Saturday, January 10, 2015

IT துறையில் 40 வயதிற்கு மேல வேலை இல்லையா ....பகுதி 3 ,[ நேர்முகத் தேர்விற்கு தயாராகுவது எப்படி ?]

இந்தத் தலைப்பினை  கொஞ்சம்  மீண்டும்  ஞாபகப்படுத்திக் கொள்வோம் [recap ]  செய்வோம் .

பகுதி  ஒன்றில்  பணிமுடக்கத்திர்க்கான காரணங்களைப் பார்த்தோம் .
[
 http://moongilkoodu.blogspot.com/2015/01/it-40-1.html
  ]

பகுதி  இரண்டில்  நீண்ட  காலத்  திட்டமாக  பணியில்  இருக்கும்  பொழுது
நம்மை  எப்படித்  தயார்  செய்துக்  கொள்ளலாம்  என்று  எழுதி  இருந்தேன் .
இன்னும் சிலவற்றை  அதே  தலைப்பில்  பேசுவோம்  என்று  சொல்லி  இருந்தேன் .
[
http://moongilkoodu.blogspot.com/2015/01/it-40-2.html
]

நேற்று  யோசித்தப்  பொழுது  , அதை  விட  அவசரமாக  , உடனுக்குடன்  வேலை தேடும்  சூழல்  வந்தால்  எப்படி  அதனை  அணுகலாம்  என்று  முதலில்  எழுதிட  நினைத்தேன் .

அதனால்   பகுதி  இரண்டில்  பேசுவோம்  என்றுக் கூறிய  சில தலைப்புகள்  அடுத்தப்  பகுதிகளில்  பார்ப்போம் .

சரி    அவசர  காலச்சூழலுக்கு   வருவோம் .
பணிமுடக்கும் ஏதோ  காரணத்தில்  ஒருவருக்கு  வந்து  விட்டது  என்று  வைத்துக்  கொள்வோம் [ touchwood  , வரக்கூடாது ].

அப்பொழுது  நம்மை  எப்படி  தயார்  செய்துக்கொள்வது .
எனக்கு 2002 இல்  ஒரு முறை வந்தது.அப்பொழுது  நான் மேற்படிப்பிற்கு  தயாராகிக்கொண்டு இருந்தேன் .அதனால்  வெளியில்  வேலை  தேடும்  பணியில்  ஈடுபடவில்லை . ஒருவேளை  மேற்படிப்பு  சரியாக  அமையாமல்  போய்விட்டு  இருந்தால்  கொஞ்சம்  சிக்கலில்  மாட்டி  இருந்து  இருந்ப்பேன் .
ஏனென்றால்  6 மாதங்கள்  நான்  வேலை  தேடாமல்  இருந்துவிட்டேன் .
வெளியே  வராமல்  முடியாமல்  போய்  இருக்காது .ஒரு  வழி  பிறந்தே  தீரும் ,உழைத்தால் .இருப்பினும் ,இப்பொழுது  யோசித்துப்பார்த்தால் , ஒரு  காப்புத்திட்டம் [ backup plan ]   வைத்து  இருந்து  இருக்கவேண்டும்  என்றுதான்  நினைக்கிறேன் .


சரி  சமீபத்தில்  2012 ஒரு  பணிமுடக்கும்  வந்த  பொழுது  எப்படி  சமாளித்தேன்  என்பதனைப் பார்ப்போம் .இதனைப்  பற்றி  நான்  வேறு  ஒரு  ப்ளாகில்  கூட  எழுதி  இருந்தேன் .
[[[
http://moongilkoodu.blogspot.com/2014/12/blog-post_30.html
அந்த  சூழலைத்  தெரிந்தக் கொள்ள  வேண்டும்  என்றால்  படிக்கலாம்!
அவசியம்  இல்லை . எப்படி  அணுகலாம்  என்று  மட்டும் பார்பதற்கு கீழே படிக்கலாம் .
]]]

சரி  நிலைமை  இப்படி  இருக்கு .சில மாதங்கள் அல்லது  ஒரு  மாதம்தான்  கொடுத்து  இருக்கிறார்கள் . என்ன  செய்ய  வேண்டும் ?

பதட்டமும்  மன  அழுத்தமும் :

பதட்டம்  வரத்தான்  செய்யும் . அதனைக்  கடந்து  போவோம் .
காரியத்தில்  தீவிரமாக  இறங்க வேண்டும் .  ஒரு அதிர்ச்சி மனநிலை   [shock  state]  முதலில்  வரும்/வரலாம்   , அதுவும்   கடந்து  போகும் . முதலில்  செய்யவேண்டியது  நம்  வட்டத்தில்  இருப்பர்வகளுக்கு [network ] தகவல்  கொடுப்பது .இதுதான்  நிலைமை  என்று  ஒரு  ஈமெயில்   தட்டி  விடவேண்டும்.முடிந்தவரை  கால்  செய்து பேசவேண்டும் .

[இதனைப்  பார்த்துச்   செய்ய  வேண்டும் . யாரிடம்  உண்மையான  காரணம்  சொல்ல  வேண்டும்  என்று  உங்களுக்கேத்   தெரியும் .]

மன  அழுத்தம்  இருக்கத்தான்  செய்யும் . ஆனால்  இதுதான்  ரொம்ப  நிதானமாக   இருக்க  வேண்டிய  நேரம். பதட்டம்  சொதப்பும் . சொல்லுவது  எளிது  என்று  நீங்கள்  சொல்வது  புரிகிறது . அதனைக்  கடந்து வந்தவன்  என்கின்றதால்  அனுபவத்தில்தான் சொல்கிறேன் .

நாம்  பதட்டப்பட்டால்  வீட்டில்  உள்ளவர்கள்  ரொம்ப  பயந்து  விடுவார்கள் .
ஒன்றும்  ஆகிவிடவில்லை  , இதை விட  நல்ல  இடத்துக்கு  போகவேண்டும்  என்று மனதினுள்  ஒரு  சூளுரை  எடுத்துக்கொள்ள  வேண்டும் .
நெருங்கிய  நண்பரிடம் மனதில்  இருப்பதை  கொட்டிவிட்டு , காரியத்தில்  இறங்க  வேண்டும்.இனி  சுய  அனுதாபம்  கைகொடுக்காது .போரில்  உள்ளோம்  நாம் .

"linkedin " போன்ற ஒரு  சோசியல்  நெட்வொர்கிங்  சைட்  [ social  networking  site ] எல்லோரையும்  தொடர்பு  கொள்ள  சிறந்த  வழி  .[ இது  என்னுடைய  கருத்து  மட்டுமே  , நான்  விளம்பரப்  படுத்தவில்லை  , தெரிந்ததைச்   சொல்கிறேன் , வேறு  இணையதளங்களும் இருக்கலாம்  ] நண்பர்[ கல்லூரியோ   அலுவலகமோ , பள்ளியோ உங்களால்  முடிந்தவரை ] ,எல்லோருடனும்  தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள  வேண்டும்,பழைய  அலுவலகங்களையும் சேர்த்து  தான் .
நண்பர்  அவர்நண்பர்  அவரின்  நண்பர்  இப்படி  பல  தளத்தில்  "linkedin" மூலமாக  தொடர்பு  கொள்ள  முடியும்  என்பதை  நாம்  அறிந்ததே .
பெரும்பாலும்  அவ்வப்பொழுது "linedkin  profile" தனை  மேம்படுத்தி  செய்து  வருதல்  முக்கியம் . குறிப்பாக  ஒரு  அலுவலகம்  விட்டு வேறு  இடத்திற்கு  மாறும்  பொழுது பழைய அலுவலக  நண்பர்களை  தொடர்பில்  கொண்டுவந்து  வைத்திருக்க  வேண்டும் .

ரெசுமே  [Resume] மற்றும் "Linkedin  Profile "  இரண்டும்  சரிப்பட அப்டேட்  செய்து  இருக்க வேண்டும்.இதைத்  தவிர  நிறைய  "job  portals " இருக்கிறது .  பார்த்துச்  செய்து  கொள்ளுங்கள் .நாம்  முக்கியமான  விஷயத்திற்கு  வருவோம்.

"Resume  updation " அவசர  காலத்தில்  செய்வதை  விட , மாதா  மாதம்  செய்வது  நல்லது.அதாவது  அவ்வப்பொழுது  ஏதேனும் புதிதாக  செய்தாலோ  , அல்லது  தகுதியுடைய  வேலை  செய்து  இருந்தாலோ , புது  ப்ராஜெக்ட் செய்து  இருந்தாலோ அதனை  ரெசுமேவில்  போட்டுக்  கொள்ள வேண்டும்.நினைவில்  மங்காமல்  இருக்கும்  பொழுதே  அதனை ரெசுமேவில் ஏற்றிவிட்டால்  நன்றாகவும்  வரும்.

அப்படி  இல்லையென்றால்  கூட  , ரெசுமே   தயார்  செய்வதற்கு  நேரம்  எடுத்துக்  கொள்ளுங்கள் . இது  ரொம்ப  ரொம்ப  முக்கியம் .
உங்களை நேர்முகத்  தேர்விற்கு  அழைக்கப்  போகும்  முதல்  அஸ்திரம்  இதுத்தான் . அப்பொழுது  அதனை எவ்வளவு  வீரியமாக  அதனை  எய்திட  வேண்டும்  என்று  சொல்லித்  தெரியவேண்டியதில்லை .

ஒரு  பட்டியல்  போட வேண்டும்  ,முன்பு  செய்த  ப்ராஜக்ட்ஸ் என்னவெல்லாம்  இருக்கிறது  , அதில்  எந்தக்  குறிப்பிட்ட  பகுதி  சிறப்பானதாகப் பார்க்கப்படும்   என்று . அதாவது  தற்போதைய  மார்கெட்டிற்கு  என்ன  தேவை  என்று  ஒரு  அலசு  அலசிவிட்டு  , அந்த  தேவைக்கு  ஏற்ப  நீங்கள்  செய்துள்ள  வேலைகளை  சிறப்பம்சப்படுத்தி  [highlight ]   எழுதுங்கள் .

ரொம்ப  நீளமான  ரெசுமே   வேண்டாம் என்றுதான்  சொல்லுவேன் .
கச்சிதமாக  இருக்க வேண்டும்  , ஆனால்  உங்கள்   திறன்கள்         [ skill  sets]  அனைத்தும் நன்றாக   பார்வைக்கு  வைக்கப்பட்டு [  showcase ]  இருக்க  வேண்டும்.நண்பர்கள்  உதவி கேட்டு  ஒரு  முறைக்கு  பல  முறை  சரிபார்த்து விட்டு பின்பு  ரெசுமே  அனுப்பி   வையுங்கள் .

சுருங்கச்  சொல்வதென்றால் , உங்கள்  ரெசுமே  பார்க்க நிறுவன  மேலாளருக்கு  ரொம்ப  நேரம்  இருக்காது .
அந்தக்  குறுகிய   காலத்தினுள் அவர் கவனம்  உங்கள்  பக்கம்  திரும்ப  வேண்டும் . அதற்கு  ஏற்றவாறு  நச்சுன்னு  எழுதுங்கள் !

நெட்வொர்க் :

மேற்கூறிய   தொடர்பு  வட்டம்   [நெட்வொர்க் ] மூலமாக  ரெசுமே அனுப்பி  வைப்போம்  முதலில் .இதில்  நிறைய  லாபங்கள்  இருக்கிறது .
வேலைக்கு  கூப்பிடும்  நிறுவனத்திற்கு  இது  போல  , நூற்றுக்கணக்கான  , அல்லது  ஆயிரக்கணக்கான  ரெசுமேக்கள்    கூட  வரலாம் .

அவர்களிடம்  அவர்கள்  வேலைக்கு  மத்தியில்  யாரைக்  கூப்பிட  என்ற  குழப்பம்   வரும் . அவர்கள்  குழுவினில்   இருப்பவர்  ஒருவர்  மூலமாக  அனுப்பப் பட்டால் , அவர்கள்  அனுப்பியரை  நாடி  , நம்மைப்  பற்றி  தெரிந்துக்  கொண்டு  [ reference ] சீக்கிரம்  கூப்பிட  பன்மடங்கு  வாய்ப்பு   உண்டு .
நிறுவங்களின்   ஆட்கள்  எடுக்கப்பட்ட  சதவிகிதம் [ hiring  ratio] பார்த்தீர்களானால்  , 30% மேல்  இப்படி " reference " மூலமாக  வந்த   நபர்களாகத்தான் இருப்பர் பெரும்பாலும் .
தயக்கம்  விட்டு  , நம்  வட்டத்தில்  இருக்கும்  நபர்கள்  மூலமாக  ரெசுமே  அனுப்பி  வையுங்கள் [ இது  முதல்  கட்டம் மட்டுமே  , அதன்  பிறகு
மற்ற  வழிகளில்  தொடருங்கள் ]

நேர்முகத்  தேர்வு  மட்டும்  அன்றி  , ஒரு  நிறுவனத்தைப்  பற்றி  குறிப்பாக
அந்த  குழுவின்   செயல்பாடு  பற்றி  அங்கே  வேலை பார்ப்பவர்தான்  நன்றாக  அறிந்து  இருப்பார்கள் . என்ன  மாதிரி  வேலை  , என்னக்   கற்றுக்கொள்ளலாம்  , எப்படிப்  பட்ட  வேலை  அழுத்தம்  இருக்கும்  , பதவி உயர்வு  எப்படி  இருக்கும்  ,   ஆட்குறைப்பு  அடிக்கடி  நடக்குமா  போன்ற  முக்கியமான காரணிகள்  தெரிந்துக்  கொள்ள  உதவும் .

"REFERENCE IS THE BEST MEANS TO APPROACH A COMPANY"

" recruiters " இன்  துணையும்  ரொம்ப  முக்கியம் .
நல்ல " recruiters"  உடன்  தொடர்பு  வைத்துக் கொள்ளுங்கள் , தேவையென்றால்  மட்டும்  தொடர்பு  கொள்ளமால்  ,  அவர்களுடன்  அவ்வப்பொழுது  தொடர்பில்  இருங்கள் . மார்க்கெட்  நிலைமைதனை  அவர்கள்  நன்று  அறிவர் .
நம்முடைய  திறமைக்கு   வெளியே  நல்ல  ஒரு  பொருத்தம்   இருந்தால்  அவர்கள்  தகவல்  சொல்லுவார்கள் .

ரெசுமே  அனுப்பும்  வேலை  ஒரு  பக்கம்  நடந்துக்  கொண்டு  இருக்கட்டும் .
தொலை பேசி  அழைப்புகள்  மெதுவாக  வரத்தொடங்கும் .
இந்த  இடைப்பட்ட  காலம்   ரொம்ப  முக்கியம் .அறிவைக்  கூர்மையாகவும்  மனதை திடமாகவும் வைத்து  இருக்க  வேண்டிய  நேரம்  இதுதான் .

நேர்முகத்  தேர்வு :

நிறையப்  படிக்க  வேண்டும் .
குறிப்பாக  கீழ்வருவனவற்றை சொல்வேன்  ,

1)   முதல்  கட்டத்  தேர்வில்   , என்ன  வகையான  திறமை  உள்ளது [profile ] , அவர்களுக்கு  அது  பொருந்துமா  என்று  பார்ப்பார்கள்  பெரும்பாலும் .தொலைபேசி  அல்லது  நேர்காணல்  நடக்கும்  முன்  அவர்கள்  தேவையினை  நன்றாக  ஆராய்ந்துக்  கொள்ளுங்கள் . அவர்களுடன்  பேசும்பொழுது
அவர்கள்  தேவை  அறிந்து  பதில்  அளிக்கவும் . அவர்கள்  தேவை  சார்ந்த  வேலை  என்ன  செய்துள்ளீர்களோ அதனைக்   கோர்வையாகச்   சொல்லவும்.

இதற்குத்  முன்  கூட்டியே  தயாராகுவது  முக்கியம்  . அவர்கள்  கேட்ட  பிறகு இதனை  யோசிக்கக்  கூடாது. ஒரு  நோட்டுப்  புத்தகம்  எடுத்துக்கொண்டு  , அந்த  ப்ராஜக்ட்டின்  சிறப்பம்சங்கள்  , உங்கள்  பங்கு   என்ன  , என்ன  மாதிரியான பிரெச்சனைகள்  வந்தன  , அதனை  எப்படி  அணுகினீர்கள் என்று  குறித்து  வைத்துக்  கொள்ளுங்கள்   ,இது  மிகவும்   முக்கியம் .
நேர்முகத்  தேர்வு  செய்பவர்களின் மனதில்  இவன்  நமக்கு  சரிப்பட்டு  வருவான்  என்ற  ஆழ்ந்த  தீர்மானத்தை  ஏற்படுத்த  வேண்டும் .
குறிப்பாக  அவர்கள் ஆர்வம்  குறையாமல் ,   இன்னும் சொல்லப்  போனால்  , அவர்கள்  நம்மிடமிருந்து  அந்த  நேர்முகத்  தேர்வில்  ஏதேனும்  கற்றுக்கொண்டு  போகும்  அளவில்  ஆழமான  பதிலாக  இருக்க  வேண்டும் .
எப்படிப் பட்ட  கேள்விகள்  வரும்  என்ற  ஒரு  பட்டியல்  தயார்  செய்ய  வேண்டும்  , எப்படி  அணுகலாம்  என்று  முன்கூட்டி  மனதில்  பல  முறை   ஓட்டிப்  பார்க்க  வேண்டும் . இந்த  பயிற்சிதான்   உங்கள்  நேர்முகத்  தேர்வில்  பதட்டத்தைக் குறைக்கும் . இவ்வளவுதானே  நாம்  இதனை  ஏற்கனவே  பார்த்தாகி விட்டோமே   என்று  தானாகவே பதட்டம்  அடங்கும்  , தைரியம்  கூடும் , கம்பீரமாக  பதில்  அளிப்போம் .

2) அனுபவம்  சார்ந்தக்  கேள்விகள்  ஒரு  பக்கம்  கேட்கப்  பட்டாலும்  ,
உங்கள்  கல்லூரியில்  படித்த  கேள்விகளோ  , அல்லது  வெகு  அடிப்படைக்  கேள்விகளும்  கேட்கப்படும்  ஏன்  அப்படி  கேட்கிறார்கள்  என்று  எல்லாம்  சொல்லிக்கொண்டு  இருக்க  முடியாது . அடிப்படையில்   ரொம்ப  திடமாக  இருக்க  வேண்டும்  என்று  நம்புவார்கள்  , உண்மைதான் .
சில கேள்விகள்  அங்கே  தொடங்கி  ஆழமாகப்   போகும் .
முக்கியமான  கோணம்  ஒன்று  உள்ளது . நாம்  செய்யும்  வேலைதனை  சும்மா  மெனக்கெட்டு  செய்கிறோமா  அல்லது  , அதன்  பின்னணி  அறிந்து
ஆழமாக  யோசித்துச்  செய்கிறோமா என்று  தெரிந்துக்  கொள்ளும்  ஒரு  கேள்வியாகத்தான் அதனை  நான்  பார்ப்பேன் . வேறு  வகையான  பிரச்சனை  வரும்  பொழுது  இந்த  அடிப்படை அறிவிலிருந்து   வேறு கோணத்தில்  சிந்திக்கும்  அறிவு  [ lateral  thinking ]   தொடங்கிறது  என்று  நான்  நம்புகிறேன் .ஆதலால்  அடிப்படைக்  கோட்பாடுகளில் பலமாக  இருங்கள் .
இதனை  புதுப்பித்துப் [refresh]   போவதற்கு  ரொம்ப  நாட்கள்  ஆகாது , ஆனால்  ரொம்ப  முக்கியம் .

3)  ஒரு  பாய்வுப்படம் [flowchart ] வரைந்துக்  கொள்ளுங்கள் .
உங்கள்  துறை  சார்ந்து  உங்களுக்கு  என்ன  என்ன கிளைத்துறைகள்  இருக்கிறதென்று , அதில்  என்னவெல்லாம்   கேள்வி வரும்  என்றும்.
அதற்கு நீங்கள் பதில்  சொன்னால்  , எப்படி எல்லாம்   அதிலிருந்து   இன்னும் ஆழமாக  கேட்கப்படலாம்  என்று  யோசியுங்கள்  , உங்களுக்குத்  நன்றாகத்  தெரிந்த  தொழில் நுட்ப  வார்த்தைகளை    பிரயோகப்படுத்துங்கள் .
மேம்போக்காக ஒன்றைச்  சொல்லி அதிலிருந்து  கிளைக்  கேள்விகள்  கேட்கப்பட்டு  மாட்டிக் கொள்ள  வேண்டாம் .
இதனை  தவிர்க்க  நிறைய  படிக்க  வேண்டும் .
முன்பே  சொன்ன  புத்தியளவில்   தயாராக  இருக்கவேண்டும் .[  mental  preparation]

4) ஒரு  கருத்துப்படிவம்  கேட்கப்பட்டால்  முடிந்த  வரை  ஒரு  படம்  வரைந்து  அதனை    விளக்க  வேண்டும்  , அல்லது  நாம்  செய்த  திட்டத்தில்  [ப்ராஜக்ட்டில்] உள்ள  ஒரு  உதாரணத்தை  சொல்லி  விளக்க  வேண்டும் . இன்னும்  சொல்லப்போனால்  , ஒருவருக்கு  அதனைச்  சொல்லிக்கொடுப்பதென்றால்   எப்படி  சொல்வோமோ  அந்த  மனநிலை  வைத்துக்  கொண்டால்  , பதட்டம்  குறையும் .
நேர்முகத்தேர்வாளரின்  மனதைப்  படிக்க  வேண்டும்  , விடை  சொல்லும்  பொழுது  அவர்கது   எதிர்வினை மற்றும்  உடல்  மொழி [ reaction  and  body language ] பார்த்து அதற்கேற்றார்  போல  பதில்  சொல்ல  வேண்டும்  . அழகாக  கோர்வையாக  ரொம்ப  நீட்டிக்கவும்  அல்லாமல்  சொன்னால்  நல்லது . அதற்கு  மேல்  தேவைப்  பட்டால்  அவரே  கேட்ப்பார் . ரொம்ப  சுருங்கவும்  கூற  வேண்டாம் .

ADAPT  yourselves  to  the  situation and  improvise .

நேர்முகத்  தேர்விற்குபின்

பதில்  வர  நேரம்  எடுக்கலாம் , நல்ல  செய்தியும்  வரும்  , வரமாலும்  போகலாம் . எனக்கும்  நடந்து  இருக்கிறது .
மனம்  தளராமல்  செய்த  தவறுகளை  அலசி , அதற்கு  விடை  தெரிந்துக்  கொண்டு  இன்னும்  தீவிரமாக  படிக்க  வேண்டும்  .
என்னுடைய   அனுபவத்தில்  , அடுத்த  அடுத்த  நேர்முகத்  தேர்வில்  நான்  இன்னும்  சிறப்பாக  செய்தேன்  என்றுதான்  சொல்லுவேன் .
ஒவ்வொரு   நேர்முகத்  தேர்வும்  நமக்கு கொடுக்கப்படும்   ஒரு  வாய்ப்பு மட்டும்  இல்லை  , நம்மை  மெருகேற்ற  கற்றுக்கொள்ளும்  ஒரு  சந்தர்பம்தான் , முழு  மனதுடன்  அணுகுவோம் , ஆனால்  பதட்டம்  குறைக்க  வேண்டும் .கேள்விகள்  கேட்கப் படும்  பொழுது  , மனதை  லயித்து உண்மையான  ஆர்வத்துடன்  அந்தக்  கேள்வியினை  அணுக  வேண்டும் .
ஒரு  குறிப்பிட்ட  நிறுவனத்தின்  பதிலுக்கு  மட்டும்  காத்துக் கொண்டு  இருக்காமல்  , தொடர்ந்து  தேர்வுகளில்  கலந்துக் கொண்டே  இருத்தல்  வேண்டும் . எந்த  வேலை  சரியாக  வருகிறதோ  அதனைப்  பின்னர்  முடிவு  செய்யலாம் .

பகுதி  நான்கில் நீண்ட  காலத்  திட்டத்தில்  நான்  பகுதி   இரண்டில்  விட்டதைத் தொடருவேன் .

பார்ப்போம் .
.









2 comments:

  1. சிறப்பான பதிவு இந்த தொடர்.
    நிச்சயம் இது மற்றவர்களுக்கு ஒரு உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  2. நன்றி! தங்கள் விமர்சனத்திற்கு ....
    யாருக்காவது உதவினால் மகிழ்ச்சி .

    ReplyDelete