கவிதை என்றால் என்ன :
ச்வீட் ஸ்டாலே
ச்வீட் சாப்பிடுகிறதே
!
[ படத்தில் பார்த்து இருப்பீர்கள்.....பார்த்திபன் பேசுவதாக வரும்...]
இப்படி வார்த்தைகளை ஒடித்துப் போட்டு விட்டால் கவிதை
ஆகி விடாது என்பதை நாம் அனைவரும் ஒத்துக்கொள்வோம்...
இந்த கேள்வி வந்து போவதுதான் மனதில்.
கவிதை என்றால் என்ன?
திரைப்படம் நிறைய பார்க்கும் எனக்கு சினிமா பாடல் ஒன்று மனதில் தோன்றியது ....
குணா படத்தில் வரும் "
உன்னை நினைச்சு பார்க்கையில மனசுல கவிதை அருவி மாதிரி கொட்டுது ..
அதை எழுதனும்னு உக்காந்தா ...எழுத்துதான் .ம்ம் ...வார்த்த ...."
என்கிறதைப் போல அதீத காதலை சொல்லத்தெரியாமல் , இடைப்பட்டதாக ஒன்றை வெளிக்கொணரும் வழிதான் கவிதையோ?
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்....
[ இந்தப்பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரி ..
" இதையும் எழுதிக்கோ ....
நடுவுல மானே தேனேன்னு லாம் போட்டுக்கோ!...
என்ன ஒரு நக்கல் இது !
].
அகராதியில் தேடினால் , கீழே கொடுக்கப்பட்ட விளக்கம் வந்தது .
"
literary work in which special intensity is given to the expression of feelings and ideas by the use of distinctive style and rhythm; poems collectively or as a genre of literature.
"
உணர்சிகளின் வெளிப்பாட்டிற்கும் , கருத்து பரிமாற்றத்திற்கும் அதிக செறிவு கொடுக்கப்பட்டு , அதற்கென்று ஒரு தனிப்பாணியினையும் அழகையும் கொண்ட ஒரு வித இலக்கியம் என்று சொல்லலாமா ? [ மேற்சொல்லப்பட்டதின் தமிழாக்க முயற்சி].
இதனை மறுக்கவில்லை . ஆனால் எனக்கு மிகவும் திருப்தியாக இல்லை.
பள்ளி செல்லும் குழந்தைக்கு கவிதைக்கும் உரைநடைக்கும் என்ன வித்தியாசம் என்று விளக்கம் சொல்வீர்கனால் என்ன சொல்வீர்கள் ?
எனக்கும் இருந்தது அந்தக்கேள்வி !
இதற்க்கு விடையாக வந்தது நான் சமீபத்தில் படித்த ஒரு குழந்தைகளுக்கான புத்தகம் .
சொல்லப் போனால் நான் படித்த குழந்தைகளுக்கான புத்தகங்களில் இது என்னுடைய டாப் 5 என்று சொல்லுவேன்.
பள்ளி செல்லும் முன்/பின் மார்டின் என்னும் சிறுவனின் உலகம் பற்றியது இது.
இந்தக்கதையோட்டம் மார்டினின் எண்ண ஓட்டங்களுடன் தவ்விக்கொண்டே இருக்கும்......இயற்கையுடன் பிணைந்து அவனது கற்பனைகள் ஒரு குழந்தையின் உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது .
முதல் நாள் பள்ளி செல்கிறான்....அங்கே வகுப்பறையில் அவனது ஆசிரியர் கரும்பலகையின் முன் கைகளை வீசி வீசி எதையோ பேசுகின்றார்கள்...
கரும்பலகை காலியாக இருக்கிறது..
மார்டின் மனது சிறிது நேரம் கழித்து ,
அங்கே கைகளை ஆட்டி ஆட்டி பேசும் அவனது ஆசிரியைப்பார்கிறான் ...
தன் சிறகுகளை விரித்து பறக்கும் ஒரு :"sea gull " பறவையைபோல் காட்சி அளிக்கிறது அவனுக்கு....அப்படியே காட்சி விரிந்து , அந்த கரும் பலகைக்கு பதில் அங்கே அந்த " sea gull " பறவை ஒரு ஆற்றின் மீது பறப்பதாக தோன்றுகிறது அவனுக்கு.....அந்த ஆற்றைக்கனவு கண்டதும் ,தன் அம்மாவுடன் அந்த ஆற்றிற்கு சென்ற சுற்றுலா நியாபகம் வருகிறது....
" எவ்வளவு அழகா இருந்தது அந்தக்காட்சி.....இப்படி வகுப்பினுள் அடைபட்டு இருக்க வேண்டாமே..வெளியே போய் ஆற்றின் முன் படிக்கலாமே.....?
அந்த ஆறு எவ்வளவு அழகு.....அதில் ஓடும் மீன்களும்......சில சமயம் சிரிக்கவும் செய்யும் ஆறு....தன் தோழி எதினாவின் சிரிப்பைப்போல....
அவள் சிரிப்பு ஒரு பட்டாம்பூச்சியின் சிரிப்பைப்போலவும் இருக்கும்....
ஒரு நாள் நான் ஒரு பட்டாம்பூச்சியை பிடித்தே விட்டேன்.....
"
இப்படி அவன் கற்பனை அவனை எங்கோ அழைத்துச் செல்கிறது....
இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால் அவன் கற்பனை எப்படி தொடர்ச்சியாக தாவித்தாவி போகிறது என்று....அதுதான் அவர்கள் உலகம்.
திடீர் என்று வகுப்பிற்குள் திரும்பி வருகிறான் கற்பனை விட்டு....
" எவ்வளவு "" bore " அடிக்கிறது இந்த "ABC ".....அந்த நாட்களையும் , காற்றையும் , மழையையும் நான் " மிஸ்" செய்கிறேன்.....
மழை...ஆஹா மழை....
நான் ஒரு நாள் படம் வரைந்துக்கொண்டு இருந்தேன்..அப்பொழுது இடியும் மின்னலுடன் மழை பெய்தது...பயத்தில் நான் நடுங்கினேன்...கொஞ்சம் தண்ணீர் கொட்டி நான் வரைந்த படம் பிசகி வண்ணங்கள் வெளியே வந்து விட்டது....."
தன் அம்மாவிடம் ,
"
மேலே வானத்தில் மழை காரணமாக இப்படித்தான் அம்மா ....வானத்தில் நிறங்கள் தெளித்து கொஞ்சம் பிசகி இருக்கிறது..."
என்று சொல்கிறான்..
" கண்ணா ...நீ சொன்னது தாண்டா கவிதை....நான் இதை என் கவிதைப்புத்தகத்தில் குறித்து வைத்துக்கொள்கிறேன் "...
[ டேய் உன்னை படம் வரையச்சொன்னால் , தரை எல்லாம் color சிந்தி நாசம் பண்ணி வச்சு இருக்கியேன்னு திட்டப்படாது! என்று சொல்ல வருகிறார் போலும் ஆசிரியர் ]
" அம்மா இப்படிதான் நிறைய கவிதை எழுதி வைத்து இருக்கிறார்கள் ...."
" அம்மா கவிதைன்னா என்ன"..
" அதுவாடா கண்ணா....கவிதைகள் நம் நினைவில் படங்கள் வரையும்...மனதில் பாட்டுப் பாடும்...
நீ கொஞ்சம் நேரம் முன்ன சொன்னதுதான் கவிதை......"
அம்மா இன்னும் சொன்னார்கள்.....
"கவிதை நம் மனதில் இருக்கும் வலியினையும் [pain ] ,அழகானவற்றையும் அல்லது உனக்கு புரியாத ஒன்றையும் வார்த்தைகளாக மாற்றும் ஒரு வழி "........
" முழுசா புரியலை அம்மா "
"சொல்கிறேன் கேள் .....நிறைய பேர் கவிதை அல்ப்பம் [ "SILLY "] என்று நினைப்பார்கள்......ஆனா
அவை முத்தங்கள் போன்றது....சின்ன சின்ன அர்த்தம் இல்லாத ஆனால் அழகானவைகள் ..ஆனால் அதற்கு மதிப்பே இல்லை ...."
" அப்படியா...கவிதைன்ன முத்தங்களா.....அப்போ எனக்கு பிடுக்குமே...!"
இப்படி போய்க்கொண்டே இருக்கிறது இந்த கதை..
கவிதைக்கு இதை விட என்ன விளக்கம் வேண்டும்!
இதன் ஆசிரியர் " martine audet " என்பவருக்கு என் சலாம் !
புத்தகத்தின் பெயர் " MARTIN on the moon ".
இப்படி பிள்ளை கேட்கும் கேள்விக்கு பல நேரம் பதில் சொல்ல முடிவதில்லை......ஆனால் கோபப்படாமல் பொறுமையாக பதில் சொல்லியே ஆக வேண்டும்,,,,இரண்டு மூன்று முறை கோவித்துக்கொண்டால் , கேள்வி கேட்கக்கூடாது என்று அவர்கள் மனதும் உலகமும் சுருங்கி விட அதிக வாய்ப்புண்டு..எனக்கும்தான் இதை நான் திரும்ப சொல்லிக்கொள்கிறேன்...
அவர்கள் கற்பனை சக்தியினை பெருக்க நாம் துணை இருக்கவேண்டும் ...
வேறு யாரிடம் கேட்க முடியும்..
நான் அப்பா அம்மாவை கேட்ட சிலவை இங்கே..
" எப்படிம்மா பொறந்தேன் நான்....
அக்கா /அம்மா : " நம்ம வீட்டுக்கு வர்ற ஆப்பிள் காரிகிட்ட இருந்து வாங்கினோம் உன்னை"
இன்னொன்னு "extrava" வாங்கி இருக்க வேண்டிதான்னு இப்போ கேக்கத்தோணுது !எனக்கு தம்பியோ தங்கையோ....
இன்னொரு நாள் , அலைச்சலுடன் வந்த அப்பா கைக்கடிகாரம் கழட்டிக்கொண்டு இருந்தார்கள்...
" எப்படிப்பா english புரிஞ்சுக்கறது.."
" இங்கிலீஷ் வார்த்தைய , உன் மூளை தமிழில் translate செய்யும் , அப்படி புரிஞ்சுப்ப "
"நமக்கு ok பா .....மத்தவங்க எல்லோருக்கும் தமிழ் தெரிஞ்சா தான இந்த translation நடந்து புரிய முடியும்....அவங்க எல்லாம் என்ன செய்வாங்க?".
அப்பா ஏதோ யோசித்து விட்டு அமைதியாக இருந்து விட்டார்கள்.....
நானே இப்படி கேட்டு இருந்தாதால் , என் மகள் என்னவெலாம் கேக்க போகிறாள் என்று தயார் நிலையில் இருக்கிறேன்!
இப்போவே என்னைத் திருப்பி படம் பார்த்து கதை கேட்கிறாள் ...நாளை என்ன கேப்பானு தெரியலை..
ஆனா இருக்கவே இருக்கு ஒரு technique ...நம்ம கல்லூரிகளிலும் செமினார்களிலும் கேட்டு வாங்கிக்கொண்டது தான்..
"VERY good question ....I will get back to you in person "!....
ஒரு பக்கம் அது சிரிப்பூடுவதாக இருந்தாலும், நமக்குத் தெரியவில்லை என்று கோபப்படுவதை விட இது நல்லது.பொறுமையாக விடை தேடி அவர்களுக்கு அதன் பதில் சொல்ல வேண்டும் , அல்லது சிந்திக்க வைக்க வேண்டும்.அவர்கள் படைப்பாற்றல் நசுக்கப்படாது . அதை விட முக்கியம் நம்மிடம் அவர்களுக்கு நம்பிக்கை வரும் , எதையும் கேட்கலாம் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று.
நாமும் புதிதாக சிலவற்றை தெரிந்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் என்று கூட பார்க்கலாம் அல்லது மூளை நமதுப்போகாம இருக்க உதவும்!
அன்புடன்,
செம்மல் க .
Super Semmal...loved the flow...hals
ReplyDelete