இளையராஜா பாடல்கள் பற்றி சமீபத்திய ஒரு பேட்டியில் இயக்குனர் விக்ரமன் சொன்னார் , பழைய பாடல்களை கேட்கும் பொழுது அழத் தொடங்கி விடுவேன் என்று .
கவலையற்ற தினங்களை நியாபகப்படுத்தும் ஒரு அனுபவத்தை அதைக் கொடுப்பதனால் என்றும் சொன்னார் . எவ்வளவு ஆழமான நிதர்சனமான
கருத்து .
என் மனதில் இந்த சின்னப் பொறி நிறைய எண்ணத் துகள்களை
கலைத்து ஒரு புரட்டு புரட்டிப்போட்டது .
மனம் ஏன் பழசை நினைத்து ஏங்குகிறது ???
காலமும் , காலம் கொடுத்த சில பல கசப்பான இனிப்பான நினைப்புகள்
ஆழ் மனதில் படிய வைத்து போன பிம்பங்களை தூசி தட்டி எடுக்கும் ஒரு ஊடகம் தான் பாடல்கள் போல . இது போன்று வேறு ஊடகங்களும் இருக்கலாம் , ஒவ்வொருவர் ரசனை மற்றும் அனுபவம் சார்ந்து .
இந்த நொடியில் இல்லாமல் , கண்களை மூடியோ அல்லது நினைப்பிலோ
"time travel" செய்யும் ஒரு வழிதானே அந்த பழைய நினைவுகள் கொடுப்பது .
நம்மிடம் இப்பொழுது இல்லாமல் போன மனிதர்களையோ , அல்லது தொலைத்த மீட்டுக்கொள்ள முடியாத சந்தோஷங்களை தேடி அலையும் ஒரு தேடல் என்றும் சொல்லலாம் .
இன்னும் சொன்னப்போனால் கால வெள்ளத்தில் தொலைந்த நம்மை மறுபடியும் , அதாவது பழைய நம்மை ஒரு முறை நினைவால் ஸ்பரிசித்து வரும் ஒரு அனுபவமாகவும் அது இருக்கும் பல சமயங்களில் .
என்னுடைய சில முந்தய வலைப்பூக்களில் என்னுடைய பால்ய தினங்களைப் பற்றி அடிக்கடி குறிப்பிட்டு இருப்பேன் .
அதை நான் அடிக்கடி குறிப்பிட வேண்டும் என்று மெனக்கிட்டு சொல்லவில்லை . ஆனால் அசை போட ஆனந்தமாய் இருந்ததால் சொல்லி இருப்பேன் என பிற்பாடு ஒரு சந்தர்ப்பத்தில் உணர்ந்தேன் .
அக்காவிடம் பேசிய பொழுது ". நீ சமீப காலங்களாக அடிக்கடி உன்
சின்னப் பையன் நினைவுகளை பதிவிடுகிறாய் , நல்லது " என்ற அவள் சொன்ன பொழுதுதான் .
நினைவுகள் வரமாகவும் சாபமாகவும் அமைகின்றன என்பதை நாம் அறிவோம் இழந்த சந்தோஷங்களை நினைவுப் படுத்துவதால் கசப்பாகவும் , இல்லாத சில சந்தோஷங்களை நினைத்து அமிழ்ந்து போக உதவுவதாலும் தானே !
அம்மாச்சியின் மடியில் படுத்து சொடக்கு எடுத்துக் கொண்டு , " சுகவாசி " என்று அவர்கள் செல்லமாக கடிந்து கொண்ட தருணத்தையும் ,
அக்காவும் நானும் சிறு வயதில் கவலையற்று ஆனால் ஒரு 5 ஸ்டார் மிட்டாயின் காரணத்தால் சண்டையிட்டுக் கொண்ட நாட்களையோ நினைத்து மறுபடி மறுபடி பூரித்துப் போகக்கூடிய சக்தி நினைவுகளுக்கு மட்டுமே உண்டு .குறிப்பாக அந்த மிட்டாய் கிடைப்பதே அந்த வயதின் பெரிய தேவையாகவும் , கவலையாகவும் இருந்து உள்ளது ஒரு காலம் என்று எண்ணி மறுபடி மறுபடி பூரிக்கத்தான் .
அப்பாவுடன் புதிதாக வாங்கப்பட்ட சாம்பல் நிற லாம்பி ஸ்கூட்டரில் முதல் முறை உட்கார்ந்து போன பொழுது துரத்திய எருமை மாட்டின் குரலும்
காதில் இப்பொழுதும் கேட்பது அதே சக்தியால்தான் .
எல்லா பற்களும் தெரியும் சிரிப்புடன் , தளர்ச்சி இன்றி வந்த அம்மாவின் அந்த பழைய நடையும் குதூகலமும் நான் மறுபடி தொட்டு வருவதும் நினைப்பில்தானே.
இப்படி பல நம் ஒவ்வொருவருக்கும் .
இதே போல பழைய சோகங்களை அசை போடவும், சில சமயங்களில்
சுழற்சியாக அசை போடவும் தான் செய்கின்றது மனம் . திரும்பத் திரும்ப போட்டு உளப்பி எடுக்கும் . இதைத் தாண்டி வந்துவிட்டால் நல்லது என்று சொல்லித்தெரிய வேண்டியது இல்லை.
சில வாரங்களுக்கு முன்பு என் கல்லூரி நண்பனை வருடங்கள் கழிந்து சந்தித்தேன் . அன்று இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருந்தோம் .
GCT கல்லூரியில் பச்சை நிற இரும்புக் கட்டிலில் படித்துக்கொண்டு இருக்கிறோம் என்று எங்களையே ஏமாற்றிக் கொண்டு , போட்ட
அரட்டைகளை நியாபகப் படுத்திச் சென்றது அந்த சந்திப்பு .
அசை போட்டு கொண்டே இருந்தேன் , ஏன் இப்படி நினைக்க நினைக்க நினைவில் இனிப்பைச் சுரக்கிறது கல்லூரி நாட்கள் என்று.
யோசித்து யோசித்து கொஞ்சம் பிடி கொடுத்தது .
அது பொறுப்புகள் அற்ற நாட்கள் , " wild carefree days ".
எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள பெற்றோர்கள் இருந்ததால் ,
பொறுப்புகள் இன்றி கழிந்த நாட்கள் .
இப்படிப் பட்ட தினங்களை நினைத்து மனம் ஏங்கத் தானே செய்யும்!
இளையராஜா பெரியவரா , ரெஹ்மான் பெரியவரா என்ற சண்டைதான்
அப்போதைய கவலை , ஹாஸ்டல் மெஸ்ஸில் இன்று கல் இட்லிதனை எதனைக்கொண்டு உடைத்து உள்ளே அனுப்புவதுதான் என்பதுதான் அன்றைய ஒரு இரவின் கவலையாகவும் இருந்து இருக்கக் கூடும் .
இப்போ இருக்கும் பொறுப்புகள் நான் சொல்லியா தெரிய வேண்டும்!
கடைசி வருடம் நெருங்கவும் , வேலை அமைய வேண்டும் என்ற பதட்டம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்ததில் தொடங்கி அது அப்படியே வெவ்வேறு விதத்தில் காலத்தை வியாபித்துக் கொண்டது வேறு கதை .
பிள்ளைகளின் சிரிப்பும் , இசையும் , நண்பர்களுடன் பேசும் ஒரு தொலை பேசி உரையாடலோ , சந்திப்போ , அல்லது ஒரு நல்ல வாசிப்போ ஏதோ ஒன்றின் மூலம் அதனை மீட்டு எடுக்க முயற்சிக்கிறோம் .
இந்த வருடத்தில் அதனை இன்னும் அதிமாக செய்வோமாக !
குறிப்பாக நம் பிள்ளைகளுக்கு முடிந்த வரை இப்படி கவலையற்ற
நாட்களை வாழ் நாள் முழுவதும் கொடுக்க முயற்சிப்போம் , கடவுள் அருளால் .
வேலை பிடிங்கித் தின்ற பகல் இரவுகளுக்கு மத்தியில் பழயதை நினைவூட்டிச் சென்றது இந்தப் பதிவும் .இதைத்தான் சொன்னேன் மேலே " with no strings attached " தருணங்களை தொட்டு வரும் ஒரு பயணம் என்று!
கவலையற்ற தினங்களை நியாபகப்படுத்தும் ஒரு அனுபவத்தை அதைக் கொடுப்பதனால் என்றும் சொன்னார் . எவ்வளவு ஆழமான நிதர்சனமான
கருத்து .
என் மனதில் இந்த சின்னப் பொறி நிறைய எண்ணத் துகள்களை
கலைத்து ஒரு புரட்டு புரட்டிப்போட்டது .
மனம் ஏன் பழசை நினைத்து ஏங்குகிறது ???
காலமும் , காலம் கொடுத்த சில பல கசப்பான இனிப்பான நினைப்புகள்
ஆழ் மனதில் படிய வைத்து போன பிம்பங்களை தூசி தட்டி எடுக்கும் ஒரு ஊடகம் தான் பாடல்கள் போல . இது போன்று வேறு ஊடகங்களும் இருக்கலாம் , ஒவ்வொருவர் ரசனை மற்றும் அனுபவம் சார்ந்து .
இந்த நொடியில் இல்லாமல் , கண்களை மூடியோ அல்லது நினைப்பிலோ
"time travel" செய்யும் ஒரு வழிதானே அந்த பழைய நினைவுகள் கொடுப்பது .
நம்மிடம் இப்பொழுது இல்லாமல் போன மனிதர்களையோ , அல்லது தொலைத்த மீட்டுக்கொள்ள முடியாத சந்தோஷங்களை தேடி அலையும் ஒரு தேடல் என்றும் சொல்லலாம் .
இன்னும் சொன்னப்போனால் கால வெள்ளத்தில் தொலைந்த நம்மை மறுபடியும் , அதாவது பழைய நம்மை ஒரு முறை நினைவால் ஸ்பரிசித்து வரும் ஒரு அனுபவமாகவும் அது இருக்கும் பல சமயங்களில் .
என்னுடைய சில முந்தய வலைப்பூக்களில் என்னுடைய பால்ய தினங்களைப் பற்றி அடிக்கடி குறிப்பிட்டு இருப்பேன் .
அதை நான் அடிக்கடி குறிப்பிட வேண்டும் என்று மெனக்கிட்டு சொல்லவில்லை . ஆனால் அசை போட ஆனந்தமாய் இருந்ததால் சொல்லி இருப்பேன் என பிற்பாடு ஒரு சந்தர்ப்பத்தில் உணர்ந்தேன் .
அக்காவிடம் பேசிய பொழுது ". நீ சமீப காலங்களாக அடிக்கடி உன்
சின்னப் பையன் நினைவுகளை பதிவிடுகிறாய் , நல்லது " என்ற அவள் சொன்ன பொழுதுதான் .
நினைவுகள் வரமாகவும் சாபமாகவும் அமைகின்றன என்பதை நாம் அறிவோம் இழந்த சந்தோஷங்களை நினைவுப் படுத்துவதால் கசப்பாகவும் , இல்லாத சில சந்தோஷங்களை நினைத்து அமிழ்ந்து போக உதவுவதாலும் தானே !
அம்மாச்சியின் மடியில் படுத்து சொடக்கு எடுத்துக் கொண்டு , " சுகவாசி " என்று அவர்கள் செல்லமாக கடிந்து கொண்ட தருணத்தையும் ,
அக்காவும் நானும் சிறு வயதில் கவலையற்று ஆனால் ஒரு 5 ஸ்டார் மிட்டாயின் காரணத்தால் சண்டையிட்டுக் கொண்ட நாட்களையோ நினைத்து மறுபடி மறுபடி பூரித்துப் போகக்கூடிய சக்தி நினைவுகளுக்கு மட்டுமே உண்டு .குறிப்பாக அந்த மிட்டாய் கிடைப்பதே அந்த வயதின் பெரிய தேவையாகவும் , கவலையாகவும் இருந்து உள்ளது ஒரு காலம் என்று எண்ணி மறுபடி மறுபடி பூரிக்கத்தான் .
அப்பாவுடன் புதிதாக வாங்கப்பட்ட சாம்பல் நிற லாம்பி ஸ்கூட்டரில் முதல் முறை உட்கார்ந்து போன பொழுது துரத்திய எருமை மாட்டின் குரலும்
காதில் இப்பொழுதும் கேட்பது அதே சக்தியால்தான் .
எல்லா பற்களும் தெரியும் சிரிப்புடன் , தளர்ச்சி இன்றி வந்த அம்மாவின் அந்த பழைய நடையும் குதூகலமும் நான் மறுபடி தொட்டு வருவதும் நினைப்பில்தானே.
இப்படி பல நம் ஒவ்வொருவருக்கும் .
இதே போல பழைய சோகங்களை அசை போடவும், சில சமயங்களில்
சுழற்சியாக அசை போடவும் தான் செய்கின்றது மனம் . திரும்பத் திரும்ப போட்டு உளப்பி எடுக்கும் . இதைத் தாண்டி வந்துவிட்டால் நல்லது என்று சொல்லித்தெரிய வேண்டியது இல்லை.
சில வாரங்களுக்கு முன்பு என் கல்லூரி நண்பனை வருடங்கள் கழிந்து சந்தித்தேன் . அன்று இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருந்தோம் .
GCT கல்லூரியில் பச்சை நிற இரும்புக் கட்டிலில் படித்துக்கொண்டு இருக்கிறோம் என்று எங்களையே ஏமாற்றிக் கொண்டு , போட்ட
அரட்டைகளை நியாபகப் படுத்திச் சென்றது அந்த சந்திப்பு .
அசை போட்டு கொண்டே இருந்தேன் , ஏன் இப்படி நினைக்க நினைக்க நினைவில் இனிப்பைச் சுரக்கிறது கல்லூரி நாட்கள் என்று.
யோசித்து யோசித்து கொஞ்சம் பிடி கொடுத்தது .
அது பொறுப்புகள் அற்ற நாட்கள் , " wild carefree days ".
எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள பெற்றோர்கள் இருந்ததால் ,
பொறுப்புகள் இன்றி கழிந்த நாட்கள் .
இப்படிப் பட்ட தினங்களை நினைத்து மனம் ஏங்கத் தானே செய்யும்!
இளையராஜா பெரியவரா , ரெஹ்மான் பெரியவரா என்ற சண்டைதான்
அப்போதைய கவலை , ஹாஸ்டல் மெஸ்ஸில் இன்று கல் இட்லிதனை எதனைக்கொண்டு உடைத்து உள்ளே அனுப்புவதுதான் என்பதுதான் அன்றைய ஒரு இரவின் கவலையாகவும் இருந்து இருக்கக் கூடும் .
இப்போ இருக்கும் பொறுப்புகள் நான் சொல்லியா தெரிய வேண்டும்!
கடைசி வருடம் நெருங்கவும் , வேலை அமைய வேண்டும் என்ற பதட்டம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்ததில் தொடங்கி அது அப்படியே வெவ்வேறு விதத்தில் காலத்தை வியாபித்துக் கொண்டது வேறு கதை .
பிள்ளைகளின் சிரிப்பும் , இசையும் , நண்பர்களுடன் பேசும் ஒரு தொலை பேசி உரையாடலோ , சந்திப்போ , அல்லது ஒரு நல்ல வாசிப்போ ஏதோ ஒன்றின் மூலம் அதனை மீட்டு எடுக்க முயற்சிக்கிறோம் .
இந்த வருடத்தில் அதனை இன்னும் அதிமாக செய்வோமாக !
குறிப்பாக நம் பிள்ளைகளுக்கு முடிந்த வரை இப்படி கவலையற்ற
நாட்களை வாழ் நாள் முழுவதும் கொடுக்க முயற்சிப்போம் , கடவுள் அருளால் .
வேலை பிடிங்கித் தின்ற பகல் இரவுகளுக்கு மத்தியில் பழயதை நினைவூட்டிச் சென்றது இந்தப் பதிவும் .இதைத்தான் சொன்னேன் மேலே " with no strings attached " தருணங்களை தொட்டு வரும் ஒரு பயணம் என்று!