Sunday, November 9, 2014

இந்தியச்சுற்றுலா : பாதுகாப்பும் சுகாதாரமும்

சுற்றுலா  சென்றால் உயிரோடு வருவோமா ?

சமீபத்தில் சாய் பாபா ஆசிரமத்தில் தங்கி  இருந்த ஒரு ஆஸ்திரேலியா நாட்டு பாட்டியினை காணவில்லை. "embassy"  மூலமாக இரண்டு மாதங்களுக்கு பிறகு கண்டுபிடித்ததில் , 20000 ரூபாய்க்காக [ அது கோடியாக கூட  இருக்கட்டும் ] , கொலை செய்யப்பட்டது தெரியவந்து  உள்ளது. செய்தது அந்தத்  தங்கும் இடத்தின் காவலாளி [ watchman ].வெளி நாட்டில்  இருந்து  வரும் 75 வயது பாட்டியினையும் விட்டு  வைக்க வில்லை நம்மவர்கள்.

ஆக்ரா அருகில் சில வெளிநாட்டவர் சுற்றுலா வந்த பொழுது , குடும்பத்துடன் தாக்கப்பட்டனர்  சென்ற வருடம். சில நாடுகளில் இந்திய  சுற்றுலா செல்வது பாதுகாப்பு இல்லை என அறிவிற்கும் அளவிற்கு கொண்டு சென்று  உள்ளது இந்த  மாதிரிச்  செயல்கள்.

இன்னொரு  சம்பவம் . நடந்து  நிறைய  வருடங்கள்  ஆகிவிட்டது.. ஆனால்  மறக்க முடியாது. முக்கிய பத்திரிக்கை ஒன்றின்  முன் பக்கச்செய்தியாக வந்து  இருந்தது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மகாபலிபுரம் செல்லவேண்டும்  என்று ஒரு வெளிநாட்டவர் கட்டணம் பேசியுள்ளார் . ஆட்டோவிலேயே மகாபலிபுரம் வந்து சேர்ந்து  இருக்கிறார் .பேசியபடி 500 Rs  நீட்டியவருக்கு
அதிர்ச்சி .

"அய்ய  , 500 ரூபா  எவனுக்கு  வேணும். 500 டாலர்ஸ்  கொடு துரை  "...

இது நடந்து  இருபது வருடம்  இருக்கும். வெளிநாட்டவருக்கும்  அதை தலை சுற்றும் பணம் தான். மாத  சம்பளமே 3 அல்லது  நான்கு  ஆயிரம்  இருக்கலாம் அப்பொழுது. ஆடோககாரர்கள் செய்த கலாட்டாவினில் பணத்தைக்கட்டிவிட்டு ,வந்த இடத்தில் முதல் அனுபவமே மோசமாக  இருக்க  , நேராக சென்று " embassy " யில்  புகார் கொடுத்து விட்டார் .

இதனை அவர்கள் நாட்டு " மீடியா"  சும்மா  விட்டு இருக்காது.


என்ன  விதமான கண்ணோட்டத்தை கொடுத்து  இருக்கிறோம்  நாம்????

சின்ன நாடுகள் பல பெரிய அளவிற்கு பார்க்கும் இடம் இல்லையென்றாலும்  ,
செயற்கை முறையில் , "theme  parks " மற்றும் இதர வசதிகள்  மூலமாக  சுற்றுலா வருமானத்தை பெருக்குகின்றன. அரசாங்கமும் சுற்றுலாத்துறை வருமானத்தை ஒரு தீவிரமான அங்கமாக எடுத்துகொள்ள வில்லை  என்றுதான் தோன்றுகிறது . முக்கியமான சுற்றுலா இடங்களில்  கூட சுகாதாரம்  இல்லை.நம் நாட்டை  வந்து பார்த்துச்செல்வோர் வெளியே சொல்லும்  நற்செய்திதான் [ word  of  mouth ] . அடுத்தவர்களை வரத்தூண்டும்.


செயற்கையாக யார் வேண்டுமானாலும் " malls " மற்றும்  தீம்  பார்க்குகளும் கட்டலாம் .

தாஜ்மஹாலின் காதலையும், தஞ்சைப்பெரியக் கோவிலின் கம்பீரத்தையும் ,
ஹிமாச்சல பிரதேசத்தின் மலைக் காட்சிகள் கொடுக்கும் ரம்யத்தையும் , நெல்லை காந்திமதி அம்மன் நெல்லையப்பர் கோவிலில் உள்ள சப்தஸ்வர  தூண்களின் இசையினையும்  .மெரீனா பீச்சின்  கரையோர அழகையும் அலையின் பேச்சையும், ஆழப்புழாவின் " back  water " படகு வீடுகளும் , குற்றாலம் , "jog  falls " போன்ற நீர்வீழ்ச்சிகளின் ரீங்காரத்தையும் , வைரமுத்து  அவர்களின் கவிதை வரிகள் சொல்வது போல்  "புது வெள்ளை மழையாக " காட்சி தரும் இமயத்தையும் ,  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு   தன்  சிற்பங்கள் வாயிலாக கூட்டிப்போகும் மாமல்லபுரத்தையும் ,  அழகிய  கோவில் சிற்பங்கள் நிரம்பி வழியும்  ஹொய்சாலா அரசாட்சியின் 800 வருட கலாசாரத்தைப்  பறைச்சாற்றும் " ஹளபேடு " கோவில்களையும்   , ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற கோட்டைகளையும் ,
அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கசெயும் "குத்துப்  மினாரையும்"  , மொகலாய ஆட்சியின் சாட்சியாக  நிற்கும் கோட்டைகளையும் , மைசூர் அரண்மனையின் விசாலத்தையும் செழுமையினையும் . அபூர்வ  விலங்கினங்கள் பலவற்றையும் கொண்ட காடுகளையும் தன்வசம் கொண்டது  இந்தியா .

மேற் சொன்ன  பட்டியல் சீனப்பெருஞ்சுவர் போல  இன்னும்  நீண்டுக்கொண்டே போகும் .பார்த்து முடிக்க  வெளிநாட்டவருக்கு எத்தனை முறை இந்தியா வர வேண்டி  இருக்கும் ?!!


இதனை  நான் சொல்லக்காரணம் உண்டு.
மேல நான் சொன்ன பட்டியல் போல   எனக்குத்  தெரிந்து எந்த நாட்டிலும் கிடையாது. அதாவது ,இவை சில நாடுகளில் தனித்தனியே  கிடைக்கலாம்  ....
ஆன்மீகமும் , மலையும்   , கடலும் , காடுகளும் , பனியும் , வெயிலும் , கலாச்சாராமும் , பழமையும்  ஒரே இடத்தில கிடைக்காது .இருந்தால்  சொல்லுங்கள்.

இவை அனைத்தையும்  வைத்துக்கொண்டும் , சிங்கப்பூர்  , துபாய்  போன்ற நாடுகள் ஈட்டும வருவாய்  கூட  நாம்  ஈட்டவில்லை என்பது வருத்தம்தான்.


ஒரு சிறிய புள்ளி விவரம்:

துபையின் சுற்றுலா வருமானம்:

27 பில்லியன் டாலர்கள் .

இந்தியா :

18.45 பில்லியன் டாலர்கள் 

அராசங்கம் மட்டும் அல்ல. சுற்றுலா என்பது பலருக்கு வாழ்வாதராமாக இருக்கிறது  , இருக்கும்.

தமிழ் நாட்டு கால்கள் நெய்த பட்டுத்துணியும்   , மணிப்பூர் மேகாலயாவின்  விரல்களும்  செதுக்கிய  கை வினைப்பொருட்களும்  வாங்க பல  நாட்டவர் காத்துக்கிடக்கின்றனர் .

மெரினா பீச்சில் சூடாக பஜ்ஜி விப்பவர் முதல், கன்னியாகுமரியின்  கடல் ஓரத்தில் கிழிஞ்சல்கள் விற்கும்  பாட்டிக்கும் , கொடைக்கானலில் "cycle "
வாடகை  விட்டு பொழப்பை நடத்தும் கடைக்காரருக்கும் , காஷ்மீரில் படுகு சவாரி செய்விக்கும்  தாத்தா விற்கும் ,  5 star  ஹோட்டலில் பரிமாறும்  சர்வர்  வரை   பலரின் வாழ்வாதாரம் இந்த  சுற்றுலாதான்.

இது  வரை எதையும் செய்ய வில்லையா  என்கின்ற  கேள்வியும் வரும் .
பதில் இருக்கிறது  அதற்கும். நல்ல சுகாதாரமும்  , வசதியும் , " hassle  free " பயண அனுபவத்தையும் கொடுக்கும் 5 ஸ்டார் தங்குமிடங்களும் , அதைப்போன்ற  " travel  agency " களும்  இருக்கத்தான் செய்கின்றன .
ஆனால் அவை  வெளிநாட்டு மக்களுக்கும் அவர்கள்  நாட்டு பண மதிப்பிலும்
அதிகம்  தான். நாம் பார்க்கும்  வெளிநாட்டவர் கூட்டம்  பெரும்பாலும்  அங்கு  உள்ள பணக்காரர்களாகத்தான் இருக்கக்கூடும் . வெளி நாட்டில் வாழும்
நடுத்தர மக்களும் நிறைய இழுக்க நம்முடைய  அரசாங்கம் தலை  இட்டு மாற்றம் கொண்டு வந்தால் தான் முடியும்.

சுகாதாரமும்  , சரியான கழிப்பிடமும்  , கொடுத்த  காசிற்கு  நம்மை ஏமாற்ற மாட்டார்கள்  என்ற நம்பிக்கையும்  , இவை எல்லாவற்றையும் விட வந்து சென்றால் உயிரும உடைமையும் பாதுகாக்கப்படும்  என்ற  உணர்வும் கொடுப்பது  நமது அரசாங்கத்தின் மட்டும்  அல்ல  , அனைவரின் பங்களிப்பும் அவசியம்.

சரி அரசாங்கம்  என்ன செய்யலாம்.

அமெரிக்காவில் உள்ள "grand  canyon "   இடத்திற்கு சென்று வந்த அனுபவம்  உண்டு  ஒருமுறை....அத்தனை சிறந்த  இடம் என்று சொல்ல முடியாது.
" trekking " போவோருக்கு அதிகம் பிடித்தமாக   இருக்கும்.
ஆனால்  அதற்கு வரும் கூட்டம் தலை சுற்றும் அளவிற்கு  இருக்கிறது.
எல்லாம் "மார்க்கெட்டிங் " மாயாஜாலம்.

ஒரு சின்ன உதாரணம் தருகிறேன் .
அந்த  இடத்தை  சுற்றிப்பார்க்க , ஹெலிகாப்ட்டர் சவாரி ஏற்பாடு செய்து உள்ளன சில தனியார்  நிறுவனங்கள்.இது அந்த இடத்தை இன்னும் சிறப்பாக்குகிறது. இது தனியார்  வசம்  இருந்தாலும் , சுற்றுலா வருகையினை கூட்டிட வேண்டி செய்யப்பட்ட ஒரு முயற்சி ஆகும்.
அரசாங்க  ஒத்துழைப்பு வேண்டும்  இதற்கும் வான் வழி பயணம்  என்பதால்.
மேலும்  அழகிய " view  points " கட்டி  வைத்து  இருக்கிறார்கள் . இது அரசாங்கத்தின்  வேலை தான்.மற்றும்  குப்பை இல்லாம் இடத்தை  அழாக பராமரிக்கிறார்கள் . படு சவாரியும்  உண்டு.

" Trekking " செல்வோருக்கு சரியான வழிகாட்டு  முறைகளும் பாதுகாப்பு  ஏற்பாடுகளும் அரசாங்கம் பார்த்துக்கொள்கிறது.இது ஒரு முக்கியமான  காரணம்.

இவை எல்லாம்  சேர்ந்து இந்த இடத்தை இன்னும்  சிறப்பான சுற்றுலாத்தலமாக மாற்றி  இருக்கின்றது .

பொது இடங்களில் துப்பாமலும் ,  மற்ற அசிங்கங்கள் செய்யாமலும் ,  இருப்பது பொது மக்களின் கடமை. இவை  அனைத்தையும் விட பாதுகாப்பு அளிப்பதிலும் பொது  மக்களின் பங்கும் உண்டு .

சில வருடங்கள்  முன்பு சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த பயணத்தின் முடிவில்  சென்னை விமான நிலையத்தில் கண்டது கீழ வரும்  காட்சி.

தூரத்தில் உறவினர்  கை  காட்டிக்கொண்டு  இருக்க , பிரிந்த  சோகம்  களைந்து பெட்டி   படுக்கைகளை [ சாமான்களை!]  சுருட்டிக்கொண்டு வேகமா  ஓடி வந்த ஒருவர்,

" ஒரு நிமிஷம் வந்துடறேன் " என்று சொல்லியவாறே.
விமான நிலையத்தை ஒட்டிய நடைபாதை மீது துப்பிவிட்டு வந்து,
" எத்தனை நாட்கள் ஆயிற்று " என்கிறார் ...........

No comments:

Post a Comment