அபார்ட்மென்ட் வாழ்க்கையும் குரங்கும் :
சென்னையில் எங்கள் தெருவே எங்களுக்கு அடுத்த வீடு போலதான் .ஆனால்
அது எண்பதுகளில் உருவான நட்புப் பட்டாளம் . அந்தக்காலனி இன்றைக்கு சொல்லப்படும் gated community இல்லையென்றாலும் , எங்கள் குடும்ப நட்பு வட்டத்தில் ஒருவருக்கொருவர் connected தான் . தனி வீட்டிலேயே இருந்துப்பழகிய எனக்கு , அபார்ட்மெண்ட் வாழ்கை மேல் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது . நண்பவர் வட்டம் எப்படி இருக்கும் அபார்ட்மென்டில் என்ற எதிர்பார்ப்பும் , நிறைய வீடுகள் இருந்ததனால் .
கட் செய்வோம் . எனக்கு திருமணமான புதிது . பெங்களூரில் ஒரு அபார்ட்மென்ட் வாடைகைக்கு பிடித்தேன் .மனைவிக்கும் எனக்கும் office ரொம்ப தூரம் இல்லாமலும் , பஸ் ஆட்டோ வசதி மற்றும் கடைகள் அருகில் இருப்பது போன்ற ஒரு இடம் தேடிப்பிடித்தேன் . மெயின் ரோட்டில் இருந்து பார்த்தால் ஒரு நகரத்தின் அனைத்து விதமான அவசர வாழ்க்கைக்கு உண்டான அம்சங்களுடன் இருந்தாலும் , ஒரு தெரு தள்ளி உள்ளே வந்தால் ஊர்ப்பக்கம் போன ஒரு பீலிங் கொடுக்கும்.
குறிப்பாக நடக்கும் தொலைவில் இருந்த அந்த பஜார் தெரு..
பெரிய ஆலமரத்தின் கீழ் பழக் கடைகளும் , பூ விற்பவர்களும் , காய் கரிக்கடைகளும் , பக்கத்துல நாயர் சாயா கடையும் , சற்று நடந்தால் ஒரு நாத்தம் பிடித்த பெலான்தூர் எரியும் அந்த இடத்தை எனக்கு ரொம்பப்பிடிக்க வைத்து விட்டது . நாத்தம் பிடித்த எரி என்றாலும் ,அதை ஒட்டின வளைவான தெருவும் , அழகான கோவிலும் , ஏரியைத்தாண்டி தெரியும் அழகிய தென்னந்த்தோப்பும் ஒரு ஒட்டு வீடும் , காலையில் நடந்தால் அந்தக்காட்சி நாத்தத்தை தாண்டிய கவிதைதான் எனக்கு.குறிப்பாக நகர நெரிசலில் இருந்து தள்ளிய ஒரு இதமான மனநிலைமையைக் கொடுக்கும்.வேலைப்பழு அதிகம் இருக்கும் போது எல்லாம் , அந்தப்பக்கமா ஒரு நடைப்போட்டோம்னா ஒரு recharged feeling வரும்.
எதையோ பகிர நினைத்து , எங்கோ வந்து விட்டேன் .
சரி அப்படியே கொஞ்சம் ரிவர்ஸ் அடிச்சு , வீட்டுக்கு வருவோம் , அதாவது அபார்ட்மென்டுக்கு .
லிப்டும் , அதில் இருந்து வெளியே வந்தால் சாத்தப்பட்ட கதவுகளும் ,
கிரில் வாய்த்த corridors உம் எனக்கு புதுசு.
மனிதர்களே பார்ப்பது அபூர்வம் போன்று இருந்தது பெரும்பாலான நேரத்தில் .
முதல் பத்தியில் நான் சொன்ன என் பழைய வாழ்க்கைக்கு முரணாக .
மேலே குறிப்பிட்ட எல்லாத்தையும் விட , அந்த அபார்ட்மென்டில் எனக்கு
பிடித்தது , குரங்கு! ஆமாம் குரங்கு .அதுவும் pipe வழியா மாடி ஏறி வந்து , இரண்டாவது மாடி பால்கனி வழிய எங்கள் கிச்சனுள் வந்து , உருளைக் கிழங்கையும் காரட்டையும் சுவைக்கும் குரங்கு , குறிப்பாக சொல்வதென்றால் அழகிய குரங்குக் குட்டிகள்!
கிட்சென் granite counter இல் தொங்கிக்கொண்டு அவர் ஒரு கையில் காரட் சாப்பிட்ட ஸ்டைல் அலாதி. ஐயோ யம்மானு என் மனைவி உள்ளே இருந்து ஓடி வந்தது வேறு கதை.
இது இப்படி இருக்க , அபார்ட்மென் ட் விதிமுறைப்படி , எங்கள் வீட்டு அன்றாடக்குப்பைகளை ஒரு கவரில் கட்டி வெளியே வைத்து விட வேண்டும் தினமும் . ஒருவர் வந்து collect செய்துகொள்வார் காலையில், சில நாட்கள் நானே கொண்டுப்போட்டு விடுவேன் .
அடுத்த வீட்டில் நாற்பதைக்கடந்த ஒரு மலையாள குடும்பம்.
என்ன காரணமோ தெரியவில்லை அவர் சிரிக்கவே மாட்டார் .வேகமா வருவார் போவார் . வீட்டில் அவர் அடிக்கும் விசில் சுவர் தாண்டி தூள் பறக்கும் . பூஜை மணியும் தான் .வீட்டில் குஷிப்பார்ட்டி தான் என்பதில்
எனக்கும் சந்தேகம் இல்லை. சேட்டன் வெளியே வைக்கும் காலி பீர் பாட்டில் சொன்னத்தகவல் தான் நமக்கு எட்டிருச்சே!
நான் காலையில் 8 மணிக்கு மேலதான் எழுந்திருப்பேன் . காலையில் 7 மணிக்கே மனைவிக்கு இன்போசிஸ் பஸ் வந்து விடும். வீட்டில் வேலை செய்யும் ஷீலா என்னும் நேபால்க்காரம்மா வேலை முடித்து கதவைச்சாற்றி சென்று விடுவார்கள் . மேல் சொன்ன குப்பை பையையும் வெளியே வைத்து விட்டு செல்வார்கள் . இது தான் வழக்கம் .
ஆபீசில் இருந்து வந்த என் மனைவி அன்று ரொம்ப சூடாக இருந்தாள் .
வேலை டென்சனா என்று பார்த்தால் இல்லை. சேட்டன் கொடுத்த டென்ஷன் . அன்று வேலைக்காரம்மா கொஞ்சம் லேட்டா வந்து இருக்காங்க . குப்பையை வெளியே வைக்கவும் நேரம் ஆகிவிட்டு இருந்தது.
இதற்குள் நம்ம குட்டிகொரங்கார் வந்து தன வேலையைக்காண்பித்து இருக்கிறார். கவரைப்பிரித்து உள்ளே இருந்த மாங்கொட்டைகளை சிதரடிச்சு , அதில் வெங்காயத்தோலும் மற்ற குப்பைகளும் கலக்கி அடிச்சு ஒரு வழி ஆகி இருந்தது தரை .
[ இந்த காட்சி நான் இன்னொரு நாள் நான் கண்டது .அது தெரியாமல் தொடைத்து சமாளித்து வேறு கதை. இதைப்போல் தான் அவர் பார்த்த அன்றைக்கும் இருந்து இருக்க வேண்டும்!]
மூச்சு இறைக்க வந்து என் மனையிடம் மறுநாள் முறை இட்டு இருக்கிறார் , கூச்சலுடன் . எனக்கு பிடிக்காமல் போனது என்னவென்றால் அவர் இதை தன் 3 மனைவி இடம் சொல்லச்சொல்லி இருக்க வேண்டும் , இல்லை அவர் என்னிடம் பேசி இருக்க வேண்டும் , என் மனையிடம் கத்தியது எனக்கு கடுப்பைக் கிளப்பியது . மனைவியும், என்ன அந்த ஆள் அப்படி கத்தறான் தெரியாம நடந்து தானே , நாமும் புதுசு குரங்கை கட்டியா போடமுடியும் , இனிமே ஜாக்கிரதையா இருக்கத்தான் முடியும் , இதுக்கு ஏன் அவன் அவ்ளோ டென்ஷன் ஆகரான்னு தெரியலை வென்றாள் .
அவருடைய கருப்பு socks இல் மாம்பழ சாறுபட்டு விட்டதாகவும் , தொவைச்ச socks வென்றும் திரும்ப திரும்ப பொலம்பினதாகவும் சொன்னாள் ."தொவைச்சsocks " என்றதும் எனக்கு சிரிப்பை அடக்க முடிய வில்லை.கோபம் சென்றுவிட்டது .
என்ன இவ்ளோ serious ஆ பேசிட்டு இருக்கேன் , நீங்க கூல் ஆ இருக்கீங்கன்னு அவ இன்னும் டென்ஷன் ஆனது தான் மிச்சம் . அவள் பேச சொன்னதால் , நான் அவரிடம் , இனிமே ஆகாம பாத்துக்கறேன் என்று சொல்லி வந்தேன்.
" உங்களை இதையா நான் பேச சொன்னேன்னு " இன்னும் கடுப்பானாள் .
என் மேல அக்கறையே இல்லை ங்கற அளவிற்கு கொண்டு வந்து விட்டது அந்த குரங்கு செய்த சேட்டை .
எனக்கு என்னமோ அவரைப் பார்த்ததும் சிரிப்பு வந்துடுச்சு . கதவைத் தட்டும் போது அந்த கருப்பு socks அந்த க்ரில்லில் கண்ணில் பட்டதால் ..
அவர் என்னிடம் கொஞ்சம் அமைதியாகத் தான் பேசினார் . . தான் கத்தினது கொஞ்சம் ஓவர் என்று உணர்ந்தார்னு நினைச்சேன்.
சில நாட்கள் போனது .
நான் கும்பிடும் ஆண்டவன் என்னைக்கைவிடவில்லை .
அருமைக்குரங்கார் இந்த முறை அதைப்போன்ற ஒரு லீலையை எங்கள் வீட்டின் முன் செய்துவிட்டு இருந்தார். நிறைய தேங்காய்க் கொப்பரைகள்
வேறக்கிடந்தன . சேட்டன் வீட்டில் இருந்துதான் வேறு எங்கே.
எனக்கு இருப்புக்கொள்ளவில்லை .
ட்ரிங் ட்ரிங் ......சேட்டனுக்கு தமிழ் தெரியும்!
" சார் , நாங்களாவது , குரங்கு முன் வாசல் வரை வரும்னு எதிர்பார்க்கலை
apartment க்கு புதுசு. நீங்க இங்க தான இருக்கீங்க ரொம்ப நாளா .
இங்க பாருங்க என்ன இது?" என்று வீட்டின் முன் இருந்த கோலத்தை காண்பித்தேன் .
வந்து போய் னு எதையோ முழுங்கினார் ....
சரி எதுவும் கேக்காம வந்துடீங்களே ன்னு என் மனைவி சொன்னது காதில் வந்து விழுந்தது அந்த நேரம்.
" அப்புறம் உங்கள் குரங்கை கொஞ்சம் கட்டி போடுங்க சார் , வாக்கிங் வேணும்னா கூட்டிட்டு போங்க வெளியே பார்க்ல ...
2 எதன்னா செஞ்சு வச்சுதுன்னா கஷ்டம் பாருங்க "...
அவர் முகம் பார்க்க கோடிப்புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.
டப் , கதவு சார்த்தப்பட்டது .
நாங்கள் இருந்த மூன்று வருடமும் ,என்னைக்கண்டால் வேகமாக முகத்தை எங்கோ பார்ப்பது போல சென்று விடுவார்!
அதன் பிறகு நாங்கள் குரங்கையும் பார்க்க வில்லை வீட்டினுள் . என்ன ஒரு மாயம் .
சென்னையில் எங்கள் தெருவே எங்களுக்கு அடுத்த வீடு போலதான் .ஆனால்
அது எண்பதுகளில் உருவான நட்புப் பட்டாளம் . அந்தக்காலனி இன்றைக்கு சொல்லப்படும் gated community இல்லையென்றாலும் , எங்கள் குடும்ப நட்பு வட்டத்தில் ஒருவருக்கொருவர் connected தான் . தனி வீட்டிலேயே இருந்துப்பழகிய எனக்கு , அபார்ட்மெண்ட் வாழ்கை மேல் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது . நண்பவர் வட்டம் எப்படி இருக்கும் அபார்ட்மென்டில் என்ற எதிர்பார்ப்பும் , நிறைய வீடுகள் இருந்ததனால் .
கட் செய்வோம் . எனக்கு திருமணமான புதிது . பெங்களூரில் ஒரு அபார்ட்மென்ட் வாடைகைக்கு பிடித்தேன் .மனைவிக்கும் எனக்கும் office ரொம்ப தூரம் இல்லாமலும் , பஸ் ஆட்டோ வசதி மற்றும் கடைகள் அருகில் இருப்பது போன்ற ஒரு இடம் தேடிப்பிடித்தேன் . மெயின் ரோட்டில் இருந்து பார்த்தால் ஒரு நகரத்தின் அனைத்து விதமான அவசர வாழ்க்கைக்கு உண்டான அம்சங்களுடன் இருந்தாலும் , ஒரு தெரு தள்ளி உள்ளே வந்தால் ஊர்ப்பக்கம் போன ஒரு பீலிங் கொடுக்கும்.
குறிப்பாக நடக்கும் தொலைவில் இருந்த அந்த பஜார் தெரு..
பெரிய ஆலமரத்தின் கீழ் பழக் கடைகளும் , பூ விற்பவர்களும் , காய் கரிக்கடைகளும் , பக்கத்துல நாயர் சாயா கடையும் , சற்று நடந்தால் ஒரு நாத்தம் பிடித்த பெலான்தூர் எரியும் அந்த இடத்தை எனக்கு ரொம்பப்பிடிக்க வைத்து விட்டது . நாத்தம் பிடித்த எரி என்றாலும் ,அதை ஒட்டின வளைவான தெருவும் , அழகான கோவிலும் , ஏரியைத்தாண்டி தெரியும் அழகிய தென்னந்த்தோப்பும் ஒரு ஒட்டு வீடும் , காலையில் நடந்தால் அந்தக்காட்சி நாத்தத்தை தாண்டிய கவிதைதான் எனக்கு.குறிப்பாக நகர நெரிசலில் இருந்து தள்ளிய ஒரு இதமான மனநிலைமையைக் கொடுக்கும்.வேலைப்பழு அதிகம் இருக்கும் போது எல்லாம் , அந்தப்பக்கமா ஒரு நடைப்போட்டோம்னா ஒரு recharged feeling வரும்.
எதையோ பகிர நினைத்து , எங்கோ வந்து விட்டேன் .
சரி அப்படியே கொஞ்சம் ரிவர்ஸ் அடிச்சு , வீட்டுக்கு வருவோம் , அதாவது அபார்ட்மென்டுக்கு .
லிப்டும் , அதில் இருந்து வெளியே வந்தால் சாத்தப்பட்ட கதவுகளும் ,
கிரில் வாய்த்த corridors உம் எனக்கு புதுசு.
மனிதர்களே பார்ப்பது அபூர்வம் போன்று இருந்தது பெரும்பாலான நேரத்தில் .
முதல் பத்தியில் நான் சொன்ன என் பழைய வாழ்க்கைக்கு முரணாக .
மேலே குறிப்பிட்ட எல்லாத்தையும் விட , அந்த அபார்ட்மென்டில் எனக்கு
பிடித்தது , குரங்கு! ஆமாம் குரங்கு .அதுவும் pipe வழியா மாடி ஏறி வந்து , இரண்டாவது மாடி பால்கனி வழிய எங்கள் கிச்சனுள் வந்து , உருளைக் கிழங்கையும் காரட்டையும் சுவைக்கும் குரங்கு , குறிப்பாக சொல்வதென்றால் அழகிய குரங்குக் குட்டிகள்!
கிட்சென் granite counter இல் தொங்கிக்கொண்டு அவர் ஒரு கையில் காரட் சாப்பிட்ட ஸ்டைல் அலாதி. ஐயோ யம்மானு என் மனைவி உள்ளே இருந்து ஓடி வந்தது வேறு கதை.
இது இப்படி இருக்க , அபார்ட்மென் ட் விதிமுறைப்படி , எங்கள் வீட்டு அன்றாடக்குப்பைகளை ஒரு கவரில் கட்டி வெளியே வைத்து விட வேண்டும் தினமும் . ஒருவர் வந்து collect செய்துகொள்வார் காலையில், சில நாட்கள் நானே கொண்டுப்போட்டு விடுவேன் .
அடுத்த வீட்டில் நாற்பதைக்கடந்த ஒரு மலையாள குடும்பம்.
என்ன காரணமோ தெரியவில்லை அவர் சிரிக்கவே மாட்டார் .வேகமா வருவார் போவார் . வீட்டில் அவர் அடிக்கும் விசில் சுவர் தாண்டி தூள் பறக்கும் . பூஜை மணியும் தான் .வீட்டில் குஷிப்பார்ட்டி தான் என்பதில்
எனக்கும் சந்தேகம் இல்லை. சேட்டன் வெளியே வைக்கும் காலி பீர் பாட்டில் சொன்னத்தகவல் தான் நமக்கு எட்டிருச்சே!
நான் காலையில் 8 மணிக்கு மேலதான் எழுந்திருப்பேன் . காலையில் 7 மணிக்கே மனைவிக்கு இன்போசிஸ் பஸ் வந்து விடும். வீட்டில் வேலை செய்யும் ஷீலா என்னும் நேபால்க்காரம்மா வேலை முடித்து கதவைச்சாற்றி சென்று விடுவார்கள் . மேல் சொன்ன குப்பை பையையும் வெளியே வைத்து விட்டு செல்வார்கள் . இது தான் வழக்கம் .
ஆபீசில் இருந்து வந்த என் மனைவி அன்று ரொம்ப சூடாக இருந்தாள் .
வேலை டென்சனா என்று பார்த்தால் இல்லை. சேட்டன் கொடுத்த டென்ஷன் . அன்று வேலைக்காரம்மா கொஞ்சம் லேட்டா வந்து இருக்காங்க . குப்பையை வெளியே வைக்கவும் நேரம் ஆகிவிட்டு இருந்தது.
இதற்குள் நம்ம குட்டிகொரங்கார் வந்து தன வேலையைக்காண்பித்து இருக்கிறார். கவரைப்பிரித்து உள்ளே இருந்த மாங்கொட்டைகளை சிதரடிச்சு , அதில் வெங்காயத்தோலும் மற்ற குப்பைகளும் கலக்கி அடிச்சு ஒரு வழி ஆகி இருந்தது தரை .
[ இந்த காட்சி நான் இன்னொரு நாள் நான் கண்டது .அது தெரியாமல் தொடைத்து சமாளித்து வேறு கதை. இதைப்போல் தான் அவர் பார்த்த அன்றைக்கும் இருந்து இருக்க வேண்டும்!]
மூச்சு இறைக்க வந்து என் மனையிடம் மறுநாள் முறை இட்டு இருக்கிறார் , கூச்சலுடன் . எனக்கு பிடிக்காமல் போனது என்னவென்றால் அவர் இதை தன் 3 மனைவி இடம் சொல்லச்சொல்லி இருக்க வேண்டும் , இல்லை அவர் என்னிடம் பேசி இருக்க வேண்டும் , என் மனையிடம் கத்தியது எனக்கு கடுப்பைக் கிளப்பியது . மனைவியும், என்ன அந்த ஆள் அப்படி கத்தறான் தெரியாம நடந்து தானே , நாமும் புதுசு குரங்கை கட்டியா போடமுடியும் , இனிமே ஜாக்கிரதையா இருக்கத்தான் முடியும் , இதுக்கு ஏன் அவன் அவ்ளோ டென்ஷன் ஆகரான்னு தெரியலை வென்றாள் .
அவருடைய கருப்பு socks இல் மாம்பழ சாறுபட்டு விட்டதாகவும் , தொவைச்ச socks வென்றும் திரும்ப திரும்ப பொலம்பினதாகவும் சொன்னாள் ."தொவைச்சsocks " என்றதும் எனக்கு சிரிப்பை அடக்க முடிய வில்லை.கோபம் சென்றுவிட்டது .
என்ன இவ்ளோ serious ஆ பேசிட்டு இருக்கேன் , நீங்க கூல் ஆ இருக்கீங்கன்னு அவ இன்னும் டென்ஷன் ஆனது தான் மிச்சம் . அவள் பேச சொன்னதால் , நான் அவரிடம் , இனிமே ஆகாம பாத்துக்கறேன் என்று சொல்லி வந்தேன்.
" உங்களை இதையா நான் பேச சொன்னேன்னு " இன்னும் கடுப்பானாள் .
என் மேல அக்கறையே இல்லை ங்கற அளவிற்கு கொண்டு வந்து விட்டது அந்த குரங்கு செய்த சேட்டை .
எனக்கு என்னமோ அவரைப் பார்த்ததும் சிரிப்பு வந்துடுச்சு . கதவைத் தட்டும் போது அந்த கருப்பு socks அந்த க்ரில்லில் கண்ணில் பட்டதால் ..
அவர் என்னிடம் கொஞ்சம் அமைதியாகத் தான் பேசினார் . . தான் கத்தினது கொஞ்சம் ஓவர் என்று உணர்ந்தார்னு நினைச்சேன்.
சில நாட்கள் போனது .
நான் கும்பிடும் ஆண்டவன் என்னைக்கைவிடவில்லை .
அருமைக்குரங்கார் இந்த முறை அதைப்போன்ற ஒரு லீலையை எங்கள் வீட்டின் முன் செய்துவிட்டு இருந்தார். நிறைய தேங்காய்க் கொப்பரைகள்
வேறக்கிடந்தன . சேட்டன் வீட்டில் இருந்துதான் வேறு எங்கே.
எனக்கு இருப்புக்கொள்ளவில்லை .
ட்ரிங் ட்ரிங் ......சேட்டனுக்கு தமிழ் தெரியும்!
" சார் , நாங்களாவது , குரங்கு முன் வாசல் வரை வரும்னு எதிர்பார்க்கலை
apartment க்கு புதுசு. நீங்க இங்க தான இருக்கீங்க ரொம்ப நாளா .
இங்க பாருங்க என்ன இது?" என்று வீட்டின் முன் இருந்த கோலத்தை காண்பித்தேன் .
வந்து போய் னு எதையோ முழுங்கினார் ....
சரி எதுவும் கேக்காம வந்துடீங்களே ன்னு என் மனைவி சொன்னது காதில் வந்து விழுந்தது அந்த நேரம்.
" அப்புறம் உங்கள் குரங்கை கொஞ்சம் கட்டி போடுங்க சார் , வாக்கிங் வேணும்னா கூட்டிட்டு போங்க வெளியே பார்க்ல ...
2 எதன்னா செஞ்சு வச்சுதுன்னா கஷ்டம் பாருங்க "...
அவர் முகம் பார்க்க கோடிப்புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.
டப் , கதவு சார்த்தப்பட்டது .
நாங்கள் இருந்த மூன்று வருடமும் ,என்னைக்கண்டால் வேகமாக முகத்தை எங்கோ பார்ப்பது போல சென்று விடுவார்!
அதன் பிறகு நாங்கள் குரங்கையும் பார்க்க வில்லை வீட்டினுள் . என்ன ஒரு மாயம் .