லிங்கா லிங்கா லிங்கா ..எங்கு பார்த்தாலும் லிங்கா மயம் ....இல்லை மாயையா ??வீட்டில் , மாலில் இன்னும் எங்கே எங்கேயோ எல்லாம் ....லிங்கா பார்த்த பேச்சுக்கள் , புகைப்படங்கள் ,விமர்சனங்கள் ..
கொஞ்சம் வித்தியாசத்திற்கு படத்தின் கதை பற்றிய பேசமால் , படம் பார்த்த அனுபவம் குறித்து பேசலாம் என்று தோன்றியது..
நம்மில் பலருக்கு வித்தியாசனமான படம் பார்த்த அனுபவங்கள் இருந்து இருக்கும் ....
தியேட்டருக்கு போகும் அனுபவமாக இருக்கலாம் , சென்ற பின் படம் ஆரம்பிக்கும் முன் இருக்கலாம் , அந்த தியேட்டர் சார்ந்து இருக்கலாம் , பக்கத்துக்கு சீட்டில் உக்காந்து இருப்பவரால் இருக்கலாம் ..இப்படி பல...
எனக்குச் சில உண்டு ....
சில வருடங்களுக்கு முன்பு பெங்களூருவில் தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகாது சில மாதங்களுக்கு ....நானும் என் நண்பன் விஜயனும் , ஹோசூர் செல்வோம் படம் பார்க்க . நம்ம ஊரு சாப்பாடு ஒரு பிடி பிடிச்சுட்டு படமும் பார்த்துட்டு வருவோம் விடுமுறை நாட்களில் . படு சிக்கனம் வேற .
ஒரு முறை நான் தனியாக சென்றேன் ....எல்லாம் என் நேரம் , கூடே அவன் இருந்தால் காப்பாத்தி இருப்பான் போலும் .
என்ன படம் , எந்த நடிகர் என்று வேண்டாமே.....
கூட்டம்னா அப்படி ஒரு கூட்டம் .......தியேட்டர் வெளியே பிதிங்குக்கொண்டு இருந்தது....திரும்பி போகலாம்னா அவ்ளோதூரம் வந்தாயிற்று ....
நிறைய பேர் நின்றுக்கொண்டு இருக்கையில் , படம் ஆரம்பிக்கும் நேரம் ஆகிவிட்டது....ஆனால் கவுன்டடர் அருகில் சிலர்தான் நின்றனர் ...என்னடா இது என்று போய் நின்று பார்ப்போமே என்று போய் நின்றேன் ..ஒரு வேளை A C டிக்கெட் வாங்க அவ்ளோ கூட்டம் இல்லைன்னு நினைப்பு வேற ....உள்குத்து வேறன்னு அப்புறம் தான் தெரிந்தது ......டிக்கெட் கவுன்டரில் டிக்கெட் கொடுக்கும் போது என்னத்தையோ சொல்லிக்கொடுத்தார் ...சத்தத்தில் சரியாக கேட்கவில்லை ...சரியென்று உள்ளே போனால் , படம் ஆரம்பித்து......பாட்டு வேற ஓடிக்கொண்டு இருந்தது ......நானும் சுத்தி முதி இருட்டில் தேடுகிறேன் , முன் ரோவில் கூட சீட் காலி இல்லை..
எதுக்கு இவன் டிக்கெட்டை கொடுத்தான் என்று முழிக்கையில் , சற்று இருட்டு விலகி , நிலைமை புலப்பட்டது...
அங்கே ஒரு 100 பேருக்கு மேல எல்லா இடத்திலும் unreseved compartment போல நின்றிக்கொண்டு படம் பார்த்தனர் ....இதைத்தான் டிக்கெட் கொடுப்பவர் சொல்லி இருப்பார் போல ...
தலைக்கு மேல வெள்ளம் போன கதையா அந்தக்கொடுமைய செவரோடு சாய்ந்து நின்று பார்த்து தொலைத்தேன் ......ஏன் அப்படி செய்தேன் என்று இப்போ யோசித்து பாத்தாலும் பதில் கிடைக்கவில்லை .....சும்மா வீடு திரும்பினால் , அவ்வளவு தூரம் வந்து போன அர்த்தம் இல்லையென்று ஆகிவிடும் என்றா? தெரியவில்லை...
சரி படம் என்னன்னு கேப்பது தெரியுது ....இன்டர்வெல்லில் முட்டுக்கு kerchief கட்டிய கும்பல் அலைந்து க்கொண்டு இருந்தது ..எனக்கு அவ்வளுவுதான் நியாபகம்!
அடுத்த ஒன்று வித்தியாசமான அனுபவம் ....இனி அது போல கிடைக்குமா என்று தெரியவில்லை.சின்ன வயதில் வத்தலகுண்டில் ஆச்சி வீட்டுக்கு கோடை விடுமுறை நாட்களில் செல்லும்பொழுது , கோவில் திருவிழாவும் இருக்கும் ..
தெருவை கொஞ்சம் வழிமறித்து , பெரிய மூங்கில் கம்பு நட்டு , வெள்ளை திரையில் இரவு எல்லாம் மெல்லிய குளிரில் படம் பார்த்த காட்சிகள் ....
ஊர் மக்கள் கூடி தொடர்ந்து படம் ஓடிக்கொண்டு இருக்கும் ...
இன்றைக்கும் தூத்துக்குடி SPIC nagar போன்ற கூட்டு குடியமைப்புகளில் இது போன்ற காட்சிகள் உண்டு எனக்கேள்வி .
இது போல வேறு சில அனுபவங்களும் உண்டு ....
இன்னொரு முறை வத்தலகுண்டு செல்லுகையில் , நடு இரவு பஸ் கிடைக்கும் வரை , பழனியில் "மேட்டுக்குடி " எதிர்பாராமல் இரவுக் காட்சி பார்த்தது, ..
பின்பு எர்ணாகுளத்தில் சித்தி வீட்டு அருகில் " அழகன் " பார்த்து முடித்து , அடுத்து வீட்டுக்கு போய் என்ன செய்யப்போகிறோம் என்று நினைத்து , அங்கேயே pop corn சாப்பிட்டு , அடுத்த காட்சியில் ஓடிய "உள்ளடக்கம் " என்ற மலையாள படத்தையும் பார்த்த அனுபவம் ......
இப்படி இன்னும் ...
கடைசியாக ஒன்று .
G C T இல் படிக்கும் பொழுது எங்கள் ஆடிடோரியத்தில் இது போன்ற கல்லூரி நண்பர்கள் உட்கார்ந்து படம் பார்த்த அனுபவமும் உண்டு .
" கோபாலா கோபாலா " என்ற பாண்டியராஜனின் எசகு பிசகான வசனம் உடைய படம் ஒன்று போடப்பட்டு , பெண்கள் பெரும்பாலோர் இடைவேளைக்குள் காலி செய்தது நியாபகம் இருக்கிறது .
நிஜமாகவே போக வேண்டும் என்று தோன்றியதா இல்லை , படம் போடுகின்றனரா என்ற கேள்வி எழுந்தது அப்பொழுது .இன்று வரை யாரிடம் கேட்டதில்லை!. ஏன்னா , கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கலைந்தது . சிலர் கிளம்பி விட்டனர் முதலில் , அப்பறம் மற்றவர்கள் கிளம்புவதற்காக சிலர் கிளம்பினார்கள் போல ...
இந்த காலத்தில் எங்கே இரட்டை அர்த்த வசனங்கள் ...நேரடியாக ஒரே அர்த்தத்தில் தானே பேசுகின்றனர்!
டூரிங் டாக்கீஸில் பார்க்கும் ஆசை மட்டும் இன்னும் நிறைவேற இல்லை....
மண் குமித்து கொட்டகையில் உட்கார்ந்து பார்க்கும் அனுபவம் ...அப்படி தியேட்டர்கள் எத்தனை உள்ளது என்று தெரியவில்லை இன்றைக்கு .
தியேட்டர்கள் எல்லாம் வணிக வளாகங்களாகவும் , கல்யாண மண்டபங்களாகவும் மாறி வருகின்றன . என் நண்பன் ஒருவன் குடும்பமும் ரொம்ப வருடங்களாக விருது நகரில் வைத்து இருந்த தியேட்டரை விற்று விட்டதாக சொன்னான் சில வருடங்கள் முன் . மகன்கள் இருவர் படிப்பிற்கும் , அவர்களை செட்டில் செய்வதற்கும் அப்பா செய்த தியாகம் .
மகன்கள் இருவரும் நன்றாக இருக்கின்றனர் இப்பொழுது .
ஆனால் , ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் , "என்ன படம் இப்பொழுது ?" என்று கேட்கும் சந்தர்ப்பம் இல்லை இப்பொழுது எனக்கு...அந்த ஊரின் ஒரு அடையாளம்தானே அந்த தியேட்டரும் ...
.
கொஞ்சம் வித்தியாசத்திற்கு படத்தின் கதை பற்றிய பேசமால் , படம் பார்த்த அனுபவம் குறித்து பேசலாம் என்று தோன்றியது..
நம்மில் பலருக்கு வித்தியாசனமான படம் பார்த்த அனுபவங்கள் இருந்து இருக்கும் ....
தியேட்டருக்கு போகும் அனுபவமாக இருக்கலாம் , சென்ற பின் படம் ஆரம்பிக்கும் முன் இருக்கலாம் , அந்த தியேட்டர் சார்ந்து இருக்கலாம் , பக்கத்துக்கு சீட்டில் உக்காந்து இருப்பவரால் இருக்கலாம் ..இப்படி பல...
எனக்குச் சில உண்டு ....
சில வருடங்களுக்கு முன்பு பெங்களூருவில் தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகாது சில மாதங்களுக்கு ....நானும் என் நண்பன் விஜயனும் , ஹோசூர் செல்வோம் படம் பார்க்க . நம்ம ஊரு சாப்பாடு ஒரு பிடி பிடிச்சுட்டு படமும் பார்த்துட்டு வருவோம் விடுமுறை நாட்களில் . படு சிக்கனம் வேற .
ஒரு முறை நான் தனியாக சென்றேன் ....எல்லாம் என் நேரம் , கூடே அவன் இருந்தால் காப்பாத்தி இருப்பான் போலும் .
என்ன படம் , எந்த நடிகர் என்று வேண்டாமே.....
கூட்டம்னா அப்படி ஒரு கூட்டம் .......தியேட்டர் வெளியே பிதிங்குக்கொண்டு இருந்தது....திரும்பி போகலாம்னா அவ்ளோதூரம் வந்தாயிற்று ....
நிறைய பேர் நின்றுக்கொண்டு இருக்கையில் , படம் ஆரம்பிக்கும் நேரம் ஆகிவிட்டது....ஆனால் கவுன்டடர் அருகில் சிலர்தான் நின்றனர் ...என்னடா இது என்று போய் நின்று பார்ப்போமே என்று போய் நின்றேன் ..ஒரு வேளை A C டிக்கெட் வாங்க அவ்ளோ கூட்டம் இல்லைன்னு நினைப்பு வேற ....உள்குத்து வேறன்னு அப்புறம் தான் தெரிந்தது ......டிக்கெட் கவுன்டரில் டிக்கெட் கொடுக்கும் போது என்னத்தையோ சொல்லிக்கொடுத்தார் ...சத்தத்தில் சரியாக கேட்கவில்லை ...சரியென்று உள்ளே போனால் , படம் ஆரம்பித்து......பாட்டு வேற ஓடிக்கொண்டு இருந்தது ......நானும் சுத்தி முதி இருட்டில் தேடுகிறேன் , முன் ரோவில் கூட சீட் காலி இல்லை..
எதுக்கு இவன் டிக்கெட்டை கொடுத்தான் என்று முழிக்கையில் , சற்று இருட்டு விலகி , நிலைமை புலப்பட்டது...
அங்கே ஒரு 100 பேருக்கு மேல எல்லா இடத்திலும் unreseved compartment போல நின்றிக்கொண்டு படம் பார்த்தனர் ....இதைத்தான் டிக்கெட் கொடுப்பவர் சொல்லி இருப்பார் போல ...
தலைக்கு மேல வெள்ளம் போன கதையா அந்தக்கொடுமைய செவரோடு சாய்ந்து நின்று பார்த்து தொலைத்தேன் ......ஏன் அப்படி செய்தேன் என்று இப்போ யோசித்து பாத்தாலும் பதில் கிடைக்கவில்லை .....சும்மா வீடு திரும்பினால் , அவ்வளவு தூரம் வந்து போன அர்த்தம் இல்லையென்று ஆகிவிடும் என்றா? தெரியவில்லை...
சரி படம் என்னன்னு கேப்பது தெரியுது ....இன்டர்வெல்லில் முட்டுக்கு kerchief கட்டிய கும்பல் அலைந்து க்கொண்டு இருந்தது ..எனக்கு அவ்வளுவுதான் நியாபகம்!
அடுத்த ஒன்று வித்தியாசமான அனுபவம் ....இனி அது போல கிடைக்குமா என்று தெரியவில்லை.சின்ன வயதில் வத்தலகுண்டில் ஆச்சி வீட்டுக்கு கோடை விடுமுறை நாட்களில் செல்லும்பொழுது , கோவில் திருவிழாவும் இருக்கும் ..
தெருவை கொஞ்சம் வழிமறித்து , பெரிய மூங்கில் கம்பு நட்டு , வெள்ளை திரையில் இரவு எல்லாம் மெல்லிய குளிரில் படம் பார்த்த காட்சிகள் ....
ஊர் மக்கள் கூடி தொடர்ந்து படம் ஓடிக்கொண்டு இருக்கும் ...
இன்றைக்கும் தூத்துக்குடி SPIC nagar போன்ற கூட்டு குடியமைப்புகளில் இது போன்ற காட்சிகள் உண்டு எனக்கேள்வி .
இது போல வேறு சில அனுபவங்களும் உண்டு ....
இன்னொரு முறை வத்தலகுண்டு செல்லுகையில் , நடு இரவு பஸ் கிடைக்கும் வரை , பழனியில் "மேட்டுக்குடி " எதிர்பாராமல் இரவுக் காட்சி பார்த்தது, ..
பின்பு எர்ணாகுளத்தில் சித்தி வீட்டு அருகில் " அழகன் " பார்த்து முடித்து , அடுத்து வீட்டுக்கு போய் என்ன செய்யப்போகிறோம் என்று நினைத்து , அங்கேயே pop corn சாப்பிட்டு , அடுத்த காட்சியில் ஓடிய "உள்ளடக்கம் " என்ற மலையாள படத்தையும் பார்த்த அனுபவம் ......
இப்படி இன்னும் ...
கடைசியாக ஒன்று .
G C T இல் படிக்கும் பொழுது எங்கள் ஆடிடோரியத்தில் இது போன்ற கல்லூரி நண்பர்கள் உட்கார்ந்து படம் பார்த்த அனுபவமும் உண்டு .
" கோபாலா கோபாலா " என்ற பாண்டியராஜனின் எசகு பிசகான வசனம் உடைய படம் ஒன்று போடப்பட்டு , பெண்கள் பெரும்பாலோர் இடைவேளைக்குள் காலி செய்தது நியாபகம் இருக்கிறது .
நிஜமாகவே போக வேண்டும் என்று தோன்றியதா இல்லை , படம் போடுகின்றனரா என்ற கேள்வி எழுந்தது அப்பொழுது .இன்று வரை யாரிடம் கேட்டதில்லை!. ஏன்னா , கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கலைந்தது . சிலர் கிளம்பி விட்டனர் முதலில் , அப்பறம் மற்றவர்கள் கிளம்புவதற்காக சிலர் கிளம்பினார்கள் போல ...
இந்த காலத்தில் எங்கே இரட்டை அர்த்த வசனங்கள் ...நேரடியாக ஒரே அர்த்தத்தில் தானே பேசுகின்றனர்!
டூரிங் டாக்கீஸில் பார்க்கும் ஆசை மட்டும் இன்னும் நிறைவேற இல்லை....
மண் குமித்து கொட்டகையில் உட்கார்ந்து பார்க்கும் அனுபவம் ...அப்படி தியேட்டர்கள் எத்தனை உள்ளது என்று தெரியவில்லை இன்றைக்கு .
தியேட்டர்கள் எல்லாம் வணிக வளாகங்களாகவும் , கல்யாண மண்டபங்களாகவும் மாறி வருகின்றன . என் நண்பன் ஒருவன் குடும்பமும் ரொம்ப வருடங்களாக விருது நகரில் வைத்து இருந்த தியேட்டரை விற்று விட்டதாக சொன்னான் சில வருடங்கள் முன் . மகன்கள் இருவர் படிப்பிற்கும் , அவர்களை செட்டில் செய்வதற்கும் அப்பா செய்த தியாகம் .
மகன்கள் இருவரும் நன்றாக இருக்கின்றனர் இப்பொழுது .
ஆனால் , ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் , "என்ன படம் இப்பொழுது ?" என்று கேட்கும் சந்தர்ப்பம் இல்லை இப்பொழுது எனக்கு...அந்த ஊரின் ஒரு அடையாளம்தானே அந்த தியேட்டரும் ...
.
No comments:
Post a Comment