Friday, October 31, 2014

simple pleasures of life

நினைவில் நிற்பவை :

நண்பர்கள் உறவினர்கள் வந்து கிளம்பும் பொழுது , மணி கணக்கில் பேசிவிட்டு கிளம்ப  முற்படும் பொழுது , வாசல்  வரை வழி அனுப்ப வந்தபின் , ஏதோ ஒரு அர்த்தமற்ற அல்லது சம்பந்தம் இல்லாத சம்பவத்தை பற்றி பேசத்தொடங்கி அது அரை மணி நேரமோ அதற்கு மேலோ  தொடர்ந்து , பின்பு அதுதான் அன்றைய சந்திப்பின் சிறப்பம்சமாக  அமைவதுண்டு பெரும்பாலான சமயங்களில். இப்பொழுது நினைத்தாலும் பல சந்திப்புகள்  இன்னும் நினைவில்  இருக்க  இதுவே காரணம்.

அப்பாவும் மகேந்திரன் மாமாவும் மகிழம்பூ வீட்டு வாசலில் இதை பெரும்பாலும் செய்வதுண்டு. சைக்கிள் பெடலில் கால் வைத்த  வாறே மகேந்திரன் மாமா பேசிக்கொண்டே இருப்பார்கள். சிறுவனாக  அந்த அரட்டைகளை நானும் கேட்டு புரிந்தும் புரியாமல் சிரித்து   இருக்கிறேன்.
அவர்களது சத்தமான சிரிப்புதான்  அதை எனக்கு இன்றும் நினைக்க வைக்க காரணம்.

வெளியே வந்த பின் , வீட்டினுள்  இருந்தே கை காட்டிட்டு கதவை மூடிக்கொண்டு  , அடுத்த சேனலை மாற்றப்போகும்  இந்த காலத்து அடுக்கு மாடி வாழ்க்கைக்கு இந்த சுகம் எங்கே புரியப்போகிறது!

No comments:

Post a Comment