சிட்டுக்குருவி பார்த்தீர்களா ??
சமூக வலைத்தளங்களிலும் , ஊடகங்களிலும் சிட்டுக்குருவி செல் போன் டவரினால் பாதிக்கப்படுகிறது என்று படிக்கிறோம் .
தண்ணீர் இன்றி தவிக்கிறது என்றும் ..
தனித்தனியாக பார்த்தாலும் , மொத்தமாக பார்த்தாலும் காரணிகள் மனிதனையே சுட்டிக்காட்டும் .
சமீபத்தில் என் சித்தாப்பா ஒரு செய்தியினை பகிர்ந்து இருந்தார்கள் . வேடந்தாங்கலில் இந்த வருடம் பறவை அவ்வளவாக காணவில்லை என்று . அக்கா குடும்பம் சென்ற வருடம் சென்று வந்து ஒரு அளவிற்கு பறவைககள் இருந்ததாக சொன்னார்கள் .ஆனால் நகரமயமாகுதல் வெகு தொலைவில் இல்லை என்றும் ....
.இந்த concrete jungle தனை அவை விரும்புதல் இல்லை தானே....உண்மையான காட்டையும் நீர் நிலைதனைகளையுமே அவை விரும்பும் என்பதை யார் சொல்லியும் தெரிய வேண்டாம். பிளாஸ்டிக் குப்பைகள் கண்டால் நமக்கே பிடிப்பது இல்லை..கால்கள் உள்ள நமக்கே அங்கு இருந்து வேகமாய் நடந்து கடந்து விட மனம் ஏங்கும் ....ரெக்கை உள்ள அவைகள் இன்னொரு இடம் பார்க்க கேக்கவா வேண்டும்....
திரும்பத்திரும்ப என் பதிவுகளில் எங்கள் ஆதம்பாக்கம் பற்றி வந்து போய்க்கொண்டே தான் இருக்கும்.எங்கள் area என்பதால் மட்டும் இல்லை.
சென்னை இல்லாத ஒரு சென்னையாக அது இருந்ததாலேயே ...இப்பொழுதும் கொஞ்சம் .அகலமான பாதைகள் இல்லாததால் வேளச்சேரி போன்று வளர்ச்சி அடையவில்லை ...என்னை பொறுத்த வரையில் இது நல்லதே .இன்னும் கொஞ்சம் புகை குறைந்த காற்றை சுவாசிக்க முடிகிறது அங்கே ...நகரத்தின் இரைச்சலும் கம்மியே ...அந்த எரியும் இன்னும் இருக்கிறது . touch wood .
இந்த ப்பதிவில் ஆதம்பாக்கம் ஏன் வந்தது என்பது புரிந்திருக்கும் .
பறவைகளே காரணம் .
முன்பெல்லாம் வீட்டினுள்ளே குருவிகள் உண்டு .தாத்தாவின் அறையில் கூடுகளும் உண்டு . fan மீது இளைப்பாறி ,வாயில் வைக்கோல் சுமத்துக் கொண்டு பறந்தும் , ஜன்னல் கம்பிகளில் தவ்வியும் , அதன் கூட்டைக்கட்டியும் அடைகாத்தும் வந்த அழகு ,காலம் கடந்தும் உறைந்து நிற்கிறது மனதிலும் காலத்தின் அழகியலிலும் .
ஜன்னல் வழி இந்தபக்கம் பார்த்தால் கரண்ட் கம்பிகளில் தூக்கணாங்குருவி கூடுகள் இருந்த காலமும் உண்டு. compound சுவர் இல்லாத காலத்தில் , செடிகளால் தான் நெய்யப்பட்டு இருக்கும் எங்கள் தடுப்புச்சுவர் .சின்ன சின்ன வெள்ளை நிறத்தில் அழகான பறவை முட்டைகளை நானும் பார்த்து உள்ளேன் ...அதன் அம்மா அப்பா நாங்கள் இருந்தால்
சில அடிகள் தள்ளி காத்துக்கொண்டு இருக்கும்.மனித வாசம் படாமல்
இருக்க வேண்டும் என்று என் அம்மா அப்பா சொல்வதுண்டு. அதனால் தொட மனம் இருந்தது இல்லை....அந்தச்ச்சணம் அப்படியே மின்னிப்போகிறது இதை type செய்துக்கொண்டு இருக்கும் பொழுது கூட .
குண்டு குண்டான செவந்த இட்லிப்பூவில் zzzzzzzz என்ற சத்தத்துடன் ரீங்காரம் இட்டுக்கொண்டே ஹெலிகாப்ட்டர் போல ஒரே இடத்தில தேன் பருகும் தேன்சிட்டு இருந்த காற்றின் தடம் எங்கே இப்போது ?
வீட்டின் பின் புறம் ஏரியின் மிகப்பக்கம் ....
அடிக்கடி ஏரித்தண்ணி வீட்டினுள் வரும் ,மழைக்கலாங்களில் சொன்னேன் .
வீட்டின் wash basin இருக்கும் இடத்தில் இருந்து பூ போட்ட ஜாலி வழியாக பார்த்தால் , மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் king fisher பறவை.
இப்போதெலாம் " king fisher " பீர் விளம்பரத்தில் தான் அந்தப்பேரை கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது .எங்கப் பார்க்க ?கூகுளில் தேடி வைக்கிறேன் .
காலையில் சீக்கிரம் எழாத நான் சீக்கிரம் எழும் காலமும் இருந்தது ஒரு
சீசனில் . நீண்டு உயர்ந்த அகத்திக்கீரை மரத்தின் பூக்களை அழகாக சுவைத்துத் துப்பிப் போடும் அழகை பார்க்க எழுந்த காலம் .
இதைத் தவிர இன்னும் பெயர் சொல்லத்தெரியாத நிறைய ப்பறவைகள் உண்டு. ஆதம்பாக்கம் எரி ஒரு சிறிய வேடந்தாங்கலாக இருந்து இருக்கலாம், இப்பொழுது இல்லை.
வீட்டின் முகவரி " physical address " மட்டும் குரியிடுவதில்லை . நினைவுகளும் தான் பெரும்பாலும் .இந்தப்பறவைகளை நான் பார்த்து நிறைய நிறைய வருடங்கள் ஆகிறது . இவை இல்லாமல் எங்கள் வீடு தன் அடையாளத்தை கொஞ்சம் தொலைத்துதான் இருக்கிறது . இந்தப்பதிவின் மூலம் கொஞ்சம்
அதை நிரப்பி விட்டு வந்தேன், நினைப்பில் வாயிலாக .
பறவைகளே மீண்டும் வாருங்கள்.....
சமூக வலைத்தளங்களிலும் , ஊடகங்களிலும் சிட்டுக்குருவி செல் போன் டவரினால் பாதிக்கப்படுகிறது என்று படிக்கிறோம் .
தண்ணீர் இன்றி தவிக்கிறது என்றும் ..
தனித்தனியாக பார்த்தாலும் , மொத்தமாக பார்த்தாலும் காரணிகள் மனிதனையே சுட்டிக்காட்டும் .
சமீபத்தில் என் சித்தாப்பா ஒரு செய்தியினை பகிர்ந்து இருந்தார்கள் . வேடந்தாங்கலில் இந்த வருடம் பறவை அவ்வளவாக காணவில்லை என்று . அக்கா குடும்பம் சென்ற வருடம் சென்று வந்து ஒரு அளவிற்கு பறவைககள் இருந்ததாக சொன்னார்கள் .ஆனால் நகரமயமாகுதல் வெகு தொலைவில் இல்லை என்றும் ....
.இந்த concrete jungle தனை அவை விரும்புதல் இல்லை தானே....உண்மையான காட்டையும் நீர் நிலைதனைகளையுமே அவை விரும்பும் என்பதை யார் சொல்லியும் தெரிய வேண்டாம். பிளாஸ்டிக் குப்பைகள் கண்டால் நமக்கே பிடிப்பது இல்லை..கால்கள் உள்ள நமக்கே அங்கு இருந்து வேகமாய் நடந்து கடந்து விட மனம் ஏங்கும் ....ரெக்கை உள்ள அவைகள் இன்னொரு இடம் பார்க்க கேக்கவா வேண்டும்....
திரும்பத்திரும்ப என் பதிவுகளில் எங்கள் ஆதம்பாக்கம் பற்றி வந்து போய்க்கொண்டே தான் இருக்கும்.எங்கள் area என்பதால் மட்டும் இல்லை.
சென்னை இல்லாத ஒரு சென்னையாக அது இருந்ததாலேயே ...இப்பொழுதும் கொஞ்சம் .அகலமான பாதைகள் இல்லாததால் வேளச்சேரி போன்று வளர்ச்சி அடையவில்லை ...என்னை பொறுத்த வரையில் இது நல்லதே .இன்னும் கொஞ்சம் புகை குறைந்த காற்றை சுவாசிக்க முடிகிறது அங்கே ...நகரத்தின் இரைச்சலும் கம்மியே ...அந்த எரியும் இன்னும் இருக்கிறது . touch wood .
இந்த ப்பதிவில் ஆதம்பாக்கம் ஏன் வந்தது என்பது புரிந்திருக்கும் .
பறவைகளே காரணம் .
முன்பெல்லாம் வீட்டினுள்ளே குருவிகள் உண்டு .தாத்தாவின் அறையில் கூடுகளும் உண்டு . fan மீது இளைப்பாறி ,வாயில் வைக்கோல் சுமத்துக் கொண்டு பறந்தும் , ஜன்னல் கம்பிகளில் தவ்வியும் , அதன் கூட்டைக்கட்டியும் அடைகாத்தும் வந்த அழகு ,காலம் கடந்தும் உறைந்து நிற்கிறது மனதிலும் காலத்தின் அழகியலிலும் .
ஜன்னல் வழி இந்தபக்கம் பார்த்தால் கரண்ட் கம்பிகளில் தூக்கணாங்குருவி கூடுகள் இருந்த காலமும் உண்டு. compound சுவர் இல்லாத காலத்தில் , செடிகளால் தான் நெய்யப்பட்டு இருக்கும் எங்கள் தடுப்புச்சுவர் .சின்ன சின்ன வெள்ளை நிறத்தில் அழகான பறவை முட்டைகளை நானும் பார்த்து உள்ளேன் ...அதன் அம்மா அப்பா நாங்கள் இருந்தால்
சில அடிகள் தள்ளி காத்துக்கொண்டு இருக்கும்.மனித வாசம் படாமல்
இருக்க வேண்டும் என்று என் அம்மா அப்பா சொல்வதுண்டு. அதனால் தொட மனம் இருந்தது இல்லை....அந்தச்ச்சணம் அப்படியே மின்னிப்போகிறது இதை type செய்துக்கொண்டு இருக்கும் பொழுது கூட .
குண்டு குண்டான செவந்த இட்லிப்பூவில் zzzzzzzz என்ற சத்தத்துடன் ரீங்காரம் இட்டுக்கொண்டே ஹெலிகாப்ட்டர் போல ஒரே இடத்தில தேன் பருகும் தேன்சிட்டு இருந்த காற்றின் தடம் எங்கே இப்போது ?
வீட்டின் பின் புறம் ஏரியின் மிகப்பக்கம் ....
அடிக்கடி ஏரித்தண்ணி வீட்டினுள் வரும் ,மழைக்கலாங்களில் சொன்னேன் .
வீட்டின் wash basin இருக்கும் இடத்தில் இருந்து பூ போட்ட ஜாலி வழியாக பார்த்தால் , மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் king fisher பறவை.
இப்போதெலாம் " king fisher " பீர் விளம்பரத்தில் தான் அந்தப்பேரை கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது .எங்கப் பார்க்க ?கூகுளில் தேடி வைக்கிறேன் .
காலையில் சீக்கிரம் எழாத நான் சீக்கிரம் எழும் காலமும் இருந்தது ஒரு
சீசனில் . நீண்டு உயர்ந்த அகத்திக்கீரை மரத்தின் பூக்களை அழகாக சுவைத்துத் துப்பிப் போடும் அழகை பார்க்க எழுந்த காலம் .
இதைத் தவிர இன்னும் பெயர் சொல்லத்தெரியாத நிறைய ப்பறவைகள் உண்டு. ஆதம்பாக்கம் எரி ஒரு சிறிய வேடந்தாங்கலாக இருந்து இருக்கலாம், இப்பொழுது இல்லை.
வீட்டின் முகவரி " physical address " மட்டும் குரியிடுவதில்லை . நினைவுகளும் தான் பெரும்பாலும் .இந்தப்பறவைகளை நான் பார்த்து நிறைய நிறைய வருடங்கள் ஆகிறது . இவை இல்லாமல் எங்கள் வீடு தன் அடையாளத்தை கொஞ்சம் தொலைத்துதான் இருக்கிறது . இந்தப்பதிவின் மூலம் கொஞ்சம்
அதை நிரப்பி விட்டு வந்தேன், நினைப்பில் வாயிலாக .
பறவைகளே மீண்டும் வாருங்கள்.....
No comments:
Post a Comment