பகுதி ஒன்றில் தகவல் தொழில்நுட்பத் துறையின் பணிமுடக்க [layoff ] காரணம் பற்றி பார்த்தோம் [பகுதி ஒன்றின் லிங்க் இங்கே
http://moongilkoodu.blogspot.com/2015/01/it-40-1.html
]
சரி நிறுவனங்கள் லாபத்தைப் பெருக்க ஆட்குறைப்பு நடவடிக்கை
எடுக்கத்தான் செய்கின்றன .
[
தற்போதைய சூழலில் தொழிற்சங்கங்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள்
பற்றி இணையத்தில் பேச்சு அடிபடுகிறது , என்ன நடக்கப்போகிறது என்று
நானும் ஆவலாகத்தான் இருக்கிறேன் ]
அது நடந்தால் நன்மையே .
தற்போதைக்கு இது தான் நிதர்சனம் என்று வைத்துக்கொள்வோம் .இந்தக் கசப்பை ஏற்றுக்கொண்டு என்ன செய்து நம்மை முடிந்த வரை காத்துக் கொள்ள முயற்சி செய்யலாம் என்று பார்ப்போம் .
அல்லது வந்து விட்டால் எப்படி வெளி வருவது பற்றியும் அடுத்து வரும்
பகுதிகளில் பார்ப்போம்
ஆனால் எக்காரணம் கொண்டு ஒடிந்து போய் உட்காருவது உகந்தது அல்ல. எல்லாவற்றிற்கும் ஒரு வழி இருக்கும் .
சும்மா சொல்லவில்லை, ;அனுபவத்தில்தான் சொல்கிறேன்.
[ இது பகுதி மூன்றில் வரும் ].
முதலில் எப்படி நம்மை எப்படி இன்னும் கூர்மையாக்கிக் கொள்வோம் என்பதைப் பார்ப்போம்.
முன்பே பகுதி ஒன்றில் இதைப் பற்றி சில வரிகள் மெலிதாகப் பார்த்தோம் .
இன்னும் ஆழமாகப் பார்ப்போம் .
எந்தத் துறையில் வேலை பார்த்தாலும் அதில் பல துணைத்துறைகள் அல்லது கூறுகள் இருக்கத்தான் செய்யும் .
சாப்ட்வேர் என்று பொதுவாக பார்த்தால் , தேவைகளைத் திரட்டுதல் [requirement gathering .] ,நிர்மாணித்தல் [architecting ], வடிவமைப்பு மற்றும் செயற்படுத்தல் [design and implementation ] ,சோதித்தல் [ testing ] [சிலவற்றைச் சொல்லியுள்ளேன் ] என்று சில கூறுகள் இருக்கும் .ஒவ்வொன்றும் கடல்தான் . ஒவ்வொரு தனித்துறைக்கும் வல்லுனர்கள் தேவைப்படுவர் .
நாம் எல்லோரும் கேள்விப்பட்ட ஒரு கதைதான் , ஆனால் இந்த அமைப்பில் சாலப்பொருந்தும் .
ஒரு கப்பல் ஓடவில்லை .எவ்வளவோ முயன்றும் பெரியக்கப்பலில் என்னக் கோளாறு என்று யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை .
ஒருவன் வந்தான் . இந்த போல்டை சரி செய் என்று சொன்னான் .
கப்பல் ஓடியது மறுபடியும் . அவன் சார்ஜ் செய்த தொகை பல லட்சங்கள் .
என்ன இது ஒரு போல்டை சரி செய்ய இவ்வளவு கேட்கிறாய் என்று அவனிடம் கேட்டதற்கு , "போல்டை சரி செய்வதற்கு அதிமாக கேட்கவில்லை , எந்த போல்ட் என்று தெரிய வேண்டும் அல்லவா , அதற்குத்தான் "என்றான் .அவனுக்கு பணம் கொடுக்கப் பட்டது.
இதேப்போல்தான் , நிபுணர் ஒருவர் இருந்தால் , அவனும் எந்த போல்டை எந்த நேரத்தில் எந்த பிரச்சனைக்கு சரி செய்ய வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும் . அந்த வேகமும் , துல்லியமும்தான் அவனுடைய சிறப்பு . இதை தகவல் தொழில் நுட்பம் அல்லது எந்தத் துறைக்கும் பொருத்தி கொள்ளலாம் .
கம்பெனி கள் இப்படிப்பட்ட ஆட்களையே வைத்துக் கொள்ள விரும்புவர் .
மேற்கூறிய ஒவ்வொரு துறையிலும் நுணுக்கமான அறிவினைப் பெற முயல வேண்டும் . குறிப்பாக ஏதாவது ஒன்றில் ஆழ்ந்த குறிப்பிட்ட துணைத்துறை சார்ந்த அறிவினைப் [ specific vertical knowledge ] பெற வேண்டும் .அந்தக் குறிப்பிட்ட துணைத் துறையில் ஏதாவது சிக்கல் வந்தால் உங்கள் பெயர் தான் நினைவில் வர வேண்டும் .அந்த அளவிற்கு அதைப்பற்றி
அக்கு வேறு ஆணி வேறாக தெரிந்து இருக்க வேண்டும் .
வேலை சேர்ந்த முதல் சில வருடங்களுக்குள் இது போன்ற ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த நுண்ணறிவினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் .
வேலை நீக்கம் நடக்கும்முன் கம்பெனியின் உயர் மேலதிகாரிகள் ,உங்கள்
மேலாளரிடம் இடம் ஒரு பட்டியல் தயார் செய்யச் சொல்லுவர் .எந்த எந்த வேலைக்கு யார் தேவைப் படுவர் என்ற பட்டியல் தான் அது.
உதாரணம் பார்ப்போம் .
ஒரு வீடு கட்டும் பணியினை எடுத்துக்கொண்டால் , கீழ்வரும் ஆட்கள் வேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கட்டும் .
1) 10 சித்தாள்
2) 1 கொத்தனார்
3) 2 எலக்ட்ரீசியன்
4) 3 ப்ளும்பெர்
5) 2 பெயிண்ட்டர்கள்
இதில் ஆட்கள் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு ஒரு பட்டியல் தயார் சொல்லச்சொல்கின்றனர் ,அப்பொழுது இதில் யார் கிடைக்க கஷ்டம் என்று பார்ப்பார்கள் . சித்தாள் வேலையினை செய்ய மலிவாக ஆட்கள் கிடைப்பார்கள் என்று முடிவு செய்கின்றனர் . சிலரைக் குறைக்கவும் முடிவு செய்கின்றனர் .
மிச்சம் இருக்கும் சித்தாட்களை வைத்து அதிமாக வேலை வாங்கி சமாளிக்க முடியும் என அவர்கள் நம்புவதால் அப்படி ஒரு முடிவு . கொத்தனார் சம்பளம் அதிகம் அதைக் கைவைத்தால் நிறைய சேமிக்க முடியும் என்று நினைக்கிறார்கள் .
அப்பொழுது அந்த சித்தாட்களில் யாரவது கொத்தனார் செய்யும் வேலையினை செய்ய முடியுமா என்று பார்க்கப்படுகிறது .
அப்படி இருந்தால் , அந்த சித்தாளை கொத்தனார் வேலையினை பார்க்கச் சொல்லிவிட்டு , அந்த கொத்தனாரை தூக்க முடிவு செய்வர் .
அவர்கள் குறிக்கோள் , வேலையும் பாதிக்கப்படக்கூடாது ,ஆனால் குறைந்த ஆட்களை வைத்து வேலையினை முடிக்க வேண்டும் .
இப்படிப் பல வரிசைமாற்றம் மற்றும் சேர்க்கை அடிப்படையிலும் [permutation and combination ] எது குறைந்த செலவில் சமாளிக்க உதவுமோ அதனைச் செய்வர்.
இதில் அந்த கொத்தனார் கொஞ்சம் சாமர்த்தியசாலி என்று வைத்துக்கொள்வோம் . அவனுக்கு தெரிகிறது ஒரு நாள் தனக்கு இப்படி நிலை வரக்கூடும் என்று .அவன் என்ன செய்து இருப்பான் , வீட்டைக் கட்டும்பொழுது ,பொறியாளரிடம் இடம் வேலை பார்த்தப் பொழுது தன்னை விட்டால் சில குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய ஆள் இல்லை என்ற நிலையினை ஏற்படுத்திவிட்டு இருப்பான்.
அவன் இல்லை என்றால் , வேலை முடியாது என்ற ஒரு பிம்பத்தை நிதர்சனப்படுத்தி இருப்பான் . அப்பொழுது மேற்கூறிய சித்தாளை வைத்து கொத்தனார் வேலையினை செய்யும் நிலை ஏற்படாமல் தன்னைக் காத்துக் கொள்கிறான் .அதை எப்படி செய்கிறான் என்பதற்குள் போவது அவர் அவர் சாமர்த்தியம் .
இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் , மேலே கூறிய
திறன்களில் , electrician மற்றும் plumbing வேலைக்கு தேவை அதிகம் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் . தன் வேலை தவிர்த்து , electrician அல்லது plumbing வேலைகளையும் தெரிந்துக் கொண்டால் நல்லது . இதைத்தான் கிடைமட்ட துறைசார்ந்த அறிவு [ "horizontal domain knowledge"] என்று சொல்வார்கள் .வேலை நீக்கம் செய்யும் பட்டியல் போடும்பொழுது
உங்கள் திறமைகளை [ skill sets ] பட்டியல் போட்டு முடிவு எடுக்கப்படும் பொழுது , இது போன்ற பல்துறை அறிவு உதவும் .
அப்படியே இல்லையென்றாலும் வெளியே சென்று வேலைதேடும் பொழுது
போட்டிக்கிடையில் நமக்கு வேலை கிடைப்பது இலகுவாக இருக்கும் .
ஒன்று மட்டும் சொல்ல முடியும் , மிகவும் கடுமையாக உழைப்பது மட்டும் அல்ல அது , அதுவும் வேண்டும் , ஆனால் அதையும் மீறி ஒரு விஷயத்தை ஆழமாக அறிந்துக் கொண்டு , அதில் இருக்கும் நுணுக்கங்களில்
அவன்தான் கில்லாடியாக இருக்க வேண்டும். ஆவணங்கள் [documentation ] செய்து கொடுத்தாலும் அதனை ஒருவன் படித்து ,வேலையில் செயல்முறையில் சிறப்பாக தன் அளவிற்கு செய்ய ,நீண்ட காலம் கொள்ளும் அளவிற்கு அவனிடம் ஆழாமான அறிவும் திறனும் இருக்க வேண்டும் . சைக்கிள் ஒருவன் பயின்றவுடன் ஓட்டுவதற்கும் , இரண்டு கைகள் விட்டு ஓட்டுவதற்கும் உள்ள வித்தியாசம் அது .
இதனைப் பெறுவதற்கு ஒரு திட்டம் வேண்டும் .
அந்தக்குழுவில் எதில் தேவை இருக்கிறது என்கின்ற அரசியலும் அறிவும் வேண்டும் .அந்த குறிப்பிட்ட துறையில் தீவிரமாக ஆழ்ந்து இறங்கி அறிவையும் செயல் திறனையும் வளர்த்துக்கொண்டால், நம்மைத் தேவை மிகுந்தவானாக [demanding ] ஆக்கிக்கொள்ள முடியும் என்ற புரிதல் வேண்டும் இவரைத்தான் நிபுணர் [specialist ]என்று சொல்வோம் .
இந்த குறிப்பிட்ட துணைத்துறை நமக்கு பிடித்த ஒன்றாக அமைந்து விட்டால் ரொம்ப நன்று . அது நம்மை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் .அப்படி இல்லையென்றாலும் , அதற்குத் தேவை இருந்தால்
" survival of the fittest " அல்லது " adapt for survival " போன்ற கோட்பாடுகளின்படி தேவைக்கு ஏற்ப
நம்மைத் தகுதிப் படுத்திக்கொள்ள வேண்டும் .
ஒரு ப்ராஜெக்ட் செய்வதை ஒரு போரின் பத்ம வியுகமாக வைத்துக் கொள்வோம் . உள்ளே செல்ல மட்டும் தெரிந்தால் போதாது , வெளியே வரவும் தெரிய வேண்டும் அல்லவா .
வெளியே கொண்டு வரும் போர்த்திறன் அறிந்தவன் ஒருவன்தான் இருக்கிறான் என்றால் , அவனைத் தள்ளி வைக்க முடியாது அல்லவா ?
இன்னும் சொல்லப்போனால் பத்ம வியுகத்தில் உள்ளே சென்று மாட்டிக்கொண்டால் என்ன ஆவது என்ற பயம் வந்தால் அந்தத் தளபதியினை கைவைக்க முடியாதுதானே .அந்தத் தளபதியாக இருக்க நம்மைப் தயார் செய்ய வேண்டும்.நீண்ட காலத்திட்டம் இது .
வருடங்கள் கழியக் கழியக் அரைத்த மாவையே அரைக்காமல் , அடுத்த வருடம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று திட்டமிட்டு அதன் படி
திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் .
மேலே முதலில் சொல்லப்பட்ட சித்தாள் 10 பேரில் சிலரைத் தானே எடுக்க முடிவு செய்தனர் . அவர்கள் தரப்பில் இருந்து பார்ப்போம் இப்பொழுது .
அதில் இரண்டு பேர் அந்தக் கொத்தனாருடன் கூடயே இருந்து எப்படியோ
ஒரு அளவிற்கு தொழிலைக் கத்துக்கொண்டு விடுகின்றனர் . அப்பொழுது அவர்களின் மதிப்பு அதிகம் தான் . இரண்டு மூன்று பேர் குறைத்த பின்னும்
வேலை வாங்கும் சூழலில் இவர்களின் தேவை அதிகமாக இருக்கும் .
இதுவும் ஒரு வகையில் வேலையினைத்தக்க வைத்துக்கொள்ளும் ஒரு முறைதான் . நான் இதை வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பேன் .
வேலையினைக் காத்துக்கொள்ளும் முயற்சி என்று பார்த்தால் அதில்
உன்னதம் இருக்காது .தொழிலைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் ஈடுபாடும் தான் முதன்மையாக இருக்க வேண்டும் . அப்பொழுது
அறிவும் திறனும் இன்னும் சிறப்பாக வளரும் , நமது தேவையும் கூடும் .
இதைதான் "vertical and horizontal knowledge " என்பதற்கு ஒரு உதாரணமாகக் கூறுவேன்.தன் வேலை மட்டும் இல்லாமல் , இன்னும் என்னத் தெரிந்துக்கொள்ள முடியும் என்று அலசி , எது நிறுவனத்திற்கு தேவை என்பதையும் அறிந்து
அதை கற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு , சமயம் வரும் பொழுது அல்லது அமைத்துக்கொண்டு அதனைக் கற்றுக்கொள்ள வேண்டும் .
எப்படிப்பட்ட நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் ?
தொழில் சார்ந்த இலக்குகளை ["career goals"] என்று தனக்கென்று ஒரு திட்டம் வகுத்து , இந்தக் நிறுவனத்தில் தன்னுடைய தேவைக்கேற்ற வேலை கிடைக்குமா என்று ஆராய வேண்டும் . பணம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் , நிறையத் தெரிந்துக்கொள்ளும்
சூழலை [ learning curve ] கொடுக்கும் நிறுவனத்தை தேர்ந்து எடுத்து சேர வேண்டும் . இதுதான் துறையில் நீண்ட நாள் தாக்கு பிடிக்க உதவும் .
அல்லது வருடாந்திர செயல் திறன் விவாதம் போதோ , மற்றொரு தகுந்த சூழலில் மேலதிகாரியிடம் , "எனக்கு இவற்றை எல்லாம் தெரிந்துக் கொள்ளும் ஆவல் இருக்கிறது . எனக்கு அப்படி பட்ட ஒரு ப்ராஜெக்ட் வந்தால் , சந்தர்ப்பம் கொடுங்கள் " என்று சொல்லி வைக்க வேண்டும் .
இது நன்மதிப்பையே கொடுக்கும் , சரியாய்ப் பேசினால் .
பணம் மட்டும் குறிக்கோள் இல்லை , மேலே போக தன்னைத்
தயார் செய்து கொள்கிறான் என்ற பிம்பத்தைக் கொடுக்கும் .
குறிப்பாக , அடுத்த பதவி உயர்வு வேண்டும் என்றால் என்ன என்ன தகுதி
தேவைப்படுகிறது என்ற ஒரு எதிர்பார்ப்பை மேலதிகாரியிடம் முன்பே
கேட்டு வைத்துக்கொண்டு , அதனை அப்ரைசல் சந்திப்பின் பொழுது எழுத்தில் குறிக்கோள்களாக வைத்துக் கொள்ள வேண்டும் .
அடுத்த ஆண்டு அதை அடைந்து உள்ளேனா என்று பார்த்து விட்டு
அடுத்த கட்டம் பற்றி பேச வேண்டும்.
மேலதிகாரி , இன்னும் நீங்கள் முன்னேற வேண்டும் என்று கூறினாலும்
அதற்கு ஏற்ப தன்னை மெருகேற்ற வேண்டும் .
மேலதிகாரி ஏமாற்றும் நோக்கில் இதை அதைச் சொல்லி
நழுவினாலும் , அமைதியாக பேசி , அடுத்த முறை அப்படி ஒரு சந்தர்ப்பத்தை கொடுங்கள் என்று அடி மேல் அடி வைக்க வேண்டும் .
அம்மி நகரும் மெதுவாக .இப்படி இல்லாமல் இலக்கே இல்லாமல் சென்றால் , ஆபத்துதான் .
இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது .
ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட திறமை இருக்கும் .
எப்படி பாடுவது , ஓவியம் வரைவது ,இசைக்கருவி வாசிப்பது , கவிதை எழுதுவது போன்ற பல கலைகளில் ஒவ்வொருக்கும் ஒரு திறமை இருக்கும் [உதாரணத்திற்கு சொன்னேன் ,கலைகளும் திறமைகளும் பல வகைகள் உள்ளன என்பதை நாம் அறிவோம் ].எதில் நமக்கு இயற்கையாகவே ஈடுபாடும் திறமையும் இருக்கின்றது என்ற சுயவிமர்சனம் செய்து அதில் கூர்ந்த அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் . இப்படி நமக்கு பிடித்த ஒன்றில் ஆழமாக இறங்கிப் படித்து , இன்னும் தீவிரமான நுண்ணறிவினை வளர்த்துக்கொண்டால் ,நமக்குத் தேவை இருக்கும் . ஒருவேளை நமக்கு ஈடுபாடு உள்ள துறைதனில் சந்தர்ப்பம் கிடைக்க வில்லையென்றால் , வெளியே வேறு நிறுவனத்தில் அது அமையுமா என்று தெரிந்துக் கொண்டு அதனை நோக்கி போகலாம் .
அப்படி ஏற்படுத்திக்கொண்டு விட்டால் , நீண்ட பயணத்தில் களைப்பும் ஏற்படாது , நம்முடைய திறமையும் மதிக்கப்படும் .
அப்படி ஒருவேளை அமையவில்லையென்றாலும் , முழு மனதுடன்
கொடுக்கப்பட்ட துறையில் நுண்ணறிவு வளர்த்துக்கொள்ளல் வேண்டும் .அதைத்தான் முதலில் சொல்லியிருந்தேன் .
குறிப்பாக கல்லூரி முடித்து வந்து சேர்ந்தபின் முதல் ஒரு வருடத்திலேயே தன்னுடைய நீண்ட கால இலக்கு என்னவென்பதை தீர்மானம் செய்து விட வேண்டும் .அதை நோக்கி முயற்சிகள் எடுக்க வேண்டும் . அதையும் தாண்டி சொல்வதென்றால் ,கல்லூரியில் இருக்கும் பொழுது கூட தனக்கு பிடித்த துறையில் எந்த நிறுவனங்கள் உள்ளன , அதில் சேர என்னச செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதற்கு தேவையான வேலைகளை கல்லூரியிலேயே தொடங்கினால் ரொம்ப நல்லது . கல்லூரி சீனியர்ஸ் இதற்கு உதவுவர் ,இல்லை குடும்ப மற்றும் நண்பர் வட்டத்தில் யாரேனும் ஒருவரை வழிகாட்டியாக [ mentor ]ஆக வைத்துக்கொண்டால் நல்லது .
நீண்ட காலத் திட்டம் ஒன்றைப் பார்ப்போம் .
ஒரு கஸ்டமர் ப்ராஜெக்ட் கொடுக்கும் முன் , அந்தக் குழுவின் திறனை மதிப்பிடுவர் . அதற்கு பெரும்பாலும் திட்ட மேலாளர் [ப்ராஜெக்ட் மேனேஜர் ] அல்லது மென்பொருள்சிற்பி [software architect ] போன்றோடுடன் பேசுவர் . அவர்கள் தேவை என்னவென்பதை தெரிந்துக் கொண்டு , அதற்கு ஏற்றார் போல் , குறுகிய காலத்தில் ஒரு திட்டம் அதற்கு ஆகும் செலவையும் ஒரு மதிப்பீடு கொடுத்து ,அவர்களை நம்ப வைத்து ப்ராஜெக்ட் வாங்க வேண்டும் , பிறகு அதைத் திறன்பட முடித்தும்தர வேண்டும் .
இப்படி கஸ்டமர் முன் நின்று பேசும் திறன் வாய்ந்தவர்கள் தேவைப்படுகின்றனர் .அதற்கு ஆழ்த்த தொழில் சார்ந்த அறிவும் பேச்சுத்திறனும் வேண்டும் . 10 வருடத்திற்குள் அல்லது அதிக்கபடி பதினைந்து வருடத்திற்குள் இப்படிப்பட்ட ஒரு தகுதியனை நாம் அடைந்து இருக்க வேண்டும் .இது ஒரு உதாரணம் .
நம்முடைய அனுபவத்திற்கு ஏற்ற செயல்திறன் [value proposition ] நமக்கு இருக்க வேண்டும் என்று சொல்லவருகிறேன் .
இதற்குத் தொழில்நுட்ப அறிவு [technical skills ] மட்டும் போதாது, மென்திறனும் [soft skills ] முக்கியம் . இதைப் பற்றியும் , .திட்ட மேலாண்மை [ program management ] பற்றியும் கொஞ்சம் பேசவேண்டும் .
மேலும் "Sixth sense to survive " என்று ஒன்று வேண்டும் என்று முன்பு கூறியிருந்தேன் .அதாவது , நிறுவனத்தில் ஏதாவது வேலை நீக்க பூகம்பம் வரப்போகிறதா என்று ஒரு அளவிற்கு முன்கூட்டியே கணிக்கும் திறன் பற்றி பேச வேண்டும் . வேலைக்கு எளிதாக அழைப்பு வருவதற்கு முக்கியமாக ஆட்கள் தெரிந்து இருக்க வேண்டும் [ networking]
[ அதுவும் ஒரு முக்கிய காரணம் ]..இதையும் பேசவேண்டும்
இன்னும் இரண்டு பகுதிகள் எழுத வேண்டி இருக்கும் என நினைக்கிறேன் .
பேசுவோம் .
http://moongilkoodu.blogspot.com/2015/01/it-40-1.html
]
சரி நிறுவனங்கள் லாபத்தைப் பெருக்க ஆட்குறைப்பு நடவடிக்கை
எடுக்கத்தான் செய்கின்றன .
[
தற்போதைய சூழலில் தொழிற்சங்கங்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள்
பற்றி இணையத்தில் பேச்சு அடிபடுகிறது , என்ன நடக்கப்போகிறது என்று
நானும் ஆவலாகத்தான் இருக்கிறேன் ]
அது நடந்தால் நன்மையே .
தற்போதைக்கு இது தான் நிதர்சனம் என்று வைத்துக்கொள்வோம் .இந்தக் கசப்பை ஏற்றுக்கொண்டு என்ன செய்து நம்மை முடிந்த வரை காத்துக் கொள்ள முயற்சி செய்யலாம் என்று பார்ப்போம் .
அல்லது வந்து விட்டால் எப்படி வெளி வருவது பற்றியும் அடுத்து வரும்
பகுதிகளில் பார்ப்போம்
ஆனால் எக்காரணம் கொண்டு ஒடிந்து போய் உட்காருவது உகந்தது அல்ல. எல்லாவற்றிற்கும் ஒரு வழி இருக்கும் .
சும்மா சொல்லவில்லை, ;அனுபவத்தில்தான் சொல்கிறேன்.
[ இது பகுதி மூன்றில் வரும் ].
முதலில் எப்படி நம்மை எப்படி இன்னும் கூர்மையாக்கிக் கொள்வோம் என்பதைப் பார்ப்போம்.
முன்பே பகுதி ஒன்றில் இதைப் பற்றி சில வரிகள் மெலிதாகப் பார்த்தோம் .
இன்னும் ஆழமாகப் பார்ப்போம் .
எந்தத் துறையில் வேலை பார்த்தாலும் அதில் பல துணைத்துறைகள் அல்லது கூறுகள் இருக்கத்தான் செய்யும் .
சாப்ட்வேர் என்று பொதுவாக பார்த்தால் , தேவைகளைத் திரட்டுதல் [requirement gathering .] ,நிர்மாணித்தல் [architecting ], வடிவமைப்பு மற்றும் செயற்படுத்தல் [design and implementation ] ,சோதித்தல் [ testing ] [சிலவற்றைச் சொல்லியுள்ளேன் ] என்று சில கூறுகள் இருக்கும் .ஒவ்வொன்றும் கடல்தான் . ஒவ்வொரு தனித்துறைக்கும் வல்லுனர்கள் தேவைப்படுவர் .
நாம் எல்லோரும் கேள்விப்பட்ட ஒரு கதைதான் , ஆனால் இந்த அமைப்பில் சாலப்பொருந்தும் .
ஒரு கப்பல் ஓடவில்லை .எவ்வளவோ முயன்றும் பெரியக்கப்பலில் என்னக் கோளாறு என்று யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை .
ஒருவன் வந்தான் . இந்த போல்டை சரி செய் என்று சொன்னான் .
கப்பல் ஓடியது மறுபடியும் . அவன் சார்ஜ் செய்த தொகை பல லட்சங்கள் .
என்ன இது ஒரு போல்டை சரி செய்ய இவ்வளவு கேட்கிறாய் என்று அவனிடம் கேட்டதற்கு , "போல்டை சரி செய்வதற்கு அதிமாக கேட்கவில்லை , எந்த போல்ட் என்று தெரிய வேண்டும் அல்லவா , அதற்குத்தான் "என்றான் .அவனுக்கு பணம் கொடுக்கப் பட்டது.
இதேப்போல்தான் , நிபுணர் ஒருவர் இருந்தால் , அவனும் எந்த போல்டை எந்த நேரத்தில் எந்த பிரச்சனைக்கு சரி செய்ய வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும் . அந்த வேகமும் , துல்லியமும்தான் அவனுடைய சிறப்பு . இதை தகவல் தொழில் நுட்பம் அல்லது எந்தத் துறைக்கும் பொருத்தி கொள்ளலாம் .
கம்பெனி கள் இப்படிப்பட்ட ஆட்களையே வைத்துக் கொள்ள விரும்புவர் .
மேற்கூறிய ஒவ்வொரு துறையிலும் நுணுக்கமான அறிவினைப் பெற முயல வேண்டும் . குறிப்பாக ஏதாவது ஒன்றில் ஆழ்ந்த குறிப்பிட்ட துணைத்துறை சார்ந்த அறிவினைப் [ specific vertical knowledge ] பெற வேண்டும் .அந்தக் குறிப்பிட்ட துணைத் துறையில் ஏதாவது சிக்கல் வந்தால் உங்கள் பெயர் தான் நினைவில் வர வேண்டும் .அந்த அளவிற்கு அதைப்பற்றி
அக்கு வேறு ஆணி வேறாக தெரிந்து இருக்க வேண்டும் .
வேலை சேர்ந்த முதல் சில வருடங்களுக்குள் இது போன்ற ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த நுண்ணறிவினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் .
வேலை நீக்கம் நடக்கும்முன் கம்பெனியின் உயர் மேலதிகாரிகள் ,உங்கள்
மேலாளரிடம் இடம் ஒரு பட்டியல் தயார் செய்யச் சொல்லுவர் .எந்த எந்த வேலைக்கு யார் தேவைப் படுவர் என்ற பட்டியல் தான் அது.
உதாரணம் பார்ப்போம் .
ஒரு வீடு கட்டும் பணியினை எடுத்துக்கொண்டால் , கீழ்வரும் ஆட்கள் வேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கட்டும் .
1) 10 சித்தாள்
2) 1 கொத்தனார்
3) 2 எலக்ட்ரீசியன்
4) 3 ப்ளும்பெர்
5) 2 பெயிண்ட்டர்கள்
இதில் ஆட்கள் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு ஒரு பட்டியல் தயார் சொல்லச்சொல்கின்றனர் ,அப்பொழுது இதில் யார் கிடைக்க கஷ்டம் என்று பார்ப்பார்கள் . சித்தாள் வேலையினை செய்ய மலிவாக ஆட்கள் கிடைப்பார்கள் என்று முடிவு செய்கின்றனர் . சிலரைக் குறைக்கவும் முடிவு செய்கின்றனர் .
மிச்சம் இருக்கும் சித்தாட்களை வைத்து அதிமாக வேலை வாங்கி சமாளிக்க முடியும் என அவர்கள் நம்புவதால் அப்படி ஒரு முடிவு . கொத்தனார் சம்பளம் அதிகம் அதைக் கைவைத்தால் நிறைய சேமிக்க முடியும் என்று நினைக்கிறார்கள் .
அப்பொழுது அந்த சித்தாட்களில் யாரவது கொத்தனார் செய்யும் வேலையினை செய்ய முடியுமா என்று பார்க்கப்படுகிறது .
அப்படி இருந்தால் , அந்த சித்தாளை கொத்தனார் வேலையினை பார்க்கச் சொல்லிவிட்டு , அந்த கொத்தனாரை தூக்க முடிவு செய்வர் .
அவர்கள் குறிக்கோள் , வேலையும் பாதிக்கப்படக்கூடாது ,ஆனால் குறைந்த ஆட்களை வைத்து வேலையினை முடிக்க வேண்டும் .
இப்படிப் பல வரிசைமாற்றம் மற்றும் சேர்க்கை அடிப்படையிலும் [permutation and combination ] எது குறைந்த செலவில் சமாளிக்க உதவுமோ அதனைச் செய்வர்.
இதில் அந்த கொத்தனார் கொஞ்சம் சாமர்த்தியசாலி என்று வைத்துக்கொள்வோம் . அவனுக்கு தெரிகிறது ஒரு நாள் தனக்கு இப்படி நிலை வரக்கூடும் என்று .அவன் என்ன செய்து இருப்பான் , வீட்டைக் கட்டும்பொழுது ,பொறியாளரிடம் இடம் வேலை பார்த்தப் பொழுது தன்னை விட்டால் சில குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய ஆள் இல்லை என்ற நிலையினை ஏற்படுத்திவிட்டு இருப்பான்.
அவன் இல்லை என்றால் , வேலை முடியாது என்ற ஒரு பிம்பத்தை நிதர்சனப்படுத்தி இருப்பான் . அப்பொழுது மேற்கூறிய சித்தாளை வைத்து கொத்தனார் வேலையினை செய்யும் நிலை ஏற்படாமல் தன்னைக் காத்துக் கொள்கிறான் .அதை எப்படி செய்கிறான் என்பதற்குள் போவது அவர் அவர் சாமர்த்தியம் .
இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் , மேலே கூறிய
திறன்களில் , electrician மற்றும் plumbing வேலைக்கு தேவை அதிகம் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் . தன் வேலை தவிர்த்து , electrician அல்லது plumbing வேலைகளையும் தெரிந்துக் கொண்டால் நல்லது . இதைத்தான் கிடைமட்ட துறைசார்ந்த அறிவு [ "horizontal domain knowledge"] என்று சொல்வார்கள் .வேலை நீக்கம் செய்யும் பட்டியல் போடும்பொழுது
உங்கள் திறமைகளை [ skill sets ] பட்டியல் போட்டு முடிவு எடுக்கப்படும் பொழுது , இது போன்ற பல்துறை அறிவு உதவும் .
அப்படியே இல்லையென்றாலும் வெளியே சென்று வேலைதேடும் பொழுது
போட்டிக்கிடையில் நமக்கு வேலை கிடைப்பது இலகுவாக இருக்கும் .
ஒன்று மட்டும் சொல்ல முடியும் , மிகவும் கடுமையாக உழைப்பது மட்டும் அல்ல அது , அதுவும் வேண்டும் , ஆனால் அதையும் மீறி ஒரு விஷயத்தை ஆழமாக அறிந்துக் கொண்டு , அதில் இருக்கும் நுணுக்கங்களில்
அவன்தான் கில்லாடியாக இருக்க வேண்டும். ஆவணங்கள் [documentation ] செய்து கொடுத்தாலும் அதனை ஒருவன் படித்து ,வேலையில் செயல்முறையில் சிறப்பாக தன் அளவிற்கு செய்ய ,நீண்ட காலம் கொள்ளும் அளவிற்கு அவனிடம் ஆழாமான அறிவும் திறனும் இருக்க வேண்டும் . சைக்கிள் ஒருவன் பயின்றவுடன் ஓட்டுவதற்கும் , இரண்டு கைகள் விட்டு ஓட்டுவதற்கும் உள்ள வித்தியாசம் அது .
இதனைப் பெறுவதற்கு ஒரு திட்டம் வேண்டும் .
அந்தக்குழுவில் எதில் தேவை இருக்கிறது என்கின்ற அரசியலும் அறிவும் வேண்டும் .அந்த குறிப்பிட்ட துறையில் தீவிரமாக ஆழ்ந்து இறங்கி அறிவையும் செயல் திறனையும் வளர்த்துக்கொண்டால், நம்மைத் தேவை மிகுந்தவானாக [demanding ] ஆக்கிக்கொள்ள முடியும் என்ற புரிதல் வேண்டும் இவரைத்தான் நிபுணர் [specialist ]என்று சொல்வோம் .
இந்த குறிப்பிட்ட துணைத்துறை நமக்கு பிடித்த ஒன்றாக அமைந்து விட்டால் ரொம்ப நன்று . அது நம்மை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் .அப்படி இல்லையென்றாலும் , அதற்குத் தேவை இருந்தால்
" survival of the fittest " அல்லது " adapt for survival " போன்ற கோட்பாடுகளின்படி தேவைக்கு ஏற்ப
நம்மைத் தகுதிப் படுத்திக்கொள்ள வேண்டும் .
ஒரு ப்ராஜெக்ட் செய்வதை ஒரு போரின் பத்ம வியுகமாக வைத்துக் கொள்வோம் . உள்ளே செல்ல மட்டும் தெரிந்தால் போதாது , வெளியே வரவும் தெரிய வேண்டும் அல்லவா .
வெளியே கொண்டு வரும் போர்த்திறன் அறிந்தவன் ஒருவன்தான் இருக்கிறான் என்றால் , அவனைத் தள்ளி வைக்க முடியாது அல்லவா ?
இன்னும் சொல்லப்போனால் பத்ம வியுகத்தில் உள்ளே சென்று மாட்டிக்கொண்டால் என்ன ஆவது என்ற பயம் வந்தால் அந்தத் தளபதியினை கைவைக்க முடியாதுதானே .அந்தத் தளபதியாக இருக்க நம்மைப் தயார் செய்ய வேண்டும்.நீண்ட காலத்திட்டம் இது .
வருடங்கள் கழியக் கழியக் அரைத்த மாவையே அரைக்காமல் , அடுத்த வருடம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று திட்டமிட்டு அதன் படி
திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் .
மேலே முதலில் சொல்லப்பட்ட சித்தாள் 10 பேரில் சிலரைத் தானே எடுக்க முடிவு செய்தனர் . அவர்கள் தரப்பில் இருந்து பார்ப்போம் இப்பொழுது .
அதில் இரண்டு பேர் அந்தக் கொத்தனாருடன் கூடயே இருந்து எப்படியோ
ஒரு அளவிற்கு தொழிலைக் கத்துக்கொண்டு விடுகின்றனர் . அப்பொழுது அவர்களின் மதிப்பு அதிகம் தான் . இரண்டு மூன்று பேர் குறைத்த பின்னும்
வேலை வாங்கும் சூழலில் இவர்களின் தேவை அதிகமாக இருக்கும் .
இதுவும் ஒரு வகையில் வேலையினைத்தக்க வைத்துக்கொள்ளும் ஒரு முறைதான் . நான் இதை வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பேன் .
வேலையினைக் காத்துக்கொள்ளும் முயற்சி என்று பார்த்தால் அதில்
உன்னதம் இருக்காது .தொழிலைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் ஈடுபாடும் தான் முதன்மையாக இருக்க வேண்டும் . அப்பொழுது
அறிவும் திறனும் இன்னும் சிறப்பாக வளரும் , நமது தேவையும் கூடும் .
இதைதான் "vertical and horizontal knowledge " என்பதற்கு ஒரு உதாரணமாகக் கூறுவேன்.தன் வேலை மட்டும் இல்லாமல் , இன்னும் என்னத் தெரிந்துக்கொள்ள முடியும் என்று அலசி , எது நிறுவனத்திற்கு தேவை என்பதையும் அறிந்து
அதை கற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு , சமயம் வரும் பொழுது அல்லது அமைத்துக்கொண்டு அதனைக் கற்றுக்கொள்ள வேண்டும் .
எப்படிப்பட்ட நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் ?
தொழில் சார்ந்த இலக்குகளை ["career goals"] என்று தனக்கென்று ஒரு திட்டம் வகுத்து , இந்தக் நிறுவனத்தில் தன்னுடைய தேவைக்கேற்ற வேலை கிடைக்குமா என்று ஆராய வேண்டும் . பணம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் , நிறையத் தெரிந்துக்கொள்ளும்
சூழலை [ learning curve ] கொடுக்கும் நிறுவனத்தை தேர்ந்து எடுத்து சேர வேண்டும் . இதுதான் துறையில் நீண்ட நாள் தாக்கு பிடிக்க உதவும் .
அல்லது வருடாந்திர செயல் திறன் விவாதம் போதோ , மற்றொரு தகுந்த சூழலில் மேலதிகாரியிடம் , "எனக்கு இவற்றை எல்லாம் தெரிந்துக் கொள்ளும் ஆவல் இருக்கிறது . எனக்கு அப்படி பட்ட ஒரு ப்ராஜெக்ட் வந்தால் , சந்தர்ப்பம் கொடுங்கள் " என்று சொல்லி வைக்க வேண்டும் .
இது நன்மதிப்பையே கொடுக்கும் , சரியாய்ப் பேசினால் .
பணம் மட்டும் குறிக்கோள் இல்லை , மேலே போக தன்னைத்
தயார் செய்து கொள்கிறான் என்ற பிம்பத்தைக் கொடுக்கும் .
குறிப்பாக , அடுத்த பதவி உயர்வு வேண்டும் என்றால் என்ன என்ன தகுதி
தேவைப்படுகிறது என்ற ஒரு எதிர்பார்ப்பை மேலதிகாரியிடம் முன்பே
கேட்டு வைத்துக்கொண்டு , அதனை அப்ரைசல் சந்திப்பின் பொழுது எழுத்தில் குறிக்கோள்களாக வைத்துக் கொள்ள வேண்டும் .
அடுத்த ஆண்டு அதை அடைந்து உள்ளேனா என்று பார்த்து விட்டு
அடுத்த கட்டம் பற்றி பேச வேண்டும்.
மேலதிகாரி , இன்னும் நீங்கள் முன்னேற வேண்டும் என்று கூறினாலும்
அதற்கு ஏற்ப தன்னை மெருகேற்ற வேண்டும் .
மேலதிகாரி ஏமாற்றும் நோக்கில் இதை அதைச் சொல்லி
நழுவினாலும் , அமைதியாக பேசி , அடுத்த முறை அப்படி ஒரு சந்தர்ப்பத்தை கொடுங்கள் என்று அடி மேல் அடி வைக்க வேண்டும் .
அம்மி நகரும் மெதுவாக .இப்படி இல்லாமல் இலக்கே இல்லாமல் சென்றால் , ஆபத்துதான் .
இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது .
ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட திறமை இருக்கும் .
எப்படி பாடுவது , ஓவியம் வரைவது ,இசைக்கருவி வாசிப்பது , கவிதை எழுதுவது போன்ற பல கலைகளில் ஒவ்வொருக்கும் ஒரு திறமை இருக்கும் [உதாரணத்திற்கு சொன்னேன் ,கலைகளும் திறமைகளும் பல வகைகள் உள்ளன என்பதை நாம் அறிவோம் ].எதில் நமக்கு இயற்கையாகவே ஈடுபாடும் திறமையும் இருக்கின்றது என்ற சுயவிமர்சனம் செய்து அதில் கூர்ந்த அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் . இப்படி நமக்கு பிடித்த ஒன்றில் ஆழமாக இறங்கிப் படித்து , இன்னும் தீவிரமான நுண்ணறிவினை வளர்த்துக்கொண்டால் ,நமக்குத் தேவை இருக்கும் . ஒருவேளை நமக்கு ஈடுபாடு உள்ள துறைதனில் சந்தர்ப்பம் கிடைக்க வில்லையென்றால் , வெளியே வேறு நிறுவனத்தில் அது அமையுமா என்று தெரிந்துக் கொண்டு அதனை நோக்கி போகலாம் .
அப்படி ஏற்படுத்திக்கொண்டு விட்டால் , நீண்ட பயணத்தில் களைப்பும் ஏற்படாது , நம்முடைய திறமையும் மதிக்கப்படும் .
அப்படி ஒருவேளை அமையவில்லையென்றாலும் , முழு மனதுடன்
கொடுக்கப்பட்ட துறையில் நுண்ணறிவு வளர்த்துக்கொள்ளல் வேண்டும் .அதைத்தான் முதலில் சொல்லியிருந்தேன் .
குறிப்பாக கல்லூரி முடித்து வந்து சேர்ந்தபின் முதல் ஒரு வருடத்திலேயே தன்னுடைய நீண்ட கால இலக்கு என்னவென்பதை தீர்மானம் செய்து விட வேண்டும் .அதை நோக்கி முயற்சிகள் எடுக்க வேண்டும் . அதையும் தாண்டி சொல்வதென்றால் ,கல்லூரியில் இருக்கும் பொழுது கூட தனக்கு பிடித்த துறையில் எந்த நிறுவனங்கள் உள்ளன , அதில் சேர என்னச செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதற்கு தேவையான வேலைகளை கல்லூரியிலேயே தொடங்கினால் ரொம்ப நல்லது . கல்லூரி சீனியர்ஸ் இதற்கு உதவுவர் ,இல்லை குடும்ப மற்றும் நண்பர் வட்டத்தில் யாரேனும் ஒருவரை வழிகாட்டியாக [ mentor ]ஆக வைத்துக்கொண்டால் நல்லது .
நீண்ட காலத் திட்டம் ஒன்றைப் பார்ப்போம் .
ஒரு கஸ்டமர் ப்ராஜெக்ட் கொடுக்கும் முன் , அந்தக் குழுவின் திறனை மதிப்பிடுவர் . அதற்கு பெரும்பாலும் திட்ட மேலாளர் [ப்ராஜெக்ட் மேனேஜர் ] அல்லது மென்பொருள்சிற்பி [software architect ] போன்றோடுடன் பேசுவர் . அவர்கள் தேவை என்னவென்பதை தெரிந்துக் கொண்டு , அதற்கு ஏற்றார் போல் , குறுகிய காலத்தில் ஒரு திட்டம் அதற்கு ஆகும் செலவையும் ஒரு மதிப்பீடு கொடுத்து ,அவர்களை நம்ப வைத்து ப்ராஜெக்ட் வாங்க வேண்டும் , பிறகு அதைத் திறன்பட முடித்தும்தர வேண்டும் .
இப்படி கஸ்டமர் முன் நின்று பேசும் திறன் வாய்ந்தவர்கள் தேவைப்படுகின்றனர் .அதற்கு ஆழ்த்த தொழில் சார்ந்த அறிவும் பேச்சுத்திறனும் வேண்டும் . 10 வருடத்திற்குள் அல்லது அதிக்கபடி பதினைந்து வருடத்திற்குள் இப்படிப்பட்ட ஒரு தகுதியனை நாம் அடைந்து இருக்க வேண்டும் .இது ஒரு உதாரணம் .
நம்முடைய அனுபவத்திற்கு ஏற்ற செயல்திறன் [value proposition ] நமக்கு இருக்க வேண்டும் என்று சொல்லவருகிறேன் .
இதற்குத் தொழில்நுட்ப அறிவு [technical skills ] மட்டும் போதாது, மென்திறனும் [soft skills ] முக்கியம் . இதைப் பற்றியும் , .திட்ட மேலாண்மை [ program management ] பற்றியும் கொஞ்சம் பேசவேண்டும் .
மேலும் "Sixth sense to survive " என்று ஒன்று வேண்டும் என்று முன்பு கூறியிருந்தேன் .அதாவது , நிறுவனத்தில் ஏதாவது வேலை நீக்க பூகம்பம் வரப்போகிறதா என்று ஒரு அளவிற்கு முன்கூட்டியே கணிக்கும் திறன் பற்றி பேச வேண்டும் . வேலைக்கு எளிதாக அழைப்பு வருவதற்கு முக்கியமாக ஆட்கள் தெரிந்து இருக்க வேண்டும் [ networking]
[ அதுவும் ஒரு முக்கிய காரணம் ]..இதையும் பேசவேண்டும்
இன்னும் இரண்டு பகுதிகள் எழுத வேண்டி இருக்கும் என நினைக்கிறேன் .
பேசுவோம் .
No comments:
Post a Comment