கடன்சுமையும் தொழில்முனைவும் :
சென்னையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளை பதிவு செய்யத்தோன்றியது .
தோள்பட்டையில் சின்ன அடி ஏற்பட்டதாலும் ரொம்ப நாட்களுக்கு பிறகு சென்னை வந்ததாலும் , சிறிது நாட்கள் " call driver " சேவையினை உபயோகப்படுத்திக்கொண்டேன் . இது நல்லதொரு சேவை.
அம்மாவிற்கு அடிக்கடி வெளியே செல்லும் வேலை இல்லை.வாரத்திற்கு அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தான் கோவிலுக்கு போக காரை எடுககும் சூழ்நிலை வரும். மாசத்திற்கு டிரைவர் வைத்துக்கொள்ளும் தேவையும் இல்லை , செலவும் அதிகம். நான்கு மணி நேரத்திற்கு 250-300 ரூபாய் பெற்றுக்கொண்டு "call driver " வசதி மிகவும் சவுகரியம். தற்போது உள்ள ஆட்டோ செலவிற்கு ரொம்பவே தேவலாம்.
இப்படி சில டிரைவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அனுப்பின ஒருவரையே திருப்பி பெரும்பாலும் அனுப்ப மாட்டார்கள் [ நாம் அவரை நிரந்தரமாக நம்ம வீட்டிற்க்கு சேர்த்துக்கொள்வோம் என்று!].
தினேஷ் மட்டும் இரண்டு முறை வந்தார்.சிரித்த முகத்துடன் எப்பொழும் கனிவான தோரணையும் உள்ள அவருடன் பழகுவதற்கு ரொம்ப நேரம் ஆகவில்லை .
"என்னிடமும் வண்டி இருக்கிறது சார் ."tavera " வச்சு இருக்கேன். ஆனா சவாரி இல்லாத போது இப்படியும் ஓட்டறேன் " என்றார்.
எப்பொழுதும் அலை பேசியினை நோண்டிக்கொண்டே இருந்தார் , வண்டி ஒட்டாத சமயத்தில் தான். வெளியே சிரித்த முகத்துடன் இருந்தாலும் , ஏதோ உள்ளே ஓடிக்கொண்டு இருப்பதை உணர முடிந்தது , சிறிய படபடப்பை அவரை அறியாமல் வெளிக்காட்டிக்கொண்டு இருந்தது அவரது உடல் மொழி.
"வண்டி வச்சுட்டு இந்த மாதிரி , இன்னொருத்தருக்கு வண்டி ஓட்ட கஷ்டமா இருக்கா? ஏன் டென்சனா இருக்கீங்க ?"
" இல்லை சார் , இதுதான் சார் வசதி , நினைச்சா ஓட்டுவேன் , இல்லேன்னா வீட்டுக்கு பொய் ரெஸ்ட் எடுத்துப்பேன். புல் டைம் ஓட்டினா , நேரம் காலம் இல்லாம வேலை செய்ய வேண்டி இருக்கும். ராத்திரி பத்து ஆய்டும் பெரும்பாலும் . நான் இப்போ அதுவும் செய்யறது இல்லை , வண்டி இருக்கிறதால லாங் ட்ரிப் மட்டும் தான் போறது , இல்லை ஏர்போர்ட் pickup அண்ட் drop மட்டும் சிட்டிக்குள்"
அது இல்லை சார் பிரெச்சனை ." tavera " வண்டி ஒன்னு லோன் போட்டு வாங்கினேன் . மாசா மாசம் 15000 " due " கட்ட வேண்டி இருக்கு. அவ்ளோவா ஓட்டம் இல்லை. எங்க " travels" நம்பித்தான் வாங்கினேன்.ஆனா அவர் செகண்ட் ஹண்ட் வண்டிய டிராவல்சில் ஓட்ட விட முடியாதுன்னு சொல்லிடாரு .
அது இல்லை சார் பிரெச்சனை ." tavera " வண்டி ஒன்னு லோன் போட்டு வாங்கினேன் . மாசா மாசம் 15000 " due " கட்ட வேண்டி இருக்கு. அவ்ளோவா ஓட்டம் இல்லை. எங்க " travels" நம்பித்தான் வாங்கினேன்.ஆனா அவர் செகண்ட் ஹண்ட் வண்டிய டிராவல்சில் ஓட்ட விட முடியாதுன்னு சொல்லிடாரு .
அவர் மேலயும தப்பு சொல்ல முடியாது. "செகண்ட் ஹாண்ட் " வண்டி எப்போ மக்கர் பண்ணும்னு தெரியாது. வெளியூருக்குத்தான் இந்த வண்டிய புக் செய்வாங்க . அவசர பட்டு வாங்கிட்டேன். எனக்கு அவர் அளவுக்கு காண்டாக்ட்ஸ் இல்லை. அதான் வண்டிய விக்கப்பார்த்துட்டு இருக்கேன்.சரியாய் பார்ட்டி எதுவும் அமையலை. ஆறுக்கு வாங்கினேன்.
1.5 லட்சம் நஷ்டத்துல்ல தான் கேக்கறாங்க . விக்கவும் மனசு இல்லை , ஆசையா வாங்கினது, ஆனா "due " கட்டவும் கஷ்டமாவும் இருக்கு"
" டீ சாப்பிடலாம் வாங்க"..தயங்கிய வாறே வந்தார்.
"நீங்க சொல்றதை நானும் யோசிச்சு பார்த்தேன். இன்னும் நஷ்டம் அடைய வேண்டாம்னா நீங்க சரியான ஆளைப் பார்த்து வித்துடறதுதான் சரி. கஷ்டமாத்தான் இருக்கும் . ஆனா நாள் ஆகா ஆக ரீசேல் விலை கம்மி ஆகத்தான் செய்யும் . காருக்கு எதன்னா ரிப்பைர் வந்துச்சுன்னா ரொம்ப கஷ்டம் ஆகிடும்."
" நீங்க சொல்றது சரி தான.நானும் அதை நினைச்சுதான் குழப்பத்துல இருந்தேன்."
" ப்ரோகர்ஸ் இல்லாம விக்கறதுக்கு வழி இருக்கு. "சுலேகா " , " கார்வாலே " போன்ற "websites" இருக்கு. வீட்டுக்கு வாங்க , நாம விளம்பரம் கொடுப்போம்.
வண்டிய கழுவி எடுத்துட்டு வாங்க.போட்டோவும் போடுவோம். அப்புறமா பார்ப்போம் ரெஸ்பான்ஸ் எப்படி வருதுன்னு "
"சரிங்க சார் ".
பிறகு ஒரு வாரமா எந்த தகவலும் இல்லை.
அடுத்த முறை பார்த்த பொழுது ,
" காரை வித்துட்டேன் சார். நஷ்டம் தான் . கும்பகோணத்துல இருந்து ஒரு பார்ட்டி புரோக்கர் மூலமா வந்து வாங்கிட்டு போனான் ".
ஒரு முறை நாமே பார்த்து இருக்கலாமேன்னு கேக்கத்தோன்றியதை அடக்கிகொண்டேன் .
" சரி , இனி மேல புதுசா தொடங்குங்க . புடிச்சுடலாம் .நானும் காலேஜ் முடிச்சு ரெண்டு வருஷம் வேலை பார்த்துட்டு திரும்ப படிக்கப்போனேன். அப்பாவும் "retire " ஆகி இருந்தார். பெரிய முடிவுதான் . நான்கு வருடம் கழிச்சு அதே பழைய BE சம்பளதுக்குதான் வேலை சேர்ந்தேன் . அப்பாவுக்கு தான் வருத்தம் , இவ்ளோ கஷ்ட பட்டு படிச்சு சரியான சம்பளம் இல்லைன்னு.
சில வருஷம் ஆச்சு பிடிக்க . கடன் வேறு படிப்பிற்கு வாங்கியது
அப்பா ஏற்கனவே நிறைய செலவு செய்து விட்டார் ,கடன் தவிர , அதனால
அவர் சொன்னதையும் கேட்காமல் நான் தான் படிப்புக்கடனை அடைப்பேன்னு சொல்லிட்டேன். கடன் அடையும் வரை அந்த 5 வருடங்கள் ,பெரிதாக அதை விட்டு நம்மால் வெளியே எதுவும் யோசிக்க முடியாது.
உங்க நிலைமை புரிஞ்சுதான் பேசறேன் .ஆனா இப்போ ஒரு அளவுக்கு நல்ல இருக்கேன் . உங்க வீட்டுல என்ன சொன்னாங்க ?"
" அவ ஒன்னும் சொல்ல மாட்டா சார் . எனக்குதான் கார் மேல ஒரு அட்டாச்மெண்ட் வந்துடுச்சு ".
"கஷ்டம்தான். சரி ஆகிடும். பெரிய சுமை ஒன்னை இறக்கி வச்சு இருக்கீங்க .
கடன் இல்லாமல் குடும்பத்தை நடத்துங்க" .
" சரி சார்" என்று பொய் விட்டார்.
என்னை இந்த நிகழ்ச்சி சிந்திக்க வைத்தது.
"contacts " என்பது எவ்வளவு முக்கியம். திறமையும் , உழைப்பும் இருப்பினும்
சரியான ஆட்கள் தெரிய வில்லை என்றால் கடினம் தான்.இது பெரிய கண்டுபிடிப்பு இல்லை என்றாலும் , கண் முன்னே பார்த்ததும் , தாக்கம் அதிகமாக இருந்தது.
குமார் மேலயும் தவறு இருந்ததை அவரே ஒப்புக்கொண்டார் .சரியாக தகவல் பரிமாற்றம் [ " communicate " ]செய்ய வில்லை அவருடைய "travel agency " யுடன். புதிய கார் ஒன்றை [ swift அல்லது 6 லட்சம் விலைக்கு கம்மியான கார் ] வாங்கி இருந்தால், "travel agency " மூலமாகவே ஓட்டம் இருந்து இருக்கும் .
" entrepreneur " ஆவதற்கு முன்பு துறை சார்ந்த வணிகம் பற்றி ஆய்வும் [ "market analysis " ],தொலை நோக்கு பார்வையும் எவ்வளவு அவசியம் என்பதை நினைவுப்படுத்தியது .இது எல்லா துறைக்கும் பொருந்தும் .
லாப நஷ்டங்களையும், போட்டியாளர்களையும் , தற்போதைய தேவைகள் ,
வங்கியில் சேமிப்பு இப்படி பல காரணிகளை பார்க்க வேண்டி உள்ளது .
தீவிரமாக ஆராய்ந்த பின்னே தான் இறங்க வேண்டும்.. திட்டமிடும் கட்டம்தான் ரொம்ப முக்கியமாகிறது .
" இன்டர்நெட் " மார்க்கெட்டிங்கின் உதவி இருந்தால் அவர் தன்னுடைய காரை இடைத்தரகர் இன்றி நல்ல விலைக்கும் வித்தும் இருக்க முடியும் .படிப்பறிவு சரியாக இல்லை என்பதையும் , சூழ்நிலை மற்றும் பயத்தையும் பயன்படுத்தி இது போன்ற இடைத்தரகர்கள் லாபம் பார்க்கின்றனர் .
கடின உழைப்பும் அனுபவ அறிவும் காலம் கடந்தாலும் வெற்றி தந்தே ஆக வேண்டும்.அவர் கற்ற பாடம் , இனி கவனமாக இருக்கச்செய்யும் .
ஒரு நாள் " innova " காரில் அவரைப்பார்க்க மனம் ஏங்கியது .
பின் சீட்டில்!
No comments:
Post a Comment