கூலாக இருப்பது எப்படி ..??
"He is a cool dude"
இதை நாம் வாழ்க்கையில் சில முறையேனும் கேட்டு இருப்போம் ...
சிவாஜி படத்தில் கூட ரஜினி இதனைப் பிரயயோகப்படுத்தி இன்னும் பிரசித்தமானது நினைவிருக்கும் .
இந்தத்தலைமுறை யுவதிகளிக்கு இப்படிப்பட்ட கூல் "dude" களைத்தான் பிடிக்கும் போல .
சரி கூல் என்றால் என்ன .ஆங்கிலத்தில் " being cold " என்று சொல்வோமே , அதில் இருந்துத்தான் வந்ததோ .அதாவது , ஒரு உணர்ச்சி இன்றி , மறக்கட்டைத்தனமாக நடந்துக்கொள்ளுதல் கொள்ளுதல் எனலாம் .
ஆனால் நாம் பேசும் இந்த கூல்னஸ் இதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டது அதற்கும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் ,
விளைவுகளைப்பற்றி கவலை இன்றி இருப்பது எனச்சொல்லலாம் .
அப்போ இது மரகட்டைத்தனம் தானே என்று கேட்பது புரிகிறது.அதாவது எப்படி சொல்லுவது ,...மரக்கட்டைத்தனம் மாதிரி தெரியும் ஆனால் முழுவதும் இல்லை....இதில் ஒரு குறும்புத்தனம் கூட இருக்கும்.
இந்தக் கூல்னஸ் தான் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஹிட் ஆகக்காரணம் . கூல் என்றதும் எனக்கு சட்டுன்னு அந்த நடிகர் தான் நியாபகம் வருகிறார் .
தமிழில் , போக்கிரி விஜய் கதாபாத்திரம் இதைத்தான் செய்யும் [ தெலுங்கில் மகேஷ் பாபு ]செய்யாமல் செய்யணும் , செஞ்சா அதில் கூல்னஸ் போய்விடும் .கொஞ்சம் கிட்ட வந்துட்டேன்னு நினைக்கறேன் .
கூல்னஸ் பல விதமான செயல்களின் வெளிப்பாடு .சம்பாஷனை [ dialogues ] , உடல் மொழி [ body language ] , மற்றும் ஒரு பேச்சுக்கோ நிகழ்விற்கோ இயல்பாக கொடுக்கப்படும் எதிர் பேச்சோ அல்லது எதிர் வினையோ [ reacting ] சற்றே குறைந்து அல்லது ரொம்பவே குறைந்து , ஏதோ காது குடைந்துக்கொண்டே பேசுவது போல பேசுவதோ , நடந்துக் கொள்வதோ கூல்னஸ் எனச்சொல்லலாம் . உங்களுக்கே இது புரியும் , தெரியும் , சரி ஒரு முன்னுரை கொடுத்தாதானே சரிப்படும் .
இதை சிலருக்கு பிறவியிலேயே வந்து விடுகிறது. இது தான்
born cool " வகை . இவர்கள் தான் அல்வாவில் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா , தூத்துக்குடி மக்கரோனி , விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் மசால் வடை , கோவில்பட்டி கடலை மிட்டாய் , மற்றும் பரங்கிப்பேட்டை அல்வா
அல்லது எங்கள் கோவை GCT அருகில் கிடைக்கும் தெருவோரக்கடை வீச்சு பரோட்டா வகை .[நான் மிகவும் ரசித்த சிலதைத்தானே சொல்ல முடியும் ]
எதற்கும் சட்டை செய்ய மாட்டார்கள் .
என் நண்பன் ஒருவன் இந்த வகைதான் . கம்பெனி யில் layoff , குழந்தை வளர்ப்பு , வருங்கால சேமிப்பு , IT துறையில் 45 வயது வரையிலாவது வேலையினைக் காப்பற்றிக்கொள்ளவேண்டும் என்ற கவலை , பெங்களூர் டிராபிக் , இப்படி எந்தத் தலைப்பை பேசினாலும் , பெரிதாக அலட்டி கொள்ளமாட்டான் . பார்த்துக்கலாம் என்ற பதில் வரும் , அது கூட பரவாயில்லை ," க்கு க்கு க்கு" என்ற ஒரு சிரிப்பு ஒன்றை சிரிப்பான் .அதை நான் எப்படி ப்ளாகில் விவரிக்க.கிட்டத்தட்ட வில்லன் கோட்டா சீனிவாச ராவின் சிரிப்பைப்போன்றுதான் இருக்கும் அவனது சிரிப்பு .
நல்ல கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு இருப்பான் . திடீர்னு ஒரு நாள் பேப்பர் போட்டுடுவான் [ அதான் resignation ] தாவிக்கொண்டே இருப்பான் 2 வருடங்களுக்கொரு முறை . சில சமையம் ஆபீஸ் கான்டீன்ல இட்லி சூடா இல்லைன்னு கூட .ஒரு பேச்சுக்கு சொன்னேன்.
டேய் ரொம்பத்தாவதடா , நாளைக்கு பிரெச்சனை வரும் என்று சொன்னால் , அதற்கும் அதே சிரிப்புதான் . காற்றுள்ள வரை தூற்றிக்கொள் வோம் என்று தத்துவம் வேற சொல்லி கடுப்படிப்பான் .கம்பெனி வருடாந்திர அப்ரைசல் பற்றி அலட்டிக்கொள்ளும் எல்லோரும் இவனிடம் தான் பாடம் எடுக்க வேண்டும் .இவனுக்கு என்ன ரேடிங் கொடுத்தார்கள் என்றெல்லாம் எனக்குத்தெரியாது , நல்ல வேலை பார்ப்பான் என்று தெரியும் , அனால்
என்னக்கொடுத்தாலும் கவலைப்பட மாட்டான் .
எல்லாத்துக்கும் ஒரே பதில்தான் . " பிடிக்கலைன்னா பேப்பர் போட்டுடுவோம் , க்கு க்கு க்கு ".
இதைத்தவிர ஒரு வரியினை நான் இது வரை தணிக்கை செய்தே போட்டு வருகிறேன் . அதையும் உடைத்து விடுவோம் ,
" பிடிக்கலைன்னா பேப்பர் போட்டுடுவோம்..இருக்கவே இருக்கு என்னக்கு டைரக்டர் கனவு ,,,,க்கு க்கு க்கு "
IT துறையில் பெரிய கம்பெனி ஒன்றில் கடந்த சில வருடங்கலாத்தான் paper போடாமல் இருந்து வந்தான் . சென்னையில் நம்ம அண்ணாச்சி கம்பெனியில் முன்பு ஒரு முறை இருந்தான் . திடீர்னு ஒரு நாள் , நம்ம ஒளி ஓவியர் தங்கர் சாரின் வீட்டிற்கு போய் வந்தேன்னு போன் செய்தான் .
என்னடான்னு கேட்டா , " அழகி படம் பார்த்து மெரிசலாயிட்டேன் .....சரியாய் தூக்கம் வர மாட்டேன்கிறது. என்ன வேலை பார்த்துக்கிட்டு இருக்கிறோம் .வாழ்ந்தா இது போல ஒரு படம் எடுத்தாகணும் ..அதான் தங்கர் சாரட்ட அச்சிச்டன்ட் ஆகா சேர கேக்கப்போய் இருந்தேன்னு சொன்னான் .
இந்தத்தொழில் எல்லாம் சரிப்பட்டு வராது , நீங்க நல்ல நிலையில் இருக்கீங்க , பொழப்பை பாருங்கன்னு சொல்லியனுப்பியதாகச் சொன்னான் .
நம்ம சுத்தி நிறைய கதை இருக்கு , எடுக்கலாம்னு சொன்னனான் .
கலை உலகத்திற்கு நாளை கிடைத்து இருக்கவேண்டிய பொக்கிஷம் ஒன்றை இழந்து விட்டோம் நாம் . பையனிடம் கை வசம் சில ஸ்க்ரிப்டுகள் உண்டு . கத்தி படம் பிறகு , ரொம்ப உஷாராக கதையினை "copy rights " வாங்கிய பிறகு வெளியே சொல்லப்போவதாக சொன்னான் .ரொம்பத்தெளிவு .
இது இப்படி இருக்க , அவனுக்கு திருமண சமயத்தில் பெண் பார்க்கும் சமயத்தில் ஒரு முறை பேசும் பொழுது , ஜாதகம் எல்லாம் பொருந்தி , பெண் பிடித்துப்போய் , ஒரு பெண்ணை நேரில் பார்த்து பேசி வந்ததாகச்சொன்னான் . டேய் , உன் சினிமா ப்ளான்ஸ் எல்லாம் சொல்லி பொண்ணைத் terror ஆக்கிடாதடா futurela என்று சொல்லி முடிப்பதற்குள் , அதேப்படி சொல்லாமல் இருப்பேன், நாளைய ப்ளான்ஸ் பத்தி சொல்லியாகணும்ல , அப்புறம் ஏமாத்தி
பண்ணிவச்சுட்டாங்கல்லன்னு சொல்லிட்டா ? வென்று சொல்லி , அவனுடைய க்கு க்கு க்கு உடன் முடித்தான் . சரிதான் போ ன்னு நினைக்கையில் , சில மாதங்களுக்கு பிறகு , அவன் கல்யாண சாப்பாடும் சாப்பிட்டு வந்தேன் .யார் அந்த புண்ணியவதி என்று பார்க்கும் ஆவல் தான் தூக்கலாக இருந்தது . அதன் பிறகு இது வரை வேறு எந்த டைரக்டர் இடமும் சென்று சேரவில்லை .
" இனிமேல அசிச்டன்ட் டைரக்டர் எல்லாம் வேணாம் . straightaa டைரக்டர் தான் . கெளதம் மேனன் போல engineering படிச்ச டைரக்டர் . ஸ்கிரிப்ட் தான் மெயின் , assistant directors வச்சு ஒரு படத்துல மத்ததை பாத்துக்கறேன் " என்று சில மாதங்களுக்கு முன்பு பேசிய போது சொன்னான் .
எப்ப சொன்னான்னு சொல்லலையே , "வேலை மாத்தி சென்னை வந்துட்டேன் திரும்ப . ஆபீஸ் போய் வர 4 மணி நேரம் ஆகுது , அதான் O M R ல இருக்கிற ஆபீஸ்க்கு வர முடியலை , முதுகு வலி வேற , அதான் வேற ப்ரொஜெக்ட்ல போட சொல்லி இருக்கேன் , சரி அப்போ சம்பளம் கிடையாது ன்னு சொன்னங்க . தட்ஸ் ok .....நமக்கு என்ன housing loan ஆ என்ன ? க்கு க்கு க்கு " என்றான் .
சும்மா வெளில கூல் dude என்று சீன் போட்டு விட்டு , தனக்குன்னு வந்தா , ஐயோ யம்மான்னு ஊரைக்கூட்டும் பார்ட்டிகளையும் நான் பார்த்து உள்ளேன் .நீங்களும் பார்த்து இருப்பீர்கள் .
நம்ப தோஸ்து எப்படி !
இந்தக்காலத்துல பொழைப்ப ஓட்ட , BP இல்லாமல் இருக்க இவனிடம் இருந்து தான் பாடம் பயில வேண்டும் .
பக்கத்துல பாம் வெடிச்சா கூட , அசால்ட்டா ஒரு எட்டு எட்டிப்பாத்துட்டு , தட்டிட்டு போற பார்டி .
போன முறை அவனுடைய அம்மாவைப்பார்த்த பொழுது கூட , என்னமோ உளறிகிட்டு இருக்கான்பா , சீரியசாவே இருக்கமாட்டேன்றான் என்று ஆதங்கப்பட்டார்கள் . நானும் என் நண்பனை குறை சொல்லாதீர்கள் என்று சொல்லிவந்தேன் ,சிரித்தவாறே .
பொல்லாதவன் படத்தில் வரும் தனுஷ் போல , "அவனை எல்லாம் அப்படியே விட்டுடணும் " .
jokes apart ,என்னைப்பொருத்தவரை ஒரு வாத்து போல தண்ணீருள் விகவும் வீரியமாக கால்களை வீசிக்கொண்டு , வெளியில் சலனமின்றி மிதக்கும் நிலைதான் கூல்னஸ் .
தயார்நிலையில் இல்லாமல் வெளியில் மட்டும் சீன் போட்டு , பிறகு கீழே விழுவது அன்று .
இதில் என் நண்பன் முதலாவது . இத்தனை இருப்பினும் 14 வருடங்களாக IT துறையில் நல்லபடியாக வேலை பார்த்து வருவதால் சொல்கிறேன் .
சரக்கு இல்லாமலா ??
முதலிலே நான் சொன்ன பொதுவான பிரச்சனைகளை [ வேலை சார்ந்த நிலையின்மை , டிராபிக் இப்படி] அவனுக்கே உரிய விதத்தில் டென்ஷன் அற்று கையாளும் விதமே கூல் என்கிறேன் .அதுதான் சரியான வழி என்று கேட்டால் , எனக்கு பதில் இல்லை , அவரவருக்கு அவர் அவர் வழி ,
சந்தோஷமாக மற்றவர்களை சீண்டாமல் வாழ்க்கையினை அதன் போக்கில் வாழ்வதைச்சொல்கிறேன் .....
"He is a cool dude"
இதை நாம் வாழ்க்கையில் சில முறையேனும் கேட்டு இருப்போம் ...
சிவாஜி படத்தில் கூட ரஜினி இதனைப் பிரயயோகப்படுத்தி இன்னும் பிரசித்தமானது நினைவிருக்கும் .
இந்தத்தலைமுறை யுவதிகளிக்கு இப்படிப்பட்ட கூல் "dude" களைத்தான் பிடிக்கும் போல .
சரி கூல் என்றால் என்ன .ஆங்கிலத்தில் " being cold " என்று சொல்வோமே , அதில் இருந்துத்தான் வந்ததோ .அதாவது , ஒரு உணர்ச்சி இன்றி , மறக்கட்டைத்தனமாக நடந்துக்கொள்ளுதல் கொள்ளுதல் எனலாம் .
ஆனால் நாம் பேசும் இந்த கூல்னஸ் இதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டது அதற்கும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் ,
விளைவுகளைப்பற்றி கவலை இன்றி இருப்பது எனச்சொல்லலாம் .
அப்போ இது மரகட்டைத்தனம் தானே என்று கேட்பது புரிகிறது.அதாவது எப்படி சொல்லுவது ,...மரக்கட்டைத்தனம் மாதிரி தெரியும் ஆனால் முழுவதும் இல்லை....இதில் ஒரு குறும்புத்தனம் கூட இருக்கும்.
இந்தக் கூல்னஸ் தான் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஹிட் ஆகக்காரணம் . கூல் என்றதும் எனக்கு சட்டுன்னு அந்த நடிகர் தான் நியாபகம் வருகிறார் .
தமிழில் , போக்கிரி விஜய் கதாபாத்திரம் இதைத்தான் செய்யும் [ தெலுங்கில் மகேஷ் பாபு ]செய்யாமல் செய்யணும் , செஞ்சா அதில் கூல்னஸ் போய்விடும் .கொஞ்சம் கிட்ட வந்துட்டேன்னு நினைக்கறேன் .
கூல்னஸ் பல விதமான செயல்களின் வெளிப்பாடு .சம்பாஷனை [ dialogues ] , உடல் மொழி [ body language ] , மற்றும் ஒரு பேச்சுக்கோ நிகழ்விற்கோ இயல்பாக கொடுக்கப்படும் எதிர் பேச்சோ அல்லது எதிர் வினையோ [ reacting ] சற்றே குறைந்து அல்லது ரொம்பவே குறைந்து , ஏதோ காது குடைந்துக்கொண்டே பேசுவது போல பேசுவதோ , நடந்துக் கொள்வதோ கூல்னஸ் எனச்சொல்லலாம் . உங்களுக்கே இது புரியும் , தெரியும் , சரி ஒரு முன்னுரை கொடுத்தாதானே சரிப்படும் .
இதை சிலருக்கு பிறவியிலேயே வந்து விடுகிறது. இது தான்
born cool " வகை . இவர்கள் தான் அல்வாவில் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா , தூத்துக்குடி மக்கரோனி , விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் மசால் வடை , கோவில்பட்டி கடலை மிட்டாய் , மற்றும் பரங்கிப்பேட்டை அல்வா
அல்லது எங்கள் கோவை GCT அருகில் கிடைக்கும் தெருவோரக்கடை வீச்சு பரோட்டா வகை .[நான் மிகவும் ரசித்த சிலதைத்தானே சொல்ல முடியும் ]
எதற்கும் சட்டை செய்ய மாட்டார்கள் .
என் நண்பன் ஒருவன் இந்த வகைதான் . கம்பெனி யில் layoff , குழந்தை வளர்ப்பு , வருங்கால சேமிப்பு , IT துறையில் 45 வயது வரையிலாவது வேலையினைக் காப்பற்றிக்கொள்ளவேண்டும் என்ற கவலை , பெங்களூர் டிராபிக் , இப்படி எந்தத் தலைப்பை பேசினாலும் , பெரிதாக அலட்டி கொள்ளமாட்டான் . பார்த்துக்கலாம் என்ற பதில் வரும் , அது கூட பரவாயில்லை ," க்கு க்கு க்கு" என்ற ஒரு சிரிப்பு ஒன்றை சிரிப்பான் .அதை நான் எப்படி ப்ளாகில் விவரிக்க.கிட்டத்தட்ட வில்லன் கோட்டா சீனிவாச ராவின் சிரிப்பைப்போன்றுதான் இருக்கும் அவனது சிரிப்பு .
நல்ல கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு இருப்பான் . திடீர்னு ஒரு நாள் பேப்பர் போட்டுடுவான் [ அதான் resignation ] தாவிக்கொண்டே இருப்பான் 2 வருடங்களுக்கொரு முறை . சில சமையம் ஆபீஸ் கான்டீன்ல இட்லி சூடா இல்லைன்னு கூட .ஒரு பேச்சுக்கு சொன்னேன்.
டேய் ரொம்பத்தாவதடா , நாளைக்கு பிரெச்சனை வரும் என்று சொன்னால் , அதற்கும் அதே சிரிப்புதான் . காற்றுள்ள வரை தூற்றிக்கொள் வோம் என்று தத்துவம் வேற சொல்லி கடுப்படிப்பான் .கம்பெனி வருடாந்திர அப்ரைசல் பற்றி அலட்டிக்கொள்ளும் எல்லோரும் இவனிடம் தான் பாடம் எடுக்க வேண்டும் .இவனுக்கு என்ன ரேடிங் கொடுத்தார்கள் என்றெல்லாம் எனக்குத்தெரியாது , நல்ல வேலை பார்ப்பான் என்று தெரியும் , அனால்
என்னக்கொடுத்தாலும் கவலைப்பட மாட்டான் .
எல்லாத்துக்கும் ஒரே பதில்தான் . " பிடிக்கலைன்னா பேப்பர் போட்டுடுவோம் , க்கு க்கு க்கு ".
இதைத்தவிர ஒரு வரியினை நான் இது வரை தணிக்கை செய்தே போட்டு வருகிறேன் . அதையும் உடைத்து விடுவோம் ,
" பிடிக்கலைன்னா பேப்பர் போட்டுடுவோம்..இருக்கவே இருக்கு என்னக்கு டைரக்டர் கனவு ,,,,க்கு க்கு க்கு "
IT துறையில் பெரிய கம்பெனி ஒன்றில் கடந்த சில வருடங்கலாத்தான் paper போடாமல் இருந்து வந்தான் . சென்னையில் நம்ம அண்ணாச்சி கம்பெனியில் முன்பு ஒரு முறை இருந்தான் . திடீர்னு ஒரு நாள் , நம்ம ஒளி ஓவியர் தங்கர் சாரின் வீட்டிற்கு போய் வந்தேன்னு போன் செய்தான் .
என்னடான்னு கேட்டா , " அழகி படம் பார்த்து மெரிசலாயிட்டேன் .....சரியாய் தூக்கம் வர மாட்டேன்கிறது. என்ன வேலை பார்த்துக்கிட்டு இருக்கிறோம் .வாழ்ந்தா இது போல ஒரு படம் எடுத்தாகணும் ..அதான் தங்கர் சாரட்ட அச்சிச்டன்ட் ஆகா சேர கேக்கப்போய் இருந்தேன்னு சொன்னான் .
இந்தத்தொழில் எல்லாம் சரிப்பட்டு வராது , நீங்க நல்ல நிலையில் இருக்கீங்க , பொழப்பை பாருங்கன்னு சொல்லியனுப்பியதாகச் சொன்னான் .
நம்ம சுத்தி நிறைய கதை இருக்கு , எடுக்கலாம்னு சொன்னனான் .
கலை உலகத்திற்கு நாளை கிடைத்து இருக்கவேண்டிய பொக்கிஷம் ஒன்றை இழந்து விட்டோம் நாம் . பையனிடம் கை வசம் சில ஸ்க்ரிப்டுகள் உண்டு . கத்தி படம் பிறகு , ரொம்ப உஷாராக கதையினை "copy rights " வாங்கிய பிறகு வெளியே சொல்லப்போவதாக சொன்னான் .ரொம்பத்தெளிவு .
இது இப்படி இருக்க , அவனுக்கு திருமண சமயத்தில் பெண் பார்க்கும் சமயத்தில் ஒரு முறை பேசும் பொழுது , ஜாதகம் எல்லாம் பொருந்தி , பெண் பிடித்துப்போய் , ஒரு பெண்ணை நேரில் பார்த்து பேசி வந்ததாகச்சொன்னான் . டேய் , உன் சினிமா ப்ளான்ஸ் எல்லாம் சொல்லி பொண்ணைத் terror ஆக்கிடாதடா futurela என்று சொல்லி முடிப்பதற்குள் , அதேப்படி சொல்லாமல் இருப்பேன், நாளைய ப்ளான்ஸ் பத்தி சொல்லியாகணும்ல , அப்புறம் ஏமாத்தி
பண்ணிவச்சுட்டாங்கல்லன்னு சொல்லிட்டா ? வென்று சொல்லி , அவனுடைய க்கு க்கு க்கு உடன் முடித்தான் . சரிதான் போ ன்னு நினைக்கையில் , சில மாதங்களுக்கு பிறகு , அவன் கல்யாண சாப்பாடும் சாப்பிட்டு வந்தேன் .யார் அந்த புண்ணியவதி என்று பார்க்கும் ஆவல் தான் தூக்கலாக இருந்தது . அதன் பிறகு இது வரை வேறு எந்த டைரக்டர் இடமும் சென்று சேரவில்லை .
" இனிமேல அசிச்டன்ட் டைரக்டர் எல்லாம் வேணாம் . straightaa டைரக்டர் தான் . கெளதம் மேனன் போல engineering படிச்ச டைரக்டர் . ஸ்கிரிப்ட் தான் மெயின் , assistant directors வச்சு ஒரு படத்துல மத்ததை பாத்துக்கறேன் " என்று சில மாதங்களுக்கு முன்பு பேசிய போது சொன்னான் .
எப்ப சொன்னான்னு சொல்லலையே , "வேலை மாத்தி சென்னை வந்துட்டேன் திரும்ப . ஆபீஸ் போய் வர 4 மணி நேரம் ஆகுது , அதான் O M R ல இருக்கிற ஆபீஸ்க்கு வர முடியலை , முதுகு வலி வேற , அதான் வேற ப்ரொஜெக்ட்ல போட சொல்லி இருக்கேன் , சரி அப்போ சம்பளம் கிடையாது ன்னு சொன்னங்க . தட்ஸ் ok .....நமக்கு என்ன housing loan ஆ என்ன ? க்கு க்கு க்கு " என்றான் .
சும்மா வெளில கூல் dude என்று சீன் போட்டு விட்டு , தனக்குன்னு வந்தா , ஐயோ யம்மான்னு ஊரைக்கூட்டும் பார்ட்டிகளையும் நான் பார்த்து உள்ளேன் .நீங்களும் பார்த்து இருப்பீர்கள் .
நம்ப தோஸ்து எப்படி !
இந்தக்காலத்துல பொழைப்ப ஓட்ட , BP இல்லாமல் இருக்க இவனிடம் இருந்து தான் பாடம் பயில வேண்டும் .
பக்கத்துல பாம் வெடிச்சா கூட , அசால்ட்டா ஒரு எட்டு எட்டிப்பாத்துட்டு , தட்டிட்டு போற பார்டி .
போன முறை அவனுடைய அம்மாவைப்பார்த்த பொழுது கூட , என்னமோ உளறிகிட்டு இருக்கான்பா , சீரியசாவே இருக்கமாட்டேன்றான் என்று ஆதங்கப்பட்டார்கள் . நானும் என் நண்பனை குறை சொல்லாதீர்கள் என்று சொல்லிவந்தேன் ,சிரித்தவாறே .
பொல்லாதவன் படத்தில் வரும் தனுஷ் போல , "அவனை எல்லாம் அப்படியே விட்டுடணும் " .
jokes apart ,என்னைப்பொருத்தவரை ஒரு வாத்து போல தண்ணீருள் விகவும் வீரியமாக கால்களை வீசிக்கொண்டு , வெளியில் சலனமின்றி மிதக்கும் நிலைதான் கூல்னஸ் .
தயார்நிலையில் இல்லாமல் வெளியில் மட்டும் சீன் போட்டு , பிறகு கீழே விழுவது அன்று .
இதில் என் நண்பன் முதலாவது . இத்தனை இருப்பினும் 14 வருடங்களாக IT துறையில் நல்லபடியாக வேலை பார்த்து வருவதால் சொல்கிறேன் .
சரக்கு இல்லாமலா ??
முதலிலே நான் சொன்ன பொதுவான பிரச்சனைகளை [ வேலை சார்ந்த நிலையின்மை , டிராபிக் இப்படி] அவனுக்கே உரிய விதத்தில் டென்ஷன் அற்று கையாளும் விதமே கூல் என்கிறேன் .அதுதான் சரியான வழி என்று கேட்டால் , எனக்கு பதில் இல்லை , அவரவருக்கு அவர் அவர் வழி ,
சந்தோஷமாக மற்றவர்களை சீண்டாமல் வாழ்க்கையினை அதன் போக்கில் வாழ்வதைச்சொல்கிறேன் .....
No comments:
Post a Comment