இந்தத் தலைப்பினை கொஞ்சம் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்வோம் [recap ] செய்வோம் .
பகுதி ஒன்றில் பணிமுடக்கத்திர்க்கான காரணங்களைப் பார்த்தோம் .
[
http://moongilkoodu.blogspot.com/2015/01/it-40-1.html
]
பகுதி இரண்டில் நீண்ட காலத் திட்டமாக பணியில் இருக்கும் பொழுது
நம்மை எப்படித் தயார் செய்துக் கொள்ளலாம் என்று எழுதி இருந்தேன் .
இன்னும் சிலவற்றை அதே தலைப்பில் பேசுவோம் என்று சொல்லி இருந்தேன் .
[
http://moongilkoodu.blogspot.com/2015/01/it-40-2.html
]
நேற்று யோசித்தப் பொழுது , அதை விட அவசரமாக , உடனுக்குடன் வேலை தேடும் சூழல் வந்தால் எப்படி அதனை அணுகலாம் என்று முதலில் எழுதிட நினைத்தேன் .
அதனால் பகுதி இரண்டில் பேசுவோம் என்றுக் கூறிய சில தலைப்புகள் அடுத்தப் பகுதிகளில் பார்ப்போம் .
சரி அவசர காலச்சூழலுக்கு வருவோம் .
பணிமுடக்கும் ஏதோ காரணத்தில் ஒருவருக்கு வந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம் [ touchwood , வரக்கூடாது ].
அப்பொழுது நம்மை எப்படி தயார் செய்துக்கொள்வது .
எனக்கு 2002 இல் ஒரு முறை வந்தது.அப்பொழுது நான் மேற்படிப்பிற்கு தயாராகிக்கொண்டு இருந்தேன் .அதனால் வெளியில் வேலை தேடும் பணியில் ஈடுபடவில்லை . ஒருவேளை மேற்படிப்பு சரியாக அமையாமல் போய்விட்டு இருந்தால் கொஞ்சம் சிக்கலில் மாட்டி இருந்து இருந்ப்பேன் .
ஏனென்றால் 6 மாதங்கள் நான் வேலை தேடாமல் இருந்துவிட்டேன் .
வெளியே வராமல் முடியாமல் போய் இருக்காது .ஒரு வழி பிறந்தே தீரும் ,உழைத்தால் .இருப்பினும் ,இப்பொழுது யோசித்துப்பார்த்தால் , ஒரு காப்புத்திட்டம் [ backup plan ] வைத்து இருந்து இருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறேன் .
சரி சமீபத்தில் 2012 ஒரு பணிமுடக்கும் வந்த பொழுது எப்படி சமாளித்தேன் என்பதனைப் பார்ப்போம் .இதனைப் பற்றி நான் வேறு ஒரு ப்ளாகில் கூட எழுதி இருந்தேன் .
[[[
http://moongilkoodu.blogspot.com/2014/12/blog-post_30.html
அந்த சூழலைத் தெரிந்தக் கொள்ள வேண்டும் என்றால் படிக்கலாம்!
அவசியம் இல்லை . எப்படி அணுகலாம் என்று மட்டும் பார்பதற்கு கீழே படிக்கலாம் .
]]]
சரி நிலைமை இப்படி இருக்கு .சில மாதங்கள் அல்லது ஒரு மாதம்தான் கொடுத்து இருக்கிறார்கள் . என்ன செய்ய வேண்டும் ?
பதட்டமும் மன அழுத்தமும் :
பதட்டம் வரத்தான் செய்யும் . அதனைக் கடந்து போவோம் .
காரியத்தில் தீவிரமாக இறங்க வேண்டும் . ஒரு அதிர்ச்சி மனநிலை [shock state] முதலில் வரும்/வரலாம் , அதுவும் கடந்து போகும் . முதலில் செய்யவேண்டியது நம் வட்டத்தில் இருப்பர்வகளுக்கு [network ] தகவல் கொடுப்பது .இதுதான் நிலைமை என்று ஒரு ஈமெயில் தட்டி விடவேண்டும்.முடிந்தவரை கால் செய்து பேசவேண்டும் .
[இதனைப் பார்த்துச் செய்ய வேண்டும் . யாரிடம் உண்மையான காரணம் சொல்ல வேண்டும் என்று உங்களுக்கேத் தெரியும் .]
மன அழுத்தம் இருக்கத்தான் செய்யும் . ஆனால் இதுதான் ரொம்ப நிதானமாக இருக்க வேண்டிய நேரம். பதட்டம் சொதப்பும் . சொல்லுவது எளிது என்று நீங்கள் சொல்வது புரிகிறது . அதனைக் கடந்து வந்தவன் என்கின்றதால் அனுபவத்தில்தான் சொல்கிறேன் .
நாம் பதட்டப்பட்டால் வீட்டில் உள்ளவர்கள் ரொம்ப பயந்து விடுவார்கள் .
ஒன்றும் ஆகிவிடவில்லை , இதை விட நல்ல இடத்துக்கு போகவேண்டும் என்று மனதினுள் ஒரு சூளுரை எடுத்துக்கொள்ள வேண்டும் .
நெருங்கிய நண்பரிடம் மனதில் இருப்பதை கொட்டிவிட்டு , காரியத்தில் இறங்க வேண்டும்.இனி சுய அனுதாபம் கைகொடுக்காது .போரில் உள்ளோம் நாம் .
"linkedin " போன்ற ஒரு சோசியல் நெட்வொர்கிங் சைட் [ social networking site ] எல்லோரையும் தொடர்பு கொள்ள சிறந்த வழி .[ இது என்னுடைய கருத்து மட்டுமே , நான் விளம்பரப் படுத்தவில்லை , தெரிந்ததைச் சொல்கிறேன் , வேறு இணையதளங்களும் இருக்கலாம் ] நண்பர்[ கல்லூரியோ அலுவலகமோ , பள்ளியோ உங்களால் முடிந்தவரை ] ,எல்லோருடனும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்,பழைய அலுவலகங்களையும் சேர்த்து தான் .
நண்பர் அவர்நண்பர் அவரின் நண்பர் இப்படி பல தளத்தில் "linkedin" மூலமாக தொடர்பு கொள்ள முடியும் என்பதை நாம் அறிந்ததே .
பெரும்பாலும் அவ்வப்பொழுது "linedkin profile" தனை மேம்படுத்தி செய்து வருதல் முக்கியம் . குறிப்பாக ஒரு அலுவலகம் விட்டு வேறு இடத்திற்கு மாறும் பொழுது பழைய அலுவலக நண்பர்களை தொடர்பில் கொண்டுவந்து வைத்திருக்க வேண்டும் .
ரெசுமே [Resume] மற்றும் "Linkedin Profile " இரண்டும் சரிப்பட அப்டேட் செய்து இருக்க வேண்டும்.இதைத் தவிர நிறைய "job portals " இருக்கிறது . பார்த்துச் செய்து கொள்ளுங்கள் .நாம் முக்கியமான விஷயத்திற்கு வருவோம்.
"Resume updation " அவசர காலத்தில் செய்வதை விட , மாதா மாதம் செய்வது நல்லது.அதாவது அவ்வப்பொழுது ஏதேனும் புதிதாக செய்தாலோ , அல்லது தகுதியுடைய வேலை செய்து இருந்தாலோ , புது ப்ராஜெக்ட் செய்து இருந்தாலோ அதனை ரெசுமேவில் போட்டுக் கொள்ள வேண்டும்.நினைவில் மங்காமல் இருக்கும் பொழுதே அதனை ரெசுமேவில் ஏற்றிவிட்டால் நன்றாகவும் வரும்.
அப்படி இல்லையென்றால் கூட , ரெசுமே தயார் செய்வதற்கு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள் . இது ரொம்ப ரொம்ப முக்கியம் .
உங்களை நேர்முகத் தேர்விற்கு அழைக்கப் போகும் முதல் அஸ்திரம் இதுத்தான் . அப்பொழுது அதனை எவ்வளவு வீரியமாக அதனை எய்திட வேண்டும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை .
ஒரு பட்டியல் போட வேண்டும் ,முன்பு செய்த ப்ராஜக்ட்ஸ் என்னவெல்லாம் இருக்கிறது , அதில் எந்தக் குறிப்பிட்ட பகுதி சிறப்பானதாகப் பார்க்கப்படும் என்று . அதாவது தற்போதைய மார்கெட்டிற்கு என்ன தேவை என்று ஒரு அலசு அலசிவிட்டு , அந்த தேவைக்கு ஏற்ப நீங்கள் செய்துள்ள வேலைகளை சிறப்பம்சப்படுத்தி [highlight ] எழுதுங்கள் .
ரொம்ப நீளமான ரெசுமே வேண்டாம் என்றுதான் சொல்லுவேன் .
கச்சிதமாக இருக்க வேண்டும் , ஆனால் உங்கள் திறன்கள் [ skill sets] அனைத்தும் நன்றாக பார்வைக்கு வைக்கப்பட்டு [ showcase ] இருக்க வேண்டும்.நண்பர்கள் உதவி கேட்டு ஒரு முறைக்கு பல முறை சரிபார்த்து விட்டு பின்பு ரெசுமே அனுப்பி வையுங்கள் .
சுருங்கச் சொல்வதென்றால் , உங்கள் ரெசுமே பார்க்க நிறுவன மேலாளருக்கு ரொம்ப நேரம் இருக்காது .
அந்தக் குறுகிய காலத்தினுள் அவர் கவனம் உங்கள் பக்கம் திரும்ப வேண்டும் . அதற்கு ஏற்றவாறு நச்சுன்னு எழுதுங்கள் !
நெட்வொர்க் :
மேற்கூறிய தொடர்பு வட்டம் [நெட்வொர்க் ] மூலமாக ரெசுமே அனுப்பி வைப்போம் முதலில் .இதில் நிறைய லாபங்கள் இருக்கிறது .
வேலைக்கு கூப்பிடும் நிறுவனத்திற்கு இது போல , நூற்றுக்கணக்கான , அல்லது ஆயிரக்கணக்கான ரெசுமேக்கள் கூட வரலாம் .
அவர்களிடம் அவர்கள் வேலைக்கு மத்தியில் யாரைக் கூப்பிட என்ற குழப்பம் வரும் . அவர்கள் குழுவினில் இருப்பவர் ஒருவர் மூலமாக அனுப்பப் பட்டால் , அவர்கள் அனுப்பியரை நாடி , நம்மைப் பற்றி தெரிந்துக் கொண்டு [ reference ] சீக்கிரம் கூப்பிட பன்மடங்கு வாய்ப்பு உண்டு .
நிறுவங்களின் ஆட்கள் எடுக்கப்பட்ட சதவிகிதம் [ hiring ratio] பார்த்தீர்களானால் , 30% மேல் இப்படி " reference " மூலமாக வந்த நபர்களாகத்தான் இருப்பர் பெரும்பாலும் .
தயக்கம் விட்டு , நம் வட்டத்தில் இருக்கும் நபர்கள் மூலமாக ரெசுமே அனுப்பி வையுங்கள் [ இது முதல் கட்டம் மட்டுமே , அதன் பிறகு
மற்ற வழிகளில் தொடருங்கள் ]
நேர்முகத் தேர்வு மட்டும் அன்றி , ஒரு நிறுவனத்தைப் பற்றி குறிப்பாக
அந்த குழுவின் செயல்பாடு பற்றி அங்கே வேலை பார்ப்பவர்தான் நன்றாக அறிந்து இருப்பார்கள் . என்ன மாதிரி வேலை , என்னக் கற்றுக்கொள்ளலாம் , எப்படிப் பட்ட வேலை அழுத்தம் இருக்கும் , பதவி உயர்வு எப்படி இருக்கும் , ஆட்குறைப்பு அடிக்கடி நடக்குமா போன்ற முக்கியமான காரணிகள் தெரிந்துக் கொள்ள உதவும் .
"REFERENCE IS THE BEST MEANS TO APPROACH A COMPANY"
" recruiters " இன் துணையும் ரொம்ப முக்கியம் .
நல்ல " recruiters" உடன் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள் , தேவையென்றால் மட்டும் தொடர்பு கொள்ளமால் , அவர்களுடன் அவ்வப்பொழுது தொடர்பில் இருங்கள் . மார்க்கெட் நிலைமைதனை அவர்கள் நன்று அறிவர் .
நம்முடைய திறமைக்கு வெளியே நல்ல ஒரு பொருத்தம் இருந்தால் அவர்கள் தகவல் சொல்லுவார்கள் .
ரெசுமே அனுப்பும் வேலை ஒரு பக்கம் நடந்துக் கொண்டு இருக்கட்டும் .
தொலை பேசி அழைப்புகள் மெதுவாக வரத்தொடங்கும் .
இந்த இடைப்பட்ட காலம் ரொம்ப முக்கியம் .அறிவைக் கூர்மையாகவும் மனதை திடமாகவும் வைத்து இருக்க வேண்டிய நேரம் இதுதான் .
நேர்முகத் தேர்வு :
நிறையப் படிக்க வேண்டும் .
குறிப்பாக கீழ்வருவனவற்றை சொல்வேன் ,
1) முதல் கட்டத் தேர்வில் , என்ன வகையான திறமை உள்ளது [profile ] , அவர்களுக்கு அது பொருந்துமா என்று பார்ப்பார்கள் பெரும்பாலும் .தொலைபேசி அல்லது நேர்காணல் நடக்கும் முன் அவர்கள் தேவையினை நன்றாக ஆராய்ந்துக் கொள்ளுங்கள் . அவர்களுடன் பேசும்பொழுது
அவர்கள் தேவை அறிந்து பதில் அளிக்கவும் . அவர்கள் தேவை சார்ந்த வேலை என்ன செய்துள்ளீர்களோ அதனைக் கோர்வையாகச் சொல்லவும்.
இதற்குத் முன் கூட்டியே தயாராகுவது முக்கியம் . அவர்கள் கேட்ட பிறகு இதனை யோசிக்கக் கூடாது. ஒரு நோட்டுப் புத்தகம் எடுத்துக்கொண்டு , அந்த ப்ராஜக்ட்டின் சிறப்பம்சங்கள் , உங்கள் பங்கு என்ன , என்ன மாதிரியான பிரெச்சனைகள் வந்தன , அதனை எப்படி அணுகினீர்கள் என்று குறித்து வைத்துக் கொள்ளுங்கள் ,இது மிகவும் முக்கியம் .
நேர்முகத் தேர்வு செய்பவர்களின் மனதில் இவன் நமக்கு சரிப்பட்டு வருவான் என்ற ஆழ்ந்த தீர்மானத்தை ஏற்படுத்த வேண்டும் .
குறிப்பாக அவர்கள் ஆர்வம் குறையாமல் , இன்னும் சொல்லப் போனால் , அவர்கள் நம்மிடமிருந்து அந்த நேர்முகத் தேர்வில் ஏதேனும் கற்றுக்கொண்டு போகும் அளவில் ஆழமான பதிலாக இருக்க வேண்டும் .
எப்படிப் பட்ட கேள்விகள் வரும் என்ற ஒரு பட்டியல் தயார் செய்ய வேண்டும் , எப்படி அணுகலாம் என்று முன்கூட்டி மனதில் பல முறை ஓட்டிப் பார்க்க வேண்டும் . இந்த பயிற்சிதான் உங்கள் நேர்முகத் தேர்வில் பதட்டத்தைக் குறைக்கும் . இவ்வளவுதானே நாம் இதனை ஏற்கனவே பார்த்தாகி விட்டோமே என்று தானாகவே பதட்டம் அடங்கும் , தைரியம் கூடும் , கம்பீரமாக பதில் அளிப்போம் .
2) அனுபவம் சார்ந்தக் கேள்விகள் ஒரு பக்கம் கேட்கப் பட்டாலும் ,
உங்கள் கல்லூரியில் படித்த கேள்விகளோ , அல்லது வெகு அடிப்படைக் கேள்விகளும் கேட்கப்படும் ஏன் அப்படி கேட்கிறார்கள் என்று எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது . அடிப்படையில் ரொம்ப திடமாக இருக்க வேண்டும் என்று நம்புவார்கள் , உண்மைதான் .
சில கேள்விகள் அங்கே தொடங்கி ஆழமாகப் போகும் .
முக்கியமான கோணம் ஒன்று உள்ளது . நாம் செய்யும் வேலைதனை சும்மா மெனக்கெட்டு செய்கிறோமா அல்லது , அதன் பின்னணி அறிந்து
ஆழமாக யோசித்துச் செய்கிறோமா என்று தெரிந்துக் கொள்ளும் ஒரு கேள்வியாகத்தான் அதனை நான் பார்ப்பேன் . வேறு வகையான பிரச்சனை வரும் பொழுது இந்த அடிப்படை அறிவிலிருந்து வேறு கோணத்தில் சிந்திக்கும் அறிவு [ lateral thinking ] தொடங்கிறது என்று நான் நம்புகிறேன் .ஆதலால் அடிப்படைக் கோட்பாடுகளில் பலமாக இருங்கள் .
இதனை புதுப்பித்துப் [refresh] போவதற்கு ரொம்ப நாட்கள் ஆகாது , ஆனால் ரொம்ப முக்கியம் .
3) ஒரு பாய்வுப்படம் [flowchart ] வரைந்துக் கொள்ளுங்கள் .
உங்கள் துறை சார்ந்து உங்களுக்கு என்ன என்ன கிளைத்துறைகள் இருக்கிறதென்று , அதில் என்னவெல்லாம் கேள்வி வரும் என்றும்.
அதற்கு நீங்கள் பதில் சொன்னால் , எப்படி எல்லாம் அதிலிருந்து இன்னும் ஆழமாக கேட்கப்படலாம் என்று யோசியுங்கள் , உங்களுக்குத் நன்றாகத் தெரிந்த தொழில் நுட்ப வார்த்தைகளை பிரயோகப்படுத்துங்கள் .
மேம்போக்காக ஒன்றைச் சொல்லி அதிலிருந்து கிளைக் கேள்விகள் கேட்கப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம் .
இதனை தவிர்க்க நிறைய படிக்க வேண்டும் .
முன்பே சொன்ன புத்தியளவில் தயாராக இருக்கவேண்டும் .[ mental preparation]
4) ஒரு கருத்துப்படிவம் கேட்கப்பட்டால் முடிந்த வரை ஒரு படம் வரைந்து அதனை விளக்க வேண்டும் , அல்லது நாம் செய்த திட்டத்தில் [ப்ராஜக்ட்டில்] உள்ள ஒரு உதாரணத்தை சொல்லி விளக்க வேண்டும் . இன்னும் சொல்லப்போனால் , ஒருவருக்கு அதனைச் சொல்லிக்கொடுப்பதென்றால் எப்படி சொல்வோமோ அந்த மனநிலை வைத்துக் கொண்டால் , பதட்டம் குறையும் .
நேர்முகத்தேர்வாளரின் மனதைப் படிக்க வேண்டும் , விடை சொல்லும் பொழுது அவர்கது எதிர்வினை மற்றும் உடல் மொழி [ reaction and body language ] பார்த்து அதற்கேற்றார் போல பதில் சொல்ல வேண்டும் . அழகாக கோர்வையாக ரொம்ப நீட்டிக்கவும் அல்லாமல் சொன்னால் நல்லது . அதற்கு மேல் தேவைப் பட்டால் அவரே கேட்ப்பார் . ரொம்ப சுருங்கவும் கூற வேண்டாம் .
ADAPT yourselves to the situation and improvise .
நேர்முகத் தேர்விற்குபின்
பதில் வர நேரம் எடுக்கலாம் , நல்ல செய்தியும் வரும் , வரமாலும் போகலாம் . எனக்கும் நடந்து இருக்கிறது .
மனம் தளராமல் செய்த தவறுகளை அலசி , அதற்கு விடை தெரிந்துக் கொண்டு இன்னும் தீவிரமாக படிக்க வேண்டும் .
என்னுடைய அனுபவத்தில் , அடுத்த அடுத்த நேர்முகத் தேர்வில் நான் இன்னும் சிறப்பாக செய்தேன் என்றுதான் சொல்லுவேன் .
ஒவ்வொரு நேர்முகத் தேர்வும் நமக்கு கொடுக்கப்படும் ஒரு வாய்ப்பு மட்டும் இல்லை , நம்மை மெருகேற்ற கற்றுக்கொள்ளும் ஒரு சந்தர்பம்தான் , முழு மனதுடன் அணுகுவோம் , ஆனால் பதட்டம் குறைக்க வேண்டும் .கேள்விகள் கேட்கப் படும் பொழுது , மனதை லயித்து உண்மையான ஆர்வத்துடன் அந்தக் கேள்வியினை அணுக வேண்டும் .
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பதிலுக்கு மட்டும் காத்துக் கொண்டு இருக்காமல் , தொடர்ந்து தேர்வுகளில் கலந்துக் கொண்டே இருத்தல் வேண்டும் . எந்த வேலை சரியாக வருகிறதோ அதனைப் பின்னர் முடிவு செய்யலாம் .
பகுதி நான்கில் நீண்ட காலத் திட்டத்தில் நான் பகுதி இரண்டில் விட்டதைத் தொடருவேன் .
பார்ப்போம் .
.
பகுதி ஒன்றில் பணிமுடக்கத்திர்க்கான காரணங்களைப் பார்த்தோம் .
[
http://moongilkoodu.blogspot.com/2015/01/it-40-1.html
]
பகுதி இரண்டில் நீண்ட காலத் திட்டமாக பணியில் இருக்கும் பொழுது
நம்மை எப்படித் தயார் செய்துக் கொள்ளலாம் என்று எழுதி இருந்தேன் .
இன்னும் சிலவற்றை அதே தலைப்பில் பேசுவோம் என்று சொல்லி இருந்தேன் .
[
http://moongilkoodu.blogspot.com/2015/01/it-40-2.html
]
நேற்று யோசித்தப் பொழுது , அதை விட அவசரமாக , உடனுக்குடன் வேலை தேடும் சூழல் வந்தால் எப்படி அதனை அணுகலாம் என்று முதலில் எழுதிட நினைத்தேன் .
அதனால் பகுதி இரண்டில் பேசுவோம் என்றுக் கூறிய சில தலைப்புகள் அடுத்தப் பகுதிகளில் பார்ப்போம் .
சரி அவசர காலச்சூழலுக்கு வருவோம் .
பணிமுடக்கும் ஏதோ காரணத்தில் ஒருவருக்கு வந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம் [ touchwood , வரக்கூடாது ].
அப்பொழுது நம்மை எப்படி தயார் செய்துக்கொள்வது .
எனக்கு 2002 இல் ஒரு முறை வந்தது.அப்பொழுது நான் மேற்படிப்பிற்கு தயாராகிக்கொண்டு இருந்தேன் .அதனால் வெளியில் வேலை தேடும் பணியில் ஈடுபடவில்லை . ஒருவேளை மேற்படிப்பு சரியாக அமையாமல் போய்விட்டு இருந்தால் கொஞ்சம் சிக்கலில் மாட்டி இருந்து இருந்ப்பேன் .
ஏனென்றால் 6 மாதங்கள் நான் வேலை தேடாமல் இருந்துவிட்டேன் .
வெளியே வராமல் முடியாமல் போய் இருக்காது .ஒரு வழி பிறந்தே தீரும் ,உழைத்தால் .இருப்பினும் ,இப்பொழுது யோசித்துப்பார்த்தால் , ஒரு காப்புத்திட்டம் [ backup plan ] வைத்து இருந்து இருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறேன் .
சரி சமீபத்தில் 2012 ஒரு பணிமுடக்கும் வந்த பொழுது எப்படி சமாளித்தேன் என்பதனைப் பார்ப்போம் .இதனைப் பற்றி நான் வேறு ஒரு ப்ளாகில் கூட எழுதி இருந்தேன் .
[[[
http://moongilkoodu.blogspot.com/2014/12/blog-post_30.html
அந்த சூழலைத் தெரிந்தக் கொள்ள வேண்டும் என்றால் படிக்கலாம்!
அவசியம் இல்லை . எப்படி அணுகலாம் என்று மட்டும் பார்பதற்கு கீழே படிக்கலாம் .
]]]
சரி நிலைமை இப்படி இருக்கு .சில மாதங்கள் அல்லது ஒரு மாதம்தான் கொடுத்து இருக்கிறார்கள் . என்ன செய்ய வேண்டும் ?
பதட்டமும் மன அழுத்தமும் :
பதட்டம் வரத்தான் செய்யும் . அதனைக் கடந்து போவோம் .
காரியத்தில் தீவிரமாக இறங்க வேண்டும் . ஒரு அதிர்ச்சி மனநிலை [shock state] முதலில் வரும்/வரலாம் , அதுவும் கடந்து போகும் . முதலில் செய்யவேண்டியது நம் வட்டத்தில் இருப்பர்வகளுக்கு [network ] தகவல் கொடுப்பது .இதுதான் நிலைமை என்று ஒரு ஈமெயில் தட்டி விடவேண்டும்.முடிந்தவரை கால் செய்து பேசவேண்டும் .
[இதனைப் பார்த்துச் செய்ய வேண்டும் . யாரிடம் உண்மையான காரணம் சொல்ல வேண்டும் என்று உங்களுக்கேத் தெரியும் .]
மன அழுத்தம் இருக்கத்தான் செய்யும் . ஆனால் இதுதான் ரொம்ப நிதானமாக இருக்க வேண்டிய நேரம். பதட்டம் சொதப்பும் . சொல்லுவது எளிது என்று நீங்கள் சொல்வது புரிகிறது . அதனைக் கடந்து வந்தவன் என்கின்றதால் அனுபவத்தில்தான் சொல்கிறேன் .
நாம் பதட்டப்பட்டால் வீட்டில் உள்ளவர்கள் ரொம்ப பயந்து விடுவார்கள் .
ஒன்றும் ஆகிவிடவில்லை , இதை விட நல்ல இடத்துக்கு போகவேண்டும் என்று மனதினுள் ஒரு சூளுரை எடுத்துக்கொள்ள வேண்டும் .
நெருங்கிய நண்பரிடம் மனதில் இருப்பதை கொட்டிவிட்டு , காரியத்தில் இறங்க வேண்டும்.இனி சுய அனுதாபம் கைகொடுக்காது .போரில் உள்ளோம் நாம் .
"linkedin " போன்ற ஒரு சோசியல் நெட்வொர்கிங் சைட் [ social networking site ] எல்லோரையும் தொடர்பு கொள்ள சிறந்த வழி .[ இது என்னுடைய கருத்து மட்டுமே , நான் விளம்பரப் படுத்தவில்லை , தெரிந்ததைச் சொல்கிறேன் , வேறு இணையதளங்களும் இருக்கலாம் ] நண்பர்[ கல்லூரியோ அலுவலகமோ , பள்ளியோ உங்களால் முடிந்தவரை ] ,எல்லோருடனும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்,பழைய அலுவலகங்களையும் சேர்த்து தான் .
நண்பர் அவர்நண்பர் அவரின் நண்பர் இப்படி பல தளத்தில் "linkedin" மூலமாக தொடர்பு கொள்ள முடியும் என்பதை நாம் அறிந்ததே .
பெரும்பாலும் அவ்வப்பொழுது "linedkin profile" தனை மேம்படுத்தி செய்து வருதல் முக்கியம் . குறிப்பாக ஒரு அலுவலகம் விட்டு வேறு இடத்திற்கு மாறும் பொழுது பழைய அலுவலக நண்பர்களை தொடர்பில் கொண்டுவந்து வைத்திருக்க வேண்டும் .
ரெசுமே [Resume] மற்றும் "Linkedin Profile " இரண்டும் சரிப்பட அப்டேட் செய்து இருக்க வேண்டும்.இதைத் தவிர நிறைய "job portals " இருக்கிறது . பார்த்துச் செய்து கொள்ளுங்கள் .நாம் முக்கியமான விஷயத்திற்கு வருவோம்.
"Resume updation " அவசர காலத்தில் செய்வதை விட , மாதா மாதம் செய்வது நல்லது.அதாவது அவ்வப்பொழுது ஏதேனும் புதிதாக செய்தாலோ , அல்லது தகுதியுடைய வேலை செய்து இருந்தாலோ , புது ப்ராஜெக்ட் செய்து இருந்தாலோ அதனை ரெசுமேவில் போட்டுக் கொள்ள வேண்டும்.நினைவில் மங்காமல் இருக்கும் பொழுதே அதனை ரெசுமேவில் ஏற்றிவிட்டால் நன்றாகவும் வரும்.
அப்படி இல்லையென்றால் கூட , ரெசுமே தயார் செய்வதற்கு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள் . இது ரொம்ப ரொம்ப முக்கியம் .
உங்களை நேர்முகத் தேர்விற்கு அழைக்கப் போகும் முதல் அஸ்திரம் இதுத்தான் . அப்பொழுது அதனை எவ்வளவு வீரியமாக அதனை எய்திட வேண்டும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை .
ஒரு பட்டியல் போட வேண்டும் ,முன்பு செய்த ப்ராஜக்ட்ஸ் என்னவெல்லாம் இருக்கிறது , அதில் எந்தக் குறிப்பிட்ட பகுதி சிறப்பானதாகப் பார்க்கப்படும் என்று . அதாவது தற்போதைய மார்கெட்டிற்கு என்ன தேவை என்று ஒரு அலசு அலசிவிட்டு , அந்த தேவைக்கு ஏற்ப நீங்கள் செய்துள்ள வேலைகளை சிறப்பம்சப்படுத்தி [highlight ] எழுதுங்கள் .
ரொம்ப நீளமான ரெசுமே வேண்டாம் என்றுதான் சொல்லுவேன் .
கச்சிதமாக இருக்க வேண்டும் , ஆனால் உங்கள் திறன்கள் [ skill sets] அனைத்தும் நன்றாக பார்வைக்கு வைக்கப்பட்டு [ showcase ] இருக்க வேண்டும்.நண்பர்கள் உதவி கேட்டு ஒரு முறைக்கு பல முறை சரிபார்த்து விட்டு பின்பு ரெசுமே அனுப்பி வையுங்கள் .
சுருங்கச் சொல்வதென்றால் , உங்கள் ரெசுமே பார்க்க நிறுவன மேலாளருக்கு ரொம்ப நேரம் இருக்காது .
அந்தக் குறுகிய காலத்தினுள் அவர் கவனம் உங்கள் பக்கம் திரும்ப வேண்டும் . அதற்கு ஏற்றவாறு நச்சுன்னு எழுதுங்கள் !
நெட்வொர்க் :
மேற்கூறிய தொடர்பு வட்டம் [நெட்வொர்க் ] மூலமாக ரெசுமே அனுப்பி வைப்போம் முதலில் .இதில் நிறைய லாபங்கள் இருக்கிறது .
வேலைக்கு கூப்பிடும் நிறுவனத்திற்கு இது போல , நூற்றுக்கணக்கான , அல்லது ஆயிரக்கணக்கான ரெசுமேக்கள் கூட வரலாம் .
அவர்களிடம் அவர்கள் வேலைக்கு மத்தியில் யாரைக் கூப்பிட என்ற குழப்பம் வரும் . அவர்கள் குழுவினில் இருப்பவர் ஒருவர் மூலமாக அனுப்பப் பட்டால் , அவர்கள் அனுப்பியரை நாடி , நம்மைப் பற்றி தெரிந்துக் கொண்டு [ reference ] சீக்கிரம் கூப்பிட பன்மடங்கு வாய்ப்பு உண்டு .
நிறுவங்களின் ஆட்கள் எடுக்கப்பட்ட சதவிகிதம் [ hiring ratio] பார்த்தீர்களானால் , 30% மேல் இப்படி " reference " மூலமாக வந்த நபர்களாகத்தான் இருப்பர் பெரும்பாலும் .
தயக்கம் விட்டு , நம் வட்டத்தில் இருக்கும் நபர்கள் மூலமாக ரெசுமே அனுப்பி வையுங்கள் [ இது முதல் கட்டம் மட்டுமே , அதன் பிறகு
மற்ற வழிகளில் தொடருங்கள் ]
நேர்முகத் தேர்வு மட்டும் அன்றி , ஒரு நிறுவனத்தைப் பற்றி குறிப்பாக
அந்த குழுவின் செயல்பாடு பற்றி அங்கே வேலை பார்ப்பவர்தான் நன்றாக அறிந்து இருப்பார்கள் . என்ன மாதிரி வேலை , என்னக் கற்றுக்கொள்ளலாம் , எப்படிப் பட்ட வேலை அழுத்தம் இருக்கும் , பதவி உயர்வு எப்படி இருக்கும் , ஆட்குறைப்பு அடிக்கடி நடக்குமா போன்ற முக்கியமான காரணிகள் தெரிந்துக் கொள்ள உதவும் .
"REFERENCE IS THE BEST MEANS TO APPROACH A COMPANY"
" recruiters " இன் துணையும் ரொம்ப முக்கியம் .
நல்ல " recruiters" உடன் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள் , தேவையென்றால் மட்டும் தொடர்பு கொள்ளமால் , அவர்களுடன் அவ்வப்பொழுது தொடர்பில் இருங்கள் . மார்க்கெட் நிலைமைதனை அவர்கள் நன்று அறிவர் .
நம்முடைய திறமைக்கு வெளியே நல்ல ஒரு பொருத்தம் இருந்தால் அவர்கள் தகவல் சொல்லுவார்கள் .
ரெசுமே அனுப்பும் வேலை ஒரு பக்கம் நடந்துக் கொண்டு இருக்கட்டும் .
தொலை பேசி அழைப்புகள் மெதுவாக வரத்தொடங்கும் .
இந்த இடைப்பட்ட காலம் ரொம்ப முக்கியம் .அறிவைக் கூர்மையாகவும் மனதை திடமாகவும் வைத்து இருக்க வேண்டிய நேரம் இதுதான் .
நேர்முகத் தேர்வு :
நிறையப் படிக்க வேண்டும் .
குறிப்பாக கீழ்வருவனவற்றை சொல்வேன் ,
1) முதல் கட்டத் தேர்வில் , என்ன வகையான திறமை உள்ளது [profile ] , அவர்களுக்கு அது பொருந்துமா என்று பார்ப்பார்கள் பெரும்பாலும் .தொலைபேசி அல்லது நேர்காணல் நடக்கும் முன் அவர்கள் தேவையினை நன்றாக ஆராய்ந்துக் கொள்ளுங்கள் . அவர்களுடன் பேசும்பொழுது
அவர்கள் தேவை அறிந்து பதில் அளிக்கவும் . அவர்கள் தேவை சார்ந்த வேலை என்ன செய்துள்ளீர்களோ அதனைக் கோர்வையாகச் சொல்லவும்.
இதற்குத் முன் கூட்டியே தயாராகுவது முக்கியம் . அவர்கள் கேட்ட பிறகு இதனை யோசிக்கக் கூடாது. ஒரு நோட்டுப் புத்தகம் எடுத்துக்கொண்டு , அந்த ப்ராஜக்ட்டின் சிறப்பம்சங்கள் , உங்கள் பங்கு என்ன , என்ன மாதிரியான பிரெச்சனைகள் வந்தன , அதனை எப்படி அணுகினீர்கள் என்று குறித்து வைத்துக் கொள்ளுங்கள் ,இது மிகவும் முக்கியம் .
நேர்முகத் தேர்வு செய்பவர்களின் மனதில் இவன் நமக்கு சரிப்பட்டு வருவான் என்ற ஆழ்ந்த தீர்மானத்தை ஏற்படுத்த வேண்டும் .
குறிப்பாக அவர்கள் ஆர்வம் குறையாமல் , இன்னும் சொல்லப் போனால் , அவர்கள் நம்மிடமிருந்து அந்த நேர்முகத் தேர்வில் ஏதேனும் கற்றுக்கொண்டு போகும் அளவில் ஆழமான பதிலாக இருக்க வேண்டும் .
எப்படிப் பட்ட கேள்விகள் வரும் என்ற ஒரு பட்டியல் தயார் செய்ய வேண்டும் , எப்படி அணுகலாம் என்று முன்கூட்டி மனதில் பல முறை ஓட்டிப் பார்க்க வேண்டும் . இந்த பயிற்சிதான் உங்கள் நேர்முகத் தேர்வில் பதட்டத்தைக் குறைக்கும் . இவ்வளவுதானே நாம் இதனை ஏற்கனவே பார்த்தாகி விட்டோமே என்று தானாகவே பதட்டம் அடங்கும் , தைரியம் கூடும் , கம்பீரமாக பதில் அளிப்போம் .
2) அனுபவம் சார்ந்தக் கேள்விகள் ஒரு பக்கம் கேட்கப் பட்டாலும் ,
உங்கள் கல்லூரியில் படித்த கேள்விகளோ , அல்லது வெகு அடிப்படைக் கேள்விகளும் கேட்கப்படும் ஏன் அப்படி கேட்கிறார்கள் என்று எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது . அடிப்படையில் ரொம்ப திடமாக இருக்க வேண்டும் என்று நம்புவார்கள் , உண்மைதான் .
சில கேள்விகள் அங்கே தொடங்கி ஆழமாகப் போகும் .
முக்கியமான கோணம் ஒன்று உள்ளது . நாம் செய்யும் வேலைதனை சும்மா மெனக்கெட்டு செய்கிறோமா அல்லது , அதன் பின்னணி அறிந்து
ஆழமாக யோசித்துச் செய்கிறோமா என்று தெரிந்துக் கொள்ளும் ஒரு கேள்வியாகத்தான் அதனை நான் பார்ப்பேன் . வேறு வகையான பிரச்சனை வரும் பொழுது இந்த அடிப்படை அறிவிலிருந்து வேறு கோணத்தில் சிந்திக்கும் அறிவு [ lateral thinking ] தொடங்கிறது என்று நான் நம்புகிறேன் .ஆதலால் அடிப்படைக் கோட்பாடுகளில் பலமாக இருங்கள் .
இதனை புதுப்பித்துப் [refresh] போவதற்கு ரொம்ப நாட்கள் ஆகாது , ஆனால் ரொம்ப முக்கியம் .
3) ஒரு பாய்வுப்படம் [flowchart ] வரைந்துக் கொள்ளுங்கள் .
உங்கள் துறை சார்ந்து உங்களுக்கு என்ன என்ன கிளைத்துறைகள் இருக்கிறதென்று , அதில் என்னவெல்லாம் கேள்வி வரும் என்றும்.
அதற்கு நீங்கள் பதில் சொன்னால் , எப்படி எல்லாம் அதிலிருந்து இன்னும் ஆழமாக கேட்கப்படலாம் என்று யோசியுங்கள் , உங்களுக்குத் நன்றாகத் தெரிந்த தொழில் நுட்ப வார்த்தைகளை பிரயோகப்படுத்துங்கள் .
மேம்போக்காக ஒன்றைச் சொல்லி அதிலிருந்து கிளைக் கேள்விகள் கேட்கப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம் .
இதனை தவிர்க்க நிறைய படிக்க வேண்டும் .
முன்பே சொன்ன புத்தியளவில் தயாராக இருக்கவேண்டும் .[ mental preparation]
4) ஒரு கருத்துப்படிவம் கேட்கப்பட்டால் முடிந்த வரை ஒரு படம் வரைந்து அதனை விளக்க வேண்டும் , அல்லது நாம் செய்த திட்டத்தில் [ப்ராஜக்ட்டில்] உள்ள ஒரு உதாரணத்தை சொல்லி விளக்க வேண்டும் . இன்னும் சொல்லப்போனால் , ஒருவருக்கு அதனைச் சொல்லிக்கொடுப்பதென்றால் எப்படி சொல்வோமோ அந்த மனநிலை வைத்துக் கொண்டால் , பதட்டம் குறையும் .
நேர்முகத்தேர்வாளரின் மனதைப் படிக்க வேண்டும் , விடை சொல்லும் பொழுது அவர்கது எதிர்வினை மற்றும் உடல் மொழி [ reaction and body language ] பார்த்து அதற்கேற்றார் போல பதில் சொல்ல வேண்டும் . அழகாக கோர்வையாக ரொம்ப நீட்டிக்கவும் அல்லாமல் சொன்னால் நல்லது . அதற்கு மேல் தேவைப் பட்டால் அவரே கேட்ப்பார் . ரொம்ப சுருங்கவும் கூற வேண்டாம் .
ADAPT yourselves to the situation and improvise .
நேர்முகத் தேர்விற்குபின்
பதில் வர நேரம் எடுக்கலாம் , நல்ல செய்தியும் வரும் , வரமாலும் போகலாம் . எனக்கும் நடந்து இருக்கிறது .
மனம் தளராமல் செய்த தவறுகளை அலசி , அதற்கு விடை தெரிந்துக் கொண்டு இன்னும் தீவிரமாக படிக்க வேண்டும் .
என்னுடைய அனுபவத்தில் , அடுத்த அடுத்த நேர்முகத் தேர்வில் நான் இன்னும் சிறப்பாக செய்தேன் என்றுதான் சொல்லுவேன் .
ஒவ்வொரு நேர்முகத் தேர்வும் நமக்கு கொடுக்கப்படும் ஒரு வாய்ப்பு மட்டும் இல்லை , நம்மை மெருகேற்ற கற்றுக்கொள்ளும் ஒரு சந்தர்பம்தான் , முழு மனதுடன் அணுகுவோம் , ஆனால் பதட்டம் குறைக்க வேண்டும் .கேள்விகள் கேட்கப் படும் பொழுது , மனதை லயித்து உண்மையான ஆர்வத்துடன் அந்தக் கேள்வியினை அணுக வேண்டும் .
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பதிலுக்கு மட்டும் காத்துக் கொண்டு இருக்காமல் , தொடர்ந்து தேர்வுகளில் கலந்துக் கொண்டே இருத்தல் வேண்டும் . எந்த வேலை சரியாக வருகிறதோ அதனைப் பின்னர் முடிவு செய்யலாம் .
பகுதி நான்கில் நீண்ட காலத் திட்டத்தில் நான் பகுதி இரண்டில் விட்டதைத் தொடருவேன் .
பார்ப்போம் .
.
சிறப்பான பதிவு இந்த தொடர்.
ReplyDeleteநிச்சயம் இது மற்றவர்களுக்கு ஒரு உதவியாக இருக்கும்.
நன்றி! தங்கள் விமர்சனத்திற்கு ....
ReplyDeleteயாருக்காவது உதவினால் மகிழ்ச்சி .