Friday, November 7, 2014

கருப்புச்சட்டையும் அம்னீசியாயும்

கருப்புச்சட்டையும்  அம்னீசியாவும்  :

வாரக் கடைசிகள் மிகவும் போர் தான் நண்பர்கள் இல்லாத புது ஊரினில்.
அப்பொழுதுதான் வேலைக்கு சேர்ந்து  மூன்று மாதங்கள்  இருக்கும் , பெங்களூருவில் .நண்பர் வட்டம்  இன்னும் சரி வர அமையவில்லை வெற்றிக்கு .
10*8 அறையில் இரு கட்டிலுடன்  இருக்கும் P .G  ல்  இரண்டு நாட்களை கழிக்க வேண்டும் .இதில் ரூம் மேட் இரவில்  வேலை செய்யும் கால்  சென்டரில் வேலை பார்ப்பவர் . பேசிக்கொள்ளும் சந்தர்ப்பம் மிகக்குறைவுதான் .

"இந்த வாரம் இங்கே இருந்து பழகலாமா   இல்லை ,ஊருக்கு  போவோமா  ?  வாரா வார அலைச்சலும் செலவும் வேண்டுமா ?"எனக்குழம்பியவாறே மதியம் சாப்பிட்டு முடித்தான்.

வெள்ளிகிழமை 5 மணிக்குதான் சென்னைக்கு போகவா வேண்டாமா என்ற குழப்பத்தில்  இருந்து  விடுபட்டு , போய்விடுவது என்கிற முடிவுக்கு வந்தவுடன் , அவசரமாக  பஸ் பிடித்து மெஜெஸ்டிக் வந்து சேர்கிறான்.
எப்பொழுதுமே வெள்ளிக்கிழமைகளில் பெங்களுரு -சென்னை பஸ் கூட்டமாகத்தான் இருக்கும் , அன்றைக்கும் விதிவிலக்கு இல்லை.

கொஞ்சம் சொகுசான KSRTC  பஸ் இனி  கிடைக்காது என உணர்ந்தும்   , தனியார் பேருந்தும் யானை விலை  சொல்வார்கள் எனத்தெரிந்ததாலும்  , தமிழ் நாடு போக்குவரத்தில்   டிக்கெட் வாங்கும் பெரிய வரிசையில் சென்று நின்றான் . கூட்டம் இங்கே ஒரு அளவிற்கு தேவலை . அரை மணி நேரத்தில் டிக்கெட் வழங்கும் இடத்திற்கு அருகில்  வந்து விட்டான். டிக்கெட் கொடுப்பவரிடம்  பணம்  கொடுக்க முனைந்த  பொழுது, " can  you  get  one  for  me  as  well  bro , in  a  hurry " எனறு  ஒரு  குரல்  கேட்டது.  ஸ்டைல் ஆக ஒரு இளைஞன்  , காசை நீட்டிக்கொண்டு நின்றான்.

"எல்லோருக்கும் தான் அவசரம் , அப்புறம் மற்றவர்கள் எல்லாம் பொழுது  போகமாலா அங்கே  நிற்கிறார்கள் " என அவன்  நினைத்து முடிப்பதுற்குள் , "reservation  form " என்று உள்ளே இருந்து குரல் வந்தது. "சாரி" என்று அடுத்தவனிடம்  சொன்னது  கூட கேட்டு இருக்காது  என நினைத்தான்   . டிக்கெட்  வாங்கி விட்டு அவனை திரும்பிப்பார்த்த வாறே நடந்தான் . வரிசை மீறுபவர்களை அவனுக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை என்பதை அவன் முகபாவேமே காட்டிக்கொடுத்தது .கேட்டவனும்  வரிசையில் நின்றுக்கொண்டு  தான் இருந்தான் இப்பொழுது  வழி இல்லாமல். 

ஐந்தாம் நம்பர் பிளாட்பாரம் எங்கு இருக்கிறது என்பதைத்தேடி , கையில்  ஒரு தண்ணீர் பாட்டிலுடன் வந்து பஸ்சினுள் நுழைந்தால் , எல்லா  இடங்களிலும் ஆட்கள்  இருந்தது  போலத்தான் இருந்தது முதலில் அவனுக்கு . 
கடைசி வரிசையில் இருந்து ஒருவர் கை காண்பிக்கவும் , குலுக்கல்  சீட்டை நோக்கிப்போய் உட்கார்ந்தான் .இன்றைக்கு நல்ல "roller  coaster "   பயணம் தான் போல என நினைத்தவாரே கையினில் இருந்த  போன வார விகடனை புரட்டிக்கொண்டு  இருந்தான், காதில்  ஹெட் போனில், " பறவையே எங்கு  இருக்கிறாய் " என்ற  இசை ஞானினியின் குரல் ஒலிக்க   , சூழலை மறந்த  நிலையில்  இருந்தான்.

"excuse  me  , can  you  move a  bit " என்ற குரல் , யாராக இருக்கக்கூடாதென்று நினைத்தானோ அதே சற்று முன் டிக்கெட் வாங்கிதரச்சொன்னவன் தான்.
இது என்னடா  கொடுமைன்னு நினைத்த  வாறே, நகர்ந்துகொண்டே , முகத்தை பார்க்காதவாறு புத்தகம் படிக்கத்தொடங்கினான் .

"Hello , I  am Avinash" என  கையை  நீட்டினான் . இவன் தன்னை  அடையாளம் கண்டானா இல்லையா  என்ற குழப்பத்துடன்  , "Hi , I am vetri" என சங்கடத்துடன் கை குலிக்கினான் .

" தமிழ்தானே , பாட்டு கேட்டது  உங்க  ஹெட்  போனிலிருந்து .சென்னையில்  எங்கே ?"

" ஆதம்பாக்கம், கிண்டி பக்கத்துல , நீங்க?"

" நான் அண்ணா  நகர் , இங்க  C  A  பண்ணிட்டு இருக்கேன் , நீங்க?"

" நாங்க இங்க விப்ரோல  இருக்கேன் , VLSI  hardware  ல இருக்கேன் ".

சற்று நேரத்தில்  , தயக்கங்கள்  சற்று விலகி  நன்றாக  பேசத்தொடங்கி  இருந்தனர் .

இவனுக்கு  மனதுள்  குழப்பம்  இருக்கத்தான் செய்தது.

" நம்மளை  அடையாளம் காணாமல்  தான்  இப்படி  பேசறானா , இல்லை easyaa  எடுத்துக்கொண்டானா ?. சொல்லிவிடுவோமா ?"  என  யோசித்துக்கொண்டே  பேசிக்கொண்டு வந்தான் .

நான்  இங்க வந்து மூன்று வருடங்கள்  ஆகிறது போன்ற விசாரிப்புகள் முடிந்து, அரசியல், இளையராஜா  இசை என்று  நிறைய பேசிக்கொண்டு  வந்தார்கள்.

"எனக்கு இந்த IT   பிடிக்காது , அதான் +1 போதே காமர்ஸ் குரூப் எடுத்து, B  COM  பண்ணிட்டு  , C  A  படிக்க  வந்துட்டேன் . எப்படித்தான் அந்த கம்ப்யூட்டர்ல   நாள் எல்லாம் "code " பண்ணிட்டு  இருப்பீங்களோ ?" என்றான் அவினாஷ்.

" நான் software  engineer  இல்லை ,இதிலும் கம்ப்யூட்டரில் தான் வேலை . ஆனால் கோடிங் கம்மிதான் . சுலபமா  சொல்றதா  இருந்தா நீங்கள் பேசிட்டு  இருக்கும்  phonela  இருந்து  , tablet  , கம்ப்யூட்டரின்   CPU  , PS4 கேம்ஸ் , காரின்  airbag  கன்ட்ரோல்  போன்ற  எல்லாவற்றிற்கும் உள்ளே ஒரு "மைக்ரோசிப்" இருந்து எல்லாவற்றையும் கன்ட்ரோல்  செய்யும் . அந்த  "சிப்" செய்யும் வேலையில்  இருக்கிறேன் ".

"Interesting .இப்படிதான் ஒரு  " voltage  difference  " இருக்கணும், நம்மளோட "field  knowledge" ல. அப்போதான்  தகவல்  இங்கேயும் அங்கேயும் போய்  வரும் ! என்ன நான் சொல்றது சரிதானே! எனக்கும் கொஞ்சம் சயின்ஸ்  தெரியும் " எனச்  சிரித்தான் அவினாஷ்.

இரவு  நேர உணவு முடிந்து , "குட் நைட் " சொல்லிப்படுத்தாகிவிட்டது..

இவன் மண்டையில்  மட்டும் குழப்பம் இன்னும் தீரவில்லை." நல்லா  பேசிட்டு இருக்கானே, நட்பு தொடரும்னு  நினைக்கறேன் , ஒரு வேளை  டிக்கெட்  வாங்கி கொடுத்து  இருக்கணுமோ ? " என அவன்  மனம் குழப்பியது.

" ஒரு வேளை  நம்பர் கேட்டான்  என்றால் , சொல்லி விட வேண்டிதான் , அது  நான்  தான் என்று .தான்  செய்ததில் தவறு இல்லை , அவன் கேட்டது  தான் தவறு  " என சமாதனம் செய்துக்கொண்டு  தூங்கிப்போனான் இவன் .

 மறு நாள்  காலை கண் விழித்த  பொழுது  , அவினாஷ்  பையினை   மாட்டிக்கொண்டு தயாராக  இருந்தான் . பூந்தமல்லியில்  இறங்குவான்  போல.கிண்டிக்கு  கொஞ்சம்  தூரம்  இருப்பதால் , கண்ணை கசக்கிக்கொண்டே அவினாஷ்   பக்கம்  திரும்பினான் .

 கொஞ்சம் இறுக்கமான முகத்துடன் , " நேற்று டிக்கெட்  வாங்கும் இடத்துல கருப்பு  சட்டை  மாட்டிக்கொண்டு , உங்களைப்   போலவே  ஒருத்தனை  பார்த்தேன்.டிக்கெட்  வாங்கித்தர மாட்டேன்னு  சொல்லிட்டான் ..
அது நீங்களா?"


இவன் :  !!!??????.................

l


No comments:

Post a Comment