Saturday, January 10, 2015

கடன்சுமையும் தொழில்முனைவும்

 கடன்சுமையும்  தொழில்முனைவும் :

சென்னையில்  ஏற்பட்ட சில நிகழ்வுகளை பதிவு செய்யத்தோன்றியது .

தோள்பட்டையில் சின்ன அடி ஏற்பட்டதாலும்  ரொம்ப நாட்களுக்கு பிறகு சென்னை வந்ததாலும் , சிறிது  நாட்கள் " call  driver "  சேவையினை  உபயோகப்படுத்திக்கொண்டேன்   .  இது நல்லதொரு சேவை.

அம்மாவிற்கு அடிக்கடி  வெளியே செல்லும் வேலை இல்லை.வாரத்திற்கு அல்லது  இரண்டு  வாரத்திற்கு ஒரு முறை தான் கோவிலுக்கு போக காரை எடுககும்  சூழ்நிலை  வரும். மாசத்திற்கு டிரைவர் வைத்துக்கொள்ளும்  தேவையும் இல்லை , செலவும் அதிகம். நான்கு மணி நேரத்திற்கு 250-300 ரூபாய் பெற்றுக்கொண்டு "call  driver " வசதி மிகவும்  சவுகரியம். தற்போது உள்ள ஆட்டோ செலவிற்கு ரொம்பவே  தேவலாம்.

இப்படி சில டிரைவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அனுப்பின  ஒருவரையே திருப்பி  பெரும்பாலும்  அனுப்ப மாட்டார்கள் [ நாம் அவரை நிரந்தரமாக  நம்ம வீட்டிற்க்கு சேர்த்துக்கொள்வோம் என்று!]. 
தினேஷ்   மட்டும்  இரண்டு முறை வந்தார்.சிரித்த  முகத்துடன்  எப்பொழும் கனிவான   தோரணையும்  உள்ள அவருடன் பழகுவதற்கு  ரொம்ப நேரம்  ஆகவில்லை .

"என்னிடமும்  வண்டி இருக்கிறது சார் ."tavera " வச்சு இருக்கேன். ஆனா சவாரி இல்லாத போது  இப்படியும்  ஓட்டறேன்  " என்றார்.

எப்பொழுதும் அலை பேசியினை  நோண்டிக்கொண்டே  இருந்தார் , வண்டி ஒட்டாத சமயத்தில்  தான். வெளியே சிரித்த முகத்துடன்  இருந்தாலும்  , ஏதோ உள்ளே ஓடிக்கொண்டு  இருப்பதை  உணர முடிந்தது , சிறிய படபடப்பை  அவரை  அறியாமல் வெளிக்காட்டிக்கொண்டு  இருந்தது அவரது உடல் மொழி. 

"வண்டி வச்சுட்டு  இந்த மாதிரி , இன்னொருத்தருக்கு வண்டி ஓட்ட கஷ்டமா  இருக்கா? ஏன்  டென்சனா  இருக்கீங்க ?" 

" இல்லை சார் , இதுதான் சார் வசதி  , நினைச்சா  ஓட்டுவேன்  , இல்லேன்னா  வீட்டுக்கு பொய் ரெஸ்ட்  எடுத்துப்பேன். புல் டைம் ஓட்டினா  , நேரம் காலம்  இல்லாம வேலை செய்ய வேண்டி இருக்கும். ராத்திரி பத்து  ஆய்டும் பெரும்பாலும் . நான்  இப்போ அதுவும் செய்யறது  இல்லை , வண்டி இருக்கிறதால  லாங் ட்ரிப் மட்டும் தான் போறது , இல்லை ஏர்போர்ட்  pickup  அண்ட் drop  மட்டும்  சிட்டிக்குள்"

அது இல்லை  சார் பிரெச்சனை ." tavera " வண்டி ஒன்னு லோன்  போட்டு  வாங்கினேன் . மாசா  மாசம் 15000 " due " கட்ட வேண்டி இருக்கு. அவ்ளோவா ஓட்டம்  இல்லை. எங்க " travels"  நம்பித்தான்  வாங்கினேன்.ஆனா அவர் செகண்ட் ஹண்ட்  வண்டிய  டிராவல்சில் ஓட்ட விட  முடியாதுன்னு  சொல்லிடாரு . 
அவர் மேலயும  தப்பு சொல்ல முடியாது. "செகண்ட் ஹாண்ட் "  வண்டி  எப்போ மக்கர்  பண்ணும்னு தெரியாது. வெளியூருக்குத்தான்  இந்த வண்டிய  புக்  செய்வாங்க . அவசர பட்டு வாங்கிட்டேன். எனக்கு அவர் அளவுக்கு  காண்டாக்ட்ஸ்  இல்லை. அதான்  வண்டிய  விக்கப்பார்த்துட்டு  இருக்கேன்.சரியாய் பார்ட்டி  எதுவும் அமையலை. ஆறுக்கு  வாங்கினேன்.
1.5 லட்சம்  நஷ்டத்துல்ல  தான் கேக்கறாங்க . விக்கவும்  மனசு இல்லை , ஆசையா  வாங்கினது, ஆனா "due " கட்டவும்   கஷ்டமாவும்  இருக்கு"

" டீ  சாப்பிடலாம்  வாங்க"..தயங்கிய  வாறே  வந்தார்.


"நீங்க சொல்றதை  நானும்  யோசிச்சு  பார்த்தேன்.  இன்னும்  நஷ்டம் அடைய  வேண்டாம்னா நீங்க சரியான ஆளைப் பார்த்து  வித்துடறதுதான் சரி. கஷ்டமாத்தான்  இருக்கும் . ஆனா நாள் ஆகா ஆக  ரீசேல் விலை  கம்மி ஆகத்தான்  செய்யும் . காருக்கு  எதன்னா  ரிப்பைர் வந்துச்சுன்னா  ரொம்ப  கஷ்டம்  ஆகிடும்."

" நீங்க சொல்றது சரி தான.நானும் அதை நினைச்சுதான்  குழப்பத்துல  இருந்தேன்."

" ப்ரோகர்ஸ் இல்லாம  விக்கறதுக்கு வழி இருக்கு. "சுலேகா " , " கார்வாலே " போன்ற "websites"  இருக்கு. வீட்டுக்கு  வாங்க , நாம விளம்பரம்  கொடுப்போம்.
வண்டிய கழுவி எடுத்துட்டு வாங்க.போட்டோவும்  போடுவோம். அப்புறமா  பார்ப்போம் ரெஸ்பான்ஸ்  எப்படி வருதுன்னு "

"சரிங்க சார் ".

பிறகு ஒரு வாரமா  எந்த தகவலும் இல்லை.
அடுத்த முறை பார்த்த பொழுது  ,

" காரை வித்துட்டேன்  சார். நஷ்டம்  தான் . கும்பகோணத்துல  இருந்து ஒரு பார்ட்டி  புரோக்கர்  மூலமா  வந்து  வாங்கிட்டு போனான் ".

ஒரு முறை  நாமே பார்த்து  இருக்கலாமேன்னு   கேக்கத்தோன்றியதை   அடக்கிகொண்டேன் .

" சரி , இனி மேல  புதுசா  தொடங்குங்க . புடிச்சுடலாம் .நானும்  காலேஜ்  முடிச்சு ரெண்டு வருஷம் வேலை பார்த்துட்டு திரும்ப படிக்கப்போனேன். அப்பாவும் "retire " ஆகி இருந்தார். பெரிய முடிவுதான் . நான்கு வருடம்  கழிச்சு அதே பழைய BE  சம்பளதுக்குதான் வேலை சேர்ந்தேன் . அப்பாவுக்கு தான் வருத்தம் , இவ்ளோ கஷ்ட  பட்டு படிச்சு  சரியான சம்பளம்  இல்லைன்னு.
சில வருஷம் ஆச்சு பிடிக்க . கடன்  வேறு  படிப்பிற்கு  வாங்கியது
அப்பா ஏற்கனவே நிறைய செலவு செய்து  விட்டார் ,கடன் தவிர  , அதனால
அவர் சொன்னதையும்  கேட்காமல் நான் தான்  படிப்புக்கடனை அடைப்பேன்னு  சொல்லிட்டேன். கடன் அடையும் வரை  அந்த 5 வருடங்கள் ,பெரிதாக  அதை விட்டு  நம்மால் வெளியே எதுவும் யோசிக்க  முடியாது.
உங்க நிலைமை புரிஞ்சுதான் பேசறேன் .ஆனா இப்போ  ஒரு அளவுக்கு நல்ல இருக்கேன் . உங்க வீட்டுல என்ன சொன்னாங்க ?"

" அவ ஒன்னும்  சொல்ல மாட்டா  சார் . எனக்குதான்  கார் மேல  ஒரு அட்டாச்மெண்ட்  வந்துடுச்சு ".

"கஷ்டம்தான். சரி ஆகிடும். பெரிய சுமை ஒன்னை இறக்கி வச்சு இருக்கீங்க .
கடன் இல்லாமல் குடும்பத்தை  நடத்துங்க" .

" சரி சார்" என்று பொய் விட்டார்.

என்னை இந்த நிகழ்ச்சி  சிந்திக்க வைத்தது.
"contacts " என்பது  எவ்வளவு  முக்கியம். திறமையும்  , உழைப்பும்  இருப்பினும்
சரியான ஆட்கள்  தெரிய வில்லை என்றால்  கடினம் தான்.இது பெரிய கண்டுபிடிப்பு இல்லை என்றாலும்  , கண் முன்னே  பார்த்ததும் , தாக்கம் அதிகமாக  இருந்தது.

குமார் மேலயும் தவறு  இருந்ததை அவரே ஒப்புக்கொண்டார் .சரியாக  தகவல் பரிமாற்றம்  [ " communicate "  ]செய்ய  வில்லை  அவருடைய "travel  agency " யுடன். புதிய கார்  ஒன்றை [ swift  அல்லது 6 லட்சம்  விலைக்கு  கம்மியான கார் ] வாங்கி இருந்தால், "travel  agency " மூலமாகவே ஓட்டம்  இருந்து இருக்கும் .

entrepreneur " ஆவதற்கு  முன்பு  துறை  சார்ந்த வணிகம்  பற்றி  ஆய்வும் [ "market  analysis " ],தொலை  நோக்கு  பார்வையும்   எவ்வளவு  அவசியம்  என்பதை நினைவுப்படுத்தியது  .இது எல்லா  துறைக்கும்  பொருந்தும் .
லாப நஷ்டங்களையும், போட்டியாளர்களையும் , தற்போதைய தேவைகள் ,
வங்கியில் சேமிப்பு  இப்படி  பல  காரணிகளை பார்க்க வேண்டி உள்ளது .
தீவிரமாக  ஆராய்ந்த பின்னே தான் இறங்க வேண்டும்.. திட்டமிடும்  கட்டம்தான்  ரொம்ப முக்கியமாகிறது .

 " இன்டர்நெட் " மார்க்கெட்டிங்கின்  உதவி இருந்தால்  அவர் தன்னுடைய  காரை  இடைத்தரகர்  இன்றி  நல்ல விலைக்கும்  வித்தும்  இருக்க முடியும் .படிப்பறிவு சரியாக  இல்லை என்பதையும்  , சூழ்நிலை  மற்றும் பயத்தையும்  பயன்படுத்தி  இது போன்ற இடைத்தரகர்கள்  லாபம்  பார்க்கின்றனர் .

கடின  உழைப்பும்  அனுபவ  அறிவும் காலம்  கடந்தாலும் வெற்றி தந்தே  ஆக வேண்டும்.அவர் கற்ற பாடம் , இனி கவனமாக  இருக்கச்செய்யும் .
  ஒரு நாள்  " innova " காரில்  அவரைப்பார்க்க மனம் ஏங்கியது .

பின் சீட்டில்!


No comments:

Post a Comment