அருவியில் குளிக்கும் அனுபவத்தை எப்படி வார்த்தைகளால் விவரிக்க முடியும் ...!
தமிழ் தெரியாத என்னுடைய நண்பர் ஒருவரை அழைத்துப்போனேன் .முதலில் கொஞ்சம் வசனங்களை மொழிபெயர்த்தேன் , அதன்பின் இந்த கதைக்கு மொழி தேவை இல்லையென்று சொல்லிவிட்டார் .
வெளியே வரும் போது , கண் கலங்கி இருந்தது அவருக்கும் , எனக்கும் .
நாம் வாழும் வாழ்க்கையின் பின் இருக்கும் வணிக அரசியலின் தாக்கத்தைச் சுட்டிக்காட்டி அவள் பேசும் ஒரு நீண்ட வசனம் , " அட ச ..இந்த வாழ்க்கை இவ்ளோதானா , இதற்குத்தானா இவ்வளவு ஓட்டம் " என்பதை பொட்டில் அறைகிறது ..
"Man is born free but everywhere he is in chains" என்கின்ற ரூசோவின் [ ROUSSEAU ] வார்த்தைகளின் வலியினை , அந்த வசனம் உணரச்செய்கிறது .
இன்னொரு பக்கம் கிடைத்த இந்த வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஒரு பொக்கிஷம் , என்னத்தையோ தேடி இருக்கும் சந்தோஷங்களை தொலைக்காதீர்கள் , சின்னச் சின்ன சந்தோஷங்களில் உங்கள் வாழ்வை நனைத்திடுங்கள் என்று அருவியும் , அவள் தோழியும்
சொல்லிப்போகிறார்கள் ...
எமிலி வாழ்ந்து இருக்கிறாள் ! ..அவள் யாரென்பதை பார்த்துத் தெரிந்துக்கொள்ளுங்கள் .
அந்த அப்பா மகளின் அன்னியோன்யம், அவள் வளர்ந்தபின் , அவளை நம்பாமல் போகும் ஒரு சூழ்நிலையில் , " அப்பா என்னை நம்புங்கள் " என்று அவள் கதறுவது , அவள் சிறுவயதில் மகளுக்கு பிடிக்கவில்லையென்று தன்னுடைய புகைபிடிக்கும் பழக்கத்தை விடும் ஒரு அதீத அன்பு கொண்ட அப்பாவால் இப்படியொரு பரிமாணம் எடுக்க முடியுமாவென நம்மை அதிர வைக்கிறது ...அந்த முரணே நம் சமூகத்தின் வெளிச்சம்.
" மற்றவர் என்னச்சொல்வர் " என்று நினைத்து பயந்தே , நம்முடைய வாழ்வினை எவ்வளவு சிக்கலாக்கி சிதைத்து , பொய்யான வாழ்க்கையினை வாழ்ந்து தொலைக்க வைக்கிறது என்று, நம் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய கறுப்புப் பக்கத்தை நம்முன் எடுத்து வைக்கிறாள் அருவி.
நீ கடைசியாக எப்பொழுது அழுதாய் என்று அந்தக்காமுகனிடம் அவள் கேட்பதும் , உயிர்பயத்துடன் அவன் ஒரு கதைசொல்லிகிறான் .
இரண்டு தோசைகளின் இடையே வைத்துச்செய்யப்படும் ஒரு வெல்லத்தால் செய்யப்பட்ட பண்டமும் , அதைச்செய்துக்கொடுத்த அந்தப் பாட்டியின் இறப்பின்பிறகு , ஒரு வெல்ல sandwich போல விறகின் இடையே அவளைவைத்து எரியூட்டிய நிகழ்வும் ஒன்று போலத்தோன்றியத்தின் விளைவே அவன் கடைசியாக அழுததன் காரணம் என அவன் சொல்லியது , அன்பு எல்லாவற்றையும் வெல்லும் என்பதின் சாட்சி .
அவளுடன் தவறாக நடந்துக்கொண்ட மனிதர்களை அவள் மன்னிப்பு மட்டும் கேட்கச்சொல்லுவது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ...மற்றபடி அருவி பார்த்துவிட்டு வந்தபின் , வீட்டுக்கு சீக்கிரமாக வந்து , பெண் குழந்தைகளை இறுக்கி ,பத்திரமாக ஒன்றும் சொல்லாமல் அணைத்துகொள்ளத்தூண்டிய ஒரு அனுபவம் ...
எல்லோரையும் அருவி அன்பால் அறைந்து விட்டுச்செல்வாள் தவறாமல் ....
தமிழ் தெரியாத என்னுடைய நண்பர் ஒருவரை அழைத்துப்போனேன் .முதலில் கொஞ்சம் வசனங்களை மொழிபெயர்த்தேன் , அதன்பின் இந்த கதைக்கு மொழி தேவை இல்லையென்று சொல்லிவிட்டார் .
வெளியே வரும் போது , கண் கலங்கி இருந்தது அவருக்கும் , எனக்கும் .
நாம் வாழும் வாழ்க்கையின் பின் இருக்கும் வணிக அரசியலின் தாக்கத்தைச் சுட்டிக்காட்டி அவள் பேசும் ஒரு நீண்ட வசனம் , " அட ச ..இந்த வாழ்க்கை இவ்ளோதானா , இதற்குத்தானா இவ்வளவு ஓட்டம் " என்பதை பொட்டில் அறைகிறது ..
"Man is born free but everywhere he is in chains" என்கின்ற ரூசோவின் [ ROUSSEAU ] வார்த்தைகளின் வலியினை , அந்த வசனம் உணரச்செய்கிறது .
இன்னொரு பக்கம் கிடைத்த இந்த வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஒரு பொக்கிஷம் , என்னத்தையோ தேடி இருக்கும் சந்தோஷங்களை தொலைக்காதீர்கள் , சின்னச் சின்ன சந்தோஷங்களில் உங்கள் வாழ்வை நனைத்திடுங்கள் என்று அருவியும் , அவள் தோழியும்
சொல்லிப்போகிறார்கள் ...
எமிலி வாழ்ந்து இருக்கிறாள் ! ..அவள் யாரென்பதை பார்த்துத் தெரிந்துக்கொள்ளுங்கள் .
அந்த அப்பா மகளின் அன்னியோன்யம், அவள் வளர்ந்தபின் , அவளை நம்பாமல் போகும் ஒரு சூழ்நிலையில் , " அப்பா என்னை நம்புங்கள் " என்று அவள் கதறுவது , அவள் சிறுவயதில் மகளுக்கு பிடிக்கவில்லையென்று தன்னுடைய புகைபிடிக்கும் பழக்கத்தை விடும் ஒரு அதீத அன்பு கொண்ட அப்பாவால் இப்படியொரு பரிமாணம் எடுக்க முடியுமாவென நம்மை அதிர வைக்கிறது ...அந்த முரணே நம் சமூகத்தின் வெளிச்சம்.
" மற்றவர் என்னச்சொல்வர் " என்று நினைத்து பயந்தே , நம்முடைய வாழ்வினை எவ்வளவு சிக்கலாக்கி சிதைத்து , பொய்யான வாழ்க்கையினை வாழ்ந்து தொலைக்க வைக்கிறது என்று, நம் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய கறுப்புப் பக்கத்தை நம்முன் எடுத்து வைக்கிறாள் அருவி.
நீ கடைசியாக எப்பொழுது அழுதாய் என்று அந்தக்காமுகனிடம் அவள் கேட்பதும் , உயிர்பயத்துடன் அவன் ஒரு கதைசொல்லிகிறான் .
இரண்டு தோசைகளின் இடையே வைத்துச்செய்யப்படும் ஒரு வெல்லத்தால் செய்யப்பட்ட பண்டமும் , அதைச்செய்துக்கொடுத்த அந்தப் பாட்டியின் இறப்பின்பிறகு , ஒரு வெல்ல sandwich போல விறகின் இடையே அவளைவைத்து எரியூட்டிய நிகழ்வும் ஒன்று போலத்தோன்றியத்தின் விளைவே அவன் கடைசியாக அழுததன் காரணம் என அவன் சொல்லியது , அன்பு எல்லாவற்றையும் வெல்லும் என்பதின் சாட்சி .
அவளுடன் தவறாக நடந்துக்கொண்ட மனிதர்களை அவள் மன்னிப்பு மட்டும் கேட்கச்சொல்லுவது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ...மற்றபடி அருவி பார்த்துவிட்டு வந்தபின் , வீட்டுக்கு சீக்கிரமாக வந்து , பெண் குழந்தைகளை இறுக்கி ,பத்திரமாக ஒன்றும் சொல்லாமல் அணைத்துகொள்ளத்தூண்டிய ஒரு அனுபவம் ...
எல்லோரையும் அருவி அன்பால் அறைந்து விட்டுச்செல்வாள் தவறாமல் ....