வில் இது  போன்று  சந்தர்ப்பங்கள்  வந்து  இருக்கும் .
யோசித்துப்பாருங்கள் .

எனக்கும் இப்படி ஒரு  சூழ்நிலை வந்தது .நான்  அதே  போன்ற ஒரு  தீபாவளிக்கு  சென்னை வந்தேன் .இரவு  முழுவதும் unreserved compartment இல் toilet வெளியே  நின்று  கொண்டே  வந்தேன்.முதுகு  வலியும்  தூக்கமின்மையும்  சேர்ந்து  படுத்தி  எடுத்தும் கூட எனக்கு  அது தோன்ற  வில்லை! சின்ன idea  தான்  , இறங்கி  செய்ய  மனமும்  தைரியமும் வேண்டும் .

இவர்கள்  நல்ல  சம்பளத்திற்கு  Texas  instruments  கம்பெனியில்    வேலை பார்த்தவர்கள் .முதலில்  பகுதி  நேரமாக  தொடங்கி  பின்பு  , என்னதான்  ஆகுதுன்னு  பார்த்துடுவோம் என்று  இறங்கி  ஜெயிச்சு  இருக்காங்க .


 உண்மையான ஒரு  chance  உம்   என்னை  தேடி வந்தது ஒரு முறை.
ஒரு  contact  என்னை  நம்பி  consulting  project கொடுப்பதாக  சொன்னார்கள் . நல்ல  கம்பெனிதான் .என நண்பன்  ஒருவனும்  இறங்கலாம்னு  என்றுதான்  சொன்னான் .கைமேல காசு , ஆனா  ஒரு வருடம்  கழித்து  guarantee  இல்லை  ,சூழ்நிலை  பொருத்து  அடுத்தது என்றார்கள் .
அந்த  நேரம் பார்த்து  என்னுடைய  கம்பெனி  வெளி  நாடு  ப்ராஜெக்ட் அனுப்புகிறேன்  என்று  சொல்லியது  .  entrepreneurship  ஆ  இல்லை, "safe  bet " ஆ  என்று பார்த்த  பொழுது  , நான்  இரண்டாவதை  எடுத்து  விட்டேன் .


இந்த guarantee  எதிர்பார்த்து  தான்  நாம் முன்னேரத்தயங்குகிறோம் பெரும்பாலும் .

முதலாவதை எடுத்து  இருந்தால் எப்படி இருக்கும் என்று  நிறைய  நாள்  எண்ணியதுண்டு .

வாழ்கை இப்படி சிக்ஸர் அடிக்க சான்ஸ் கொடுத்து பந்துகளை வீசிக்கொண்டு கொண்டு  தான் இருக்கிறது  .நாம் எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் .
பீல்டர்களையும் நிறுத்தத்தான் செய்யும் ,ஈசியாக கொடுத்து  விடுமா என்ன.
மட்டய  சுழற்றி சிக்ஸர் அடிக்க நாம  தான் இறங்கி  அடிக்க வேண்டும்  தோனி  போல .

எப்படி முடிவு  எடுக்க என்ற குழப்பம்தான் நமக்கு எதிரி .சிக்ஸர்  அடிக்க முயற்சித்து  out  ஆவோமா  இல்லை பிரெச்சனை இல்லாமல் தரையோட  ஒரு four  அல்லது doubles  தட்டிட்டு இருந்துடுவோம்னு தான் பெரும்பாலும்  இருந்து  விடுகிறோம் .

சொல்ல வந்த காதல் எப்படி   டப்ப்புன்னு  சொல்லிடணும்ரதைப்  போல,இது போன்ற  முடிவுகளும் எடுக்கப்படனும் போல!


இன்னும் பேசுவோம் .