கருப்புச்சட்டையும் அம்னீசியாவும் :
வாரக் கடைசிகள் மிகவும் போர் தான் நண்பர்கள் இல்லாத புது ஊரினில்.
வாரக் கடைசிகள் மிகவும் போர் தான் நண்பர்கள் இல்லாத புது ஊரினில்.
அப்பொழுதுதான் வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் இருக்கும் , பெங்களூருவில் .நண்பர் வட்டம் இன்னும் சரி வர அமையவில்லை வெற்றிக்கு .
10*8 அறையில் இரு கட்டிலுடன் இருக்கும் P .G ல் இரண்டு நாட்களை கழிக்க வேண்டும் .இதில் ரூம் மேட் இரவில் வேலை செய்யும் கால் சென்டரில் வேலை பார்ப்பவர் . பேசிக்கொள்ளும் சந்தர்ப்பம் மிகக்குறைவுதான் .
"இந்த வாரம் இங்கே இருந்து பழகலாமா இல்லை ,ஊருக்கு போவோமா ? வாரா வார அலைச்சலும் செலவும் வேண்டுமா ?"எனக்குழம்பியவாறே மதியம் சாப்பிட்டு முடித்தான்.
"இந்த வாரம் இங்கே இருந்து பழகலாமா இல்லை ,ஊருக்கு போவோமா ? வாரா வார அலைச்சலும் செலவும் வேண்டுமா ?"எனக்குழம்பியவாறே மதியம் சாப்பிட்டு முடித்தான்.
வெள்ளிகிழமை 5 மணிக்குதான் சென்னைக்கு போகவா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்து விடுபட்டு , போய்விடுவது என்கிற முடிவுக்கு வந்தவுடன் , அவசரமாக பஸ் பிடித்து மெஜெஸ்டிக் வந்து சேர்கிறான்.
எப்பொழுதுமே வெள்ளிக்கிழமைகளில் பெங்களுரு -சென்னை பஸ் கூட்டமாகத்தான் இருக்கும் , அன்றைக்கும் விதிவிலக்கு இல்லை.
கொஞ்சம் சொகுசான KSRTC பஸ் இனி கிடைக்காது என உணர்ந்தும் , தனியார் பேருந்தும் யானை விலை சொல்வார்கள் எனத்தெரிந்ததாலும் , தமிழ் நாடு போக்குவரத்தில் டிக்கெட் வாங்கும் பெரிய வரிசையில் சென்று நின்றான் . கூட்டம் இங்கே ஒரு அளவிற்கு தேவலை . அரை மணி நேரத்தில் டிக்கெட் வழங்கும் இடத்திற்கு அருகில் வந்து விட்டான். டிக்கெட் கொடுப்பவரிடம் பணம் கொடுக்க முனைந்த பொழுது, " can you get one for me as well bro , in a hurry " எனறு ஒரு குரல் கேட்டது. ஸ்டைல் ஆக ஒரு இளைஞன் , காசை நீட்டிக்கொண்டு நின்றான்.
"எல்லோருக்கும் தான் அவசரம் , அப்புறம் மற்றவர்கள் எல்லாம் பொழுது போகமாலா அங்கே நிற்கிறார்கள் " என அவன் நினைத்து முடிப்பதுற்குள் , "reservation form " என்று உள்ளே இருந்து குரல் வந்தது. "சாரி" என்று அடுத்தவனிடம் சொன்னது கூட கேட்டு இருக்காது என நினைத்தான் . டிக்கெட் வாங்கி விட்டு அவனை திரும்பிப்பார்த்த வாறே நடந்தான் . வரிசை மீறுபவர்களை அவனுக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை என்பதை அவன் முகபாவேமே காட்டிக்கொடுத்தது .கேட்டவனும் வரிசையில் நின்றுக்கொண்டு தான் இருந்தான் இப்பொழுது வழி இல்லாமல்.
"எல்லோருக்கும் தான் அவசரம் , அப்புறம் மற்றவர்கள் எல்லாம் பொழுது போகமாலா அங்கே நிற்கிறார்கள் " என அவன் நினைத்து முடிப்பதுற்குள் , "reservation form " என்று உள்ளே இருந்து குரல் வந்தது. "சாரி" என்று அடுத்தவனிடம் சொன்னது கூட கேட்டு இருக்காது என நினைத்தான் . டிக்கெட் வாங்கி விட்டு அவனை திரும்பிப்பார்த்த வாறே நடந்தான் . வரிசை மீறுபவர்களை அவனுக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை என்பதை அவன் முகபாவேமே காட்டிக்கொடுத்தது .கேட்டவனும் வரிசையில் நின்றுக்கொண்டு தான் இருந்தான் இப்பொழுது வழி இல்லாமல்.
ஐந்தாம் நம்பர் பிளாட்பாரம் எங்கு இருக்கிறது என்பதைத்தேடி , கையில் ஒரு தண்ணீர் பாட்டிலுடன் வந்து பஸ்சினுள் நுழைந்தால் , எல்லா இடங்களிலும் ஆட்கள் இருந்தது போலத்தான் இருந்தது முதலில் அவனுக்கு .
கடைசி வரிசையில் இருந்து ஒருவர் கை காண்பிக்கவும் , குலுக்கல் சீட்டை நோக்கிப்போய் உட்கார்ந்தான் .இன்றைக்கு நல்ல "roller coaster " பயணம் தான் போல என நினைத்தவாரே கையினில் இருந்த போன வார விகடனை புரட்டிக்கொண்டு இருந்தான், காதில் ஹெட் போனில், " பறவையே எங்கு இருக்கிறாய் " என்ற இசை ஞானினியின் குரல் ஒலிக்க , சூழலை மறந்த நிலையில் இருந்தான்.
"excuse me , can you move a bit " என்ற குரல் , யாராக இருக்கக்கூடாதென்று நினைத்தானோ அதே சற்று முன் டிக்கெட் வாங்கிதரச்சொன்னவன் தான்.
இது என்னடா கொடுமைன்னு நினைத்த வாறே, நகர்ந்துகொண்டே , முகத்தை பார்க்காதவாறு புத்தகம் படிக்கத்தொடங்கினான் .
"Hello , I am Avinash" என கையை நீட்டினான் . இவன் தன்னை அடையாளம் கண்டானா இல்லையா என்ற குழப்பத்துடன் , "Hi , I am vetri" என சங்கடத்துடன் கை குலிக்கினான் .
" தமிழ்தானே , பாட்டு கேட்டது உங்க ஹெட் போனிலிருந்து .சென்னையில் எங்கே ?"
" ஆதம்பாக்கம், கிண்டி பக்கத்துல , நீங்க?"
" நான் அண்ணா நகர் , இங்க C A பண்ணிட்டு இருக்கேன் , நீங்க?"
" நாங்க இங்க விப்ரோல இருக்கேன் , VLSI hardware ல இருக்கேன் ".
சற்று நேரத்தில் , தயக்கங்கள் சற்று விலகி நன்றாக பேசத்தொடங்கி இருந்தனர் .
இவனுக்கு மனதுள் குழப்பம் இருக்கத்தான் செய்தது.
" நம்மளை அடையாளம் காணாமல் தான் இப்படி பேசறானா , இல்லை easyaa எடுத்துக்கொண்டானா ?. சொல்லிவிடுவோமா ?" என யோசித்துக்கொண்டே பேசிக்கொண்டு வந்தான் .
நான் இங்க வந்து மூன்று வருடங்கள் ஆகிறது போன்ற விசாரிப்புகள் முடிந்து, அரசியல், இளையராஜா இசை என்று நிறைய பேசிக்கொண்டு வந்தார்கள்.
"எனக்கு இந்த IT பிடிக்காது , அதான் +1 போதே காமர்ஸ் குரூப் எடுத்து, B COM பண்ணிட்டு , C A படிக்க வந்துட்டேன் . எப்படித்தான் அந்த கம்ப்யூட்டர்ல நாள் எல்லாம் "code " பண்ணிட்டு இருப்பீங்களோ ?" என்றான் அவினாஷ்.
" நான் software engineer இல்லை ,இதிலும் கம்ப்யூட்டரில் தான் வேலை . ஆனால் கோடிங் கம்மிதான் . சுலபமா சொல்றதா இருந்தா நீங்கள் பேசிட்டு இருக்கும் phonela இருந்து , tablet , கம்ப்யூட்டரின் CPU , PS4 கேம்ஸ் , காரின் airbag கன்ட்ரோல் போன்ற எல்லாவற்றிற்கும் உள்ளே ஒரு "மைக்ரோசிப்" இருந்து எல்லாவற்றையும் கன்ட்ரோல் செய்யும் . அந்த "சிப்" செய்யும் வேலையில் இருக்கிறேன் ".
"Interesting .இப்படிதான் ஒரு " voltage difference " இருக்கணும், நம்மளோட "field knowledge" ல. அப்போதான் தகவல் இங்கேயும் அங்கேயும் போய் வரும் ! என்ன நான் சொல்றது சரிதானே! எனக்கும் கொஞ்சம் சயின்ஸ் தெரியும் " எனச் சிரித்தான் அவினாஷ்.
இரவு நேர உணவு முடிந்து , "குட் நைட் " சொல்லிப்படுத்தாகிவிட்டது..
இவன் மண்டையில் மட்டும் குழப்பம் இன்னும் தீரவில்லை." நல்லா பேசிட்டு இருக்கானே, நட்பு தொடரும்னு நினைக்கறேன் , ஒரு வேளை டிக்கெட் வாங்கி கொடுத்து இருக்கணுமோ ? " என அவன் மனம் குழப்பியது.
" ஒரு வேளை நம்பர் கேட்டான் என்றால் , சொல்லி விட வேண்டிதான் , அது நான் தான் என்று .தான் செய்ததில் தவறு இல்லை , அவன் கேட்டது தான் தவறு " என சமாதனம் செய்துக்கொண்டு தூங்கிப்போனான் இவன் .
மறு நாள் காலை கண் விழித்த பொழுது , அவினாஷ் பையினை மாட்டிக்கொண்டு தயாராக இருந்தான் . பூந்தமல்லியில் இறங்குவான் போல.கிண்டிக்கு கொஞ்சம் தூரம் இருப்பதால் , கண்ணை கசக்கிக்கொண்டே அவினாஷ் பக்கம் திரும்பினான் .
கொஞ்சம் இறுக்கமான முகத்துடன் , " நேற்று டிக்கெட் வாங்கும் இடத்துல கருப்பு சட்டை மாட்டிக்கொண்டு , உங்களைப் போலவே ஒருத்தனை பார்த்தேன்.டிக்கெட் வாங்கித்தர மாட்டேன்னு சொல்லிட்டான் ..
அது நீங்களா?"
இவன் : !!!??????.................
l
"excuse me , can you move a bit " என்ற குரல் , யாராக இருக்கக்கூடாதென்று நினைத்தானோ அதே சற்று முன் டிக்கெட் வாங்கிதரச்சொன்னவன் தான்.
இது என்னடா கொடுமைன்னு நினைத்த வாறே, நகர்ந்துகொண்டே , முகத்தை பார்க்காதவாறு புத்தகம் படிக்கத்தொடங்கினான் .
"Hello , I am Avinash" என கையை நீட்டினான் . இவன் தன்னை அடையாளம் கண்டானா இல்லையா என்ற குழப்பத்துடன் , "Hi , I am vetri" என சங்கடத்துடன் கை குலிக்கினான் .
" தமிழ்தானே , பாட்டு கேட்டது உங்க ஹெட் போனிலிருந்து .சென்னையில் எங்கே ?"
" ஆதம்பாக்கம், கிண்டி பக்கத்துல , நீங்க?"
" நான் அண்ணா நகர் , இங்க C A பண்ணிட்டு இருக்கேன் , நீங்க?"
" நாங்க இங்க விப்ரோல இருக்கேன் , VLSI hardware ல இருக்கேன் ".
சற்று நேரத்தில் , தயக்கங்கள் சற்று விலகி நன்றாக பேசத்தொடங்கி இருந்தனர் .
இவனுக்கு மனதுள் குழப்பம் இருக்கத்தான் செய்தது.
" நம்மளை அடையாளம் காணாமல் தான் இப்படி பேசறானா , இல்லை easyaa எடுத்துக்கொண்டானா ?. சொல்லிவிடுவோமா ?" என யோசித்துக்கொண்டே பேசிக்கொண்டு வந்தான் .
நான் இங்க வந்து மூன்று வருடங்கள் ஆகிறது போன்ற விசாரிப்புகள் முடிந்து, அரசியல், இளையராஜா இசை என்று நிறைய பேசிக்கொண்டு வந்தார்கள்.
"எனக்கு இந்த IT பிடிக்காது , அதான் +1 போதே காமர்ஸ் குரூப் எடுத்து, B COM பண்ணிட்டு , C A படிக்க வந்துட்டேன் . எப்படித்தான் அந்த கம்ப்யூட்டர்ல நாள் எல்லாம் "code " பண்ணிட்டு இருப்பீங்களோ ?" என்றான் அவினாஷ்.
" நான் software engineer இல்லை ,இதிலும் கம்ப்யூட்டரில் தான் வேலை . ஆனால் கோடிங் கம்மிதான் . சுலபமா சொல்றதா இருந்தா நீங்கள் பேசிட்டு இருக்கும் phonela இருந்து , tablet , கம்ப்யூட்டரின் CPU , PS4 கேம்ஸ் , காரின் airbag கன்ட்ரோல் போன்ற எல்லாவற்றிற்கும் உள்ளே ஒரு "மைக்ரோசிப்" இருந்து எல்லாவற்றையும் கன்ட்ரோல் செய்யும் . அந்த "சிப்" செய்யும் வேலையில் இருக்கிறேன் ".
"Interesting .இப்படிதான் ஒரு " voltage difference " இருக்கணும், நம்மளோட "field knowledge" ல. அப்போதான் தகவல் இங்கேயும் அங்கேயும் போய் வரும் ! என்ன நான் சொல்றது சரிதானே! எனக்கும் கொஞ்சம் சயின்ஸ் தெரியும் " எனச் சிரித்தான் அவினாஷ்.
இரவு நேர உணவு முடிந்து , "குட் நைட் " சொல்லிப்படுத்தாகிவிட்டது..
இவன் மண்டையில் மட்டும் குழப்பம் இன்னும் தீரவில்லை." நல்லா பேசிட்டு இருக்கானே, நட்பு தொடரும்னு நினைக்கறேன் , ஒரு வேளை டிக்கெட் வாங்கி கொடுத்து இருக்கணுமோ ? " என அவன் மனம் குழப்பியது.
" ஒரு வேளை நம்பர் கேட்டான் என்றால் , சொல்லி விட வேண்டிதான் , அது நான் தான் என்று .தான் செய்ததில் தவறு இல்லை , அவன் கேட்டது தான் தவறு " என சமாதனம் செய்துக்கொண்டு தூங்கிப்போனான் இவன் .
மறு நாள் காலை கண் விழித்த பொழுது , அவினாஷ் பையினை மாட்டிக்கொண்டு தயாராக இருந்தான் . பூந்தமல்லியில் இறங்குவான் போல.கிண்டிக்கு கொஞ்சம் தூரம் இருப்பதால் , கண்ணை கசக்கிக்கொண்டே அவினாஷ் பக்கம் திரும்பினான் .
கொஞ்சம் இறுக்கமான முகத்துடன் , " நேற்று டிக்கெட் வாங்கும் இடத்துல கருப்பு சட்டை மாட்டிக்கொண்டு , உங்களைப் போலவே ஒருத்தனை பார்த்தேன்.டிக்கெட் வாங்கித்தர மாட்டேன்னு சொல்லிட்டான் ..
அது நீங்களா?"
இவன் : !!!??????.................
l
No comments:
Post a Comment