Friday, December 26, 2014

கூலாக [MR cool ] இருப்பது எப்படி ..??

கூலாக  இருப்பது  எப்படி ..??

"He is a cool dude"

இதை  நாம்  வாழ்க்கையில்  சில முறையேனும்  கேட்டு இருப்போம் ...
சிவாஜி  படத்தில்  கூட ரஜினி  இதனைப்  பிரயயோகப்படுத்தி  இன்னும்  பிரசித்தமானது  நினைவிருக்கும் .

இந்தத்தலைமுறை   யுவதிகளிக்கு  இப்படிப்பட்ட  கூல்  "dude" களைத்தான்   பிடிக்கும்  போல .

சரி கூல்  என்றால்  என்ன .ஆங்கிலத்தில்  " being  cold " என்று  சொல்வோமே  , அதில் இருந்துத்தான்  வந்ததோ .அதாவது  , ஒரு உணர்ச்சி இன்றி  , மறக்கட்டைத்தனமாக  நடந்துக்கொள்ளுதல் கொள்ளுதல்  எனலாம் .

ஆனால்  நாம்  பேசும்  இந்த   கூல்னஸ் இதிலிருந்து  கொஞ்சம் வேறுபட்டது  அதற்கும்  பெரிதாக  அலட்டிக்கொள்ளாமல் ,
விளைவுகளைப்பற்றி  கவலை இன்றி  இருப்பது  எனச்சொல்லலாம் .
அப்போ  இது மரகட்டைத்தனம்   தானே  என்று  கேட்பது  புரிகிறது.அதாவது  எப்படி சொல்லுவது  ,...மரக்கட்டைத்தனம்   மாதிரி தெரியும் ஆனால்  முழுவதும் இல்லை....இதில்  ஒரு  குறும்புத்தனம்  கூட  இருக்கும்.

இந்தக்  கூல்னஸ்   தான் தெலுங்கு  நடிகர்  பவன் கல்யாண்  ஹிட்  ஆகக்காரணம் . கூல் என்றதும்   எனக்கு  சட்டுன்னு  அந்த  நடிகர்  தான்  நியாபகம்  வருகிறார் .
தமிழில்  , போக்கிரி  விஜய் கதாபாத்திரம் இதைத்தான்  செய்யும் [ தெலுங்கில்  மகேஷ்  பாபு ]செய்யாமல்  செய்யணும்   , செஞ்சா  அதில்  கூல்னஸ்   போய்விடும் .கொஞ்சம்  கிட்ட  வந்துட்டேன்னு  நினைக்கறேன் .

   கூல்னஸ்    பல  விதமான  செயல்களின்  வெளிப்பாடு .சம்பாஷனை  [ dialogues ] , உடல்  மொழி  [ body  language ]  , மற்றும்  ஒரு  பேச்சுக்கோ நிகழ்விற்கோ  இயல்பாக   கொடுக்கப்படும்  எதிர் பேச்சோ  அல்லது  எதிர்  வினையோ [ reacting  ] சற்றே  குறைந்து  அல்லது  ரொம்பவே  குறைந்து  , ஏதோ  காது  குடைந்துக்கொண்டே  பேசுவது  போல  பேசுவதோ  , நடந்துக்  கொள்வதோ கூல்னஸ்   எனச்சொல்லலாம்  . உங்களுக்கே  இது  புரியும்  , தெரியும் , சரி  ஒரு  முன்னுரை  கொடுத்தாதானே சரிப்படும் .

இதை சிலருக்கு  பிறவியிலேயே வந்து  விடுகிறது. இது  தான்
born  cool "  வகை . இவர்கள் தான்  அல்வாவில்  திருநெல்வேலி  இருட்டுக்கடை  அல்வா  , தூத்துக்குடி  மக்கரோனி  , விருதுநகர் ரயில்வே  ஸ்டேஷன்  மசால்  வடை  , கோவில்பட்டி   கடலை  மிட்டாய்  , மற்றும்  பரங்கிப்பேட்டை  அல்வா
அல்லது  எங்கள்  கோவை  GCT  அருகில்  கிடைக்கும் தெருவோரக்கடை  வீச்சு பரோட்டா வகை .[நான் மிகவும்  ரசித்த  சிலதைத்தானே சொல்ல  முடியும் ]

எதற்கும்  சட்டை செய்ய  மாட்டார்கள் .
என்  நண்பன்  ஒருவன்   இந்த வகைதான் . கம்பெனி  யில்  layoff ,  குழந்தை வளர்ப்பு  , வருங்கால  சேமிப்பு , IT  துறையில்  45  வயது  வரையிலாவது  வேலையினைக்  காப்பற்றிக்கொள்ளவேண்டும்  என்ற  கவலை  , பெங்களூர்  டிராபிக்  , இப்படி  எந்தத்  தலைப்பை  பேசினாலும் , பெரிதாக  அலட்டி கொள்ளமாட்டான் . பார்த்துக்கலாம்  என்ற  பதில் வரும்  , அது  கூட  பரவாயில்லை ," க்கு க்கு க்கு" என்ற  ஒரு  சிரிப்பு ஒன்றை சிரிப்பான் .அதை  நான்  எப்படி  ப்ளாகில்  விவரிக்க.கிட்டத்தட்ட  வில்லன்  கோட்டா  சீனிவாச  ராவின்  சிரிப்பைப்போன்றுதான்  இருக்கும்  அவனது சிரிப்பு .
நல்ல  கம்பெனியில்  வேலை  பார்த்துக்கொண்டு  இருப்பான் . திடீர்னு  ஒரு  நாள்  பேப்பர்  போட்டுடுவான் [ அதான்  resignation ]  தாவிக்கொண்டே  இருப்பான்  2 வருடங்களுக்கொரு  முறை  . சில  சமையம்  ஆபீஸ்  கான்டீன்ல இட்லி  சூடா  இல்லைன்னு  கூட .ஒரு  பேச்சுக்கு  சொன்னேன்.
டேய்   ரொம்பத்தாவதடா   , நாளைக்கு  பிரெச்சனை  வரும்  என்று  சொன்னால் , அதற்கும்  அதே  சிரிப்புதான் . காற்றுள்ள  வரை  தூற்றிக்கொள்  வோம்  என்று  தத்துவம்  வேற  சொல்லி  கடுப்படிப்பான் .கம்பெனி  வருடாந்திர  அப்ரைசல்  பற்றி  அலட்டிக்கொள்ளும்  எல்லோரும்  இவனிடம்  தான்  பாடம்  எடுக்க  வேண்டும் .இவனுக்கு  என்ன   ரேடிங்  கொடுத்தார்கள்  என்றெல்லாம்  எனக்குத்தெரியாது  , நல்ல  வேலை  பார்ப்பான்  என்று  தெரியும்  , அனால்
என்னக்கொடுத்தாலும்  கவலைப்பட  மாட்டான் .
எல்லாத்துக்கும்  ஒரே  பதில்தான் . " பிடிக்கலைன்னா  பேப்பர்  போட்டுடுவோம் , க்கு  க்கு க்கு ".

இதைத்தவிர  ஒரு  வரியினை  நான்  இது வரை  தணிக்கை  செய்தே  போட்டு  வருகிறேன் . அதையும்  உடைத்து விடுவோம் ,

" பிடிக்கலைன்னா  பேப்பர்  போட்டுடுவோம்..இருக்கவே  இருக்கு  என்னக்கு  டைரக்டர்  கனவு ,,,,க்கு  க்கு  க்கு "


IT  துறையில்  பெரிய கம்பெனி  ஒன்றில் கடந்த  சில  வருடங்கலாத்தான்  paper  போடாமல்  இருந்து  வந்தான்  . சென்னையில்  நம்ம  அண்ணாச்சி  கம்பெனியில்   முன்பு  ஒரு முறை  இருந்தான் . திடீர்னு  ஒரு  நாள்  , நம்ம  ஒளி  ஓவியர்  தங்கர்  சாரின்  வீட்டிற்கு  போய்  வந்தேன்னு  போன்  செய்தான் .
என்னடான்னு  கேட்டா , " அழகி  படம்  பார்த்து   மெரிசலாயிட்டேன்   .....சரியாய்  தூக்கம்  வர  மாட்டேன்கிறது. என்ன  வேலை  பார்த்துக்கிட்டு  இருக்கிறோம் .வாழ்ந்தா  இது  போல  ஒரு  படம் எடுத்தாகணும்   ..அதான் தங்கர்  சாரட்ட  அச்சிச்டன்ட்  ஆகா  சேர கேக்கப்போய்  இருந்தேன்னு  சொன்னான் .

இந்தத்தொழில்  எல்லாம்  சரிப்பட்டு  வராது  , நீங்க நல்ல  நிலையில்  இருக்கீங்க , பொழப்பை  பாருங்கன்னு  சொல்லியனுப்பியதாகச் சொன்னான் .

நம்ம  சுத்தி  நிறைய  கதை  இருக்கு   , எடுக்கலாம்னு  சொன்னனான் .
கலை  உலகத்திற்கு நாளை கிடைத்து  இருக்கவேண்டிய  பொக்கிஷம்  ஒன்றை  இழந்து விட்டோம் நாம் . பையனிடம்  கை வசம்  சில  ஸ்க்ரிப்டுகள்  உண்டு .  கத்தி  படம்  பிறகு , ரொம்ப உஷாராக  கதையினை    "copy  rights " வாங்கிய  பிறகு  வெளியே  சொல்லப்போவதாக  சொன்னான் .ரொம்பத்தெளிவு  .


இது  இப்படி  இருக்க  , அவனுக்கு  திருமண  சமயத்தில்  பெண்  பார்க்கும்  சமயத்தில்  ஒரு முறை  பேசும் பொழுது  ,   ஜாதகம்  எல்லாம்   பொருந்தி  , பெண்  பிடித்துப்போய்  , ஒரு  பெண்ணை  நேரில் பார்த்து பேசி  வந்ததாகச்சொன்னான்  . டேய் , உன்  சினிமா  ப்ளான்ஸ்  எல்லாம்  சொல்லி  பொண்ணைத்  terror  ஆக்கிடாதடா   futurela என்று  சொல்லி  முடிப்பதற்குள் , அதேப்படி  சொல்லாமல்  இருப்பேன், நாளைய  ப்ளான்ஸ்  பத்தி  சொல்லியாகணும்ல  , அப்புறம்   ஏமாத்தி
பண்ணிவச்சுட்டாங்கல்லன்னு  சொல்லிட்டா ? வென்று   சொல்லி   , அவனுடைய க்கு  க்கு  க்கு  உடன்  முடித்தான் . சரிதான்  போ ன்னு  நினைக்கையில்  , சில  மாதங்களுக்கு  பிறகு  , அவன்  கல்யாண  சாப்பாடும்  சாப்பிட்டு  வந்தேன் .யார் அந்த  புண்ணியவதி  என்று  பார்க்கும்  ஆவல்  தான்  தூக்கலாக  இருந்தது  . அதன்  பிறகு  இது  வரை  வேறு  எந்த  டைரக்டர் இடமும்  சென்று  சேரவில்லை .

" இனிமேல  அசிச்டன்ட்  டைரக்டர்  எல்லாம்  வேணாம் . straightaa  டைரக்டர்  தான் . கெளதம்  மேனன்  போல engineering  படிச்ச  டைரக்டர் . ஸ்கிரிப்ட்  தான்  மெயின் , assistant  directors  வச்சு  ஒரு  படத்துல  மத்ததை  பாத்துக்கறேன் " என்று  சில மாதங்களுக்கு  முன்பு  பேசிய  போது   சொன்னான் .

எப்ப  சொன்னான்னு  சொல்லலையே , "வேலை  மாத்தி  சென்னை  வந்துட்டேன்  திரும்ப . ஆபீஸ்  போய்  வர  4 மணி  நேரம்  ஆகுது  , அதான்  O  M  R  ல   இருக்கிற  ஆபீஸ்க்கு   வர  முடியலை  , முதுகு   வலி  வேற , அதான் வேற  ப்ரொஜெக்ட்ல போட  சொல்லி  இருக்கேன் , சரி  அப்போ  சம்பளம்  கிடையாது  ன்னு  சொன்னங்க . தட்ஸ்  ok  .....நமக்கு  என்ன  housing  loan  ஆ  என்ன ?  க்கு க்கு க்கு " என்றான் .


சும்மா  வெளில  கூல்  dude  என்று  சீன்  போட்டு  விட்டு  , தனக்குன்னு  வந்தா , ஐயோ  யம்மான்னு  ஊரைக்கூட்டும்  பார்ட்டிகளையும்  நான்  பார்த்து  உள்ளேன் .நீங்களும்  பார்த்து  இருப்பீர்கள் .

நம்ப தோஸ்து எப்படி !

இந்தக்காலத்துல  பொழைப்ப  ஓட்ட  , BP  இல்லாமல்  இருக்க  இவனிடம்  இருந்து  தான்  பாடம்  பயில  வேண்டும் .

பக்கத்துல  பாம்  வெடிச்சா  கூட , அசால்ட்டா   ஒரு  எட்டு  எட்டிப்பாத்துட்டு  , தட்டிட்டு  போற  பார்டி .

போன  முறை  அவனுடைய  அம்மாவைப்பார்த்த  பொழுது  கூட  , என்னமோ  உளறிகிட்டு இருக்கான்பா , சீரியசாவே   இருக்கமாட்டேன்றான்  என்று  ஆதங்கப்பட்டார்கள் . நானும்  என்  நண்பனை  குறை  சொல்லாதீர்கள் என்று  சொல்லிவந்தேன்  ,சிரித்தவாறே  .

பொல்லாதவன்  படத்தில்  வரும்  தனுஷ்  போல  , "அவனை எல்லாம்  அப்படியே  விட்டுடணும்  "  .

jokes  apart  ,என்னைப்பொருத்தவரை  ஒரு  வாத்து  போல  தண்ணீருள்  விகவும்  வீரியமாக கால்களை  வீசிக்கொண்டு  , வெளியில்  சலனமின்றி  மிதக்கும் நிலைதான்  கூல்னஸ்    .
தயார்நிலையில்  இல்லாமல்  வெளியில்  மட்டும்  சீன்  போட்டு  , பிறகு  கீழே  விழுவது  அன்று .

இதில்  என் நண்பன்  முதலாவது . இத்தனை  இருப்பினும்  14 வருடங்களாக  IT  துறையில்  நல்லபடியாக  வேலை  பார்த்து  வருவதால்  சொல்கிறேன் .
சரக்கு  இல்லாமலா ??

முதலிலே  நான்  சொன்ன  பொதுவான  பிரச்சனைகளை [  வேலை  சார்ந்த நிலையின்மை , டிராபிக்  இப்படி]  அவனுக்கே  உரிய  விதத்தில்  டென்ஷன்  அற்று  கையாளும்  விதமே  கூல்  என்கிறேன் .அதுதான்  சரியான  வழி  என்று கேட்டால் , எனக்கு  பதில்  இல்லை  , அவரவருக்கு  அவர் அவர் வழி  ,
சந்தோஷமாக  மற்றவர்களை சீண்டாமல் வாழ்க்கையினை அதன்  போக்கில்  வாழ்வதைச்சொல்கிறேன் .....





No comments:

Post a Comment