Saturday, November 29, 2014

அபார்ட்மென்ட் வாழ்க்கையும் குரங்கும் :

அபார்ட்மென்ட் வாழ்க்கையும் குரங்கும் :

சென்னையில் எங்கள் தெருவே எங்களுக்கு அடுத்த வீடு போலதான் .ஆனால்
அது எண்பதுகளில் உருவான நட்புப்  பட்டாளம் . அந்தக்காலனி  இன்றைக்கு சொல்லப்படும் gated  community இல்லையென்றாலும் , எங்கள் குடும்ப நட்பு வட்டத்தில் ஒருவருக்கொருவர் connected  தான் . தனி வீட்டிலேயே இருந்துப்பழகிய எனக்கு , அபார்ட்மெண்ட் வாழ்கை மேல் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது . நண்பவர்  வட்டம்  எப்படி  இருக்கும் அபார்ட்மென்டில்  என்ற  எதிர்பார்ப்பும் , நிறைய  வீடுகள்  இருந்ததனால் .

கட் செய்வோம் . எனக்கு திருமணமான  புதிது . பெங்களூரில் ஒரு அபார்ட்மென்ட் வாடைகைக்கு பிடித்தேன் .மனைவிக்கும் எனக்கும் office  ரொம்ப  தூரம் இல்லாமலும் , பஸ்  ஆட்டோ வசதி  மற்றும்  கடைகள் அருகில் இருப்பது  போன்ற  ஒரு இடம் தேடிப்பிடித்தேன் . மெயின் ரோட்டில் இருந்து பார்த்தால் ஒரு நகரத்தின் அனைத்து  விதமான அவசர வாழ்க்கைக்கு உண்டான அம்சங்களுடன் இருந்தாலும்  , ஒரு தெரு தள்ளி உள்ளே வந்தால்  ஊர்ப்பக்கம் போன ஒரு பீலிங் கொடுக்கும்.

குறிப்பாக நடக்கும் தொலைவில்  இருந்த அந்த பஜார் தெரு..
பெரிய ஆலமரத்தின் கீழ் பழக்  கடைகளும்  , பூ விற்பவர்களும் , காய் கரிக்கடைகளும்  , பக்கத்துல நாயர்  சாயா கடையும்  , சற்று நடந்தால் ஒரு  நாத்தம் பிடித்த பெலான்தூர் எரியும் அந்த இடத்தை எனக்கு ரொம்பப்பிடிக்க வைத்து விட்டது . நாத்தம் பிடித்த எரி  என்றாலும்  ,அதை ஒட்டின வளைவான தெருவும்   , அழகான கோவிலும்  , ஏரியைத்தாண்டி தெரியும் அழகிய தென்னந்த்தோப்பும் ஒரு ஒட்டு வீடும்  , காலையில் நடந்தால்  அந்தக்காட்சி நாத்தத்தை தாண்டிய கவிதைதான் எனக்கு.குறிப்பாக நகர  நெரிசலில் இருந்து தள்ளிய  ஒரு இதமான  மனநிலைமையைக்   கொடுக்கும்.வேலைப்பழு அதிகம் இருக்கும்  போது  எல்லாம்  , அந்தப்பக்கமா  ஒரு  நடைப்போட்டோம்னா ஒரு recharged  feeling  வரும்.

எதையோ பகிர நினைத்து  , எங்கோ வந்து விட்டேன் .
சரி அப்படியே கொஞ்சம் ரிவர்ஸ்  அடிச்சு  , வீட்டுக்கு வருவோம் , அதாவது அபார்ட்மென்டுக்கு .

லிப்டும்  , அதில்  இருந்து வெளியே வந்தால்  சாத்தப்பட்ட கதவுகளும் ,
கிரில் வாய்த்த corridors உம்   எனக்கு புதுசு.
மனிதர்களே  பார்ப்பது அபூர்வம் போன்று இருந்தது  பெரும்பாலான நேரத்தில் .
முதல் பத்தியில் நான் சொன்ன  என்  பழைய  வாழ்க்கைக்கு முரணாக .

மேலே குறிப்பிட்ட எல்லாத்தையும் விட , அந்த அபார்ட்மென்டில்  எனக்கு
பிடித்தது  , குரங்கு! ஆமாம் குரங்கு .அதுவும்  pipe  வழியா மாடி  ஏறி வந்து , இரண்டாவது  மாடி  பால்கனி  வழிய  எங்கள்  கிச்சனுள் வந்து , உருளைக் கிழங்கையும்  காரட்டையும் சுவைக்கும் குரங்கு , குறிப்பாக சொல்வதென்றால்  அழகிய  குரங்குக்  குட்டிகள்!

கிட்சென் granite  counter  இல் தொங்கிக்கொண்டு அவர் ஒரு கையில் காரட் சாப்பிட்ட ஸ்டைல் அலாதி. ஐயோ யம்மானு என் மனைவி உள்ளே இருந்து  ஓடி வந்தது வேறு கதை.

இது  இப்படி இருக்க , அபார்ட்மென் ட்   விதிமுறைப்படி  , எங்கள்  வீட்டு அன்றாடக்குப்பைகளை  ஒரு கவரில் கட்டி வெளியே வைத்து விட வேண்டும்  தினமும் . ஒருவர்  வந்து  collect  செய்துகொள்வார்  காலையில், சில நாட்கள் நானே கொண்டுப்போட்டு விடுவேன் .

அடுத்த வீட்டில் நாற்பதைக்கடந்த ஒரு மலையாள குடும்பம்.
என்ன காரணமோ  தெரியவில்லை அவர் சிரிக்கவே  மாட்டார் .வேகமா  வருவார்  போவார் . வீட்டில்  அவர் அடிக்கும் விசில்   சுவர்  தாண்டி  தூள்  பறக்கும் . பூஜை  மணியும் தான் .வீட்டில்  குஷிப்பார்ட்டி  தான் என்பதில்
எனக்கும்  சந்தேகம்  இல்லை. சேட்டன்  வெளியே வைக்கும் காலி  பீர் பாட்டில்  சொன்னத்தகவல் தான் நமக்கு எட்டிருச்சே!

நான்  காலையில்  8 மணிக்கு  மேலதான் எழுந்திருப்பேன் . காலையில் 7 மணிக்கே மனைவிக்கு  இன்போசிஸ்  பஸ் வந்து விடும். வீட்டில்  வேலை செய்யும்  ஷீலா  என்னும்  நேபால்க்காரம்மா வேலை முடித்து  கதவைச்சாற்றி சென்று  விடுவார்கள் . மேல் சொன்ன  குப்பை பையையும் வெளியே வைத்து  விட்டு செல்வார்கள் . இது  தான் வழக்கம் .

ஆபீசில் இருந்து  வந்த  என் மனைவி அன்று  ரொம்ப  சூடாக  இருந்தாள் .
வேலை  டென்சனா  என்று பார்த்தால்  இல்லை. சேட்டன்   கொடுத்த   டென்ஷன் . அன்று  வேலைக்காரம்மா  கொஞ்சம்  லேட்டா  வந்து இருக்காங்க . குப்பையை  வெளியே வைக்கவும் நேரம் ஆகிவிட்டு  இருந்தது.
இதற்குள்  நம்ம  குட்டிகொரங்கார்  வந்து  தன  வேலையைக்காண்பித்து  இருக்கிறார். கவரைப்பிரித்து  உள்ளே இருந்த  மாங்கொட்டைகளை  சிதரடிச்சு , அதில் வெங்காயத்தோலும்  மற்ற  குப்பைகளும் கலக்கி அடிச்சு  ஒரு  வழி  ஆகி இருந்தது  தரை .

[ இந்த  காட்சி  நான்  இன்னொரு  நாள் நான் கண்டது .அது தெரியாமல்  தொடைத்து சமாளித்து வேறு கதை. இதைப்போல்  தான்  அவர்  பார்த்த  அன்றைக்கும்  இருந்து  இருக்க வேண்டும்!]

மூச்சு  இறைக்க  வந்து என் மனையிடம்  மறுநாள்  முறை  இட்டு  இருக்கிறார் , கூச்சலுடன் . எனக்கு பிடிக்காமல்  போனது  என்னவென்றால்  அவர் இதை  தன் 3  மனைவி இடம்  சொல்லச்சொல்லி  இருக்க வேண்டும்  , இல்லை  அவர் என்னிடம்  பேசி இருக்க வேண்டும்  , என் மனையிடம்  கத்தியது  எனக்கு  கடுப்பைக் கிளப்பியது . மனைவியும், என்ன அந்த  ஆள்  அப்படி  கத்தறான்  தெரியாம  நடந்து  தானே  , நாமும் புதுசு  குரங்கை  கட்டியா  போடமுடியும்  , இனிமே ஜாக்கிரதையா  இருக்கத்தான்  முடியும் , இதுக்கு  ஏன்  அவன்  அவ்ளோ  டென்ஷன்  ஆகரான்னு  தெரியலை வென்றாள் .

அவருடைய  கருப்பு socks இல்  மாம்பழ  சாறுபட்டு விட்டதாகவும்  , தொவைச்ச socks  வென்றும் திரும்ப  திரும்ப  பொலம்பினதாகவும் சொன்னாள் ."தொவைச்சsocks " என்றதும்  எனக்கு  சிரிப்பை  அடக்க  முடிய வில்லை.கோபம்  சென்றுவிட்டது .

என்ன  இவ்ளோ  serious ஆ  பேசிட்டு இருக்கேன்  , நீங்க  கூல்  ஆ  இருக்கீங்கன்னு அவ  இன்னும் டென்ஷன்  ஆனது  தான் மிச்சம் . அவள்  பேச சொன்னதால் , நான் அவரிடம்  , இனிமே  ஆகாம  பாத்துக்கறேன்   என்று  சொல்லி வந்தேன்.

" உங்களை  இதையா  நான்  பேச சொன்னேன்னு " இன்னும்  கடுப்பானாள் .
என்  மேல  அக்கறையே  இல்லை ங்கற  அளவிற்கு கொண்டு வந்து  விட்டது  அந்த  குரங்கு  செய்த  சேட்டை .
எனக்கு  என்னமோ அவரைப்  பார்த்ததும்  சிரிப்பு  வந்துடுச்சு . கதவைத்   தட்டும்  போது  அந்த  கருப்பு socks  அந்த  க்ரில்லில்  கண்ணில்  பட்டதால் ..

அவர் என்னிடம்  கொஞ்சம்  அமைதியாகத்   தான் பேசினார் . . தான்  கத்தினது  கொஞ்சம்  ஓவர் என்று  உணர்ந்தார்னு  நினைச்சேன்.

சில நாட்கள்  போனது .
நான் கும்பிடும்  ஆண்டவன்  என்னைக்கைவிடவில்லை .
அருமைக்குரங்கார்  இந்த முறை  அதைப்போன்ற  ஒரு  லீலையை  எங்கள்  வீட்டின்  முன்  செய்துவிட்டு இருந்தார். நிறைய  தேங்காய்க்  கொப்பரைகள்
வேறக்கிடந்தன . சேட்டன்  வீட்டில்  இருந்துதான்  வேறு எங்கே.

எனக்கு  இருப்புக்கொள்ளவில்லை .

 ட்ரிங்  ட்ரிங் ......சேட்டனுக்கு  தமிழ்  தெரியும்!

" சார்  , நாங்களாவது  , குரங்கு  முன்  வாசல்  வரை வரும்னு  எதிர்பார்க்கலை
apartment க்கு  புதுசு. நீங்க இங்க தான இருக்கீங்க ரொம்ப நாளா .

இங்க பாருங்க  என்ன இது?" என்று   வீட்டின்  முன்  இருந்த  கோலத்தை காண்பித்தேன் .

 வந்து  போய் னு  எதையோ முழுங்கினார் ....

சரி எதுவும்  கேக்காம  வந்துடீங்களே ன்னு  என் மனைவி   சொன்னது  காதில்  வந்து  விழுந்தது  அந்த நேரம்.

" அப்புறம்  உங்கள் குரங்கை  கொஞ்சம்  கட்டி போடுங்க  சார்  , வாக்கிங்  வேணும்னா  கூட்டிட்டு  போங்க  வெளியே பார்க்ல ...
2  எதன்னா  செஞ்சு  வச்சுதுன்னா  கஷ்டம்  பாருங்க "...

அவர்  முகம்  பார்க்க  கோடிப்புண்ணியம்  செய்து  இருக்க வேண்டும்.

டப்  , கதவு  சார்த்தப்பட்டது .

நாங்கள்  இருந்த  மூன்று  வருடமும்  ,என்னைக்கண்டால்  வேகமாக  முகத்தை எங்கோ பார்ப்பது  போல  சென்று விடுவார்!

அதன்  பிறகு நாங்கள்  குரங்கையும்  பார்க்க  வில்லை  வீட்டினுள் . என்ன  ஒரு மாயம் .





3 comments:

  1. I remember you mentioned this when I came to your apartment....So you have blogged this after almost 5 years...It brings back our memory in Blore..!!

    ReplyDelete
    Replies
    1. I have these good long term memory with details , but pathetic short term memory in keeping the keys amd purse somewhere and searching all time...Thought will use the positive to blog!

      Delete
  2. Excellent Semmal. This is what i expected.

    ReplyDelete