Friday, April 12, 2024

Porting to Childhood - Travel Memoirs of Meghalaya and Kaziranga

 I wandered lonely as a cloud is a poem by WIllian Wordsworth....

"I wandered lonely as a cloud" is a poem by William Wordsworth....

I will tell why I am starting the blog with these lines in the end...

The trip surpassed all the expectations that I had ,Curated stays , off beat locations , carefully selected places to eat and the cream of everything being the Camp/Trip leader Aryan .We were folks with diff backgrounds from across INDIA and he weaved us together like a nice piece of kancheepuram SIlk saree or should I say a custom made shawl from shillong or Assam! More than the work ethics which we rarely see these days , he was himself , wanted to ensure we all enjoyed and lived the moment !

We played seven stones on the banks of a river , camped near the bangladesh border in mayankot village with no power supply and only moon light , hiked in to a no man's land that had a personal waterfalls for us and a minus degree green pool waiting to be dived in .......Became modern day tarzaan in the living roots bridges greenery..Had home made food from the local community near a beautiful waterfalls, probably the best location to have food by all means ....

Many of the mornings were unexplainable , sitting in front of a huge waterfalls , melody ringing in to the ears with birds chipring in parallel....mind was confused in joyful ways which of the beautiful sounds to relish....lovely confusion though...Hours passed by with minimal thoughts amidst the beautiful sunrises ...
Oh man....I have missed living life is what I realized....

on the other side of the serenity experienced the best Zipline of my life between two mountain gorges , the longest one with supersonic speed!

The experience of the trip could not be translated in to words!
From beautiful serene waterfalls to living root bridges to serene landscapes to deeper caves , every day we had experiences which will embellish my memories for ever .

The poem from wordsworth ends as below,
"For oft, when on my couch I lie ,
In vacant or in pensive mood,
They flash upon that inward eye ,
Which is the bliss of solitude;
And then my heart with pleasure fills,
And dances with the daffodils"

Those were my reflections on the last day of my trip.
For wordsworth it was the daffodils..For me at that moment and for many more moments, it would be the memories from the trip including the company with whom we were ported to childhood days in many ways !























Friday, June 2, 2023

 NAMESAKE: The Story of my Name ....

" Whats in a Rose that we call a Rose".
This is a quote from William Shakespeare's Romio and Juliet.
The statement is to convey a message , name doesn't matter..i.e,
""A rose by any other name would smell as sweet"
Well ,ask me , Name Does Matter!
With an almost Unique name " SEMMAL " in a more than 100Billion+ Population in India or rather the Universe,
In which case I don't know the count as there might be some aliens out there too [ The last time I googled , there was one other guy in my name , yet to meet one in my life though!] .
Many of my friends are wondering What does it mean.
Lets go back to early 1980's for the same.
It was a vibrant day. A couple went to admit their kid in a small school in the suburbs of Chennai. The Principal asked the Father to fill the forms for the nomenclature!
Well , I call it nomenclature as that's how our school system categorizes everything ! From Students to Botanical / Zoological names! and just entities to make money either way .That's another topic.
Coming back to our Story , The Father filled in "Semmal "
The Principal reads the name and her eye brows went in different angles.
The proud Father explains , It is Semmal , not " Samuel" as it was initially read as Samuel [ Being a Christian School they probably perceived that way and may be it was misspelt!].
Semmal means , " Exceller" or " Somone who excels".
Well at least my Father Dreamt of it!
The mother was taken for surprise. Apparently , Semmal was Born after 9 years after his Sister. The mother prayed Lord Balaji and wanted his son to be christened after him.
My appa was a great negotiator. How about this...
" In school and for the world , He is Semmal , and for you and family , it is Balaji".
Amma took the deal.
So , It usually goes like this ,
" Semmal , Appa pesaren " when my appa calls ...
or a long crooning " Balajeeeeeeeeee" From Thatha when he wants me to open the door or a " Balagggiii..." when my amma was irritated for my mischievousness..
* Time passed by , The name became a icebreaker or Conversation Starter as always, wherever I go.
They start with " Samuel " or sometimes to the Worst case of " Semmann" meaning red sand. Thank God my appa did not hear it from someone.
I was usually patient and persistent to correct it ,but sometimes I used to lose my patience.
* One of those days when I lost patience , happened to be the day when appa Overheard me. I think it was around the time when I started working after college.
I was talking to some call center person and was trying to register my name for a credit Card I suppose. The repeated , need to say corrections on my spelling made me irksome over the call center person . Feel sorry about that now.
Looks like appa was so frustrated when he Overheard the conversation , I still remember vividly , he kept a green letter on my desk. It outlined a clear process how to Change my name in the gazette and in the Certificates.
He was upset and talked to my amma about it too.
I told amma that , I am and always will be proud of my name , I was shouting for a different reason.
Wish I had told that to appa on face. Life's like that...or thats how I pacify myself now.
He had reasons for it.. It was not just a random name or from name books . He was an ardent fan of tamil Literature and took the reference for the name from Sangam Tamil literature. Infact he had contacted linguists in terms of Framing the name as " CHEmmal" or "SEmmal". He was not a great fan of his name and wanted his son's name to have an essence of hope and life in it. I very well knew it too....
The name as expected was not changed. Time wheel moved on....
* I came to US for higher studies . The call center story started again.
But I think this time it was not because of my name , as any name " Gangadharan" or " Ram " or " adusupulli" it all means the same to them.

Thursday, December 28, 2017

அருவி ஒரு அனுபவம் .

அருவியில்  குளிக்கும்  அனுபவத்தை  எப்படி வார்த்தைகளால்  விவரிக்க  முடியும் ...!

தமிழ்  தெரியாத என்னுடைய  நண்பர்  ஒருவரை  அழைத்துப்போனேன் .முதலில்  கொஞ்சம்  வசனங்களை  மொழிபெயர்த்தேன்  , அதன்பின்  இந்த  கதைக்கு  மொழி  தேவை  இல்லையென்று  சொல்லிவிட்டார் .
வெளியே  வரும்  போது  , கண்  கலங்கி  இருந்தது  அவருக்கும்  , எனக்கும் .

நாம்  வாழும்   வாழ்க்கையின்  பின்  இருக்கும்  வணிக  அரசியலின்  தாக்கத்தைச் சுட்டிக்காட்டி  அவள்  பேசும்  ஒரு  நீண்ட வசனம்  , " அட  ச ..இந்த  வாழ்க்கை  இவ்ளோதானா  , இதற்குத்தானா இவ்வளவு  ஓட்டம்  " என்பதை   பொட்டில்  அறைகிறது ..

"Man is born free but everywhere he is in chains" என்கின்ற ரூசோவின்  [ ROUSSEAU ]  வார்த்தைகளின்  வலியினை , அந்த  வசனம்  உணரச்செய்கிறது .
இன்னொரு  பக்கம்  கிடைத்த  இந்த  வாழ்க்கை  ஒவ்வொரு   நாளும்  ஒரு  பொக்கிஷம்  , என்னத்தையோ  தேடி  இருக்கும்  சந்தோஷங்களை  தொலைக்காதீர்கள்  , சின்னச்  சின்ன  சந்தோஷங்களில்  உங்கள்  வாழ்வை  நனைத்திடுங்கள்  என்று  அருவியும்  , அவள்  தோழியும்
சொல்லிப்போகிறார்கள் ...

எமிலி  வாழ்ந்து  இருக்கிறாள் ! ..அவள்  யாரென்பதை  பார்த்துத் தெரிந்துக்கொள்ளுங்கள் .

அந்த  அப்பா  மகளின்  அன்னியோன்யம்,  அவள்  வளர்ந்தபின்  , அவளை  நம்பாமல்  போகும்  ஒரு  சூழ்நிலையில்  , " அப்பா என்னை  நம்புங்கள் " என்று  அவள்  கதறுவது  , அவள்  சிறுவயதில்  மகளுக்கு  பிடிக்கவில்லையென்று  தன்னுடைய  புகைபிடிக்கும்  பழக்கத்தை  விடும்  ஒரு அதீத  அன்பு  கொண்ட அப்பாவால்  இப்படியொரு பரிமாணம்  எடுக்க  முடியுமாவென  நம்மை அதிர  வைக்கிறது ...அந்த  முரணே  நம்  சமூகத்தின் வெளிச்சம்.

" மற்றவர்  என்னச்சொல்வர் " என்று  நினைத்து  பயந்தே  , நம்முடைய  வாழ்வினை  எவ்வளவு  சிக்கலாக்கி  சிதைத்து  , பொய்யான  வாழ்க்கையினை  வாழ்ந்து  தொலைக்க  வைக்கிறது என்று, நம்  கலாச்சாரத்தின்  ஒரு  முக்கிய  கறுப்புப் பக்கத்தை நம்முன்  எடுத்து வைக்கிறாள்  அருவி.

நீ கடைசியாக  எப்பொழுது  அழுதாய் என்று  அந்தக்காமுகனிடம்   அவள்  கேட்பதும்  , உயிர்பயத்துடன்  அவன்  ஒரு  கதைசொல்லிகிறான் .
இரண்டு  தோசைகளின்  இடையே  வைத்துச்செய்யப்படும்  ஒரு  வெல்லத்தால் செய்யப்பட்ட  பண்டமும்  , அதைச்செய்துக்கொடுத்த அந்தப்  பாட்டியின்    இறப்பின்பிறகு  , ஒரு   வெல்ல  sandwich  போல  விறகின்  இடையே  அவளைவைத்து எரியூட்டிய      நிகழ்வும்  ஒன்று போலத்தோன்றியத்தின்  விளைவே அவன்  கடைசியாக  அழுததன்  காரணம்  என  அவன்  சொல்லியது  , அன்பு எல்லாவற்றையும்  வெல்லும்  என்பதின்   சாட்சி .

அவளுடன்  தவறாக  நடந்துக்கொண்ட  மனிதர்களை அவள்  மன்னிப்பு  மட்டும்  கேட்கச்சொல்லுவது   என்னால்  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை ...மற்றபடி  அருவி பார்த்துவிட்டு  வந்தபின்  , வீட்டுக்கு  சீக்கிரமாக  வந்து  , பெண்  குழந்தைகளை  இறுக்கி ,பத்திரமாக   ஒன்றும்  சொல்லாமல்  அணைத்துகொள்ளத்தூண்டிய ஒரு  அனுபவம் ...

எல்லோரையும்  அருவி  அன்பால்  அறைந்து விட்டுச்செல்வாள்  தவறாமல் ....


Friday, October 13, 2017

சிறுகதை : புலப்படுதலுக்கு அப்பால் [நிறைவுப் பகுதி ]


இதுல  இந்த  சம்பளம்  இல்லாத  இந்த  வேலைய  விட்டுப்  போனபோது  பிரெண்ட்ஸை  நினைத்துதான்  இன்னும்  வருத்தம் ...ஊருக்கு  திரும்பி  பஸ்ல போறப்போ கூட அதைத்தான்  நினைச்சுட்டே  போனேன் .
நான்  சொன்ன  போல  , நான்  காலேஜ்  டேஸ்ல  கம்ப்யூட்டர்  எல்லாம்  படிக்கலை ...அதுல  நான்  கம்ப்யூட்டர்  instructor  வேலைக்கு  போனது  எப்படினு  உனக்குத் தோணியிருக்கும் ..
அன்னைக்கு  கிளாஸ்  என்ன  எடுக்கணும்னு  எனக்கு  ரூம்ல  பிரெண்ட்ஸ்  கோச்சிங்  பண்ணி  அனுப்பிடுவாங்க ..அப்புறம்  சி நா  என்ன  , சி + + பிளஸ் நா  என்ன    ,  z  + + வரைக்கும் !  ஒரு  வழி  பார்த்தாச்சு . ஊருக்குத்  திரும்பிப்போகும்  போகும்  போதும்  கூட  ,  பிரெண்ட்ஸ்  பின்னாடி  இருக்காங்கங்கற  நம்பிக்கை  கூட  இருந்ததால  ரொம்ப ஹோப்  எல்லாம்  இழக்கல..

ஆனால்  , சினிமாவில்  பாட்டு  பாட  வேண்டும்ங்கிற கனவு  கொஞ்சம்  மாசம் முதலில்  இருந்தது  , சம்பாதிக்காம எத்தனை  மாசம்  இருக்கன்னு  , அதையும்  சேர்த்து  புதைச்சுட்டே  ஊருக்குத்  திரும்பிப்போனேன் ..அந்த  வலி  போகல  எப்போதும் ......

"யார்  யாரோ  பாடறாங்கட ....உன் குரலுக்கு  எல்லாம்  கட்டாயம்  சான்ஸ்  கிடைச்சு இருக்கணும் ..சரி  விடு .. எனக்குத்  தெரிந்து  உன்  குரலின்  ஸ்கேலை  நீ  முழுசா  explore  செய்யலைன்னுதான்  சொல்லுவேன் ... அழகிய  லைலாவோட  குதூகலம்  கொடுக்கக்கூடிய  உன்குரல்  ,  சமீபத்தில்  நீ
"நிற்பதுவே  நடப்பதுவே  " பாடினப்போதுதான் முக்கால்  ரவுண்டு வந்திருக்குன்னு  சொல்லுவேன் ...இன்னும்  நிறைய  போகலாம் ..குறிப்பா  அருண்மொழினு  ஒரு  சிங்கர்  இருக்காரு  , அவரோட  பாட்டு  உனக்கு  நல்ல  செட்  ஆகும் ....அடுத்த  முறை வர்ற போது  , " இனி  நான்  என்பது  நீ  அல்லவோ  தேவ  தேவா " , அந்தப்பாட்டை  நீ  பிராக்டிஸ்  செஞ்சுட்டு  வா ..இதே  மலையில்  , இந்த  மான்  , அணில்  கேக்க  நாம  ரெகார்ட்  பண்றோம்  ..சரியா ???"


என்னமோ  சொல்ற  போ .. இப்போல்லாம்  நான்  பஜன்ஸ்  பாடறதோட  சரி ...என்  wife க்கு  கூட  நான்  இவ்ளோ  பாடுவேன்னு  தெரியாது ...

நீ  அனுமார்டா  உன்  பவர்  எனக்குத் தெரியல  அவ்ளோதான்!


மேலே  போகும்  பாதைகள்  பிரிந்தன  , எங்கேபோகலாம்  என்று  முடிவெடுக்க  கடிகாரத்தைப் பார்த்தேன் ...கால  பகவான்  வழி காட்டினான் .
இந்த  வழியில்  போவோம்  , உனக்கு  return  பிளைட்டுக்கு  டைம்  ஆகிட்டு  இருக்கு . இன்னும்  ரெண்டு  நாள்  இருக்கிறபோல  வந்து  இருக்கணும்  நீ ...

காலபகவான்  நண்பனுக்கு  வழிகாட்டியிருக்கிறான் ....
அந்தப்பாதை பிடித்து  மேலே  போகையில்  , அவனுடைய  வாழ்க்கைப் பாதையின்  அடுத்தபடியினில் என்ன  நடந்தது  எனக்கேட்க  ஆவலாயிருந்தது ....

ஊருக்குபோயாச்சு .....அப்புறம்  அங்கேயிருந்து ,   சரி  சென்னை  பார்த்தாச்சு  , இப்போ  பெங்களூர்  போய்   ட்ரை பண்ணுவோம்னு   குமார்  வீட்டுக்கு  போனேன் . அங்கேயும்  தேடிட்டு  ஒன்னும்  கிடைக்காம  திரும்ப  ஊருக்கே  போய்ட்டேன் .

குமார்   , நான்  ,  அப்புறம்  உனக்குத் தெரியாத இன்னொரு  பிரெண்ட்  மூணு  பேரும்  ஊர்ல  லாங்  டைம்  பிரெண்ட்ஸ் ... வாழ்க்கைல  நான்  எப்போலாம்  கஷ்டத்திலோ  , குழப்பதிலோ  , தப்பான  ட்ராக்  எடுக்கும்  போதும்  , குமார்   வந்துடுவான் ...இந்த  முறை  அந்த  இன்னொரு  பிரெண்ட் ..அவன்  ஆட்டோ  ஓட்டுறான்  எங்க ஊருல ...
ஒரு  நாள்   , " டேய்  ஆட்டோல  போறப்போ  ,ஒரு  சேட்டு  நாக்பூரில் இருந்து  வந்து நம்ம  ஊரில்  ரோடு  போட்டுட்டு  இருக்காண்டா .நீயேன்   வெளியூரில்  போய்  தேடுற  , இங்கேயே   ட்ரை  பண்ணவேண்டிதானே "  எனக்கேட்டான் .

இது  என்னோட  core  துறை . construction .  சரி  சாப்ட்வேர் சரியா வரலை  , இதை  ட்ரை  பண்ணிப்பார்ப்போம்னு  போய்  அப்ளை  பண்ணினேன் .
பாலசுப்ரமணியன்னு  ஒருத்தர்  தான்  அங்கே மேனேஜர் . மறக்கவே  முடியாது  அந்த  நாளை.

" எவ்ளோ  பா  சம்பளம்  எதிர்பார்க்குற ?

" ஒரு  4000 சார் "

" ஹ்ம்ம் ...நீ தங்கற  இடம்  கேக்கல  , உள்ளூர்  பய்யன் ...ஹொவ் அபௌட்  4500 " என்றார் ....

வாழ்க்கைல  இப்படி  நல்ல  மனிதர்கள்  அங்க  அங்க  இருக்கத்தான்  செய்யறாங்க . காலேஜ்ல  படிக்காத  எல்லா  வித்தையும்  அந்தக்  கம்பெனில தான்  ப்ராக்டிகலா  படிச்சேன் . மறக்க  முடியாத  ஒரு  வருஷம்னு  சொல்லுவேன் . வீட்டுக்கு  சாப்பிட  வந்துடுவேன் . இப்போ  அவ்ளோ  earn  பண்ணாலும்  , அப்போ  கிடைச்ச  அந்த  4500 உம்  , வீடு  சாப்பிடும்  மனசுல  அப்படியே  இருக்கு .

இப்படி  போயிட்டு  இருக்குறப்போ  , பேப்பர்ல  புனேவில்   ஒரு  கம்பெனில  இன்னும்  நல்ல  சம்பளத்துக்கு  ஒரு  வேலை  பார்த்து  அப்ளை  செய்யறேன் .
10000 க்கு  வருது . அண்ணன்  ஒரு  army  soldier . அவனோட  trunk  பேட்டி  ஒண்ணுல  , என்னோட  சாமான  சுருட்டிட்டு  ஊருக்கு  பை  சொல்லிட்டு  , புனே  போய்  இறங்குறேன் ..அங்க போனப்பறம்தான்  தெரியுது  , வேலை  புனேவில்  இல்லை ...அங்கேயிருந்து  கொஞ்சம்  தள்ளி  , இன்டர்நெட்  கூட  இல்லாத  ஒரு  கிராமம்னு . ஆனா  தங்க  இடம்  கொடுத்தாலே  , சேவிங்ஸ்  அதிகம் .

இப்படியே  இருந்துட  முடியாதுன்னு  , மேலே  கெரஸில்  ஏதாவது  படிப்போன்னு  தோணுச்சு .....அப்போ  எனக்குத்  தெரியாது  என்  வாழ்க்கை
வேற  இடத்துக்கு போகப் போகுதுன்னு ..நாடு விட்டு  நாடு  கடக்கப்போ குதுன்னு ....

பேசிக்கொண்டிருக்கையில  ஒரு  காய்ந்துச்சாய்ந்திருந்த  மரமொன்றைப்  பார்க்கிறோம் . வேர்கள்  மண்ணோடு  துறுத்திக்கொண்டிருந்தது இன்னும்.
சமீபத்தில் பெய்த  மழையின் சீற்றத்தில் மண்ணரிப்பில் விழுந்திருக்கக்கூடும் . அதன் கீழும்  ஒரு  மெல்லிய  ஓடையொன்று  ஓடிக்கொண்டுரிந்தது .

" எவ்ளோ  மரம்  இங்கே ...நம்ம  ஊரில்  இப்படி  விட்டுவைக்க மாட்டேங்கறாங்களே ...."

" ஆமாம் ..அதுவும்  இந்த  மலை  கமர்ஷியல்  ஏரியாக்கு  ரொம்ப  பக்கத்துல தான்  இருக்கு . நம்ம  ஊரா  இருந்தா  , ஹில்  வியூ  ஹோம்ஸ்ன்னு  போட்டு  , அதிக  ரேட்டுக்கு  வித்துருப்பானுங்க ..."

" சரியாச்சொன்ன ..என்னத்த  சொல்றது..எனக்கு  மரம்னா  ரொம்பப்பி டிக்கும் ... ஒரு  போட்டோ எடுத்துக்கறேன்  இந்த  மரத்து  மேலே  உக்காந்து ...எங்க  ஊரு  மரம்  நியாபகம்  வந்துடுச்சு ...இது  போல  புயலுல  விழுந்த  மரத்தை  வீடு  பக்கத்துல  பார்த்து  இருக்கேன் ..

இன்னொன்னுடா   ,  என்னோட  பசங்களோட
பர்த்டே  எல்லாம் , பெருசா  கொண்டாடறதில்ல  , அவங்க  வயசு  அஞ்சாச்சுன்னா  , அஞ்சு  மரக்கண்ணு  நடவைக்கறேன் ... இப்படி  வயசு  ஏற  ஏற  அதிக  மரங்க .முடிஞ்சவரை  ஊருக்கு போகும்போது  அதை  அவங்க கையாலயே  நடச்சொல்வேன் .
சொன்னா  ஆச்சரியமாயிருக்கும்  உனக்கு  , அந்தச்செடியை ,   ஒவ்வொரு  தடவை  இந்தியா  வரும்போதும்  ,அவங்க  அதைப் போய்ப்  பார்ப்பானுங்க .
அப்பா  , நான் போன  வருஷம்  இவனை  விட  உயரமா  இருந்தேன்  , இப்போ இவன்  வேகமா  வளந்துட்டான்னு  என்கிட்டே  சொல்லி சந்தோஷப்படறாங்க " என்றான் .

நல்ல  பழக்கம்டா ....நானும்  ட்ரை  பண்றேன் .
சரி  புனேயில்  மேல்படிப்பு  படித்த  கதையிலிருந்து  மேலே  சொல்லு .

" அந்த  கோர்ஸ்  நான்  லோன்நினேஸ்  மறக்க  படிக்க  ஆரம்பிச்சேன்னு  கூட  சொல்லுவேன் . ஆனா  போகப்  போகப் பிடிச்சு  போச்சு .ரசிச்சு  செஞ்சேன்  , ப்ரொஜெக்ட்ஸ்  சப்மிட்  பண்ணேன் .

அப்புறமா  நைஜீரியா  நாட்டில்  வேலையோன்னு
பேப்பர்ல  பார்த்தேன் ...அங்க  இந்த  லீகல் அட்வைசர்  , ப்ராஜக்ட்  பாதியில  விட்டுட்டு  போய்ட்டதால   , அவசரமா  ஆள்  தேவப்பட்டதுன்னு  இந்தியால  நல்ல  ரிசோர்ஸ் எதிர்பார்த்து விளம்பரம்  கொடுத்திருந்தாங்க ..நானும்  நான்  படிச்ச கரெஸ்பாண்டன்ஸ் வச்சு  ஒரு  கல்லு விட்டுப்பார்ப்போம்னு  விட்டேன். அது  எப்படியோ  கிளிக்  ஆகி   , நான்  ஒரு  ஒன்பது  வருஷம்  அங்கேயே  இருந்துட்டேன் ...இதுல  அங்க  கிளம்பரத்துக்குள்ள  மேரேஜும் பிக்ஸ்  ஆகிடுச்சு .. அப்புறம்  கம்பெனில  மல்டி  மில்லியன் டாலர்  கான்ட்ராக்ட்ஸ்  பாக்கற  அளவுக்கு  என்னை  நம்பிக்கொடுத்தாங்க ..
அப்புறம்  அங்கே  இருந்து வேற  நாட்டுக்கு  போய்ட்டேன் .. அப்படியே  வாழ்க்கை  போயிட்டு  இருக்குன்னு "  சொன்னான் .


இரு  இரு இரு ...வேகமா  நடந்து  வந்ததை  விட  உன்கதை  மூச்சுவாங்க  வைக்குது ...எவ்ளோ  coolaa  சொல்லிட்ட  நீ ...எவ்ளோ பெரிய  பயணம் இது ..
உன்  உழைப்பும்  , விடாமுயற்சியும் எவ்ளோன்னு  கொஞ்சம்  யோசிச்சு  ஜீரணிக்க  டைம்  கொடுன்னு  சொல்லிட்டு  நானும்  கொஞ்சம்  உட்கார்ந்தேன் ...

அப்புறம்ம லை  உச்சிக்கு  வந்துவிட்டோம் ... மேலே  இருந்து  பார்க்கையில் , நகரம்  இன்னும்  அழகாகத்  தெரிந்தது . தீப்பெட்டி  தீப்பெட்டியா  வீடுகள்  தெரிந்தன ...சிலிக்கான்  வாலி  , உலகத்தின்  தலைசிறந்த  நிறுவனங்களின்   கொள்ளிடம் ..இங்கிருந்து  பார்க்கையில்  அந்த  பரப்பரப்பின்றி  அமைதியாக .....மிக அமைதியாக ...காலில்  வெந்நீர்  ஊற்றினாற்போல  ஓடிக்கொண்டிருக்கும்  மனிதர்கள்  அடங்கிய  இடத்தையா  பார்த்துக்கொண்டிருக்கிறோம்  இப்ப ?  இதை  முதல்  முறை  நான்  பார்க்கவில்லை ...இருந்தாலும்  ஒவ்வொரு  முறை பார்க்கும்  பொழுதும்  அந்த  வியப்பு  அகலவில்லை ...

சூப்பர்டா  .....வென்று  நண்பன்  கூப்பிட்டபின்தான்  எண்ண  அலைகளிலிருந்து  வெளியே  வந்தேன் ....அட , மலையில்  எங்கே  அலைகள்   என்று சிரித்துக்கொண்டேன் ...சரி  இருந்துவிட்டுப்போகட்டுமே   கற்பனையா ...கீழே  இறங்கிப்போனபின்  , நகர  இரைச்சலில்  இப்படி  சிலாகித்து  வாழும்  தருணங்கள்  கம்மிதானே ...

நண்பனும்  , rewind  உலகத்திலிருந்து  வெளியே  வந்து  , அந்த  அமைதியான  காட்சியினைப்  பார்த்துக்கொண்டேயிருந்தான் ..இந்த  கொஞ்சம்  ஆப்பிள்  சாப்பிடு  , சிலிகான்  வேலி  வந்துட்டு  , " ஆப்பிள்  " சாப்டிலைன்னா  எப்படின்னு  சிரித்தேன் ..

மலை  உச்சியில்  ஒரு  புகைப்படம்  எடுத்துக்கொண்டோம் ...

ரொம்ப  சரியான  இடத்துக்கு  என்னை  கூட்டிட்டு  வந்தடா ...மால்ஸ் பார்த்து போர்  அடிச்சுடுச்சு .....

"IT WAS REALLY GOOD TO BE IN A REAL JUNGLE INSTEAD OF CORPORATE JUNGLE..."

my pleasure டா .  எனக்குத்தெரியும்  உனக்கு  இதுதான்  பிடிக்கும்னு ...

சரி  நேரமாச்சு  இந்த  இடம்  ஒரு  மாய  வலை .....நேரத்தை  விழுங்கிடும் ஒரு  black  hole  போல ...கிளம்புவோம் ....flightku  நேரமாச்சு....


கீழே  இறங்குகையில்   ஓடிக்கொண்டே  பேசிக்கொண்டு  வந்தோம் ..


டேய்  இவ்ளோ  பெரிய  உன்  பயணத்தில்  ,  எனக்கு  ஒண்ணே  ஒண்ணுதான் .
மனசுல  சுத்தி  சுத்தி  வந்தது ....மத்த  விஷயம்  எல்லாம்  ஓகே..உன்  ஹார்ட் வொர்க்  ...சரியான  நேரத்துல  சரியான  துறையை  நீ  தேர்ந்து  எடுத்து ..சவுகரியம்  பாக்காம  ஊர்  ஊரா  போனது   , குறிப்பா  உன்னோட  people  skills  உன்னோட  சொத்துன்னு  எனக்குத்தெரியும்  ...இது  எல்லாம்தான்  உன்னோட  வெற்றிக்கு  காரணம் ..ஆனா  என்னோட  லாஜிக்கல்   மைண்டுக்கு  ஒண்ணே  ஒண்ணுதான்  இடிடுக்குது ...

அது  உன்னோட  முதல்  வேலை ..திட்டத்திட்ட  ஒரு  வருஷம்  வேலை  இல்லாம  இருந்துட்டு  , அப்புறமா உனக்கு  உன்  ஊரில்  உனக்கு  வேலை  கிடைச்ச  விதம் ...ஆட்டோ  ஓட்டும்  உன் பிரெண்ட்  , எதேச்சையாக அவருடைய  தினச்சவாரியில்  , ஒரு  சிவில்  கம்பெனிய  பார்த்துட்டு  , அதுவும்  அந்தக் கம்பெனி மானேஜரை உங்க  ஊரு  ரயில்வே  ஸ்டேஷன்ல  இருந்து  , அந்தச்  சந்தில்  இருந்த  சின்ன  கம்பெனி  ஆபிசுக்கு  கொண்டு  விட்டப்போ  பாத்துட்டு  , உனக்கு  அதைச்சொல்லி  , நீயும்  அதை  நம்பி  அப்ளை  பண்ணி  , இப்போ இங்கே  வந்து  நிக்கற ...வாழ்க்கை  இப்படி  எல்லாம்  விளையாடுமா ?  !

" ஆமாம்  டா ....கடவுள் அருள்  " என்றான்

அவ்ளோதானா ....வேற  ஒண்ணும்  சொல்லத்தோணலையா  உனக்கு ?

" அவ்ளோதான்டா .."

கீழே  இறங்கி  வந்தாயிற்று ...  எப்பொழுதும்  வெற்றி  பெற்றவர்களின்  சூட்சமத்தை  பிரித்து மேய்வேன்  நான் .. இவனுடைய  கதையில்  எங்கேயோ   ஒண்ணு  இடிக்குது ..இன்னும்  ஒரு முக்கியமான  வெற்றியின்  மூலப்பொருள்
 [ success ingredient ] மிஸ்  ஆகுதுன்னு  மனசு  சொல்லிட்டே  இருந்தது ... சரியாகப்  புலப்படவில்லையே  என்று குழப்பத்திலேயே  உழன்றது ...

காரில்  எறியாச்சு ....

" டேய்  , ரொம்ப  சந்தோசம்  டா  ,I had a really great time...
போட்டோஸ்  என்  கேமரால இருக்கு ..ஊருக்கு  போய்  அனுப்பறேன் ..
ஆனா  ஓண்ணுடா ...இதை  சோசியல்  மீடியால  போட்டுடாத ...
நான்  foreign  ட்ரிப்ஸ்  இல்லை  ரொம்ப  என்சாய்  பண்ண  படங்களை  போடறது  இல்லை ...நமக்கு  கிடைச்சது  , அவங்களுக்கு  அமையலையேன்னு  யாரும்  ஏங்கிட கூடாது ... NOTHING ELSE ..நான்  அதுல  ரொம்ப   ஜாக்கிரதையா  இருப்பேன் "

SURE ...

காரை  ஸ்டார்ட்  பண்ணும்  போது  நண்பனை  ஒரு  முறை  பார்த்தேன் ..
 நான்  தேடிக்கொண்டிருந்த  அந்த  மிஸ்ஸிங்  ingredient  அவன்  மேல  சொன்ன  அவன்  மனசுதான்  என்று  என்  அறிவும்  சேர்ந்து   ஊர்ஜிதப்படுத்தியது ......

------- அவன்  வாழ்க்கைப்பயணம்  நிஜத்தில்  தொடரும் ..கதை  இங்கே  நிறைவு  பெறுகிறது .....சுபம் !





Sunday, October 8, 2017

சிறுகதை : புலப்படுதலுக்கு அப்பால் [ அத்தியாயம் ஒன்று ]

அத்தியாயம் ஒன்று ..

பதினேழு  வருடங்களுக்கு  மேல்  ஆகிறது  அந்த நண்பனைப்  பார்த்து . கல்லூரியில்  முதலாமாண்டு ஒன்றாகப்படிதிப்பின்  , அவன்  வேறு துறைக்குப்  போய்விட்டான் . முதலாமாண்டு  அடுத்த  அறையில்  தங்கியிருந்த  நாட்கள் நினைவுக் கதவுகளை  வந்து தட்டிப்போயின,  அவன்  நான்  இருக்கும்  நாட்டிற்கு  , ஊரிற்கு வரப்போகிறான்  எனக் கேள்விப்பட்டதும் . சிலரிடம்  ஒரு  சக்தி  உண்டு  , பழுகுபவரெல்லாம்  , வெகு சீக்கிரத்தில்  ரொம்ப  நாட்களாக  பழகியது  உணரவைக்கக்கூடிய  ஒரு  நுட்பம் ..

இவனுக்கு  அது  அதிமாகவே  உண்டு .ஆனால்  என்  இரண்டு வயது  மகளும்  , அவன்  காலணி  மாட்டும்  பொழுது  , பின்புறம்  அவன் தோழில் சாய்ந்தது  நாள்  கொஞ்சமும்  எதிர்பாராதது .புகைப்படம்  பிடிக்கலாம் என  நினைக்கையில்  , இல்லை  இது  அப்படியே  நினைவில்  மட்டும்  இருந்து  விட்டுப்  போகட்டுமே  என விட்டுவிட்டேன் .

இரவு  உணவு  முடிந்து  அவன்  கண்கள்  சொக்கிக்கொண்டு  இருப்பதைப்  பார்க்கிறேன்  , அவனுக்கும்  தூங்க  மனமில்லை  , எனக்கும்  இல்லை..என்னன்னவோ  கதைகள்  பேசினோம்  . விடிகாலையில்  அருகில்  இருக்கும்  ஒரு  சிறிய  மலைக்கு  , மலையேற்றம்  [ hiking ] போவோமென திட்டமிட்டிருந்தோம் , அனால் , மூன்று  முறை  , " சரி  நீ  படு " எனச்சொல்லி  விட்டு வந்த  பின்னும்  , பேசி  பேசி  கழிந்த  இரவு  இழுத்து  விட்டது .

காலையில்  , இருப்பினும்  ஒரு  அளவிற்கு  சீக்கிரம்  கிளம்பி  விட்டோம் .
மலை  அடிவாரம்  வரும்  வரை  , அவனுக்கு   என்ன  பார்க்கப்  போகிறோம்  எனச்சரியாகத்  தெரியாததால் , எங்கே   போகப்போகிறோம்  என்றுப்  பெரிய  ஆவல்  இன்றி வந்ததாக எனக்குப்பட்டது .

ஆனால்  இரண்டவது  நிமிடத்தில்  பரவசமானான்  .  அங்கே  இரண்டு  இளங்கருப்பு  மான்கள் அவனை  வரவேற்றதே  காரணம் . அதனுடன்  புகைப்படம்  எடுத்துக்கொண்டான் . இன்னும்  கொஞ்சம்  ஏறினோம் .
நகரத்தின்  ஒரு  பக்கம்  நன்றாகத் தெரிந்தது  சற்று  உயரத்தில்  இருந்து . அமைதியாக  அதையே  பார்த்துக்கொண்டு  இருந்தான் . நானும்தான் .

----------- காட்சி  2.

வெளிச்சம்  மரங்களின்  கிளைகளுக்கிடையே  குவியத்தொடங்கியது  ,  சூரியன்  ஒரு  பெரிய  மரத்தின்  கிளைகளுக்கிடையே சிரித்துக்கொண்டிருப்பதை பார்க்க  முடிந்தது . அதன்  பின்  அவனை  அங்கேயே  விட்டுவிட்டு  வனதேவனை  தரிசிக்க  இன்னும்  உள்ளே  பயணித்தோம் . ஒரு  சிறிய  மரப்பாலம்  வந்தது  , அதன்  மீது  ஏறி  , கீழே  ஓடியே  சின்ன  ஓடையின்  சத்தம்  ரம்மியாக  இசைத்துக்கொண்டே இருந்ததைக்  கேட்க  முடிந்தது .

" இப்படி  ஒரு  இடம்  எங்கள்  ஊரில்  இருந்தால்  , நான்  தினமும்  காலையில்  வந்து  விடுவேன் . நீ வாரா  வாரம் வந்துடுவியா ? " இது  அவன் சொன்னது .

" வரணும்னு  ஆசைதான் , அனால்  வேலை  அதிகம்  , மாசம்  ஒரு  தடவை  வர  ட்ரை  பண்ணிட்டு   இருக்கேன் ".

அந்த  மரங்களினூடே  நடக்கையில்  ,தூய்மையான  oxygen  காற்று  நுரையீரலை  சுத்தப்படுத்தியதை
உணர முடிந்தது அதுவரை . ஒரு  சொல்லத்தெரியாத   போதை  அது  , சுத்தக்காற்றின்  போதை ....
கண்கள்  மூடி  சுகிக்க  வேண்டிய  போதை ....

ஒரு வளைவைத்தாண்டி  மேலே  ஏறிக்கொண்டு  இருக்கிறோம்  இப்பொழுது . மரங்களின்  தலைகள்  ஒரு பெரிய  பச்சை  நிலப்பரப்பை  சுமத்துக்கொண்டு  இருந்தது  அங்கிருந்து  பார்க்கையில் .

அந்தச்சனத்தில் கொஞ்சம்  மூச்சு  நின்றுப்போனாற்போல  உணர்ந்தேன் . அவனைப்பார்த்தாலும்  அப்படிதான்  தோன்றியது  .அந்தக்காட்சியின்  பிரமிப்பு அப்படிதான் செய்தது உள்ளூர .

"உனக்கு  இருக்க  ஸ்டாமினாக்கு  , இப்படி  மூச்சு  திணறினாதான்  உண்டு  என்றேன் . சிரித்துக்கொண்டான் .

" ஆமாம்  , உடம்பு  ரொம்ப  முக்கியம்  , நான்  8 மணி நேரத்திற்கு  மேலே  ஆபீஸ்  வேலை  பாக்கறது  இல்லை .
மேலே  மேலே  மேலே  போகணும்னு  என்கூட  இருக்கறவங்க  இன்னும்  அதிகமா  ஓடிட்டு  இருக்காங்க  , நான்  காலைல  உடம்புக்கு  ஓடறதோட  சரி! " என்று  நமட்டுச்  சிரிப்புச்  சிரித்தான் .

" நீ  சொல்றது  போல  , மேலே  போறதுக்கு  மட்டும் இல்ல...சர்வைவலுக்கே  ஓடத்தான்  வேண்டி  உள்ளது . எக்ஸ்பீரியன்ஸ்   அதிகமானா  எதிர்பார்ப்பும்  அதிமாகத்தான் செய்கிறது .  ஆனால்  நீ சொல்றதிலும்  உண்மை  இருக்கத்தான்  செய்யுது . நானும்  கொஞ்சம்  கூல்  டவுன்  பண்ற  பிளானில்தான்  இருக்கேன் ..."

இப்படி  பேசிக்கொண்டிருப்பதை  கேட்டுக்கொண்டிருந்த  வனதேவதைக்கு  அலுப்புத்தட்டியிருக்க  வேண்டும்  போல . முட்டாள்  மனிதர்களே  , இங்கே வந்தும்  உங்கள்  நகர வாழ்க்கை  புலம்பலை  பேசி  , இந்தக்காற்றின்  வாசனைய  கெடுக்காதீங்கவென்று  சொல்வதுபோல  , அந்த  புதரிலிருந்து  ஒரு  சலசலப்பை  ஏற்படுத்தினாள் . கொஞ்சம்  நின்று இன்னும்  சில  மான்களாவென்று  பார்க்கையில்  , பெரிய  புஷ்டியான  கோடுகள்  இல்லாத  அணிலொன்று  மரக்கிளையிலிருந்து   எங்களைப்  பார்த்து  வாலாட்டியது .
பேச்சை  நிறுத்தி  அவனையும்  புகைப்படம்  எடுத்துக்கொண்டு   நகர்ந்தோம் .

"உன்னைப்பார்த்து  17 வருடங்கள்  ஆகுது .நிறைய  பேச  வேண்டியிருக்கு .இப்போ  இருக்கிற  நிலைக்கு  வந்து  சேர்ந்த  கதையை  சொல்லு  , பேசிட்டே  போவோம்..." என்றேன் .

" நான்  ஒண்ணும்  பெரிய  ஆள்  இல்லைடா ...சும்மா  ஒட்டாத  என்ன ...."

" வேலைய  மட்டும்  கேக்கலை  , மொத்த  ஜெர்னிய  சொல்லு "...

" காலேஜ்ல  விளையாட்டா  இருந்துட்டேன் ....வேலைக்கு  போய்தான்  ப்ராக்டிக்கல்ஸ்  படிச்சேன்  நான் !...காலேஜ்  முடிஞ்சு  சென்னை  வந்து  நண்பர்களுடன்  சில மாசம்  வேல தேடினேன் ...எனக்கு  கம்ப்யூட்டர்  பத்தி  அவ்ளோவா   தெரியாது ....பிரெண்ட்ஸ்தான்  சொல்லிக்கொடுத்தாங்க ...ஆறு  மாசமா  வேலையில்லாம  போச்சு  மொத்தமா , அதுல  சென்னைக்கு  வந்து  முணு  மாசமாச்சு ..அப்புறம்  ஒரு  நாள்  , ஒரு  கம்ப்யூட்டர் கோச்சிங்  கிளாசில்  instructor  வேலை  கிடைச்சுது . ஒரு  மாசம்  போனதும்  , முதல் சம்பளம்  வாங்க  ஆசையா  இருந்தேன் . சரியாப்போகலை  பிசினஸ்  , சம்பளம்  கொடுக்க  முடியாதுன்னு  சொல்லிட்டான் .
அப்புறம்  இனி  பிரெண்ட்ஸ்க்கு   பாரமா  இருக்கக்கூடாதுன்னு  , ஊருக்கே  திரும்பிப் போய்ட்டேன் ...."

================== தொடரும்  பயணம் .

Tuesday, July 19, 2016

மூன்று பேரின் உலகம்.

செந்திலும்  அவன் மனைவி  அம்முவும்   அப்பொழதுதான்  திருமணமாகி ,
புது மணத்தம்பதிகளாக  பெங்களூரில்  அவுட்டர்  ரிங்ரோட்டில்  இருந்த
  வெள்ளையும்  நீலமும்  கலந்து  அடிக்கப்பட்ட  அந்த அடுக்குமாடி
கட்டிடத்தில் குடிபுகும்  முதல் நாள் . அபார்ட்மென்ட்டின்   செக்கூரிட்டி  வளைவைத்தாண்டி  அந்த  மேடான பகுதியிலிருந்து  கீழே  இறங்கி   "பி"  ப்ளாக்  நோக்கி  அந்த  சாமான்  சுமக்கும்  வண்டியினை  முன்னாடியிருந்து  வழிகாட்டி  உள்ளே  செல்கையில்  இடது  புறத்தில்  ஒரு  தள்ளுவண்டியில்
இஸ்திரி  போட்டுக்கொண்டு  இருந்தார்  முப்பதுகளில்  இருந்த  அந்த  மனிதர் . பரவாயில்லையே  ,உள்ளுக்குளேயே  ஐயன்[iron ]  செய்ய ஆள்  இருக்கிறார் ,  வெளியே  அலைய  வேண்டியதில்லை  என்று  நினைத்தவாறே  உள்ளே  செல்கிறான்  செந்தில்.

அந்த   ஞாயிற்றுக்கிழமை  வீட்டின்  காலிங்பெல்  அடிக்கவும்  ,
லுங்கியணிந்து  சற்று  குள்ளமாக  அன்று  பார்த்த  அந்த  இஸ்திரி  போடும்  நபர்  வெளியே  நிற்கிறார் .

"புதுசா  குடிவந்து  இருக்கிறதாக  சொன்னாங்க .  நான் கீழதான் இஸ்திரி  போடுறேன் . துணி  இருந்தா  கொடுங்க"  என்கிறார் .
துணியைக்  கொடுத்தவாறே  செந்தில்  பேச்சுக்கொடுக்கிறான் .

" நல்லா  தமிழில் பேசறீங்க .எந்த  ஊர்  நீங்க "

" தர்மபுரி  பக்கத்துல  தேன்கனிக்கோட்டை .கேள்விப்பட்டு  இருக்கீங்களா ..?"

" கேள்விப்பட்டு  இருக்கேன்  , என்  காலேஜ்ல  ஒரு  நண்பர்  அந்த  ஊர்தான் .."

"அப்டியா  சார் ...பத்தொன்பது  துணி  இருக்கு  . சாயங்காலமா  கொடுத்துடுறேன் ..." என்கிறார்  இஸ்திரி  போடும் விஜயன்  .
விஜயன்  மட்டும்  அல்ல  . இன்னும் சில  புதிய  மனிதர்களை  அந்த  ஒரு  வாரத்திற்குள்  சந்தித்தான்  செந்தில்.

செந்திலின்  வீட்டு  வேலை  செய்ய  வந்த அம்மாவின்  பெயர்  ஷீலா .
சுறுசுறுப்புக்கு  இன்னொரு  பெயர்தான்  ஷீலா . ஒரு  வேளை  அவர் 
வந்த  நாடான  நேபாளத்தில்  , "ஷீலா"  என்றால்  சுறுசுறுப்போ  என்று  நினைத்துக்கொண்டான் . அப்படி  ஒரு  வேகம்  அவர்களிடம்.
"ஷீலா " என்றால்  நன்னடத்தை  என்ற  பொருள்  கொள்ளும்  என  அறிகிறான்  பிறகு  , அவர்களின்  பெயர்போலவே  அவர்கள்  நடத்தையும்தான் என
உணரவும்  செய்கிறான் .ஏழு  மணிக்கு  அவன்  மனைவி  , வேலைக்கு  கிளம்பிப்போன  பிறகு  , இவன்  நயிட்  டூட்டி  முடித்துவந்து  காலையில்  படுத்துத்தூங்கினாலும்  , வந்ததும்  போனதும்  தெரியாமல்  , நேர்த்தியாக  வேலை  முடிந்து  இருக்கும்  அவன் எழுவதற்குள் .  ஒரு  பொருள்  கூட  காணாமல்  போனது  கிடையாது .

இன்னொரு  ஞாயிற்றுக்கிழமை  , ஒரு  இளைஞன்  வந்து  கதவைத்தட்டுகிறான் . "ஒரு  பழைய  பல்சார் வண்டி   நிக்குதே  சார்  , உங்களோடதா  , விக்கற  பிளான்  இருக்கா ?"

"இல்லை  , நான் ஆபிசுக்கு  நடந்து  போறேன்  , பக்கத்துல  இருக்குறதால .
வண்டி  ஆக்சிடென்ட்  ஆனதால  , சர்வீஸ்  பண்ணாம  இருக்கு .
ஆனா  நான்  விக்கற  பிளான்ல  இல்லை ."

"சரி  சார் . பரவா  இல்லை . சும்மா  கேட்டுப்பாத்தேன் .நான்  இங்க  வண்டிங்க  வாஷ்  பன்றேன்  .  சண்டே  காலைல  பைவ்  டு  டென்  . வண்டி  நல்ல  புதுசு  மாதிரி  இருக்கும் .உங்களுக்கு  வேணும்னா  சொல்லுங்க .
 "
"கட்டாயமா ...வண்டி  சரி  பண்ணினதும் "

" இதுதான்  என்  நம்பர் . விக்னேஷ்ன்னு  சேவ்  பண்ணிவச்சுக்கோங்க "

நகர்புற வேகமான  வாழக்கை  அந்தத் தம்பதியினருக்கு ஒரு பக்கம்  ஓடிக்கொண்டுதான்  இருக்கிறது. ஓட்டமற்ற  சற்று  நிதானமானவாழ்க்கை ,தரும்   தருணங்களை  பெரும்பாலும்  நாம்  பேசுவோம் .

அவன்  தங்கியிருந்த  பெலந்தூர்  இன்னும்  "ஹல்லி"யாகவே  இருந்தது  ஒரு  புறம் . "ஹல்லி"  என்றால்  கிராமம்  என்று  அர்த்தம்  கன்னடத்தில் , அவனுக்கு  தெரிந்த  சொற்ப  கன்னட  வார்த்தைகளில்  அதுவும்  ஒன்று .

முடி` வெட்டவும்  , பழம்  காய்கறிகள்  வாங்கவும்  அபார்ட்மென்டின்   பின்பறம்  வளைந்து  செல்லும்  அந்தப்  பாதையைப்  பிடித்துப்  போனால்
வந்துவிடும்  அந்த  அழகிய  கடைத்தெரு .பழக்கடைகளும் , காய்கறிக்கடைகளும்  , தின்பண்டக்கடைகளும்  , துணிக்கடைகளும் நிறைந்த  தெரு  அது .முக்கியமாக  ஒரு  அழகிய  பெரிய  அரசமரம்  , எந்தக்கடவுளும்  இல்லாமலேயே  ,அந்த  மரத்தை  இன்னும்  வெட்டாமல்
விட்டுவைக்கப்பட்டிருந்தது   அங்கு  சில  நல்ல  உள்ளங்கள்  இருப்பதை  சொல்லாமல்  சொல்லியது .

அன்றைக்கு  ஒரு நாள்  இளநீர்  பருகிவிட்டு  சில்லறை  இல்லையென்று  சொல்லவும்  ," பரவா  இல்லை  , நீங்க  இங்கதான  இருக்கீங்க  , அப்புறமா  கொடுங்க " என்று  சகஜமாக  சொல்லிப்போனார்  அந்த  தர்மபுரி  இளநீர்க்காரர் .  "தர்மபுரியில்  பொழைப்புக்கு  வேலையே  இல்லையா ,
எத்தனை  பேர்  இதுபோல  , பெங்களூரு  பூரா  இருப்பாங்கன்னு " நினைத்துக்கொண்டே  வீடு  வந்தான்  செந்தில் .

அந்த  நினைப்பின்  நீட்சியாக  ,  தர்மபுரிக்காரரான விஜயனைக்  கொஞ்சம்  நாட்களாக  காணவில்லையே  என்று  விசாரித்தபோது  , அவர்   மொட்டை  மாடியில்   பம்ப்செட்  அறைபோல  ஒரு  அறை  இருப்பதாகவும்  , அதிலிருந்து வேலை  பார்க்கிறார்  என்று  கேள்விப்பட்டு  அங்கே  அவரைப்பார்க்க  போகிறான்  அவன் . இனி  "அவன்"  என்றால்  செந்தில்  எனக்கொள்ளவும் .

கணவனும்  மனைவியும்  , கனத்த இரும்புப்பெட்டியை  லாவகமாக   தேய்த்துக்கொண்டிருப்பதைச்   சற்று  தள்ளி  நின்றுப்பார்த்துக்கொண்டிருந்தான் . இருவரின்  ஒல்லியான  கைகள்  , சூடான  கரிகள் நிரம்பிய  அந்த கனத்த இஸ்திரிப்பொட்டியினை   எப்படி சுமந்து   அத்தனை  வேகமாக  வேலை  பார்க்கிறது  என்று  வியந்து  நிற்கிறான்.
"அந்த நொடியில்   என்ன  நினைத்துக்கொண்டிருக்கும்  அந்த  மனசு .
சட்டை  கசங்காமல்  வரவேண்டுமென்ற மும்முரமா  ,  இல்லை  பிள்ளைகள்  இந்நேரம்  ஊரில்  என்ன  பண்ணிக்கொண்டு  இருப்பார்கள்  என்ற  தவிப்பா , அல்லது  இந்தக்கைவலியோட  இன்னும்  ரெண்டே  ரெண்டு  சட்டை எப்படியாவது  பண்ணிடனும்கிற  முனைப்பா ?"   என   அவன்  யோசிக்கிறான்.

ரொம்ப  சோகமாக  இருந்தார்கள்  விஜயனும்  , அவர்  மனைவியும் .
பிள்ளைகளை  நினைத்து  என்றுமட்டும்  சொல்கிறார்  விஜயன் .

"வாழக்கை எப்படி  புரட்டி போடுகிறது  ஒவ்வொருத்தரையும் .
பிள்ளைகளை கூட  வைத்துக்கொள்ள முடியாத  சூழ்நிலை  இவர்களுக்கு " என்று   நினைத்தவாறே  வீடு  வந்து சேர்கிறான்.

மறுபடி  இயந்திர  வாழ்க்கை  வார  நாட்களில் ...எத்தனை  மாதங்கள்   கழிந்ததுன்னு  தெரியலை . இன்னொரு ஞாயிற்றுக்கிழமை ...

விக்னேஷ்  வண்டிதுடைத்துக்கொண்டிருக்கிறான் .

அவன்  அருகில்  மண்டியிட்டவாறே ,
"உன்னைப்  பாத்தா  படிக்கற  பையனைப் போல  இருக்கியே ?"
" ஆமா  சார் . இங்க  பக்கத்துல  இருக்க  காலேஜ்ல  BBA  படுக்கறேன் .
இது  பார்ட்டைம்தான்.  "
"சரி  நான்  வெளியே  போய்ட்டுருக்கேன்  ..கொஞ்சம்  அப்படியே  நடந்து வரியா என்கூட "
" சரி  சார் , போவோம் "
 "உன்னைப்  பார்த்தா ஆச்சரியமா   இருக்கு .வீட்டுக்கு  கஷ்டம்  தராம  நீயே  உன் பொழப்பைப்  பாத்துக்கற ...."
"சிட்டுவேஷன்  அப்படி சார்  ...ஆனா  , இது  என்ன  சார் பெரிய  விஷயம்  . நான்  சின்னப் பையன்  உடம்புல நிறையத்தெம்பு  இருக்கு . உங்க  வீட்ல  வேலை  பாக்கற  ஷீலா  பத்தி  உங்களுக்கு  எவ்ளோ  தெரியும் . அவங்களுக்கு  45 வயசு  இருக்கும் . ரெண்டு  பொண்ணுக்கு  கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டாங்களாம் .   வேற  ஊரு  கூட  இல்லை  , வேற  நாட்டுல  இருந்து   பொழைப்பைத்  தேடிவந்து   , பக்கத்து  ஊரு  சர்ஜாபூர்ல  வந்து  எப்படியோ  செட்டில்  ஆகி  ,மூணு  பசங்க  , புருஷன்  சரியான  வேலை  இல்லை , அந்த  அம்மா  காலைல  அஞ்சு  மணிக்கு அங்க  இருந்து  கிளம்பினா    , மதியத்துக்கு  மேலதான்  திரும்புறாங்க .நாலைஞ்சு  வீட்டுல , வீட்டு  வேலை  பார்த்துட்டு  ,  அப்புறமா  அந்த  " d " ப்ளாக்ல  ஒரு  வீட்ல  , குழந்தைங்களை பார்த்துட்டு  , சமைச்சு  கொடுத்துட்டுவேற  போறாங்க .
அவங்க  பையனுக்கு  இங்க  எதாவது வேலை  உண்டான்னு கேட்டு  வந்தப்போ , இந்தக்கதை  எல்லாம் கேள்விப்பட்டேன் ."

பேசிக்கொண்டே  , அந்த  அபார்ட்மெண்ட்டின்  சின்னப்பூங்காவிற்கு  வந்துசேர்கிறார்கள் . மஜந்தா நிறத்தில் பெயர்  தெரியாத  சிலப்பூக்கள் அங்கே உதிர்ந்து கிடைக்கிறது .  அதைக்கையில்  எடுத்தவாறே  , அவன்  சொல்வதைக்கேட்கிறான்  செந்தில் .

"இதுல  பாருங்க  , இப்படியே  வேலை  பார்த்து  , சர்ஜாப்பூர்ல   ஒரு  பிளாட்  வாங்கிப்போட்டு  இருக்காங்க . வேற  லெவல்  சார்  அவங்க .  அவங்களைப்  பாக்க  பாக்க   வாழ்க்கைல  பெரியதா   ஜெயிக்கணும்னு தோணும் .
நானும்  அவங்களைப்போல  ஒரு  நாள்  பிளாட்  வாங்கி  , என்  பாமிலியோட  வீடுகட்டி  செட்டில்  ஆகணும்  சார் .  இங்க  ஊஞ்சல்ல  விளையடுதுங்க   பாருங்க   சின்னப்பசங்க , அது  போல  ரெண்டு வேணும்!"

"  கேக்கவே  நல்லா  இருக்கு .உன்னால  முடியும் . கீப்  ஒர்கிங் "

" சந்தோஷம்  சார்  என்கூட  டைம்  ஸ்பென்ட்  பண்ணினத்துக்கு .
நீங்க  கைல  வச்சு  ரசிச்சிட்டு  இருக்கீங்களே  அந்தப்பூ ரொம்ப  அழகா  இருக்குல்ல ..! நானும்  பல  நாள் பார்த்து  ரசிச்சு  இருக்கேன் . இதை  எல்லாம்  யாரு  சார்  ரசிக்கறாங்க .எல்லாரும்  ,ஏதோ  தொலைச்சபோல  ஓடிட்டே  இருக்காங்க  இங்க .நீங்க  பரவாயில்லை . உங்ககிட்ட  இதையெல்லாம் சொல்லணும்னு  தோணுச்சு .இந்த  வருஷம்  பைனல்   இயர் .  நான்  கொஞ்சம்  இங்கிலீஷில்  வீக்  . உங்ககிட்ட  இங்கிலிஷ்  பேசட்டுமா ?"

" SURE  . தட்ஸ்   தி  ஸ்பிரிட் .  வாட்ச்  இங்கிலிஷ்  நியூஸ்  டெய்லி .
இட்  வில்  ஹெல்ப் யூர்  கம்யூனிகேஷன்  ஸ்கில்ஸ் "

" Thankyou  Sir  "...

 அந்த  வருடமும்  அப்படியே  ஓடிவிடுகிறது .
அடுத்த  வருடம்  செந்திலுக்கு அந்த  ஆண்டின்  ஆபிஸ்  டார்கெட்  நிர்ணயிக்கப்படுகிறது .அது  சம்பந்தமாக  ஏதோ  நினைத்தவாறே   லிப்ட்  ஏறி  வீட்டுக்கு  வருகையில்  , விஜயனை  மீண்டும் லிப்ட்டினுள்  பார்க்கிறான் .

" என்ன  ட்ரெஸ்  எல்லாம்  பலமா  இருக்கு . எங்க  போய்ட்டு  வரீங்க ..."

" அதுவா  சார்  .ஒரு  கல்யாணத்துல  இருந்து  வரேன் . இங்கயே  இருங்க . அந்த  ஆந்திராக்காரங்க  வீட்டுக்குபோய்  இந்தத்துணியக்   கொடுத்துட்டு வந்துடறேன் "

அந்த  லிப்டுக்கு  வெளியே  , க்ரில்  கம்பிகளை  எண்ணிக்கொண்டே  காத்துருக்கிறான்   செந்தில் .

"அந்த  பைக்  துடைக்கற  பையன் விக்னேஷ்   பத்தி  முதல்ல  தப்பா  நினைச்சுட்டேன் .அவன்  நிறைய  தண்ணி  செலவு  பண்ரான்னு  அஸோஸியேஷன்  ஆளுங்க  கம்பிளைன்ட்  செஞ்சுட்டு  இருந்தாங்க . அப்புறமா  ஒரு  பொண்ணோட  சுத்திட்டு  இருந்ததை  பார்த்தேன் . அவன்  ட்ரெஸ்ஸும்  நடை  உடையும் அவனைத்தப்பா   நினைக்க  வச்சுருச்சு . ஆனா  பாருங்க  , போன  வாரம்  என்  பொண்டாட்டி  இஸ்திரி   போட்டுட்டு   இருக்கும்போது கொஞ்சம்  தள்ளி  நிண்ணு அவளைப் பாத்துட்டு  இருந்தான் . நான்  கொஞ்சம்  கடுப்பாகி போய் என்னன்னு  விசாரிச்சா  , தனக்கு  கல்யாணம்னு  எங்களைக்கூப்பிட  வந்திருக்கான் . நான்  அன்னைக்கு  அவனோட  பார்த்த  பொண்ணோடத்தான்  கல்யாணம் . போட்டோ  காமிச்சான் .அவனுக்கு  அம்மா  இல்லை  , அப்பா  வேற  ஒருத்தியோட  போய்ட்டானாம் ,கல்யாணத்துக்கு  பிரெண்ட்ஸ்  மட்டும்தான்  போல  , எங்களைக்கூட  ஒரே இடத்துல  வேலை  பாக்கறவங்கன்னு  கூப்பிட  வந்து  இருக்கான்  பாவம் .
அங்க  இருந்துதான்  வரேன்  இப்போ ..பெருசா  சாதிச்சுட்டான்  சார்  அவன் . உங்களுக்குத்  தெரியுமா ? " என்கிறார்  விஜயன் .

"தெரியும்  , அன்னைக்கு  , பாஸ்ப்போர்ட்  ஆபீஸ்க்கு  போனேன் . இப்போ  நம்ம  ஏரியா  பாஸ்ப்போர்ட்  அப்ளிகேஷன்  வாங்கி  , டாக்குமெண்ட்ஸ்  சரி  செய்யும்  வேலை  ஒரு  தனியார்  கம்பெனி  செய்யுது .
இவனை  ஒரு  வெள்ளை  சட்டை  , கருப்பு  பாண்ட்  போட்டு  , டிப்  டாப்பா  , அந்த  இடத்த்தில்  பாத்தேன்  , BBA   படிச்சு  முடிச்சுட்டு  அங்க  வேலைக்கு  சேர்ந்து  இருக்கறதா  சொன்னான் .
தற்காலிகமா  ஒரு  10000 வரை  கிடைப்பதாக  சொன்னான் . ஆனா  மேல  , MBA  படிப்பதற்கு  ஆசையாம் . அதுவரை  இந்த  வேலை  செஞ்சு  கொஞ்சம்  பைசா  சேதுக்கப்போறதா  சொன்னான் . இவன்  கல்யாணம்  பண்ணிகிட்ட பொண்ணும் , ஒரு  நல்ல  வேலைக்கு  போய்க்கிட்டு  இருக்கு  போல .
பையன்  சாதிச்சுட்டான் . ரொம்ப  சந்தோஷம் ."

"ஆமாம்  சார் ..... கண்முன்னாடி  ஜெயிச்சு  காமிச்சு  இருக்கான் . என்  பசங்களை  நாளைக்கு  ஒரு  நல்ல  இடத்துக்கு  கொண்டு வந்துட முடியும்கற  நம்பிக்கை  வந்திருக்கு   எங்களுக்கு அவனைப்பாத்து "

சில  மாதங்கள்   கழித்து  அலுவலகம்  போய்க்கொண்டிருக்கிறான்  செந்தில் .
எதிரில்   கருப்பு  நிற  புது  பல்சார்  பைக்கில்  விக்னேஷ்  கம்பீரமாக   வருவதைப்பார்த்தான் .

" என்ன  புது  மாப்பிள்ளை  ..எப்படி  இருக்கீங்க ?"

" VERY  GOOD  Sir . Have a  wonderful  day "

"You  too "... என்றவாறே  நகர்கிறான் .

மனசு  கொஞ்சம்  லேசானது . முந்தின  நாளின்  அலுவலக  அழுத்தம்  பெரிதாக  இருந்தாலும்  , சமாளிச்சுடலாம்னு மனசு  சொல்லியது .அப்புறம்  அதற்கு  மேலே  சிலதையும்  யோசிக்கத்தொடங்கியது .

"எதிலும்  வகையறைப்படுத்த முடியாத  ஒரு  மாயவிசை  இவர்கள்  எல்லோரையும்  இயக்கிக்கொண்டிருக்கு  . அது  வயிற்றுப்பசி  மட்டுமே  அல்ல . சோர்ந்து  இருக்கும்போது  , தன்னைச்சுற்றி  தன்னால் சம்பந்தப் படுத்திக்கொள்ள  முடிந்த  சிலருடைய  வாழ்க்கையே  ,  அவர்களை  உத்வேகப்படுத்தி  ,  தட்டிக்கொடுத்து  ,
தூக்கிவிட்டுக்கொண்டிருக்கு  . நாளை மீது  நம்பிக்கை  கொடுத்து  , ஜெயிக்கும்  வேட்கையினையும்  கொடுத்து  இருக்கிறது "

அலுவலகம்  வந்து  சேர்கிறான் . கொஞ்சம்  அன்றைய  காலை  வேலைகளை
சுறுசுறுப்பாக  முடிக்கிறான் . காபி  சாப்பிடவேண்டுமென  தோன்றுகிறது .
மேல்தளத்தில்  இருக்கும்  கேன்டீனுக்கு  வருகிறான் . காபி  கப்பை  எடுத்துக்கொண்டு , அந்தப்  பெரிய  பால்கனிக்கு  வந்து  தனியாக  நிற்கிறான் . அங்கிருந்துப்  பார்த்தால்  , தூரத்தில்  மெயின்  ரோட்டில்  வண்டிகள் எறும்பு  போல  ஊர்வது  தெரிகிறது . மெதுவாக  காப்பியைக்
குடிக்கையில்  , அன்றைக்கு   விஜயன்  சொன்னது  நினைவிற்கு  வருகிறது .

"  பசங்க  தனியா  நாங்க  இல்லாம  சரியா  படிக்கமாட்டேங்கிறாங்க .நாங்களும்  ஏதோ  இருக்கோம்  இங்க . வாழ்ந்துட்டு  இருக்கோமான்னு  கேட்டா  இல்லை  , வெறுமென  இருக்கோம் . ஆனா  எதுக்கு  இந்தக்  கஷ்டம்  எல்லாம் . எங்க  பசங்க  படிச்சு  நல்ல  மேலே  வரணும்னுதான் .
ஆனா  பெயில்  ஆகறாங்கனு  ஸ்கூலுல கூப்பிட்டு  விட்டதைப்
பாக்கறபோது  , நம்பிக்கை இல்லாம  போச்சு . ரெண்டு  வாரம்  எல்லாத்தையும்  விட்டுட்டு  ஊருக்கு  போய்ட்டோம் . போயிட்டு  வந்தப்பறமாதான்  இந்த
விக்னேஷின்  கல்யாணமும்  , அவன்  எப்படி சாதிச்சிருக்கான்னும் தெரியவருது . எதுனாலும்  பாத்துக்கலாம்னு  நம்பிக்கை  பொறந்தது .
பசங்களை  இங்க கொஞ்சம்  நாள்  கூட்டிட்டு  வந்தோம் . அவனையும்  காமிச்சோம் , அவனைப் பத்தியும்  சொன்னோம்."

 பேசிக்கொண்டே  இருக்காமல்  தலையைச்  சாய்த்தவாறே  கரித்துண்டை  எடுத்துப்போட்டு  , இஸ்திரிப்பொட்டிய  தேய்த்து  வேலையும் செய்வதைப்  பார்க்கிறான்  செந்தில் . மேலும்  பேசுகிறார்  விஜயன் .

"சில  வருஷம்   முன்னாடி  நாங்களும்  கீழ ரோட்டுல  ஐயன்  பண்ணிட்டு  இருந்தோம்  , அப்புறம்  அபார்ட்மென்ட்  உள்ள  வந்தோம்  , இப்போ  மேலே  இங்க  இந்த  ரூம்ல  , நிழல்ல ,...

அங்க  பாருங்க  சார் .அதுபோல  ஒரு  கண்ணாடியாலயே  கட்டின  ஒரு  ஆபிஸ்ல  என்  பசங்களும்  ஒரு  நாள்  ஜம்ன்னு வேலை  பார்க்கணும் .....
பாப்பாங்க ...... உங்களுக்கு  நான்  சொல்றது  தெரியுதா  ....? சாரி  புரியுதா ?"

நினைப்பிலிருந்து  செந்தில்  வெளியே  வருகிறான் . வானம்   பெரிய  நீலப்  போர்வை போல  தெளிவாக இருக்கிறது .

----------------------------------------------------------------------------------------------------------------------


Monday, July 11, 2016

டாக்டர் ஜேக்கப்ஸின் ஹாப்பி டான்ஸ்

அலுவலகத்தில்  ஒரு சக  ஊழியருக்கு  குழந்தை  பிறந்து  இருப்பது  கேள்விப்பட்டு அவருக்கு வாழ்த்து  தெரிவிக்கும்பொழுதே  அந்த  ஆஸ்பத்திரி  பற்றி அறிகிறேன் .

அப்பொழுது எங்களுக்கு  பிள்ளை  இல்லை .அல்லது வரப்போகின்ற  செய்தியும்   இல்லை. எல்லாவற்றையும்  தெரிந்துக்கொள்ளும்  ஆர்வம்  போலத்தான்  இதையும்  கேட்டு  வைத்தேன் .

"மெடிக்கல்  சென்டர்  ஆப்  இர்விங்  "  தான்  நாங்கள்  டெலிவரி  பார்த்தோம் . அங்கே  பெண்கள்  டாக்டர்  குழு  ஒன்று  இருக்கிறது .
ரொம்ப நன்றாக  பார்த்துக்கொண்டார்கள் .

என்ன  " வீட்ல  விசேஷமா " என்று சிரித்தார் .
இல்லை  என்று  சொன்னாலும் , "நம்பிட்டேன்"  என்று  மீண்டும் சிரித்தார்.
அடுத்த  இரண்டு மாதங்களில்  , எங்க வீட்டில் விஷேஷம் .
உங்கள்  வாய் முஹூர்த்தம்  பலித்தது என்று  சொல்லி வந்தேன் .

வீட்டில்  இருந்து இருபது  கிலோமீட்டருக்கு  அப்பால்  இருந்தாலும்  ,  சக  ஊழியர்  சொன்ன  வார்த்தையாலும்  , தெரியாத  ஊரில்  தெரியாத  இடத்திற்கு போவதை விட  , இங்கு சிரமம் பார்க்காமல்  போவதே  மேல் என  முடிவு  செய்தோம்.

அதற்குள்  , என் மனைவி , அங்குள்ள  டாக்டர்ஸ்  பற்றி  " review " [விமர்சனம் ] பார்த்தாள் .டாக்டர்  ஜேக்கப்ஸ்  அவர்களின்  பெயர்  தனித்து  நின்றது .
அவரிடம் அப்பாயிண்ட்மென்ட்   கிடைப்பது  கஷ்டம்  எனத்தெரிந்தாலும்  , முயற்சி  செய்துப்பார்ப்போமே  எனப்பார்க்கையில்  , ஒரு  மாதம் கழித்து   இருக்குமென  தெரிய வருகிறது .

பொறுத்து  இருந்து  அவரைப்  பார்க்கும்  நாளும் வந்தது .
ஒரு  50 வயது  மதிக்கத்தக்க  இளம் பெண் என்றுப்பட்டது எனக்கு அவர்களைப் பார்க்கையில்  , தோற்றத்தில்  40 சொல்லலாம் . , ஆனால்  , பேச்சிலும்  , நடை  உடையிலும்  25 கூட சொல்ல  முடியாது .ஒரு  துருதுருப்பு   இருந்துக்கொண்டே  இருக்கும்  அவர்கள்  பேச்சிலும்  உடல் மொழியிலும் .

முதல் சந்திப்பிலேயே  , ரொம்ப  பழக்கப்பட்டவர்களாக  உணர்ந்தாள்  என்  மனைவி .குறிப்பாக   "sweety"  என்று  அவளை  அழைத்ததால்  வந்த  நெருக்கம்  எனச்சிரித்துக்கொண்டேன் .

மனைவிக்கு   என்று  மட்டும்தான்  சொல்கிறேன் .
என்னுடைய  அபிப்பிராயம்  இந்த  ஊர்க்காரர்களைப்பற்றி  [ அமெரிக்கர்கள் ]அவ்வளவு  நல்லதாக  இருந்தது  இல்லை.  ethics  [நெறிமுறைகள்] நிறைந்தவர்கள்  என்ற  மதிப்பு உண்டு.  வெளியில்
எல்லாம்  சிரித்தார்ப்போல   பேசி  இருந்தாலும் , அவர்களுடைய
உள்ளுலகம்    சற்று  சுருங்கியது  என்பது  என்  கணிப்பு . எல்லாவற்றையும்  வணிகக்கண்ணோட்டத்துடன்  பார்ப்பவர்கள்  என்ற  பிம்பம் மனதில்  உண்டு .

 அமெரிக்காவில்  சில  வருடங்கள்  இருந்தபின்னர்   இவர்களின்  சில  கோட்பாடுகள்  தெரிய  வந்தன ...
"THERE ARE NO FREE LUNCHES " .....

" YOU DONT HAVE TO DO THIS"..... இதைவிட  கடுப்பேற்றும்  ஒரு  தொடர்  எனக்கு  இல்லவே இல்லை ...ஏதாவது  நட்பாக  செய்தால்  கூட  , சந்தேகத்துடன்  இவன்  எதையோ  எதிர்பார்கிறானோ  என்ற  தோரணையில்  கேட்கப்படும்  கேள்வியாகப்பட்டது  எனக்கு .

 தோழமையோ  , பரிவோ  கணக்குப்  பார்த்துதான்  வரவேண்டுமா  என்ன .
??எனக்கு  எந்த  கண்ணோட்டம்  , ஒரு  அலுப்பைத் தந்தது .

இது   போன்ற  சில நிகழ்வுகள்  , இவர்கள்  மீது  வேறு  மாதிரியான மேற்சொன்ன   ஒரு  பிம்பத்தை  ஏற்படுத்தியிருந்தது .

இதைப்  போன்ற  சுபாவம்  அவர்களின்  நெருங்கிய  நண்பரிகளிடம்  செய்வார்களா  என்பதைப்பற்றி  எனக்குத் தெரியாது .
ஆனால்  , ஒரு  வித  தாமரை  இலை மேலே  தண்ணீர்  போன்ற  மனப்பாங்கு  உண்டு  என்பதை  நான்  பல  முறை உணர்ந்து  இருக்கிறேன் .
கணவன்  மனைவி  கூட  வீட்டில்  வீட்டில்  அவர்களுடைய  செலவினை
ரூம் மேட்   போன்று  பகிர்ந்துக்கொள்வர்  எனகேள்விப் பட்டு   இருக்கிறேன் .
நாளைக்கு  பிரிய  வந்தால்  கணக்கு  வழக்கு  சரியாக  இருக்கணும்  போல!
விளக்கம்  கேக்கதீர்கள்! ...எல்லோரையும்  சொல்லவில்லை  , பொதுவாக  நடப்பதைச்   சொல்கிறேன்.அமெரிக்க  டாக்டர்  என்பதால்  , இந்த   என்  கண்ணோட்டம் , DR  ஜேக்கப்ஸ்  மீதும் படர்ந்தது .

ஒரு  நாள்  அலுவலகத்தில்   மிகுந்த  வேலை .
அன்றைக்கு  டாக்டரைப்  பார்க்க  அப்பாயின்ட்மென்ட்  இருந்தது .
அவ்வளவு தூரம்  இருந்ததால்  அரைநாள்  விடுப்பெடுத்து  அலைவது  , அதிகமாகவே  தெரிந்தது .

"வீட்டின்  பக்கமே  ஒரு  டாக்டரைப்  பார்த்து  இருக்கலாம் , எல்லாம்  இது போல தேன்போல பேசி  நடிக்கத்தான்  போறாங்க  , உனக்கு  எங்கே  போனால்  என்ன ?".

"உங்களுக்கென  தெரியும்  , அவங்க  எவ்ளோ  நல்லவங்க ....
அம்மாவுக்கு  அந்தக்  காலத்துல  தம்பி  பொறந்தபோது   , கோடம்பாக்கத்துல  ஒரு  பெரிய  டாக்டரைப்பாத்தங்களாம் .
கொஞ்சம் நேரம் லேட்டா  போனா  கூட  காய்ச்சி  எடுத்துடுவாங்களாம் .
டாக்டரைப்  பாக்கப் போகணும்னாலே  அம்மா  பயத்தோடயேதான்  போவாங்களாம் ..

அப்பாவை ஒரு  தடவ  எதுக்கோ  திட்டி  , அவங்க  ரொம்ப  நாளைக்கு
டாக்டரைப்  பாக்கவே  வரமாட்டேன்னு  சொல்லிட்டாங்களாம் .உங்களை  எவ்ளோ மரியாதையா  நடத்தறாங்க . உங்களுக்கு  அவங்க  அருமை  தெரியலை .

நீங்க  சொல்ற  போல  ஜேக்கப்ஸ்  நடிச்சாங்கனே  வச்சுக்குவோம் ..ஆன  எனக்கு  பயம்  இல்லை  அவங்களை  பாக்க  ...
சந்தோஷமா  வரேன்  " என்றாள் .

"சரி  என்னைக்குடையாம  இருந்தா  சரி "..

அன்றைக்கு  குழந்தையின்  "heart  beat"  மற்றும்  இதர  உறுப்புகள்  இதுவரை  சரிவர  இயங்குகிறதா  என்று ultrasound [அல்ட்ராசவுண்ட் ] இல்  பார்க்கும்  நாள் .
நானும்  கூடவே  இருந்தேன்   ...

 ஜேக்கப்ஸ்  வந்தார்கள் .
ஒரு  ஆனந்த  நடனம்  ஆடினார்கள் ..என் மனைவி  அதுக்கு
" ஜேக்கப்ஸ்  ஹாப்பி  டான்ஸ் "  என்று பெயர்  வைத்தாள் அதன்பிறகு .
எதற்கென்று  சொல்லவில்லையே  நான் .
குழந்தையின்  , அசைவுகளைப்  பார்த்துவிட்டுத்தான் .

" அவள் சரியா  பாக்கவிடமாட்டேங்குறா ...ஒரு பக்கமா  எசகு  பிசகா  படுத்துருக்கா ...பாரு  பாரு  இப்போவே  எவ்ளோ  முடி .......
இங்க  பாரு  அவ  கை  விரல்  எவ்ளோ  நீளம் , அவ  அப்பா  போல "
இப்படி  என்னவெல்லாமோ  பேசிக்கொண்டு  , கூடவே  அந்தக்  ஹாப்பி  டான்ஸையும்  போட்டார்கள் .

அதை  எப்படிச்  சொல்ல ...ஸ்டெதஸ்கோப் மாட்டிக்கொண்டு  , டாக்டர்  கோட்டுடன்    இடுப்பையும்  , காலையும்  ஆட்டி  ஒரு
மெல்லிய  ஆட்டம்  ... சில  சமயங்களில்  கைகளை  காரின்  வைப்பர்  போல  ஆட்டியும் ,ஒருவிதத்தில்  நம்மையும்  தொற்றிக்கொள்ளும்
வகையறா  அது. எனக்கு  ரொம்பப்  பிடித்தது ,கையில்  வெண்ணிற  ஆப்பிள்  லாப்டாப் ஒன்றைக்  வைத்துக்கொண்டே அவர்கள்  போடும்  அந்த ஆட்டம் .

மேலே  நான் அந்த  ஹாப்பி  டான்ஸை  விவரிக்கும்  போது  ஒன்றை கவனித்திருப்பீர்களே !ஆமாம்  எங்கள்  வீட்டிற்கு  வரப்போவது  ராஜகுமாரி ! இதை  அவர்  அன்றைக்கு  முதலில்  சொல்லிவிட்டுதான்  அந்த  ஹாப்பி  டான்ஸை  ஆரம்பித்தார் .

" எனக்கு  மூணு  குழந்தைங்க ...ரெண்டு பசங்க ... அவங்க  உலகத்தில்  இருப்பாங்க  பசங்க ..குறை  சொல்லலை  , ஸ்வீட்  பாய்ஸ் ....பேஸ்  பால்  , மீன்  பிடிக்கறதுன்னு  அவங்க   உலகம்  வேற . வேலை  விட்டு  வீட்டுக்கு  லேட்டா  போனா  , சாப்டியான்னு  கேக்கறது  பொண்ணுதான் ....என்கூட  கொஞ்சம்  பேசறதும் அவதான் .."

பிறகு  என்னைப்பார்த்து ,

" மூணு  வயசு  வரத்தான்  அம்மா  அம்மான்னு  அப்பிக்கிட்டு  இருப்பா  பொண்ணு . என்னதான்  என்கிட்ட  பிரியமா  இருந்தாலும் , அவங்க  அப்பாவுக்கும்  என்  மகளுக்கும்  ஒரு  தனி  bonding  [ ஓட்டுதல் ] உண்டு .
நீ  இன்னும்  சில  வருஷங்களில்  நான்  சொல்வதை  உணர்வாய் ..."

அன்று   வீடு  திரும்புகையில்  , நான்  அமைதியாக  வந்தேன் .

" என்ன  இதையும்  நடிப்புன்னு  சொல்லப்போறீங்களா .!" என்றாள்  மனைவி .

" அதைத்தான்  யோசிச்சுட்டு இருந்தேன் .
பொண்ணைப்  பத்தி  அவங்க  பேசினது  , மனசுக்கு  இதமா  இருந்துச்சு " என்றேன் .

" அப்பவும்  பொண்ணும்  இப்போவே  பார்ட்னர்ஷிப்  போட்டாச்சு  போல ..
என்ன  டீலில்   விட்டுடாதீங்க ..."

வீட்டிற்கு  வந்தபின்  , அந்த  டாக்டரைப்  பற்றி  இந்தியாவிற்கு  போன்  போட்டு  ,  அவர்  இப்படி  அப்படியென  புகழ்ந்து  தள்ளிக்கொண்டு  இருந்தாள்  மனைவி .

"அவங்க  தன்  குடும்பத்தைப் பற்றித்தானே  பேசினாங்க .
ஒத்துக்கறேன்  அவங்க  மத்தவங்களை  விட  கொஞ்சம்  பரவாயில்லை, ஆனா   நீ  சொல்ற  அளவுக்கு இல்ல ....."

" என்ன  இல்ல ...?"

" என்னன்னு  சொல்லத்தெரியலை ..ஆனா  எனக்குள்ள  இன்னும்  முழு  நம்பிக்கை பொறக்கல ..இவங்களோட  உண்மை  முகம்  ஒண்ணு   இருக்கும். அது  ஒரு  நாள்  தெரியும் ...."

நாட்கள்  நகர்ந்தன ...அடுத்த  முறை  நாங்கள்  அவர்களை பார்த்த  பொழுது  நடந்த  ஒரு  உரையாடல்  என்  மனைவியினை  வாய்  மூடச்செய்தது ...

" நெருங்கிடுச்சு  இன்னும்  ஒரு  மாசம் தான் " இது  ஜேக்கப்ஸ் சொன்னது ..

" டாக்டர்  நீங்க  அன்னைக்கு  இருப்பீங்கதானே .."  இது  என் மனைவி ..

" ஹ்ம்ம் ..சொல்ல  முடியாது ..வாரத்தில்  சில  நாட்கள்  நான்  நயிட்  டூட்டியில்  இருப்பேன் ..உன்னோட  பிரசவம்  நாம  பிளான்  செய்த போல  வந்துட்டா  நான்  இருப்பேன் ...வேற  நாள்  தள்ளியோ  முன்னையோ  வந்தா  சொல்ல  முடியாது ...அன்னைக்கு  டூட்டியில்  இருக்கும்  டாக்டர்  பார்த்துப்பாங்க ...
நான்  பேஜர்  [ {PAGER ] வச்சிருப்பேன் ....அவசரம்னா  எனக்கு  மெஸேஜ்   செய்வாங்க ...."

" நீங்க  இருக்கணும்  டாக்டர் ..எனக்குத்  தைரியமா  இருக்கும் ..."

" ஒர்ரி  பண்ணாத  சுவீட்டி .....எல்லாம்  சரியா
  போகும் .."

படி  இறங்கி  கீழே` வரும்  வரை  அமைதியாக  இருந்தேன் ..

" டோன்ட்  ஒர்ரி  சுவீட்டி ..டூட்டி  டாக்டர்  பார்த்துப்பாங்க ...!"
என் நமுட்டுச்  சிரிப்பை  எதிர்கொள்ள  முடியாமல்  , அவள்  அமைதியாக  வந்தாள் .....கொஞ்சம்  தேவை  இல்லாம  சீண்டிட்டோமோ  என  நினைக்கிறேன் அப்பொழுது  .......பிரத்யேக  அக்கறை  ஒன்றும்  இல்லை என்பதை  உணரட்டும்  இவள் .....

அன்றய  இரவின்  முழு  நிலவை  என்  மனைவி  ரசிக்க  முடியவில்லை ..
வெளியே  உட்கார்ந்து  பேசுகையில்  ஏதோ  யோசித்துக்கொண்டு  இருந்தாள் .
" நீ  பயப்படாத  , இந்த ஊருல  , எல்லாம்  நல்ல  வசதி  இருக்கு .
வேற  டாக்டர்  வந்தாலும்  நல்லபடியா  பாத்துப்பாங்க ...."

முழு  நிலவு  தேய்ந்து  , வளர்  பிறையில்  ஒரு நாள்  அதிகாலையில்  ,..
ரொம்ப  வலிக்குது  என்று சொல்லவும்   , மருத்துவமனை  விரைகிறோம் ...வலியினை  அளக்க  ஒரு  கருவியினை  மாட்டி விடுகிறார்கள் ...நேரம்  போகப்  போக அந்த  மெஷின்  வலி  அதிகமாவதைக்  காண்பிக்கிறது ...
ஆனால்  இன்னும்  குடம்  உடைந்து  பிள்ளை  பிறக்கும்  சூழல்  முழுவதும்
உருவாகவில்லை ...இப்படியே  ஒரு  நாள்  கழிகிறது ..
டாக்டர்  ஒரு  வேலையாக  வெளியூர்  போய்விட்டதாகவும் , அவர்  இன்னொரு டாக்டருக்கு  எல்லா  கேஸ்  ஹிஸ்டரியினையும் சொல்லிவிட்டதாக  நர்ஸ்  சொல்கிறார்கள் ..

" ரொம்ப  வலிக்குது ..பயமா  இருக்கு ....டாக்டர்  வேற  இல்லை .."

" அவங்க  இருக்கிறது  கஷ்டம்னு  எதிர்பார்த்ததுதான ...நீ  தைரியமா  இரு ..."

 அன்றைய  இரவு  ஒரு பத்து  மணி  இருக்கும் . இரவு  நேரத்து  டூட்டி  டாக்டர்  வருகிறார் ...."நாளை  காலைல  டெலிவரி  ஆகிடும்னு  எதிர்பாக்கறேன் ..குழந்தை  நல்லா   இருக்கு ...கொஞ்சம்  தூங்கப்  பாருங்க ..."

காலை  நான்கு  மணிக்கு  ரொம்ப  அசவுகரியமாக  இருக்கவும் .....
நர்ஸைக்  கூப்பிடுகிறோம் ... அவர்கள் டாக்டரை  வரச்சொல்கிறார்கள் .....

அவர்களும்  பரிசோதனை   செஞ்சுட்டு  ,

" கொஞ்சம்  காம்ப்ளிகேஷன்  இருக்குமா ....குடம்  உடைஞ்சுடுச்சு , தண்ணி  கம்மியாயிட்டு  வருது . ஆனா  குழந்தை  தொப்புள்  கொடியை  பிடிச்சுட்டு இருக்கு ....தைரியமா  இரு  ..கொஞ்சம்  பார்ப்போம் ..."

மனைவி  பதட்டத்தில்  ஒரு  மாதிரி  ஆகிவிடுகிறாள் ...
பயமா  இருக்கு  , பயமா  இருக்கு  , என்  பிள்ளைன்னு அழத்தொடங்குகிறாள் ..

அப்போது  கதவு  தட்டப்படுகிறது ...
" ஹேய்  சுவீட்டி ...."என்று  சொல்லிக்கொண்டே   உள்ள வராங்க
டாக்டர்  ஜேக்கப்ஸ் ...

" என்   மாமனார் இறந்துட்டாங்க ..அதனாலதான்  ஊரை  விட்டு அவசரமா  கிளம்ப  வேண்டியதயாடிச்சு .......முடிஞ்ச  வரை சீக்கிரமா  வந்து  சேர்ந்தேன் ...."

என்  மனைவிக்கு  அப்போதான்  உயிரே வந்தது  போல  உணர்கிறாள் ..
முகத்தில்  தெளிவு  வருகிறது ...

"நாம  இன்னும் அஞ்சு  நிமிஷத்துல  , சர்ஜெரி  செஞ்சாகணும் ...குழந்தையின்  ஹார்ட்  ரேட்  குறையுது ..." என்கிறார்கள்

"நர்ஸ்  , உடனே  சர்ஜரி ரூமுக்கு  கூட்டிட்டு  போங்க ..."

என்னைப்  பார்த்து  ,
" நீ  எங்க  போற ...அஞ்சு  நிமிஷத்துல  பிள்ளை  கைல  வந்துரும் ....பிறகு  சர்ஜெரி  முடிய   நேரம்  ஆகும் ......சர்ஜெரி  ரூம்  ட்ரெஸ்  இந்தா ,  இதைபோட்டுட்டு  சீக்கிரம்  வந்துடு ...மறக்காம  காமரா  எடுத்துட்டுவா  ..."


கண்  இமைப்பது   இருந்தது ....எங்கள்  குட்டி  தேவதையினை  எடுத்து  எங்கள்  கையில்  கொடுக்கிறார்கள்  ஜேக்கப்ஸ் ......திரை  சீலை  வைத்து  மனைவியின்  கழுத்திற்கு  கீழே  மறைத்திருக்கிறார்கள் ......பிள்ளையை  வாங்கி  கண்களில்  கண்ணீர்  முட்ட  முட்ட  மனைவியின்  தலைமாட்டிடம்  பிடித்துக்கொள்கிறேன் ....
டக்  டக்கென்று  பல  கோணங்களில்  போட்டோக்கள்  எடுக்கப்படும்  சத்தம்  கேக்கிறது ....ஒரு  நர்ஸ்  மட்டும்  ஒரு  அசிஸ்டன்ட்  டாக்டர்  போட்டோ  எடுத்துக்கொண்டு  இருக்கிறார்கள் ....

மறுபடி  அறைக்கு  வந்து  சேர்கிறோம் ...
" என்ன  'டாடி' உன்  கண்ல  கண்ணீர்  வந்துச்சே ....க்ளோசப்ல   எடுக்கச்சொன்னேன் ....இதையெல்லாம்  பாக்கத்தானே டாக்டர்கள்  மட்டும் கொடுத்துவச்சவங்க !

இது  யார்  , குழந்தையோட  பாட்டியா ?....
சாரிமா  .... சி செக்க்ஷன்  [ caesarian ] செய்ய  வேண்டியதயாடிச்சு....
வேற   வழி  இல்லை ..உங்க  பொண்ணை  கஷ்டப்படவச்சதுக்கு  மறுபடியும்  சாரி ..." என்று  சொல்லியவாறே என்   அத்தையினை  அணைத்துக்கொள்கிறார்கள் .... அவர்களும்  கூச்சத்துடன்  , என்னமோ  முணுமுணுத்தார்கள்  ...அது  அவர்கள்  இருவருக்கும்தான்  தெரியும்...

நான்காவது  நாள்  டிஸ்சார்ஜ்  ஆகி  வீட்டுக்கு  வருகிறோம் ...
லிப்ட்டில்  இறங்கி  கீழே  வந்து  , இடது  பக்கம்  திரும்பி  லாபியினை  நோக்கி
நடக்கையில் , turtle  [ ஆமை ] நெக்  ஸ்வட்டர் போட்டுக்கொண்டு  , அதன்  மேலே  , லெதர்  ஜாக்கெட்  போட்டவாறே  , ஸ்டைலாக  ஒற்றைக்காலைத் தூக்கி , முன்னாடி  இருந்த  ஒரு  நாற்காலி  மீது  வைத்துக்கொண்டு  சிரித்தவாறே  இருந்த  டாக்டர்  ஜேக்கப்ஸின் ஒரு  புகைப்படம்  என்னைப்பார்த்து  மட்டும்  , நான்  என்  மனைவியிடம்  , முன்பு  விட்ட  அதே  நக்கல்  சிரிப்பை   உதிர்ப்பது போல  இருந்தது .

நான்  பார்ப்பதைப்  பார்த்த  நர்ஸ்  ,
" DR  ஜேக்கப்ஸ்  எங்கள்  pride  [ பெருமை ]. நாங்கள்  அவர்களுக்கு  கொடுக்கும்  ஒரு  சின்ன  மரியாதை  இந்த  போட்டோ " என்கிறார்கள் .....

பிள்ளையோடு  வீடு  வந்தாயிற்று .....
ஒரு  மாதம்  கழிந்து  மறுபடியும்  , டாக்டரைப்  பார்க்கப் போகிறோம் ...

" டாக்டர்  , நாங்க  ஊர்  மாறப்போகிறோம் ...என்  ஹஸ்பண்டுக்கு  புது  வேலை , வேற    ஊருக்கு  மாற  வேண்டியிருக்கு ...ரொம்ப  தாங்க்ஸ் எல்லாத்துக்கும் .."
"

"எனக்கு  இன்னும்  வருத்தம்  இருக்கு ...சி  செக்க்ஷன்  இல்லாம  இருந்து  இருந்தா  நல்ல  இருந்து  இருக்கும் ...."

விடைபெற்று  வந்தோம் ...ஊரும்  மாறியாச்சு ...

அடுத்த  வருட கிறிஸ்துமஸ்  வருகிறது .......
அந்த  ஞாயிற்றுக்கிழமை  பிள்ளையுடன்  உட்கார்ந்தவாறு  இருக்கையில்  ,
என்  மனைவி  , அவள்  தோழியிடம்  பேசுவது  காதில்  விழுகிறது ..

" நீ  டாக்டர்  ஜேக்கப்ஸ்ட  போ ...SHE  IS  THE  BEST ....." ...

அவளிடம்  நான்  ..." நீ  ஒரு  கிரீட்டிங்  கார்டு  வாங்கி  அதுல  பாப்பா  போட்டோ  வச்சு  அனுப்பு  அவங்களுக்கு ...."

" எதுக்குங்க  அவ்ளோ  சிரமம் ...அவங்க   கடமையத்தானே  செஞ்சு  இருக்காங்க !" என்று  சிரிக்கிறாள் .

" ச்ச   இல்லை  ..அவங்க  எவ்ளோ  நல்லவங்க ....நீ  ஏன்   இப்படி  சொல்ற ..." என்று சொல்லியவாறே  , என்  பிள்ளைக்கு  ஹாப்பி  டான்ஸ்  சொல்லித்தந்துக்கொண்டு  இருந்தேன் .


=====================================================================