நான்கு வருட டிகிரி எதற்கு??
"சும்மா அதே பழைய induction motor ஒட்டிட்டே இருக்காங்க. 50-60 வருஷமா....
எனக்கு புதுசா ஏதாவது செய்ய வேண்டும் "
இந்த பதில் என்னுடைய முதல் கம்பெனியில் கூட வேலை பார்த்த நரேன் என்ற நண்பர் தன்னுடைய " campus interview " போது electrical துறை சார்ந்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு சொன்ன பதில்.
இந்த பதிலுக்கு பிறகும் அவனை வேலையில் அமர்த்தினர் .எல்லோரும் செய்வார்களா என்று தெரியாது. ஆனால் , அவனிடம் இருந்த " ஸ்பார்க்/spark " அல்லது புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலை , நேர்முகத் தேர்வு செய்தவருக்கு பிடித்து இருந்தது ...அது பொய்யாகவில்லை .அவன் இன்றைக்கு வேறு ஒரு நிறுவனத்தில் , " Vice president " அளவிற்கு குறுகிய காலத்தில் வளர்ந்து உள்ளான் .
அவனுடைய மதிப்பெண் என்று தியாகராசா கல்லூரியில் பார்த்தால் , ரொம்பக் குறைவு தான் . ஆனால் துறை சார்ந்த நுண்ணறிவும் , ஈடுபாடும் , புதிதாக செய்யத்தூண்டும் முனைப்பும் அவனை முன்னுக்குத் தள்ளி இருக்கிறது. நம்முடைய கல்வி முறை பெரும்பாலும் மதிப்பெண் சார்ந்தே இருக்கிறது . கல்லூரியில் 90% வைத்து இருந்தால் , அது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 90% வாங்குவது கடினம் தான் , ஆனால் அதை மட்டுமே அளவுகோலாக வைக்க முடியாது .
நான் பார்த்த வரையில் +2 வில் "district toppers" ஆக வந்த பலரை பல கம்பெனிகளில் சாதாரண இடை நிலை ஊழியர்களாக இருக்கிறார்கள் , ரொம்ப வருடங்களாக . நரேன் போன்று குறைந்த மதிப்பெண்களுடன் மேல சென்றவர்கள் நிறைய .
இது போன்ற சில உதாரணங்கள் என்னை சிந்திக்க வைத்தது.
நான்கு வருட டிகிரி எதற்கு?? பரிட்சைக்கு முன்பு பெரும்பாலும் புத்தகத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளை , நியாபகம் வைத்து எழுதுகிறோம் , இதில் இன்ஜினியரிங் என்ன இருக்கிறது .
இன்ஜினியரிங் என்றால் என்னவென்று ஒரு முறை பார்த்து விடுவோம் .
விக்கிபீடியாவில் இருந்துதான் வேறு எங்கே!
"
Engineering (from Latin ingenium, meaning "cleverness" and ingeniare, meaning "to contrive, devise") is the application of scientific, economic, social, and practical knowledge in order to invent, design, build, maintain, and improve structures, machines, devices, systems, materials and processes
"
இதில் invent , design எல்லாம் நாம் எங்கே செய்கிறோம் நம் கல்லூரிப்படிப்பில் .கல்லூரி முடிந்து வந்து வேலையில் உண்டா? பார்ப்போம்.
நம்மில் பெரும்பாலோர் துறை சார்ந்த வேலை பார்ப்பது இல்லை.
EEE , ECE , Instrumentaion , Mechanical , PRODUCTION , AUTOMOBILE , BIOTECHNOLOGY , CIVIC , ARCHITECTURE இப்படி என்னென்னவோ துறையில் நான்கு வருடம் படித்துவிட்டு , கடைசியில் நம்மில் 90 சதவிகித படித்தவர்கள் வேலை பார்ப்பது கணிப்பொறி சார்ந்த IT துறையில்தான் . என்னுடைய கல்லூரியினை எடுத்துக்கொண்டால் கூட கையில் எண்ணிவிடும் அளவிற்குதான் துறை சார்ந்த வேலையில் இருக்கின்றனர் . எல்லோரும் விரும்பிச் செய்யவில்லை .
குறிப்பாக , mechanical துறை சார்ந்த என்னுடைய நெருங்கிய நண்பன் , கல்லூரியில் கணிப்பொறி துறைக்கு வேலைக்கு போவோரை கிண்டல் கூட செய்த நாள் உண்டு . அவன் இன்றைக்கு அதே software துறையில் பெரிய மேனேஜராக உள்ளான் .அவன் கல்லூரி நாட்களில் , Mechanical துறை சார்ந்து "technical papers " எழுதி , conference களில் கலந்து கொண்டதும் ,
அவன் துறை அல்லாத மற்ற துறையில் வேலை தேட வேண்டாம் என்றும் இருந்தது எனக்கு நன்றாக தெரியும் . வீட்டில் சில மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தான் , நண்பர்களும் , கூடப்பிறந்தவர்களும் வேலை போகத்தொடங்கினர் . அவனுக்கு நம்பிக்கை இருந்தது அவனுடைய துறையிலே வேலை வாங்கிடலாம் என்று . அனால் ஒரு காலத்திற்கு பிறகு சூழ்நிலை காரணமாக , பெரிய IT கம்பெனி ஒன்றில் கம்ப்யூட்டர் துறையில் வேலைக்கு சேர்ந்தான் .
அவன் interview முடிந்து வந்து , " வேலை உண்டு என்று சொல்லி இருக்கிறார்கள் " என்று சுரமே இல்லாமல் சொன்னது , அவனுடைய கனவு தகர்ந்ததின் வெளிப்பாடே . இன்றைக்கு நன்றாகத்தான் உள்ளான் .
அப்போ என்ன பிரெச்சனை என்று தானே கேட்கிறீர்கள் .! சொல்கிறேன் .
சில உதாரணங்களை பாப்போம் .
ஜப்பான் போன்ற ஒரு சிறய நாடு , TOYOTA , HONDA என்ற இரு கம்பெனிகள் மூலமாக , உலகின் , குறிப்பாக அமெரிக்காவில் ஒடும் , மூன்றில் ஒரு கார் [ தோரயமாக], இந்த இரண்டு கார் கம்பனிகளில் இருந்து தான் .அதற்கு காரணம் இருக்கிறது .நம்ம ஊரில் ஹீரோ ஹோண்டா பைக்கிற்கு முன்பு ஒரு விளம்பரம் வரும் , " FILL IT , SHUT IT , FORGET IT :.
அதாவது , பெட்ரோல் மட்டும் ஊற்றிக்கொண்டு இருங்கள் , மற்றபடி வண்டி பிரெச்சனை இன்றி ஓடிக்கொண்டு இருக்கும் என்று .
அதேதான் ஹோண்டா கார்களும் , டொயோட்டா கார்களும் . பிரெச்சனையே இன்றி ஓடும் என்பது அர்த்தம் அல்ல .
1) இன்றைக்கு அமெரிக்காவில் ஓடிக்கொண்டு இருக்கும் 10-20 வருட பழைய கார்கள் என்று பார்த்தால் அது பெரும்பாலும் , இந்த இரண்டு கம்பெனி யின் கார்கள் தான் . ஏன் என்றால் , அவர்களுடைய , " ENGINE and TRANSMISSION " அவ்வளவு சிறப்பு.
2) Maintenance செலவு குறை
3) முன்பு எல்லாம் பெட்ரோல் விலை குறித்து கவலைப்படாத அமெரிக்கர்க்கள் இன்றைக்கு mileage பற்றி யோசிக்கத்தொடங்கியுள்ளனர் .
அதிலும் மேற்சொன்ன இரண்டு கம்பெனி கார்கள் சிறந்து விளங்குகின்றது .
இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் , எவ்வளவுதான் ஆட்டோமொபைல் துறை அமெரிக்காவில் வளர்ந்தாலும் ,சிறிய நாடான ஜப்பானின் ஆட்டோமொபைல் துறை நிபுணத்துவத்தில் ஜப்பானியர்களை அடித்துக்கொள்ள முடியவில்லை . அதற்கு காரணம் அவர்களது குறிப்பிட்ட ஆட்டோமொபைல் துறை சார்ந்த ஆழ்ந்த அறிவும் , அதில் அவர்கள் வைத்து இருக்கும் தரக்கட்டுபாடும் தான் . கணிப்பொறி துறை மட்டும் அல்ல , இது போன்ற
"automobile and manufacturing"துறையில் கணிப்பொறி துறையினைக்காட்டிலும் வேலை வாய்ப்புகளும் , நாட்டின் GDP யினை கூட்டும் வாய்ப்பும் உள்ளது . இதற்கு அவர்கள் நாட்டின் கல்வித்திட்டமும் ஒரு காரணம் . எந்த துறையில் படித்தாலும் , கம்ப்யூட்டர் துறையில்தான் வேலையென்று இல்லாமல் படித்த துறையில் வேலை செய்தால் நம்மால் சிறந்த ப்ராடக்ட்ஸ் கொண்டு வர முடியும்.
வெளிநாட்டு தொழில் நுட்ப உதவி பெரிது இல்லாமல் , நம்ம நாட்டிலேயே
சொந்தமாக நடுத்தர மக்களும் கார் வாங்க கொண்டு வரப்பட்ட ஒரு முயற்சிதான் " மாருதி உத்யோக் " . ராஜீவ் காந்தி ஆட்சியில் தொடங்கப்பட்ட
இந்த கம்பெனி அன்றைய காலத்தில் 35000 ரூபாய்க்கு ஒரு கார் தயார் செய்தது . இது ஒரு நல்ல முயற்சி . பிறகு நம்மிடம் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல சிறந்த தொழில்நுட்பம் சரியாக இல்லாததால் , ஜப்பானின் , "SUZUKI " கம்பெனியுடன் பார்ட்னெர்ஷிப் வைத்துக்கொண்டது .
படிப்படியாக மாருதி என்ற பெயர் , பெயருக்கு மட்டும் இருந்துக்கொண்டு பெரும்பான்மையான கம்பெனியின் ஷேர் , சுசுகி கம்பெனிக்கு சென்றது.
அது தொடங்கின காரணம் வேற ,இப்பொழுது அது செயல்பட்டுக்கொண்டு இருக்கும் காரணம் வேற.
நம்மிடம் சுசுகி அளவிற்கு தரமான கார் இஞ்சின் /engine இல்லாதது ஒரு முக்கிய காரணம். நம்ம நாட்டிலும் mechanical /automobile துறையில் சரியான வல்லுனர்களை வளர்த்து விடும் சூழல் இருந்து இருந்தால் , இது ஏன் நடக்கணும். . செவ்வாய்க்கு ராக்கெட் விடத்தெரிந்த நமக்கு , தரையில் செல்ல நல்ல கார் இஞ்சின் செய்ய முடியாதா என்ன?
சந்திராயன் சாத்தியம் ஆக அதற்கு உண்டான சூழலை , ISRO ஏற்படுத்திக்கொடுத்தது போல , வேறு ஒரு நிறுவனம் ஏற்படுத்திதர வேண்டும் . நம்மால் முடியாதா என்ன ?
நிறைய கம்பெனிகள் இது போல அந்த அந்த துறை சார்ந்த வேலைதர தயாராக இருந்தால் , நம்மவர்கள் ஏன் , படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத துறையில் வேலை பார்க்கப்போறோம் .
என் நண்பன் போன்று ஆட்டோமொபைல் கனவுகளுடன் இன்று கணிப்பொறி தட்டிக்கொண்டு இருக்கமாட்டார்கள் . ஒருவன்தானே என்று சொல்லிவிட முடியாது .அவன் போன்ற பெரும்பாலோர் படித்தது ஒன்று வேலை பார்ப்பது ஒன்று . என்னதான் கிடைத்த துறையில் வேலை பார்த்தாலும் , முழு ஈடுபாடும் சந்தோஷமும் அவர்கள் துறை சார்ந்த வேலையில் தான் இருக்க சாத்தியக்கூறு அதிகம் . கிடைக்கும் சம்பளத்துக்கும் , நம்முடைய வேலையினைக்காப்பாற்றிக்கொள்ள மனதை இழுத்து வைத்து
பழக்கப்படுத்திக்கொள்ளச் செய்து , அதன் பின் செய்யும் வேலை
பெரும்பாலும் உன்னதமான விளைவுகளை கொடுக்கும்மா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது .
அப்பொழுது நம்ம நாடு IT துறையில் வளர்ந்து உள்ளதே என்று கேட்கத்தோன்றும் .வளர்ந்து உள்ளோம் , ஆனால் "service sector " இல் தான் .
அதாவது வெளிநாட்டு கம்பெனி ஒன்றிற்கு நாம் மலிவு விலையில்
" technical coolie " வேலை பார்க்கிறோம் அவ்வளவுதான் . அந்தத் தயாரிப்பு [product ]அவர்கள் பெயரில் தான் வெளி வரும் , லாபமும் தான் , அதுதானே நடக்கும் .
நாமே ஆராய்ச்சி [ Research and developement ] செய்து , நமது பெயரில் ஒரு நல்ல கார் இஞ்சின் கொண்டு வந்து , அது தரக்கட்டுபாடு செய்யப்பட்டு , அது விற்கப்பட்டு நமக்கு லாபம் ஈட்ட வேண்டும் .
இது மென் பொருள் என்ற சாப்ட்வேர்/IT துறைக்கும் பொருந்தும்.
Microsoft , google , CISCO இப்படி பல பன்னாட்டு நிறுவங்களுக்கு அவர்கள் " products " செய்வதற்கு மென் பொருள் வல்லுனர்கள் தேவைப்படுகின்றனர் .
நம்மாளுங்க அந்த வேலையினை மலிவாக செய்கிறோம் . அதனால் நம்மிடம் வருகின்றனர் . நம்முடைய வேலை கோடிங் , அல்லது project management அல்லது sales போன்ற சம்பளம் வாங்கிவிட்டு செல்லும் வேலையில்தான் உள்ளோம் . நம்முடைய பெரிய கம்பெனிகளும் இதைத்தான் பெரிய அளவில் செய்கின்றன . ஒரு விதத்தில் சொல்வதென்றால் , ஆள் பிடித்துத்தரும் " body shopping " வேலை தான் பெரும்பாலும் செய்கின்றன .இதை நம்மூரிலும் செய்வோம் [ offshore ],அல்லது அவர் நாட்டில் அவர்கள் அலுவலகம் சென்று செய்கிறோம் .
[onsite ].
கொத்தனார் ,சித்தாள் என்ன செய்கின்றனரோ அதேதான் .
apartment கட்டி கொடுத்து காசை வாங்கிக்கொண்டு போய் விடவேண்டும் அவ்வளவுதான் .apartment விற்றுவிட்டு வரும் லாபம் நமக்கு இல்லை ,எதிர்பார்ப்பதும் நியாயம் இல்லை,பணம் போட்டு "RISK" எடுத்தது அந்த கம்பெனிகள் தான் . நாம் ஏன் அப்படி products செய்து வெளிக்கொண்டு வரக்கூடாது ? பணம் போடுவது ஒரு பக்கம் , அதை செய்ய நமக்கு ஒரு
சாதகமான சூழல் [" ecosytem " ] வேண்டும் . அதாவது , மக்கள் தேவை என்னவென்பதை அறிந்து ,எதில் காசைப்போட்டு ஆராச்சி செய்யலாம் என்ற நுட்பமான அறிவும் ,அதை செய்து முடிக்க ஆராச்சி மனப்பான்மை உடைய படிப்பறிவும் உடைய வல்லுனர்கள் தேவை . நம்முடைய இன்றைய பாடத்திட்டம் பெரும்பாலும் சில கல்லூரிகளை தவிர்த்து இதற்கு தயார் இல்லை .கொடுக்கும் வேலைதனை , இப்படி செய்யவேண்டும் என்று முன்பே ஒருவர் முறை செய்து பார்த்து , அதனை " documentation " செய்து வைத்து , அதை பார்த்து திரும்ப செய்யும் வேலைதான் நாம் பெரும்பாலும் செய்கிறோம் .புதிதாக ஒன்றைக்கண்டுப்பிடித்து அதில் நம்முடைய கம்பெனிகள் எத்தனை காப்புரிமை [ " patent " ] வாங்கி உள்ளது என்று பார்த்தால் ரொம்பக்குறைவு தான் .
இந்த அடிப்படை பிரெச்சனை நம்ம கல்வியின் அணுகுமுறையில் இருந்து தான் வருகிறது என்பது என்னுடைய எண்ணம் .
நாமே முயன்று ,ஆராய்ச்சி செய்து தயாரிப்புகள் கொண்டு வரவேண்டும் என்கிற ஆராய்ச்சி அறிவும் , பயன்பாட்டு சார்ந்த அறிவு [application based knowledge] நமக்கு சொல்லிதரப்படுவது இல்லை, அல்லது அப்படி ஒரு சூழல் அமைத்துத் தரப்படுவதில்லை .
நம்ம படிப்பு பெரும்பாலும் ,நினைவாற்றல் சார்ந்து தான் இருக்கிறது .
அதாவது " Pythagorus " தேற்றம் என்பது அவர் கண்டுபிடித்த சமன்பாடு .
அதை வைத்துக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்கு தேவைப்படும் பயன்பாடு [
application ] என்னவென்பதை நம்ம பாடத்திட்டம் சொல்லிதர வேண்டும்.
"pythagorus" சமன்பாட்டை உரு தட்டி வந்து எழுதுவதில் என்ன பயன்?
என்ன நான் சொல்வது சரிதானே !
இப்படிப்பட்ட ஒரு படிப்பை படிக்க நான்கு வருடங்கள் தேவையா ?
இந்த தலைப்பில் இன்னும் நிறைய பேச வேண்டி இருக்கறது .....
பேசுவோம்.
"சும்மா அதே பழைய induction motor ஒட்டிட்டே இருக்காங்க. 50-60 வருஷமா....
எனக்கு புதுசா ஏதாவது செய்ய வேண்டும் "
இந்த பதில் என்னுடைய முதல் கம்பெனியில் கூட வேலை பார்த்த நரேன் என்ற நண்பர் தன்னுடைய " campus interview " போது electrical துறை சார்ந்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு சொன்ன பதில்.
இந்த பதிலுக்கு பிறகும் அவனை வேலையில் அமர்த்தினர் .எல்லோரும் செய்வார்களா என்று தெரியாது. ஆனால் , அவனிடம் இருந்த " ஸ்பார்க்/spark " அல்லது புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலை , நேர்முகத் தேர்வு செய்தவருக்கு பிடித்து இருந்தது ...அது பொய்யாகவில்லை .அவன் இன்றைக்கு வேறு ஒரு நிறுவனத்தில் , " Vice president " அளவிற்கு குறுகிய காலத்தில் வளர்ந்து உள்ளான் .
அவனுடைய மதிப்பெண் என்று தியாகராசா கல்லூரியில் பார்த்தால் , ரொம்பக் குறைவு தான் . ஆனால் துறை சார்ந்த நுண்ணறிவும் , ஈடுபாடும் , புதிதாக செய்யத்தூண்டும் முனைப்பும் அவனை முன்னுக்குத் தள்ளி இருக்கிறது. நம்முடைய கல்வி முறை பெரும்பாலும் மதிப்பெண் சார்ந்தே இருக்கிறது . கல்லூரியில் 90% வைத்து இருந்தால் , அது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 90% வாங்குவது கடினம் தான் , ஆனால் அதை மட்டுமே அளவுகோலாக வைக்க முடியாது .
நான் பார்த்த வரையில் +2 வில் "district toppers" ஆக வந்த பலரை பல கம்பெனிகளில் சாதாரண இடை நிலை ஊழியர்களாக இருக்கிறார்கள் , ரொம்ப வருடங்களாக . நரேன் போன்று குறைந்த மதிப்பெண்களுடன் மேல சென்றவர்கள் நிறைய .
இது போன்ற சில உதாரணங்கள் என்னை சிந்திக்க வைத்தது.
நான்கு வருட டிகிரி எதற்கு?? பரிட்சைக்கு முன்பு பெரும்பாலும் புத்தகத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளை , நியாபகம் வைத்து எழுதுகிறோம் , இதில் இன்ஜினியரிங் என்ன இருக்கிறது .
இன்ஜினியரிங் என்றால் என்னவென்று ஒரு முறை பார்த்து விடுவோம் .
விக்கிபீடியாவில் இருந்துதான் வேறு எங்கே!
"
Engineering (from Latin ingenium, meaning "cleverness" and ingeniare, meaning "to contrive, devise") is the application of scientific, economic, social, and practical knowledge in order to invent, design, build, maintain, and improve structures, machines, devices, systems, materials and processes
"
இதில் invent , design எல்லாம் நாம் எங்கே செய்கிறோம் நம் கல்லூரிப்படிப்பில் .கல்லூரி முடிந்து வந்து வேலையில் உண்டா? பார்ப்போம்.
நம்மில் பெரும்பாலோர் துறை சார்ந்த வேலை பார்ப்பது இல்லை.
EEE , ECE , Instrumentaion , Mechanical , PRODUCTION , AUTOMOBILE , BIOTECHNOLOGY , CIVIC , ARCHITECTURE இப்படி என்னென்னவோ துறையில் நான்கு வருடம் படித்துவிட்டு , கடைசியில் நம்மில் 90 சதவிகித படித்தவர்கள் வேலை பார்ப்பது கணிப்பொறி சார்ந்த IT துறையில்தான் . என்னுடைய கல்லூரியினை எடுத்துக்கொண்டால் கூட கையில் எண்ணிவிடும் அளவிற்குதான் துறை சார்ந்த வேலையில் இருக்கின்றனர் . எல்லோரும் விரும்பிச் செய்யவில்லை .
குறிப்பாக , mechanical துறை சார்ந்த என்னுடைய நெருங்கிய நண்பன் , கல்லூரியில் கணிப்பொறி துறைக்கு வேலைக்கு போவோரை கிண்டல் கூட செய்த நாள் உண்டு . அவன் இன்றைக்கு அதே software துறையில் பெரிய மேனேஜராக உள்ளான் .அவன் கல்லூரி நாட்களில் , Mechanical துறை சார்ந்து "technical papers " எழுதி , conference களில் கலந்து கொண்டதும் ,
அவன் துறை அல்லாத மற்ற துறையில் வேலை தேட வேண்டாம் என்றும் இருந்தது எனக்கு நன்றாக தெரியும் . வீட்டில் சில மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தான் , நண்பர்களும் , கூடப்பிறந்தவர்களும் வேலை போகத்தொடங்கினர் . அவனுக்கு நம்பிக்கை இருந்தது அவனுடைய துறையிலே வேலை வாங்கிடலாம் என்று . அனால் ஒரு காலத்திற்கு பிறகு சூழ்நிலை காரணமாக , பெரிய IT கம்பெனி ஒன்றில் கம்ப்யூட்டர் துறையில் வேலைக்கு சேர்ந்தான் .
அவன் interview முடிந்து வந்து , " வேலை உண்டு என்று சொல்லி இருக்கிறார்கள் " என்று சுரமே இல்லாமல் சொன்னது , அவனுடைய கனவு தகர்ந்ததின் வெளிப்பாடே . இன்றைக்கு நன்றாகத்தான் உள்ளான் .
அப்போ என்ன பிரெச்சனை என்று தானே கேட்கிறீர்கள் .! சொல்கிறேன் .
சில உதாரணங்களை பாப்போம் .
ஜப்பான் போன்ற ஒரு சிறய நாடு , TOYOTA , HONDA என்ற இரு கம்பெனிகள் மூலமாக , உலகின் , குறிப்பாக அமெரிக்காவில் ஒடும் , மூன்றில் ஒரு கார் [ தோரயமாக], இந்த இரண்டு கார் கம்பனிகளில் இருந்து தான் .அதற்கு காரணம் இருக்கிறது .நம்ம ஊரில் ஹீரோ ஹோண்டா பைக்கிற்கு முன்பு ஒரு விளம்பரம் வரும் , " FILL IT , SHUT IT , FORGET IT :.
அதாவது , பெட்ரோல் மட்டும் ஊற்றிக்கொண்டு இருங்கள் , மற்றபடி வண்டி பிரெச்சனை இன்றி ஓடிக்கொண்டு இருக்கும் என்று .
அதேதான் ஹோண்டா கார்களும் , டொயோட்டா கார்களும் . பிரெச்சனையே இன்றி ஓடும் என்பது அர்த்தம் அல்ல .
1) இன்றைக்கு அமெரிக்காவில் ஓடிக்கொண்டு இருக்கும் 10-20 வருட பழைய கார்கள் என்று பார்த்தால் அது பெரும்பாலும் , இந்த இரண்டு கம்பெனி யின் கார்கள் தான் . ஏன் என்றால் , அவர்களுடைய , " ENGINE and TRANSMISSION " அவ்வளவு சிறப்பு.
2) Maintenance செலவு குறை
3) முன்பு எல்லாம் பெட்ரோல் விலை குறித்து கவலைப்படாத அமெரிக்கர்க்கள் இன்றைக்கு mileage பற்றி யோசிக்கத்தொடங்கியுள்ளனர் .
அதிலும் மேற்சொன்ன இரண்டு கம்பெனி கார்கள் சிறந்து விளங்குகின்றது .
இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் , எவ்வளவுதான் ஆட்டோமொபைல் துறை அமெரிக்காவில் வளர்ந்தாலும் ,சிறிய நாடான ஜப்பானின் ஆட்டோமொபைல் துறை நிபுணத்துவத்தில் ஜப்பானியர்களை அடித்துக்கொள்ள முடியவில்லை . அதற்கு காரணம் அவர்களது குறிப்பிட்ட ஆட்டோமொபைல் துறை சார்ந்த ஆழ்ந்த அறிவும் , அதில் அவர்கள் வைத்து இருக்கும் தரக்கட்டுபாடும் தான் . கணிப்பொறி துறை மட்டும் அல்ல , இது போன்ற
"automobile and manufacturing"துறையில் கணிப்பொறி துறையினைக்காட்டிலும் வேலை வாய்ப்புகளும் , நாட்டின் GDP யினை கூட்டும் வாய்ப்பும் உள்ளது . இதற்கு அவர்கள் நாட்டின் கல்வித்திட்டமும் ஒரு காரணம் . எந்த துறையில் படித்தாலும் , கம்ப்யூட்டர் துறையில்தான் வேலையென்று இல்லாமல் படித்த துறையில் வேலை செய்தால் நம்மால் சிறந்த ப்ராடக்ட்ஸ் கொண்டு வர முடியும்.
வெளிநாட்டு தொழில் நுட்ப உதவி பெரிது இல்லாமல் , நம்ம நாட்டிலேயே
சொந்தமாக நடுத்தர மக்களும் கார் வாங்க கொண்டு வரப்பட்ட ஒரு முயற்சிதான் " மாருதி உத்யோக் " . ராஜீவ் காந்தி ஆட்சியில் தொடங்கப்பட்ட
இந்த கம்பெனி அன்றைய காலத்தில் 35000 ரூபாய்க்கு ஒரு கார் தயார் செய்தது . இது ஒரு நல்ல முயற்சி . பிறகு நம்மிடம் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல சிறந்த தொழில்நுட்பம் சரியாக இல்லாததால் , ஜப்பானின் , "SUZUKI " கம்பெனியுடன் பார்ட்னெர்ஷிப் வைத்துக்கொண்டது .
படிப்படியாக மாருதி என்ற பெயர் , பெயருக்கு மட்டும் இருந்துக்கொண்டு பெரும்பான்மையான கம்பெனியின் ஷேர் , சுசுகி கம்பெனிக்கு சென்றது.
அது தொடங்கின காரணம் வேற ,இப்பொழுது அது செயல்பட்டுக்கொண்டு இருக்கும் காரணம் வேற.
நம்மிடம் சுசுகி அளவிற்கு தரமான கார் இஞ்சின் /engine இல்லாதது ஒரு முக்கிய காரணம். நம்ம நாட்டிலும் mechanical /automobile துறையில் சரியான வல்லுனர்களை வளர்த்து விடும் சூழல் இருந்து இருந்தால் , இது ஏன் நடக்கணும். . செவ்வாய்க்கு ராக்கெட் விடத்தெரிந்த நமக்கு , தரையில் செல்ல நல்ல கார் இஞ்சின் செய்ய முடியாதா என்ன?
சந்திராயன் சாத்தியம் ஆக அதற்கு உண்டான சூழலை , ISRO ஏற்படுத்திக்கொடுத்தது போல , வேறு ஒரு நிறுவனம் ஏற்படுத்திதர வேண்டும் . நம்மால் முடியாதா என்ன ?
நிறைய கம்பெனிகள் இது போல அந்த அந்த துறை சார்ந்த வேலைதர தயாராக இருந்தால் , நம்மவர்கள் ஏன் , படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத துறையில் வேலை பார்க்கப்போறோம் .
என் நண்பன் போன்று ஆட்டோமொபைல் கனவுகளுடன் இன்று கணிப்பொறி தட்டிக்கொண்டு இருக்கமாட்டார்கள் . ஒருவன்தானே என்று சொல்லிவிட முடியாது .அவன் போன்ற பெரும்பாலோர் படித்தது ஒன்று வேலை பார்ப்பது ஒன்று . என்னதான் கிடைத்த துறையில் வேலை பார்த்தாலும் , முழு ஈடுபாடும் சந்தோஷமும் அவர்கள் துறை சார்ந்த வேலையில் தான் இருக்க சாத்தியக்கூறு அதிகம் . கிடைக்கும் சம்பளத்துக்கும் , நம்முடைய வேலையினைக்காப்பாற்றிக்கொள்ள மனதை இழுத்து வைத்து
பழக்கப்படுத்திக்கொள்ளச் செய்து , அதன் பின் செய்யும் வேலை
பெரும்பாலும் உன்னதமான விளைவுகளை கொடுக்கும்மா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது .
அப்பொழுது நம்ம நாடு IT துறையில் வளர்ந்து உள்ளதே என்று கேட்கத்தோன்றும் .வளர்ந்து உள்ளோம் , ஆனால் "service sector " இல் தான் .
அதாவது வெளிநாட்டு கம்பெனி ஒன்றிற்கு நாம் மலிவு விலையில்
" technical coolie " வேலை பார்க்கிறோம் அவ்வளவுதான் . அந்தத் தயாரிப்பு [product ]அவர்கள் பெயரில் தான் வெளி வரும் , லாபமும் தான் , அதுதானே நடக்கும் .
நாமே ஆராய்ச்சி [ Research and developement ] செய்து , நமது பெயரில் ஒரு நல்ல கார் இஞ்சின் கொண்டு வந்து , அது தரக்கட்டுபாடு செய்யப்பட்டு , அது விற்கப்பட்டு நமக்கு லாபம் ஈட்ட வேண்டும் .
இது மென் பொருள் என்ற சாப்ட்வேர்/IT துறைக்கும் பொருந்தும்.
Microsoft , google , CISCO இப்படி பல பன்னாட்டு நிறுவங்களுக்கு அவர்கள் " products " செய்வதற்கு மென் பொருள் வல்லுனர்கள் தேவைப்படுகின்றனர் .
நம்மாளுங்க அந்த வேலையினை மலிவாக செய்கிறோம் . அதனால் நம்மிடம் வருகின்றனர் . நம்முடைய வேலை கோடிங் , அல்லது project management அல்லது sales போன்ற சம்பளம் வாங்கிவிட்டு செல்லும் வேலையில்தான் உள்ளோம் . நம்முடைய பெரிய கம்பெனிகளும் இதைத்தான் பெரிய அளவில் செய்கின்றன . ஒரு விதத்தில் சொல்வதென்றால் , ஆள் பிடித்துத்தரும் " body shopping " வேலை தான் பெரும்பாலும் செய்கின்றன .இதை நம்மூரிலும் செய்வோம் [ offshore ],அல்லது அவர் நாட்டில் அவர்கள் அலுவலகம் சென்று செய்கிறோம் .
[onsite ].
கொத்தனார் ,சித்தாள் என்ன செய்கின்றனரோ அதேதான் .
apartment கட்டி கொடுத்து காசை வாங்கிக்கொண்டு போய் விடவேண்டும் அவ்வளவுதான் .apartment விற்றுவிட்டு வரும் லாபம் நமக்கு இல்லை ,எதிர்பார்ப்பதும் நியாயம் இல்லை,பணம் போட்டு "RISK" எடுத்தது அந்த கம்பெனிகள் தான் . நாம் ஏன் அப்படி products செய்து வெளிக்கொண்டு வரக்கூடாது ? பணம் போடுவது ஒரு பக்கம் , அதை செய்ய நமக்கு ஒரு
சாதகமான சூழல் [" ecosytem " ] வேண்டும் . அதாவது , மக்கள் தேவை என்னவென்பதை அறிந்து ,எதில் காசைப்போட்டு ஆராச்சி செய்யலாம் என்ற நுட்பமான அறிவும் ,அதை செய்து முடிக்க ஆராச்சி மனப்பான்மை உடைய படிப்பறிவும் உடைய வல்லுனர்கள் தேவை . நம்முடைய இன்றைய பாடத்திட்டம் பெரும்பாலும் சில கல்லூரிகளை தவிர்த்து இதற்கு தயார் இல்லை .கொடுக்கும் வேலைதனை , இப்படி செய்யவேண்டும் என்று முன்பே ஒருவர் முறை செய்து பார்த்து , அதனை " documentation " செய்து வைத்து , அதை பார்த்து திரும்ப செய்யும் வேலைதான் நாம் பெரும்பாலும் செய்கிறோம் .புதிதாக ஒன்றைக்கண்டுப்பிடித்து அதில் நம்முடைய கம்பெனிகள் எத்தனை காப்புரிமை [ " patent " ] வாங்கி உள்ளது என்று பார்த்தால் ரொம்பக்குறைவு தான் .
இந்த அடிப்படை பிரெச்சனை நம்ம கல்வியின் அணுகுமுறையில் இருந்து தான் வருகிறது என்பது என்னுடைய எண்ணம் .
நாமே முயன்று ,ஆராய்ச்சி செய்து தயாரிப்புகள் கொண்டு வரவேண்டும் என்கிற ஆராய்ச்சி அறிவும் , பயன்பாட்டு சார்ந்த அறிவு [application based knowledge] நமக்கு சொல்லிதரப்படுவது இல்லை, அல்லது அப்படி ஒரு சூழல் அமைத்துத் தரப்படுவதில்லை .
நம்ம படிப்பு பெரும்பாலும் ,நினைவாற்றல் சார்ந்து தான் இருக்கிறது .
அதாவது " Pythagorus " தேற்றம் என்பது அவர் கண்டுபிடித்த சமன்பாடு .
அதை வைத்துக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்கு தேவைப்படும் பயன்பாடு [
application ] என்னவென்பதை நம்ம பாடத்திட்டம் சொல்லிதர வேண்டும்.
"pythagorus" சமன்பாட்டை உரு தட்டி வந்து எழுதுவதில் என்ன பயன்?
என்ன நான் சொல்வது சரிதானே !
இப்படிப்பட்ட ஒரு படிப்பை படிக்க நான்கு வருடங்கள் தேவையா ?
இந்த தலைப்பில் இன்னும் நிறைய பேச வேண்டி இருக்கறது .....
பேசுவோம்.
No comments:
Post a Comment