அத்தியாயம் ஒன்று ..
பதினேழு வருடங்களுக்கு மேல் ஆகிறது அந்த நண்பனைப் பார்த்து . கல்லூரியில் முதலாமாண்டு ஒன்றாகப்படிதிப்பின் , அவன் வேறு துறைக்குப் போய்விட்டான் . முதலாமாண்டு அடுத்த அறையில் தங்கியிருந்த நாட்கள் நினைவுக் கதவுகளை வந்து தட்டிப்போயின, அவன் நான் இருக்கும் நாட்டிற்கு , ஊரிற்கு வரப்போகிறான் எனக் கேள்விப்பட்டதும் . சிலரிடம் ஒரு சக்தி உண்டு , பழுகுபவரெல்லாம் , வெகு சீக்கிரத்தில் ரொம்ப நாட்களாக பழகியது உணரவைக்கக்கூடிய ஒரு நுட்பம் ..
இவனுக்கு அது அதிமாகவே உண்டு .ஆனால் என் இரண்டு வயது மகளும் , அவன் காலணி மாட்டும் பொழுது , பின்புறம் அவன் தோழில் சாய்ந்தது நாள் கொஞ்சமும் எதிர்பாராதது .புகைப்படம் பிடிக்கலாம் என நினைக்கையில் , இல்லை இது அப்படியே நினைவில் மட்டும் இருந்து விட்டுப் போகட்டுமே என விட்டுவிட்டேன் .
இரவு உணவு முடிந்து அவன் கண்கள் சொக்கிக்கொண்டு இருப்பதைப் பார்க்கிறேன் , அவனுக்கும் தூங்க மனமில்லை , எனக்கும் இல்லை..என்னன்னவோ கதைகள் பேசினோம் . விடிகாலையில் அருகில் இருக்கும் ஒரு சிறிய மலைக்கு , மலையேற்றம் [ hiking ] போவோமென திட்டமிட்டிருந்தோம் , அனால் , மூன்று முறை , " சரி நீ படு " எனச்சொல்லி விட்டு வந்த பின்னும் , பேசி பேசி கழிந்த இரவு இழுத்து விட்டது .
காலையில் , இருப்பினும் ஒரு அளவிற்கு சீக்கிரம் கிளம்பி விட்டோம் .
மலை அடிவாரம் வரும் வரை , அவனுக்கு என்ன பார்க்கப் போகிறோம் எனச்சரியாகத் தெரியாததால் , எங்கே போகப்போகிறோம் என்றுப் பெரிய ஆவல் இன்றி வந்ததாக எனக்குப்பட்டது .
ஆனால் இரண்டவது நிமிடத்தில் பரவசமானான் . அங்கே இரண்டு இளங்கருப்பு மான்கள் அவனை வரவேற்றதே காரணம் . அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டான் . இன்னும் கொஞ்சம் ஏறினோம் .
நகரத்தின் ஒரு பக்கம் நன்றாகத் தெரிந்தது சற்று உயரத்தில் இருந்து . அமைதியாக அதையே பார்த்துக்கொண்டு இருந்தான் . நானும்தான் .
----------- காட்சி 2.
வெளிச்சம் மரங்களின் கிளைகளுக்கிடையே குவியத்தொடங்கியது , சூரியன் ஒரு பெரிய மரத்தின் கிளைகளுக்கிடையே சிரித்துக்கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது . அதன் பின் அவனை அங்கேயே விட்டுவிட்டு வனதேவனை தரிசிக்க இன்னும் உள்ளே பயணித்தோம் . ஒரு சிறிய மரப்பாலம் வந்தது , அதன் மீது ஏறி , கீழே ஓடியே சின்ன ஓடையின் சத்தம் ரம்மியாக இசைத்துக்கொண்டே இருந்ததைக் கேட்க முடிந்தது .
" இப்படி ஒரு இடம் எங்கள் ஊரில் இருந்தால் , நான் தினமும் காலையில் வந்து விடுவேன் . நீ வாரா வாரம் வந்துடுவியா ? " இது அவன் சொன்னது .
" வரணும்னு ஆசைதான் , அனால் வேலை அதிகம் , மாசம் ஒரு தடவை வர ட்ரை பண்ணிட்டு இருக்கேன் ".
அந்த மரங்களினூடே நடக்கையில் ,தூய்மையான oxygen காற்று நுரையீரலை சுத்தப்படுத்தியதை
உணர முடிந்தது அதுவரை . ஒரு சொல்லத்தெரியாத போதை அது , சுத்தக்காற்றின் போதை ....
கண்கள் மூடி சுகிக்க வேண்டிய போதை ....
ஒரு வளைவைத்தாண்டி மேலே ஏறிக்கொண்டு இருக்கிறோம் இப்பொழுது . மரங்களின் தலைகள் ஒரு பெரிய பச்சை நிலப்பரப்பை சுமத்துக்கொண்டு இருந்தது அங்கிருந்து பார்க்கையில் .
அந்தச்சனத்தில் கொஞ்சம் மூச்சு நின்றுப்போனாற்போல உணர்ந்தேன் . அவனைப்பார்த்தாலும் அப்படிதான் தோன்றியது .அந்தக்காட்சியின் பிரமிப்பு அப்படிதான் செய்தது உள்ளூர .
"உனக்கு இருக்க ஸ்டாமினாக்கு , இப்படி மூச்சு திணறினாதான் உண்டு என்றேன் . சிரித்துக்கொண்டான் .
" ஆமாம் , உடம்பு ரொம்ப முக்கியம் , நான் 8 மணி நேரத்திற்கு மேலே ஆபீஸ் வேலை பாக்கறது இல்லை .
மேலே மேலே மேலே போகணும்னு என்கூட இருக்கறவங்க இன்னும் அதிகமா ஓடிட்டு இருக்காங்க , நான் காலைல உடம்புக்கு ஓடறதோட சரி! " என்று நமட்டுச் சிரிப்புச் சிரித்தான் .
" நீ சொல்றது போல , மேலே போறதுக்கு மட்டும் இல்ல...சர்வைவலுக்கே ஓடத்தான் வேண்டி உள்ளது . எக்ஸ்பீரியன்ஸ் அதிகமானா எதிர்பார்ப்பும் அதிமாகத்தான் செய்கிறது . ஆனால் நீ சொல்றதிலும் உண்மை இருக்கத்தான் செய்யுது . நானும் கொஞ்சம் கூல் டவுன் பண்ற பிளானில்தான் இருக்கேன் ..."
இப்படி பேசிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்த வனதேவதைக்கு அலுப்புத்தட்டியிருக்க வேண்டும் போல . முட்டாள் மனிதர்களே , இங்கே வந்தும் உங்கள் நகர வாழ்க்கை புலம்பலை பேசி , இந்தக்காற்றின் வாசனைய கெடுக்காதீங்கவென்று சொல்வதுபோல , அந்த புதரிலிருந்து ஒரு சலசலப்பை ஏற்படுத்தினாள் . கொஞ்சம் நின்று இன்னும் சில மான்களாவென்று பார்க்கையில் , பெரிய புஷ்டியான கோடுகள் இல்லாத அணிலொன்று மரக்கிளையிலிருந்து எங்களைப் பார்த்து வாலாட்டியது .
பேச்சை நிறுத்தி அவனையும் புகைப்படம் எடுத்துக்கொண்டு நகர்ந்தோம் .
"உன்னைப்பார்த்து 17 வருடங்கள் ஆகுது .நிறைய பேச வேண்டியிருக்கு .இப்போ இருக்கிற நிலைக்கு வந்து சேர்ந்த கதையை சொல்லு , பேசிட்டே போவோம்..." என்றேன் .
" நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லைடா ...சும்மா ஒட்டாத என்ன ...."
" வேலைய மட்டும் கேக்கலை , மொத்த ஜெர்னிய சொல்லு "...
" காலேஜ்ல விளையாட்டா இருந்துட்டேன் ....வேலைக்கு போய்தான் ப்ராக்டிக்கல்ஸ் படிச்சேன் நான் !...காலேஜ் முடிஞ்சு சென்னை வந்து நண்பர்களுடன் சில மாசம் வேல தேடினேன் ...எனக்கு கம்ப்யூட்டர் பத்தி அவ்ளோவா தெரியாது ....பிரெண்ட்ஸ்தான் சொல்லிக்கொடுத்தாங்க ...ஆறு மாசமா வேலையில்லாம போச்சு மொத்தமா , அதுல சென்னைக்கு வந்து முணு மாசமாச்சு ..அப்புறம் ஒரு நாள் , ஒரு கம்ப்யூட்டர் கோச்சிங் கிளாசில் instructor வேலை கிடைச்சுது . ஒரு மாசம் போனதும் , முதல் சம்பளம் வாங்க ஆசையா இருந்தேன் . சரியாப்போகலை பிசினஸ் , சம்பளம் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டான் .
அப்புறம் இனி பிரெண்ட்ஸ்க்கு பாரமா இருக்கக்கூடாதுன்னு , ஊருக்கே திரும்பிப் போய்ட்டேன் ...."
================== தொடரும் பயணம் .
பதினேழு வருடங்களுக்கு மேல் ஆகிறது அந்த நண்பனைப் பார்த்து . கல்லூரியில் முதலாமாண்டு ஒன்றாகப்படிதிப்பின் , அவன் வேறு துறைக்குப் போய்விட்டான் . முதலாமாண்டு அடுத்த அறையில் தங்கியிருந்த நாட்கள் நினைவுக் கதவுகளை வந்து தட்டிப்போயின, அவன் நான் இருக்கும் நாட்டிற்கு , ஊரிற்கு வரப்போகிறான் எனக் கேள்விப்பட்டதும் . சிலரிடம் ஒரு சக்தி உண்டு , பழுகுபவரெல்லாம் , வெகு சீக்கிரத்தில் ரொம்ப நாட்களாக பழகியது உணரவைக்கக்கூடிய ஒரு நுட்பம் ..
இவனுக்கு அது அதிமாகவே உண்டு .ஆனால் என் இரண்டு வயது மகளும் , அவன் காலணி மாட்டும் பொழுது , பின்புறம் அவன் தோழில் சாய்ந்தது நாள் கொஞ்சமும் எதிர்பாராதது .புகைப்படம் பிடிக்கலாம் என நினைக்கையில் , இல்லை இது அப்படியே நினைவில் மட்டும் இருந்து விட்டுப் போகட்டுமே என விட்டுவிட்டேன் .
இரவு உணவு முடிந்து அவன் கண்கள் சொக்கிக்கொண்டு இருப்பதைப் பார்க்கிறேன் , அவனுக்கும் தூங்க மனமில்லை , எனக்கும் இல்லை..என்னன்னவோ கதைகள் பேசினோம் . விடிகாலையில் அருகில் இருக்கும் ஒரு சிறிய மலைக்கு , மலையேற்றம் [ hiking ] போவோமென திட்டமிட்டிருந்தோம் , அனால் , மூன்று முறை , " சரி நீ படு " எனச்சொல்லி விட்டு வந்த பின்னும் , பேசி பேசி கழிந்த இரவு இழுத்து விட்டது .
காலையில் , இருப்பினும் ஒரு அளவிற்கு சீக்கிரம் கிளம்பி விட்டோம் .
மலை அடிவாரம் வரும் வரை , அவனுக்கு என்ன பார்க்கப் போகிறோம் எனச்சரியாகத் தெரியாததால் , எங்கே போகப்போகிறோம் என்றுப் பெரிய ஆவல் இன்றி வந்ததாக எனக்குப்பட்டது .
ஆனால் இரண்டவது நிமிடத்தில் பரவசமானான் . அங்கே இரண்டு இளங்கருப்பு மான்கள் அவனை வரவேற்றதே காரணம் . அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டான் . இன்னும் கொஞ்சம் ஏறினோம் .
நகரத்தின் ஒரு பக்கம் நன்றாகத் தெரிந்தது சற்று உயரத்தில் இருந்து . அமைதியாக அதையே பார்த்துக்கொண்டு இருந்தான் . நானும்தான் .
----------- காட்சி 2.
வெளிச்சம் மரங்களின் கிளைகளுக்கிடையே குவியத்தொடங்கியது , சூரியன் ஒரு பெரிய மரத்தின் கிளைகளுக்கிடையே சிரித்துக்கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது . அதன் பின் அவனை அங்கேயே விட்டுவிட்டு வனதேவனை தரிசிக்க இன்னும் உள்ளே பயணித்தோம் . ஒரு சிறிய மரப்பாலம் வந்தது , அதன் மீது ஏறி , கீழே ஓடியே சின்ன ஓடையின் சத்தம் ரம்மியாக இசைத்துக்கொண்டே இருந்ததைக் கேட்க முடிந்தது .
" இப்படி ஒரு இடம் எங்கள் ஊரில் இருந்தால் , நான் தினமும் காலையில் வந்து விடுவேன் . நீ வாரா வாரம் வந்துடுவியா ? " இது அவன் சொன்னது .
" வரணும்னு ஆசைதான் , அனால் வேலை அதிகம் , மாசம் ஒரு தடவை வர ட்ரை பண்ணிட்டு இருக்கேன் ".
அந்த மரங்களினூடே நடக்கையில் ,தூய்மையான oxygen காற்று நுரையீரலை சுத்தப்படுத்தியதை
உணர முடிந்தது அதுவரை . ஒரு சொல்லத்தெரியாத போதை அது , சுத்தக்காற்றின் போதை ....
கண்கள் மூடி சுகிக்க வேண்டிய போதை ....
ஒரு வளைவைத்தாண்டி மேலே ஏறிக்கொண்டு இருக்கிறோம் இப்பொழுது . மரங்களின் தலைகள் ஒரு பெரிய பச்சை நிலப்பரப்பை சுமத்துக்கொண்டு இருந்தது அங்கிருந்து பார்க்கையில் .
அந்தச்சனத்தில் கொஞ்சம் மூச்சு நின்றுப்போனாற்போல உணர்ந்தேன் . அவனைப்பார்த்தாலும் அப்படிதான் தோன்றியது .அந்தக்காட்சியின் பிரமிப்பு அப்படிதான் செய்தது உள்ளூர .
"உனக்கு இருக்க ஸ்டாமினாக்கு , இப்படி மூச்சு திணறினாதான் உண்டு என்றேன் . சிரித்துக்கொண்டான் .
" ஆமாம் , உடம்பு ரொம்ப முக்கியம் , நான் 8 மணி நேரத்திற்கு மேலே ஆபீஸ் வேலை பாக்கறது இல்லை .
மேலே மேலே மேலே போகணும்னு என்கூட இருக்கறவங்க இன்னும் அதிகமா ஓடிட்டு இருக்காங்க , நான் காலைல உடம்புக்கு ஓடறதோட சரி! " என்று நமட்டுச் சிரிப்புச் சிரித்தான் .
" நீ சொல்றது போல , மேலே போறதுக்கு மட்டும் இல்ல...சர்வைவலுக்கே ஓடத்தான் வேண்டி உள்ளது . எக்ஸ்பீரியன்ஸ் அதிகமானா எதிர்பார்ப்பும் அதிமாகத்தான் செய்கிறது . ஆனால் நீ சொல்றதிலும் உண்மை இருக்கத்தான் செய்யுது . நானும் கொஞ்சம் கூல் டவுன் பண்ற பிளானில்தான் இருக்கேன் ..."
இப்படி பேசிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்த வனதேவதைக்கு அலுப்புத்தட்டியிருக்க வேண்டும் போல . முட்டாள் மனிதர்களே , இங்கே வந்தும் உங்கள் நகர வாழ்க்கை புலம்பலை பேசி , இந்தக்காற்றின் வாசனைய கெடுக்காதீங்கவென்று சொல்வதுபோல , அந்த புதரிலிருந்து ஒரு சலசலப்பை ஏற்படுத்தினாள் . கொஞ்சம் நின்று இன்னும் சில மான்களாவென்று பார்க்கையில் , பெரிய புஷ்டியான கோடுகள் இல்லாத அணிலொன்று மரக்கிளையிலிருந்து எங்களைப் பார்த்து வாலாட்டியது .
பேச்சை நிறுத்தி அவனையும் புகைப்படம் எடுத்துக்கொண்டு நகர்ந்தோம் .
"உன்னைப்பார்த்து 17 வருடங்கள் ஆகுது .நிறைய பேச வேண்டியிருக்கு .இப்போ இருக்கிற நிலைக்கு வந்து சேர்ந்த கதையை சொல்லு , பேசிட்டே போவோம்..." என்றேன் .
" நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லைடா ...சும்மா ஒட்டாத என்ன ...."
" வேலைய மட்டும் கேக்கலை , மொத்த ஜெர்னிய சொல்லு "...
" காலேஜ்ல விளையாட்டா இருந்துட்டேன் ....வேலைக்கு போய்தான் ப்ராக்டிக்கல்ஸ் படிச்சேன் நான் !...காலேஜ் முடிஞ்சு சென்னை வந்து நண்பர்களுடன் சில மாசம் வேல தேடினேன் ...எனக்கு கம்ப்யூட்டர் பத்தி அவ்ளோவா தெரியாது ....பிரெண்ட்ஸ்தான் சொல்லிக்கொடுத்தாங்க ...ஆறு மாசமா வேலையில்லாம போச்சு மொத்தமா , அதுல சென்னைக்கு வந்து முணு மாசமாச்சு ..அப்புறம் ஒரு நாள் , ஒரு கம்ப்யூட்டர் கோச்சிங் கிளாசில் instructor வேலை கிடைச்சுது . ஒரு மாசம் போனதும் , முதல் சம்பளம் வாங்க ஆசையா இருந்தேன் . சரியாப்போகலை பிசினஸ் , சம்பளம் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டான் .
அப்புறம் இனி பிரெண்ட்ஸ்க்கு பாரமா இருக்கக்கூடாதுன்னு , ஊருக்கே திரும்பிப் போய்ட்டேன் ...."
================== தொடரும் பயணம் .
No comments:
Post a Comment