ஒட்டகச்சிவிங்கியும் கிட்டப்பார்வையும் .....
வேலை இல்லாத வாரக்கடைசிகள் அபூர்வமாகிப்போன துறையில் நானும் இருப்பதால் , சமீபத்திய இரண்டு மாதங்கள் மிகவும் இனிமையாகக் கழிந்தது , வேலை இல்லாததால். பிடித்த விஷயங்களை செய்வதும் , தூங்குவதும் குழந்தையுடன் இன்னும் அதிக நேரம் செலவிடுவதற்கும் நல்ல வாய்ப்பாக இருந்தது.
நாளையில் இருந்து திரும்பவும் ஓட்டம் தொடங்கப் போகிறது என நினைத்துக்கொண்டே படுத்து இருக்கையில், மகள் எப்பொழுதும் போல ,
"bookchi bookchi " என்று ஒரு கதை புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து படம் பார்த்து கதை சொல்லச் சொன்னாள் .
மேல சொன்ன தலைப்புடன்[ ஆங்கிலத்தில்;தான் , " THE near sighted giraffe "] இருந்த அழகான படங்களுடன் கூடிய அந்த புத்தகத்தை நான் பல நாட்கள் பார்த்து உள்ளேன் , ஆனால் இந்த கதையினை படித்துச் சொன்னது கிடையாது.
ஒரு காட்டில் ஒரு ஒட்டகச்சிவிங்கிக்கு கிட்டப்பார்வை .
காட்சிகள் சரிவர தெரியாமல் நிறைய சங்கடங்கள். கண் தெரியாமல் ஒரு மரத்தின் கிளையில் தலை முட்டுகிறது , ஒரு குரங்கு அதனை கண்ணாடி அணியச் சொல்லுகிறது . மற்ற விலங்குகள் கண்ணாடி அணிந்த தன்னை பார்த்து என்ன நினைக்குமோ என்று யோசித்து , அது கண்ணாடி அணிய மறுக்கிறது . பிரச்சனைய சமாளிக்க , "helmet" ஒன்றை போட்டுக்கொள்கிறது .
பிறகு ஒரு சிறுத்தையின் மீது கால் இடறி விழுகிறது. இதன் பிறகும் கண்ணாடி போடாமல் , வாலுக்கு மணி கட்டிக்கொள்கிறது , மற்ற மிருகங்கள் இதன் வருகை தெரிந்துகொள்ள . இப்படி போகிறது அதன் நாட்கள் .
சில வாரங்கள் கழித்துப்பார்த்தால் அதன் பின் புறத்தில் ஒரு தலைகாணி [முள்ளில் விழுந்ததில் இருந்து ], முதுகில் ஒரு ஏணி [ பள்ளத்தில் விழுந்ததில் இருந்து] என பல சுமைகளை கூடவே தூக்கிக் கொண்டு சென்றது.
[ முழுக்கதையினை சொல்லவில்லை இங்கே , கொஞ்சம் சுருக்கியுள்ளேன் , புத்தகத்தில் ஒட்டகச்சிவிங்கி இன்னும் நிறைய இடங்களில் தடுமாறுகிறது !, சுமையும் கூடுகிறது ஒவ்வொரு முறையும் ]
ஆனால் கண்ணாடி மட்டும் அணிய மறுத்தது . இந்த வினோத தோற்றத்தினால் மற்ற மிருகங்கள் அதனை அதிமாகவே கேலி செய்தன, சில பாவமாக பார்த்தன .
இந்த கதை இப்படி போய்க்கொண்டு இருக்க, என் மகள் என் மடி விட்டு இறங்கி ஓடி விட்டாள் . குழந்தைகளின் கவனம் சிறிது நேரத்திற்கு மேல் ஒரு இடத்தில இருக்க மாட்டேன் என்கிறது."Attention span " எனச்சொல்வர் இதனை.
தொலைக்காட்சி மற்றும் இன்டர்நெட் மூலமாக இவர்கள் கார்டூன்ஸ் பார்த்து ,நொடிக்கு பல முறை காட்சிகள் மாரிப்பழகி , கதை கேட்கவோ , சற்று ஆழமாக ஒரே இடத்தில உட்கார்ந்து மனதை செலுத்தும் காரியத்தில் மனம் சேர மாட்டேன் என்கிறது. இதற்க்கு நாமும் காரணம். வேலை அல்லது சோம்பேறித்தனத்தால் , தொலைக்காட்சி போட்டால் அழாமல் இருக்கிறார்கள் என்று பழக்கி விட்டு , இப்படி ஆகிறது. இனி இதை மாற்ற முடிவு செய்து உள்ளேன். இதற்கு என்னுடைய அலுவலக நண்பர் முன்னோடி . வாரத்திற்கு சில மணி நேரங்கள் தான் தொலைக்காட்சி பார்க்க விடுகிறார். முடிந்த வரை இயற்கையுடன் கூடிய சம்பாஷணைகளை பழக்கி விட்டு இருக்கிறார். சைக்கிள் எடுத்துக்கொண்டு அவர்களுடன் ஏரியினை சுற்றி வருவதும் , படம் வரைதலும் , நிறைய புத்தகங்கள் வாசிப்பதும் , ஓடி ஆடி விளையாடவும் பழக்கி இருக்கிறார். அடிப்படையில் அவர்களின் படைப்பாற்றலை ["creative intelligence "] பெருக்குதல் ஆகும் .
அனைவரும் இதனைச் செய்ய வேண்டும்.
கதையைத்தொடுருவோம் . கடைசியில் ஒரு சிறுத்தை ஒரு மரம் ஏறி அந்த ஒட்டகச்சிவிங்கியின் மீது ஒரு கண்ணாடி மாட்டி விடுகிறது.
இப்பொழுது தன்னுடைய கோலத்தை ஒரு நீர் நிலையில் அது பார்க்கிறது .
இவ்வளவு கோமாளியாகவா காட்சியளித்தோம் என்று மற்ற அனைத்தையும் கழற்றி எறிந்து , கண்ணாடி மட்டும் அணிந்த பின , தான் அழகாகவே இருக்கிறோம் என உணர்கிறது. இப்படி அந்த கதை முடிந்தி விட்டது.
கண்ணாடி அணிந்து இருந்தால் தாழ்வு மனப்பான்மை வரக்கூடாது என குழந்தைகளுக்குச் சொல்லவும் , மற்றவர்கள் அப்படி அணிந்து இருந்தால் அதை பற்றி குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள் என தெரிந்து கொள்ளவும் பெற்றோர்களுக்கு சொல்லி முடிக்கிறார்கள் கதையின் ஆசிரியர்கள்
பெஞ்சமின் மற்றும் பில் மக்லீன் .
[ NEW BURLINGTON , LONDON வெளியீடு ].
எனக்கு இந்தக்கதை இன்னும் நிறைய ஆழமானவற்றைச் சொல்லியது. இந்தக்கதையின் மூலமே அந்த ஒட்டகச்சிவிங்கி , கண்ணாடி அணிந்தால் தன்னைப்பற்றி " மற்றவர் என்ன நினைப்பர்" அல்லது " WHAT OTHERS THINK " என்பதே .
நாமும் பல சூழ்நிலைகளில் ஒரு விஷயத்தை அணுகும் பொழுது , சரியான கோணத்தை விட்டு , " மற்றவர் என்ன நினைப்பர்" என்கிற நினைப்பில் வேறு முடிவு எடுக்கிறோம் , அல்லது நமது சந்தோஷங்களை குறைத்துக்கொள்கிறோம் . இதனால் பாரம் தான் கூடுகிறது .
உண்மையில் ,பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நம்மை பற்றி சிந்திக்க எவர்க்கும் நேரம் இருப்பதில்லை அல்லது சரியானதைச் செய்தால் [ கண்ணாடி அணிந்துகொண்டால் !] பலர் நமக்காக
மகிழ்ச்சியே அடைவர் . மற்றவரை பாதிக்காத வகையில் எடுக்கும் எந்த முடிவும் சரியானதே என்பது என் கண்ணோட்டம் .
இன்னொரு வகையில் பார்த்தால் , கண் தெரியாதது என்பது அந்த ஒட்டகச்சிவிங்கியின் குறைபாடு. அதற்க்குண்டான தீர்வை அது புறத்தில் தேடுகிறது.நமது கண்ணோட்டம் சரியாக இருந்தால் மற்றது தானாகவே விளங்கும்.
பிள்ளைக்கு கதை சொல்லப்போய் எனக்கும் சிலவற்றை வலியுரித்திச்சென்றது இந்தக்கதை .
சரியான கண்ணாடி அணிந்து வாழ்கையினை தொடருவோம்
வேலை இல்லாத வாரக்கடைசிகள் அபூர்வமாகிப்போன துறையில் நானும் இருப்பதால் , சமீபத்திய இரண்டு மாதங்கள் மிகவும் இனிமையாகக் கழிந்தது , வேலை இல்லாததால். பிடித்த விஷயங்களை செய்வதும் , தூங்குவதும் குழந்தையுடன் இன்னும் அதிக நேரம் செலவிடுவதற்கும் நல்ல வாய்ப்பாக இருந்தது.
நாளையில் இருந்து திரும்பவும் ஓட்டம் தொடங்கப் போகிறது என நினைத்துக்கொண்டே படுத்து இருக்கையில், மகள் எப்பொழுதும் போல ,
"bookchi bookchi " என்று ஒரு கதை புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து படம் பார்த்து கதை சொல்லச் சொன்னாள் .
மேல சொன்ன தலைப்புடன்[ ஆங்கிலத்தில்;தான் , " THE near sighted giraffe "] இருந்த அழகான படங்களுடன் கூடிய அந்த புத்தகத்தை நான் பல நாட்கள் பார்த்து உள்ளேன் , ஆனால் இந்த கதையினை படித்துச் சொன்னது கிடையாது.
ஒரு காட்டில் ஒரு ஒட்டகச்சிவிங்கிக்கு கிட்டப்பார்வை .
காட்சிகள் சரிவர தெரியாமல் நிறைய சங்கடங்கள். கண் தெரியாமல் ஒரு மரத்தின் கிளையில் தலை முட்டுகிறது , ஒரு குரங்கு அதனை கண்ணாடி அணியச் சொல்லுகிறது . மற்ற விலங்குகள் கண்ணாடி அணிந்த தன்னை பார்த்து என்ன நினைக்குமோ என்று யோசித்து , அது கண்ணாடி அணிய மறுக்கிறது . பிரச்சனைய சமாளிக்க , "helmet" ஒன்றை போட்டுக்கொள்கிறது .
பிறகு ஒரு சிறுத்தையின் மீது கால் இடறி விழுகிறது. இதன் பிறகும் கண்ணாடி போடாமல் , வாலுக்கு மணி கட்டிக்கொள்கிறது , மற்ற மிருகங்கள் இதன் வருகை தெரிந்துகொள்ள . இப்படி போகிறது அதன் நாட்கள் .
சில வாரங்கள் கழித்துப்பார்த்தால் அதன் பின் புறத்தில் ஒரு தலைகாணி [முள்ளில் விழுந்ததில் இருந்து ], முதுகில் ஒரு ஏணி [ பள்ளத்தில் விழுந்ததில் இருந்து] என பல சுமைகளை கூடவே தூக்கிக் கொண்டு சென்றது.
[ முழுக்கதையினை சொல்லவில்லை இங்கே , கொஞ்சம் சுருக்கியுள்ளேன் , புத்தகத்தில் ஒட்டகச்சிவிங்கி இன்னும் நிறைய இடங்களில் தடுமாறுகிறது !, சுமையும் கூடுகிறது ஒவ்வொரு முறையும் ]
ஆனால் கண்ணாடி மட்டும் அணிய மறுத்தது . இந்த வினோத தோற்றத்தினால் மற்ற மிருகங்கள் அதனை அதிமாகவே கேலி செய்தன, சில பாவமாக பார்த்தன .
இந்த கதை இப்படி போய்க்கொண்டு இருக்க, என் மகள் என் மடி விட்டு இறங்கி ஓடி விட்டாள் . குழந்தைகளின் கவனம் சிறிது நேரத்திற்கு மேல் ஒரு இடத்தில இருக்க மாட்டேன் என்கிறது."Attention span " எனச்சொல்வர் இதனை.
தொலைக்காட்சி மற்றும் இன்டர்நெட் மூலமாக இவர்கள் கார்டூன்ஸ் பார்த்து ,நொடிக்கு பல முறை காட்சிகள் மாரிப்பழகி , கதை கேட்கவோ , சற்று ஆழமாக ஒரே இடத்தில உட்கார்ந்து மனதை செலுத்தும் காரியத்தில் மனம் சேர மாட்டேன் என்கிறது. இதற்க்கு நாமும் காரணம். வேலை அல்லது சோம்பேறித்தனத்தால் , தொலைக்காட்சி போட்டால் அழாமல் இருக்கிறார்கள் என்று பழக்கி விட்டு , இப்படி ஆகிறது. இனி இதை மாற்ற முடிவு செய்து உள்ளேன். இதற்கு என்னுடைய அலுவலக நண்பர் முன்னோடி . வாரத்திற்கு சில மணி நேரங்கள் தான் தொலைக்காட்சி பார்க்க விடுகிறார். முடிந்த வரை இயற்கையுடன் கூடிய சம்பாஷணைகளை பழக்கி விட்டு இருக்கிறார். சைக்கிள் எடுத்துக்கொண்டு அவர்களுடன் ஏரியினை சுற்றி வருவதும் , படம் வரைதலும் , நிறைய புத்தகங்கள் வாசிப்பதும் , ஓடி ஆடி விளையாடவும் பழக்கி இருக்கிறார். அடிப்படையில் அவர்களின் படைப்பாற்றலை ["creative intelligence "] பெருக்குதல் ஆகும் .
அனைவரும் இதனைச் செய்ய வேண்டும்.
கதையைத்தொடுருவோம் . கடைசியில் ஒரு சிறுத்தை ஒரு மரம் ஏறி அந்த ஒட்டகச்சிவிங்கியின் மீது ஒரு கண்ணாடி மாட்டி விடுகிறது.
இப்பொழுது தன்னுடைய கோலத்தை ஒரு நீர் நிலையில் அது பார்க்கிறது .
இவ்வளவு கோமாளியாகவா காட்சியளித்தோம் என்று மற்ற அனைத்தையும் கழற்றி எறிந்து , கண்ணாடி மட்டும் அணிந்த பின , தான் அழகாகவே இருக்கிறோம் என உணர்கிறது. இப்படி அந்த கதை முடிந்தி விட்டது.
கண்ணாடி அணிந்து இருந்தால் தாழ்வு மனப்பான்மை வரக்கூடாது என குழந்தைகளுக்குச் சொல்லவும் , மற்றவர்கள் அப்படி அணிந்து இருந்தால் அதை பற்றி குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள் என தெரிந்து கொள்ளவும் பெற்றோர்களுக்கு சொல்லி முடிக்கிறார்கள் கதையின் ஆசிரியர்கள்
பெஞ்சமின் மற்றும் பில் மக்லீன் .
[ NEW BURLINGTON , LONDON வெளியீடு ].
எனக்கு இந்தக்கதை இன்னும் நிறைய ஆழமானவற்றைச் சொல்லியது. இந்தக்கதையின் மூலமே அந்த ஒட்டகச்சிவிங்கி , கண்ணாடி அணிந்தால் தன்னைப்பற்றி " மற்றவர் என்ன நினைப்பர்" அல்லது " WHAT OTHERS THINK " என்பதே .
நாமும் பல சூழ்நிலைகளில் ஒரு விஷயத்தை அணுகும் பொழுது , சரியான கோணத்தை விட்டு , " மற்றவர் என்ன நினைப்பர்" என்கிற நினைப்பில் வேறு முடிவு எடுக்கிறோம் , அல்லது நமது சந்தோஷங்களை குறைத்துக்கொள்கிறோம் . இதனால் பாரம் தான் கூடுகிறது .
உண்மையில் ,பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நம்மை பற்றி சிந்திக்க எவர்க்கும் நேரம் இருப்பதில்லை அல்லது சரியானதைச் செய்தால் [ கண்ணாடி அணிந்துகொண்டால் !] பலர் நமக்காக
மகிழ்ச்சியே அடைவர் . மற்றவரை பாதிக்காத வகையில் எடுக்கும் எந்த முடிவும் சரியானதே என்பது என் கண்ணோட்டம் .
இன்னொரு வகையில் பார்த்தால் , கண் தெரியாதது என்பது அந்த ஒட்டகச்சிவிங்கியின் குறைபாடு. அதற்க்குண்டான தீர்வை அது புறத்தில் தேடுகிறது.நமது கண்ணோட்டம் சரியாக இருந்தால் மற்றது தானாகவே விளங்கும்.
பிள்ளைக்கு கதை சொல்லப்போய் எனக்கும் சிலவற்றை வலியுரித்திச்சென்றது இந்தக்கதை .
சரியான கண்ணாடி அணிந்து வாழ்கையினை தொடருவோம்