பிஞ்சிலே பழுக்க வைக்க வேண்டாமே !
டல்லாசில் இரண்டு வருடம் முன் , ஒரு குழந்தைகள் பொம்மைக்கடையில் என் நண்பர் மகளுக்காக சில பொம்மைகள் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
" I KNOW YOU CAN AFFORD MUM, ITS ONLY 30 dollars " என்று ஒரு குரல் கேட்டது.
திரும்பிப்பார்த்தால் , ஒரு நான்கு வயது மதிக்கத்தக்க தங்க நிறத்தில் நெற்றி வரை முடியுடன் [ முஷ்ரூம் கட் !] செய்த ஒரு அமெரிக்க சிறுவன் இதைச்சொன்னான் என்றுத் தெரியவந்தது . அவன் அம்மா
" NO sweety, your budget is 20 dollars. You need to chose within the budget"
என்று சொல்கிறார்கள் . அந்த நோ கொஞ்சம் அழுத்தமாகவே வந்தது .
நாம் எங்கு இருக்கிறோம் , என்ன நடக்கிறது இங்கே என்று சரியாக விளங்கிக்கொள்ள சற்று நேரம் பிடித்தது எனக்கு .
அந்தச் சிறுவனின் கேள்வி ஏற்படுத்திய ஷாக் தான் வேறு என்ன .
எதையும் வாங்காமல் அந்த இரண்டாவது மாடியிலுருந்து எதையோ யோசித்தவாறே , மறுபடியும் அந்த அம்மா பையனை ஒரு முறை பார்த்து விட்டு இறங்கி வந்தேன் தரைக்கு . நிஜமாகவே தரைக்கு வர இன்னும் கொஞ்சம் நேரம் ஆனது வேற விஷயம் .மனம் அங்கேயேதான் சுழன்றுக்கொண்டு இருந்து பம்பரம் போல் .
அந்த வயதில் டி நகர் , ரங்கநாதன் தெருவில் நடு ரோட்டில் உருண்டு புரண்டு , லாலா வேண்டும் [ என் அப்போதைய மொழியில் கார் ] என்று அழுத நாட்களை அம்மா சொன்னதுண்டு . அந்தப்பிம்பம் ஓடி மறைந்தது மனதில் , எப்படி இருந்து இருக்கும் என்று .
இங்கே விஷயத்திற்கு வருவோம்.
அவனுடைய அம்மா அவனுக்கு மிகவும் இளம் வயதிலயே பொருளாதாரமும் , பணத்தை கையாளும் விதத்தையும் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பது எனக்கு விளங்காமல் இல்லை.
ஒரு பொருளை வாங்கித்தர முடியாமல் போனால் கூட , அவனுக்கு வீட்டின் பொருளாதார சூழ்நிலை தெரிந்து வளர வேண்டும் , ஒரு அளவிற்கு மேல் ஆசைப்பட கூடாது போன்ற விஷயங்களை சொல்லித்தந்துக் கொண்டு இருக்கிறார் . நண்பர்களிடம் வியப்புடன் இதைபற்றி பேசியும் விவாதமும் செய்தேன். இவன் நாளை குடும்ப சூழ்நிலை தெரிந்த , பணத்தை எப்படி கையாள வேண்டும் என்கிற பக்குவம் நிறைந்த ஒரு நல்ல இளைஞனாக வருவான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது ..
அவன் கேட்ட கேள்வியின் ஆழம் வேற தளத்தில் இருந்தது தான் நான் இதை அவ்வளவு யோசிக்கக் காரணம்.
" ஏன் வாங்கித்தர மாட்டேன்குற அம்மா ?" என்பது வேற .
உன்னால் வாங்கித்தர பொருளாதாரத் தகுதி [ affordability ] இருந்தும் ஏன் வாங்கித்தர தெரியவில்லை என்கின்ற கேள்விதான் என்னைக் கவலைப்படச் செய்தது .
அவன் கேட்ட கேள்வியின் ஆழம் வேற தளத்தில் இருந்தது தான் நான் இதை அவ்வளவு யோசிக்கக் காரணம்.
" ஏன் வாங்கித்தர மாட்டேன்குற அம்மா ?" என்பது வேற .
உன்னால் வாங்கித்தர பொருளாதாரத் தகுதி [ affordability ] இருந்தும் ஏன் வாங்கித்தர தெரியவில்லை என்கின்ற கேள்விதான் என்னைக் கவலைப்படச் செய்தது .
ஆனால் அவன் வயதில் என்னைப் போல் தரையில்ப்புரண்டு அழுவதையே ஒரு அப்பாவாக நான் விரும்புவேன் .
அந்த நேரம் கோவம் வரலாம் , ஆனால் நாளை இதைப்பற்றி என் அம்மா என்னிடமும் , என் மனைவிடமும் , என் நண்பர்களிடமும் சொல்லிச் சிரித்திட ஒரு நிகழ்வு இருக்காதே . இதைக்காட்டிலும் அவன் தன குழந்தைத்தனத்தை இத்தனை இளம் வயதில் ஏன் இழக்க வேண்டும் .
கேட்டதை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று சொல்லவரவில்லை.
கொஞ்சம் தாச்சா காண்பித்து , ஒரு பலூனையோ ,
ஒரு சிறிய பொம்மையினை காண்பித்து , இது superman உபயோகித்த கார் போன்று ஒன்றைச் சொல்லி அவனுக்கு பிடித்த ஒன்றில் மனதை திருப்பச் செய்து , அல்லது அந்த இடத்தை காலி செய்வது தான் எனக்கு உச்சிதாமகப் பட்டது.அவர்கள் மனதை மாற்ற வேறு வழி இல்லாமலா போகும் .
அந்த அம்மா செய்த அணுகுமுறை சிறந்தது , எனக்கும் அதில் பாடம் உண்டு , ஒரு விதத்தில் அதனை நான் பயன் படுத்திக்கொள்வேன் , ஆனால் 3-4 வயதில் அல்ல. இந்த ஒரு நிகழ்வு மட்டும் இல்லை நான் சொல்லவருவது , எல்லாவற்றையும் சீக்கிரமே கற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்று நினைக்கும் அவசர மனோநிலையினைத்தான் நான் யோசித்து வந்தது..
சமீபத்தில் பள்ளிகள் போட்டு படுத்தும் பாட்டில் ,தன் இரண்டாவது படிக்கும் மகன் சொன்னதாக என் நண்பர் சொன்னது , " அப்பா நான் நாம ஏன் பா பொறக்கணும் !?" இதற்கு மேல் என்ன வேண்டும் , அவர்கள் மன நிலைமையினை உள்ளே சென்றுப்பார்க்க . அவன் அம்மாவும் கூடே சேர்ந்து அவனைப் போட்டு அழுத்தி எடுக்கிறாள் , அதனால் நான் அவனை கொஞ்சம் சமநிலை பிடிக்க வெளியே கூட்டிப்போய் மறுபடியும் சிறுவனாக்கினேன் என்றுச் சொன்னார் .
சமீபத்தில் பள்ளிகள் போட்டு படுத்தும் பாட்டில் ,தன் இரண்டாவது படிக்கும் மகன் சொன்னதாக என் நண்பர் சொன்னது , " அப்பா நான் நாம ஏன் பா பொறக்கணும் !?" இதற்கு மேல் என்ன வேண்டும் , அவர்கள் மன நிலைமையினை உள்ளே சென்றுப்பார்க்க . அவன் அம்மாவும் கூடே சேர்ந்து அவனைப் போட்டு அழுத்தி எடுக்கிறாள் , அதனால் நான் அவனை கொஞ்சம் சமநிலை பிடிக்க வெளியே கூட்டிப்போய் மறுபடியும் சிறுவனாக்கினேன் என்றுச் சொன்னார் .
சின்ன சின்ன விஷயங்களில் இருக்கும் ஆனந்தத்தை அனுபவிக்கட்டும் .
மழையில் நனையட்டும் , கொஞ்சம் குளிரும் வெயிலும் பார்கட்டும் ,
மண்ணில் புரளட்டும் , மற்ற குழந்தைகளுடன் டூ சேக்கா எல்லாம் விட்டுப் பின்பு சேரட்டும் , பஞ்சு மிட்டாய் வாயில் ஒழுகத் திரியட்டும் .பொருளாதாரம் எல்லாம் பேசி அவர்களை உங்களுக்கு சமமாக பேச சிந்திக்க வைக்க வேண்டாம் அந்த வயதில் . ஒருவேளை அவர்களுக்கு வாழ்கை இவ்வளவு சிக்கலானதா என்கின்ற சலிப்பு வந்து விட வாய்ப்பு இருக்கிறது .
வாழ்வின் யதார்த்தமும் , சூழ்ச்சியும் , வெற்றியும் ,தோல்வியும் , மார்க் , career பற்றிய குழப்பங்கள் இப்படி எல்லாவற்றையும் கடக்க அவர்களுக்கு இன்னும் காலம் இருக்கிறது .. பிஞ்சில் பழுத்து விட்டார்கள் என்று சொல்லும் காலம் போய் , விதை துளிர்த்து மண்ணை எட்டிப்பார்த்து வெளியே வரும் பொழுதே பழுக்க வைக்க வேண்டாமே!
இதைச் சொல்ல நான் ஒன்றும் பெரிய குழந்தைகள் மன நிலை படித்த அப்பா டக்கர் இல்லை. ஒரு அப்பாவாக சொல்கிறேன் அவ்வளவுதான் . அந்த வயதைக் கடந்து வந்தவர்கள் தானே எல்லா அப்பாக்களும் .
இதைச் சொல்ல நான் ஒன்றும் பெரிய குழந்தைகள் மன நிலை படித்த அப்பா டக்கர் இல்லை. ஒரு அப்பாவாக சொல்கிறேன் அவ்வளவுதான் . அந்த வயதைக் கடந்து வந்தவர்கள் தானே எல்லா அப்பாக்களும் .
கொய்யாக்களை " ethylene " போட்டு சீக்கிரமாகவே பழமாக்கிட வியாபாரிகள் இருக்கின்றனர் , குழந்தைகள் பழங்கள் அல்லவே , பூக்கள் ஆயிற்றே , மலரும் போது மலர்வர் , தண்ணீர் ஊற்றுவோம் , அனால் இதழ்களை போட்டு விரித்து எடுக்கவேண்டாம் என்று சொல்கிறேன் .
No comments:
Post a Comment